Tuesday 3 July 2018

நண்பனாய், சீடனாய், குருவாய்……


siragu nanbanaai1
நாஞ்சில் நாடன் கட்டுரை வன்மை மிக்க கதைசொல்லி. அவரது படைப்புகளில் தமிழ் இலக்கியப் புகுத்தல்கள், குறிப்பாக சங்க இலக்கியங்கள், கம்பராமாயணம், திருக்குறள், சிலப்பதிகாரம் போன்ற மரபுசார் இலக்கியப் புகுத்தல்களுக்கும், புதுமைப்பித்தன், ஜெயமோகன், சுந்தரராமசாமி போன்ற எழுத்தாளர்களின் நவீன எழுத்துக்களின் மதிப்பீடு சார்ந்த, எடுத்துக்காட்டத்தக்க குறிப்புகள் சார்ந்த புகுத்தல்களும் இருக்கும். ஒன்றின் ஒன்று தொடர் சங்கிலியாய், செய்திகளை, உவமைகளை, நிகழ்வுகளை அடுக்குவதில் கைதேர்ந்த படைப்பாளி நாஞ்சில் நாடன் ஆவார். இவரது நாஞ்சில் தமிழில் பம்பாய் நாகரீக வாழ்வின் எச்சங்களைக் கண்டுகொள்ள இயலும். சவம் – இதுவே பல இடங்களில் நாஞ்சில் நாடனின் எழுத்தில் காணப்படும் உச்சப்புள்ளி.
இவரின் படைப்புகளில் தனியார் குழுமங்களில் எந்திரங்கள் விற்கும் விற்பனைப் பிரதிநிதியின் அல்லல்கள், குடும்பத்தைத் துறந்து உணவிற்கும், இருப்பிடத்திற்கும் படும் துயரங்கள் எடுத்துரைக்கப்பெறுகின்றன. சொந்த ஊரைவிட்டுத் தூர தேச மாநிலம் செல்லும் மகன் தாயின் இறப்பிற்குக் கூட வரமுடியாத சூழல், தன் கல்யாணத்திற்கும் யாரும் முனையாவிட்டாலும் மற்றவர்கள் நடத்தும் திருமணங்களுக்கு வருகைதரவேண்டும் என்ற எதிர்பார்ப்பு, சொந்த ஊர் வந்ததும் தன்னூர் சொத்துக்களைப் பாதுகாத்து நிறைவாழ்வு வாழ வேண்டும் என்ற ஏக்கம் போன்றன ஒரு விரக்தி மனப்பான்மையுடன் எடுத்துரைக்கப்பெறுகின்றன.

மேலும் படிக்க கீழே உள்ள சுட்டியை சுட்டவும்.

No comments:

Post a Comment