Thursday 28 November 2019

உயிர்த்தோற்றம்


siragu uyiriyal5
செந்தமிழ் மொழியின் பண்டை இலக்கியங்களைச் சங்க இலக்கியங்கள் என்பர். தனித்தனிப் பாக்களால் இருந்தவற்றை அகப்பாடல்கள் என்றும், புறப்பாடல்கள் என்றும் இரண்டு பெரும் பிரிவுகளாகப் பிரித்து, அவற்றை நானூறு என்ற எண்ணிக்கையிலும் பத்து என்ற எண்ணிக்கையிலும், நானூறு என்ற எண்ணிக்கையிலும், ஐந்நூறு என்ற எண்ணிக்கையிலும் தொகுத்துப் பண்டைத் தமிழ் அறிஞர்கள் வகைப்படுத்தித் தந்துள்ளனர்.
அவ்வாறு வகைப்படுத்தப்பட்ட சங்க இலக்கியங்களில் கடவுள் நம்பிக்கை பற்றிய செய்தியும், கடவுளால் படைக்கப் பெற்ற உடல் வகைகளைப் பற்றிய செய்தியும், அவ்வுடலை இயக்குகின்ற உயிர்களின் தன்மை பற்றிய செய்தியும், அவ்வுயிர்கள் தத்தம் பண்டை ஊழ்வினைக்கு ஏற்றவாறு உடம்பினைப் பெறுகின்றன என்ற செய்தியும் சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளன. சங்க இலக்கியங்களில் பல்துறை அறிவியல் சிந்தனைகள் என்ற பொதுத் தலைப்பில், சங்க இலக்கியங்களில் காணப்படும் உயிர் பற்றிய கொள்கைகளை எடுத்துக்காட்டுவது இக்கட்டுரையின் நோக்கமாகும்.

பண்டு தொட்டுத் தமிழகத்தில் வழங்கி வந்த கடவுள் கொள்கை முப்பொருளை உணர்த்தும். அதாவது வினையின் நீங்கி விளங்கிய அறிவனாக விளங்கும் இறைவன் முதற்பொருள். இறைவனைப் பதி என்ற குறியீட்டுச் சொல்லால் குறிப்பிடுவர். அந்த இறைவனின் கருணைப் பெரு வெள்ளத்தால், தனு, கரண, புவன போகங்கள் என்று கூறப்படும் உடம்பு, கருவிகள், உலகம், போகப் பொருள்கள் என்பவை படைக்கப் பெறுகின்றன. படைக்கப் பெற்ற பொருளைப் பயனுடையதாகக் கொள்வதற்குக் கடவுள் தோன்றிய பொழுதே, அவன் இயங்குவதற்குரிய நிலைக்களமாக உயிர்கள் தானே தோன்றின. அந்த உயிர்களின் இயக்கம் வினையின் அடிப்படையில் அமைகிறது என்ற வினைக்கொள்கையும் பண்டு தொண்டு வழங்கி வருகின்றது. இவ்வாறு தமிழகத்தில் கடவுள் கொள்கை பதி என்றும், உயிராகிய பசு என்றும், வினையாகிய பாசம் என்றும் முப்பொருளை அடிப்படையாகக் கொண்டு விளங்கி வருகின்றது. பதி, பசு, பாசம் என்ற கடவுள் கொள்கையின் முப்பொருளைச் சங்க இலக்கியங்கள் பலவாறு பதிவு செய்துள்ளன. அதில் உயிரின் தோற்றம் பற்றிய செய்திகளை இக்கட்டுரை தொகுத்துத்தர முற்படுகிறது.

மேலும் படிக்க கீழே உள்ள சுட்டியை சுட்டவும்.

