Tuesday 25 October 2016

மனப்பாங்கை மாற்றுவோம்

siragu-image1

எல்லாவற்றிலும் பிடிவாதத்தை விதைத்துவிட்டால் பல நேரங்களில் ஏமாற்றங்களை அறுவடை செய்ய வேண்டிய சூழல் ஏற்படும். சில இடங்களில் வாழ்க்கை அதன் போக்கில் நம்மை இழுக்க முற்படும் போது அதற்கு இசைந்து கொடுக்கவும் பழகிக்கொள்ள வேண்டும். அதன் மூலமும் நாம் நினைத்தது நினைத்ததை விட சிறப்பாகக் கிடைத்திருக்கும். இது எல்லாருக்கும் ஏதோவொரு வகையில் நடந்திருக்கும். இப்படி இருப்பேன் என்றால் பரவாயில்லை, ஆனால் இப்படித்தான் இருப்பேன் என்று இறுமாப்போடு இருப்பது என்றுமே கூடாது.


பலமுறை ஒரு செயலைச் செய்து, அந்தச் செயலிற்குத் தேவையான முடிவு எட்டப்படவில்லை என்றால் அணுகுமுறையை மாற்றவேண்டுமே அன்றி செயலை மாற்றுதல் கூடாது. ஒரேவித அணுகுமுறையை எந்த ஒரு விசயத்திலும் கையாளுதல் கூடாது. ஒன்று சரிப்பட்டுவராது என்று தெரிந்தவுடன் அதை எதிர்கொள்ள மாற்று வழிகளைத் தான் ஆராயவேண்டுமே தவிர, மாற்று செயல்களை அல்ல. நான் என்ன கூற வருகிறேன் என்றால்  பாதையில் நடக்கும் பொழுது கால்களில் முள் குத்தினால் காலணிகளை அணிந்து நடக்க வேண்டும், அதை விட்டுவிட்டு பாதையையே மாற்ற முடியாது. இல்லாவிட்டால் திருச்சிக்குப் போகவேண்டியவன் திருப்பதிக்குச் செல்லும் பேருந்தில் ஏறிய கதையாகிவிடும்.

மேலும் படிக்க கீழே உள்ள சுட்டியை சுட்டவும்.

No comments:

Post a Comment