Tuesday 26 November 2019

கடல் பயணம்


siragu kadal payanam1
மக்கள் பழங்காலம் முதலே பயணம் மேற்கொண்டுள்ளனர். நாடோடிகளாக, கால்நடை வளர்ப்பவர்களாக பழங்கால மக்கள் பயணப்பட்ட பயணங்கள் அதிகமாகும். நாகரீகம் வளர வளர நிலப்பயணம் தாண்டி நீரைக் கடக்கும் கடல் பயணத்திற்கும் செல்லும் நிலை ஏற்பட்டது. ஒரு நாட்டில் இருந்து மற்றொரு நாட்டிற்குச் செல்லும் நடைமுறை வாய்த்தது.
கடல் பயணம் ஏன் அவசியம் என்று ஒரு கேள்வி எழுப்பினால் அதற்கு இன்றைய நிலையில் கிடைக்கும் பதில் பின்வருமாறு.
கடல் பயணத்தின் அவசியம் இரண்டு மட்டுமே
1.    பொருளீட்ட கடல் செல்லுதல்
2.    சுற்றுலா நிமித்தமாக
இவ்வுலகில் 90% வணிக பொருள் கடல் மார்கமாக தான் எடுத்துச் செல்கின்றது, என் என்றால்.. கடற்பயணம்
•    மிகவும் பாதுகாப்பானது
•    அதிக பொருள்கள் கொண்டு செல்ல முடியும்
•    சூழல் நட்பு உடையது
•    மிக மலிவானது

இக்காலத்திலேயே கடற்பயணம் இவ்வளவில் ஏற்புடையது என்றால் காற்றுவழி விமான சேவை வருவதற்கு முன்னதான காலத்தில் கப்பல் பயணம் மட்டுமே வெளிநாடுகளுக்குச் செல்லும் வாய்ப்பினை அளித்தது என்பது இங்கு நினைவுகூரத்தக்கது.

மேலும் படிக்க கீழே உள்ள சுட்டியை சுட்டவும்.

Monday 25 November 2019

ஆய்வு வழியில் வள்ளுவர்


siragu thiruvalluvar1
ஆராய்ந்து அறியும் மனப்பான்மையைக் கொண்டோர் பண்புகள் எத்தகையனவாக இருக்கும்?
          அரும்பயன் ஆயும் அறிவினார் சொல்லார்
          பெரும்பயன் இல்லாத சொல். (பயனில சொல்லாமை: குறள் – 198)
அருமையான பயனளிக்கக் கூடியவை எவை என ஆராய்ந்து அதனை அடைய முயலுவோர், பெரும் பயன் தராத சொற்களைப் பேசமாட்டார்கள். அதாவது, அவர்கள் வெற்றுப் பேச்சைத் தவிர்ப்பவர்கள்.
வள்ளுவரும் அத்தகையவர் என்பதை அவர் தமது அறநூல் கருத்துக்களைக் குறட்பாக்களாக ஈரடியில் எழுதியது உறுதிப்படுத்துகிறது. இத்தகைய பண்பு கொண்ட வள்ளுவர் எப்பொழுதெல்லாம் ஆய்வு செய்யவேண்டும் என்கிறார்? ‘மெய்ப்பொருள் காண்பதறிவு’ (அறிவுடைமை: குறள் – 423) என்று கூறுமிடத்து, உண்மை எதுவென்று ஆராய்ந்து அறிவதுதான் அறிவுடைமை என்கிறார் வள்ளுவர். அவர் எந்தெந்த சூழ்நிலையில் ஆராய்வதைக் குறித்துத் தமது திருக்குறளில் கூறியுள்ளார் என்ற ஒரு மீள்பார்வை, வள்ளுவர் எவற்றுக்கு முக்கியத்துவம் கொடுத்தார் என்பதையும் நமக்கு அறியத் தரும். அதை கடைபிடிப்பது வாழ்வியல் வழிகாட்டியாகவும் உதவும் என்பதும் திண்ணம்.

நாம் ஆய்வைப் பயன்படுத்த வேண்டிய சூழல் எது? என்ற கோணத்துடன் குறட்பாக்களை ஆய்வு செய்யும்பொழுது (1) உறவுமுறை கொள்ளுதல், (2) செயலாக்கத் திட்டங்கள், (3) வாழ்வியல் அறிதல், (4) ஆட்சிமுறை அறங்கள் ஆகியவற்றில் ஆய்வுக் கொள்கையைக் கடைபிடிக்க வேண்டும் என்பது வள்ளுவரின் கூற்றின் மூலம் தெளிவாகிறது.

மேலும் படிக்க கீழே உள்ள சுட்டியை சுட்டவும்.

Wednesday 20 November 2019

சங்க இலக்கியத்தில் உளவியல்


siragu enkunaththaan2
‘வானம் அளந்தது அனைத்தும் அளந்திடும் வண்மொழி’ என்பார் மகாகவிபாரதி. அத்தகைய வளம் நிரம்பியது தமிழ்மொழி. ஆனாலும் உலக அளவில் செவ்வியல் மொழி-அதாவது செம்மொழி என்று தமிழ்மொழி அறிவிக்கப்படவில்லை. கிரேக்கம், இலத்தீனம், எபிரேயம், சீனம், சமஸ்கிருதம் ஆகியன செம்மொழிகள் என அறிவிக்கப்பட்டு, ஏற்றுக்கொள்ளப்பட்டன. ‘செம்மொழி’ என்று ஏற்றுக்கொள்ளப்படுவதற்கு உலக அளவில் 11-தகுதிப்பாடுகள் வரையறுக்கப்பட்டுள்ளன. அத்தகைய 11-தகுதிப்பாடுகளும் தமிழ்மொழிக்கு உண்டு.
1.    தொன்மை, 2. தனித்தன்மை, 3. பொதுமைப்பண்பு, 4. நடுநிலைமை, 5. தாய்மைத்தன்மை, 6. பண்பாடுகலை பட்டறிவு இவற்றின் வெளிப்பாடு 7. பிறமொழித் தாக்க மிலாத் தனித்தன்மை 8. இலக்கியவளம் 9. உயர்சிந்தனை 10. கலை, இலக்கியத்தனித்தன்மை வெளிப்பாடு, பங்களிப்பு 11. மொழி, மொழி இயல்கோட்பாடு- என்ற 11 தகுதிப்பாடுகளில் ‘இலக்கியவளம்’ என்னும் கோட்பாடு குறித்தும், அது எவ்வாறு தமிழில் வெகுசிறப்பாக அமைந்துள்ளது என்றும் இச்சிறு கட்டுரையில் காண்போம்.

மேலும் படிக்க கீழே உள்ள சுட்டியை சுட்டவும்.

தமிழரின் உணவுமுறை


siragu unaviyal1
உயிரினங்கள் கூடிவாழும் உயிர்த்தொகுதி சமுதாயம் என்ற பெயரால் சுட்டப்பெறுகின்றது. சமுதாயத்தில் வாழும் எவ்வுயிராயினும் அவ்வுயிர், தன்னை நிலை நிறுத்திக்கொள்ளும் உரிமையை இயற்கை வழங்கி இருக்கிறது. உயிரினங்களுக்கான நிலைநிறுத்தக்காரணிகள் பலவாறுயிருப்பினும் அவற்றுள் நிலம், உணவு என்ற இருகாரணிகளே மானுட வாழ்வில் பெரும்பங்காற்றுகின்றது. உணவு உற்பத்திக்கு நிலம் உதவுகின்றது. உயிர் வாழ உணவு தேவைப்படுகின்றது. இந்த அடிப்படையில் நிலத்துடன் இயைந்த தமிழரின் உணவுமுறையின் கூறுகளை ஆராய்வதாக இக்கட்டுரை அமைகின்றது.
உணவும் வாழ்வும்

ஆரம்ப காலத்தில் இனக்குழுச்சமூகமாக இருந்த மனித சமூகம் இயற்கையாகக் கிடைத்தவற்றை உண்டு வாழ்த்தல், அடுத்த நிலையில் தன் வயிற்றுப்பிழைப்பிற்காக வேட்டையாடுதல் என்றிரு வேறு நிலைகளில் உணவு சேகரிப்பு நடந்தது. உணவு சேகரிப்பு என்ற செயல்பாட்டிலிருந்து தான் மனித சமூக வரலாறு எழுதப்படுகின்றது.

மேலும் படிக்க கீழே உள்ள சுட்டியை சுட்டவும்.
http://siragu.com/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%89%E0%AE%A3%E0%AE%B5%E0%AF%81%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88/

Monday 18 November 2019

பண்பாட்டு படையெடுப்பும் – திருக்குறளும்


siragu thirukkural1
திருக்குறளைச் சுற்றி எப்போதும் வட்டமிடும் சனாதனம் விரும்பிகளிடம் இருந்து திருக்குறளை மீட்க வேண்டிய பொறுப்பு திராவிடர் இயக்கங்களுக்கு உண்டு. பரண் மீது தூங்கிக் கொண்டிருந்த திருக்குறளை மீட்டெடுத்து மக்களிடம் உலவ விட்ட பெறுமை திராவிடர் இயக்கத்தையே சாரும். திருக்குறள் ஏன் பரண் மீது தூங்கிக் கொண்டு இருந்தது? என்ற கேள்விக்குப் பின் இருக்கும் பதில் அது சனாதன எதிர்ப்பு பேசியது, வர்ணபேதங்களை எதிர்த்தது என்பது தான். இன்று எவை எல்லாம் திராவிடர் இயக்கத்தால் மீட்கப்பட்டு தமிழர்களின் அடையாளமாக மாற்றப்பட்டதோ அதை எல்லாம் தொடர்ந்து காவிகள் அணைத்து அழிக்கப் பார்க்கின்றனர். ஒரு பக்கம் திருக்குறளை உவமையாக பேச்சில் எடுத்துக்காட்டுவது மறுபுறம் திருவள்ளுவருக்கு மதச்சாயம் பூசுவது, பட்டையும் கொட்டையும் மாட்டி விடுவது, திமுக ஆட்சியில் கொண்டு வரப்பட்ட பேருந்துகளில் திருக்குறள் என்பதை மாற்றி இந்து மத வாசகங்களை எழுதி வைப்பது என தொடர்ந்து தமிழ்நாட்டை மதசார்பற்ற நிலையில் இருந்து மாற்ற – கலவரத்தைத் தூண்ட ஆர்எஸ்எஸ் முயன்று வருகிறது. அதற்கு இன்றைய துருப்புச் சீட்டு திருக்குறள்.

திருக்குறள் ஏன் ஒரு மத நூலாக இருக்க வாய்ப்பில்லை என்பதை திருக்குறளும் மனுதர்மமும் என்ற நூலில் நாவலர் இரா. நெடுஞ்செழியன் பல எடுத்துக்காட்டுகளோடு எழுதி உள்ளார்கள். இன்றைய காலகட்டத்தில் அனைவரும் படிக்க வேண்டிய நூல்.
அந்த நூலின் சில பகுதிகளைப் பார்க்கலாம்.

மேலும் படிக்க கீழே உள்ள சுட்டியை சுட்டவும்.

Friday 15 November 2019

இயற்பியல்

தமிழ் இலக்கியங்கள் வாழ்க்கையை எதிரொலிக்கின்றன. இயல்பு வாழ்க்கையா அல்லது கற்பனை வாழ்க்கையா என்பதை முடிவு செய்வதில் சில நேரம் தடுமாற்றம் நிகழும் ஏன் நம் சிலப்பதிகாரத்தையே கற்பனைக் கதை என்றும் உரைப்பர்.
அறிவியல் வளர்ச்சி மிகுந்த காலம் ஒன்று இருந்ததோ என்ற எண்ணத்தை தோற்றுவிக்கும் படியான செய்திகள் உள்ளன. இந்த நூற்றாண்டில் உள்ள சில கருவிகள் அக்காலத்திலேயே பயன்பாட்டில் இருந்தன.
Dec-23-2017-newsletter1

இன்றைய தினம் எத்தனையோ இயந்திரங்கள் பயன்பாட்டில் உள்ளது. தமிழ் மொழியின் பிறப்பிடம் குமரிக் கண்டமே குமரிக்கண்டம் பெரியது. ஆஸ்திரேலியா முதல் தென்ஆப்பிரிக்கா வரை இந்தியாவையும், இமாசல பிரதேசத்தையும் இணைந்தது உலகின் முதலில் பேசிய மொழி தமிழ்மொழிதான். ஆனால் குமரிக்கண்டம் மூழ்கியதை சிலப்பதிகாரம் மூலம் தெரிந்து கொள்ளலாம். உலகின் 6 துவக்க மொழிகளில் தமிழ் மொழி முதல் மொழி ஜப்பான் நாடு அனைத்து பல்கலைக்கழகங்களிளும் யாதும் ஊரே யாவரும் தேநீர் என்ற கணியன் பூங்குன்றனார் பாடல் வாயிலில் தமிழ் மொழியிலும், ஜப்பான் மொழியிலும் எழுதப்பட்டுள்ளதைநாம் அறியும் போது நம் உள்ளம் மிகவும் பூரிப்படைகிறது.

மேலும் படிக்க கீழே உள்ள சுட்டியை சுட்டவும்.

Wednesday 13 November 2019

சங்க இலக்கியங்களில் கட்டிடக்கலை


siragu kattidaviyal3
ஒரு சமூகத்தின் வரலாறு என்பது அச்சமூகத்தின் மக்கள் வாழ்வியல், அரசு, நிர்வாகம் முதலியவற்றோடு அச்சமூகத்தின் தொழில் மற்றும் கலை சார்ந்த வரலாறாகவும் அமைகின்றது எனலாம். இத்தகைய தொழில் மற்றும் கலைகளின் வளர்ச்சியும் மலர்ச்சியும் திடீரென எழுவதில்லை, மாறாகக் காலங்காலமாக எழுந்த அனுபவத்தின் படிவுகளால் விளைகின்றன. அந்தவகையில் பழந்தமிழ்ச் சமூக வரலாறு என்பது பழந்தமிழரின் தொழில் அறிவையும் கலைநுட்பத்தையும் அறிவது ஆகிறது. அம்முயற்சியின் விளைவாகச் சங்க இலக்கியத்தில் அறிவியல் என்ற இக்கருத்தரங்கு நடைபெறுவது பாராட்டிற்குரியது. அறிவியல் சார்ந்த தொழில் அறிவும் கலை பயில் நுட்பமும் இணைந்த கட்டிடக்கலை பற்றிய தரவுகளைச் சங்க இலக்கியங்களின் வழி அறிய முற்படுவது ஆய்வின் செல்நெறி ஆகும்.
கட்டிடவியல் :

கட்டிடக்கலை என்பது இன்றைய தொழில்நுட்ப இயலில் பொறியியலின் பிரிவுக்குள் அடக்கிச் சுட்டப்படும் ஒரு துறையாகும். ஈராயிரம் ஆண்டு வரலாற்றை உடைய தமிழ்ச்சமூகத்தில் பொறியியலும் அதன் பிரிவாகிய கட்டிடக்கலை பற்றிய அறிவும், திறனும் நுட்பமும் இருந்தன. இதனைச் சிந்துசமவெளி நாகரிக நகரங்களான மொகஞ்சதாரோவும் ஹரப்பாவும் மெய்ப்பிக்கின்றன. இந்த இடங்களில் அகழ்வாய்வு மேற்கொண்ட சர்-ஜான் மார்ஷலும் ஈராஸ் பாதிரியாரும் அங்குள்ள கட்டிடடங்கள், மாளிகைகள், மண்டபங்கள், குளங்கள் முதலியன திராவிடக் கலைப் பாணியில் உருவானவை எனச் சுட்டுகின்றனர். தற்போது இந்தக்கருத்து அறிஞர்கள் பலரால் மீளாய்வுக்கு உட்படுத்தப்பட்டு மெய்ப்பிக்கப்பட்டுள்ளது. ஆகவேதான் அறிஞர் உலகம், ‘தமிழரின் கட்டிடக்கலை தமிழரின் மரபுக்கே உரியது தொல்பழங்காலம் முதற்கொண்டே தமிழர் கட்டிடக்கலையைப் பேணி,தனிமுத்திரை பதித்து வளர்ந்து வந்துள்ளனர்’ மாத்தளை சோமு, வியக்க வைக்கும் தமிழர் அறிவியல், ப.242 என உரைக்கின்றனர்.

மேலும் படிக்க கீழே உள்ள சுட்டியை சுட்டவும்.

Tuesday 12 November 2019

சோழநாட்டின் பட்டினப் பெருவழி எது?


siragu kalvettu4
பண்டைய தமிழக மக்களின் போக்குவரத்துத் தேவைகளை நிறைவேற்ற அவை வணிகம், போர், வழிபாடு, உறவின் நிமித்தம் என எதுவாக இருப்பினும் அவை எளிதாக நடை பெற பல வகை சாலைகள் தமிழகத்தின் ஊர்களிலும், சிற்றூர்களுக்கு இடையிலும், பெருநகரங்களுக்கு இடையிலும் இருந்தன. ஊர்களுக்குள் இருக்கும் பெரிய வீதிகள் ‘பெருந்தெருக்கள்’ என அறியப்பட்டன(1). அக்காலத்தில் தேரோடும் வீதிகளான பெருந்தெருக்களைக் கொண்டவை பல ஊர்கள். இரு சிற்றூர்களை ஊர்களை இணைக்கும் சாலைகள் ‘வதிகள்’ என அறியப்பட்டன(2). ‘பெருவழிகள்’ என அறியப்பட்ட தடங்கள் பேரசுகளின் தலைநகரங்களையும், துறைமுகங்களையும், வணிக நகரங்களையும், பெருநகரங்களையும் இணைத்தன(3).

இத்தகைய பெருவழிகள் இன்றைய தேசிய நெடுஞ்சாலைகளுக்கு இணையானவை. இன்று போலவே இந்த பெருவழிகளைப் பராமரிக்க வரி வசூலிக்கப்பட்டு பெருவழிகள் பராமரிக்கப்பட்டன. அரசின் தடிவழி வாரியம் என்ற அமைப்பு மூலம் பராமரிப்பு வரிகள் வசூலிக்கப்பட்டன(4). வணிகர்களும், சரக்கு வண்டிகளும், சாத்துக் கூட்டத்தினரும், வழிப்போக்கர்களும், பொதுமக்களும் பயன்படுத்திய இத்தகைய பெருவழிகள் தமிழகத்தின் ஆற்றங்கரைகளை ஒட்டியே அமைந்தன. வழிப்போக்கர்களின் நீர்த்தேவைகளுக்கும் அவை உதவின. ஆற்றங்கரையோரம் மக்கள் குடியேறிய ஊர்களையும் அவை இணைத்ததால் பெருவழிகள் உருவானதைத் தேவைக்கேற்ற உருவாக்கம் என்றே கொள்ளலாம்.

மேலும் படிக்க கீழே உள்ள சுட்டியை சுட்டவும்.

Friday 8 November 2019

செம்மொழி இலக்கியங்களில் பலதுறை அறிவியல் சிந்தனைகள்

அறிவியல் பயன்பாடும், பகுத்தறிவுச் சிந்தனைகளும் தமிழ்ச் சமுதாயத்தின் வாழ்விலும் நெடிய பண்பாட்டுப் பயணத்திலும் நீங்காத இடம் பிடித்திருந்தன. இந்தப் பண்பாட்டுப் பயணம் எப்போது தடுமாறியது? எப்படித் திசைமாறியது? இந்தத் திசை மாற்றத்தின் விளைவுகள் என்ன? அண்மைக்காலங்களில் தமிழ்ப்பண்பாட்டை மீட்டெடுக்க நாம் மேற்கொண்டு வரும் முயற்சிகள் என்னென்ன? இன்னும் நாம் என்ன செய்யவேண்டும்? இந்தக் கேள்விகளுக்கான விடையை நாம் இந்த விவாதத்தின் வேதியியல் துறையில் செம்மொழி இலக்கியக்காலங்களில் ஏற்பட்ட வரலாற்றுப் பின்புலங்களை நாம் நிறைவுப்பகுதியில் ஒரு எடுத்துக்காட்டாக ஆராயலாம்.
இது ஆய்வுரை அன்று, இளம் தமிழ்நெஞ்சங்களை உற்சாகப்படுத்திச் சிந்திக்க வைக்கும் ஒரு பயிலரங்க முயற்சி. எனவே இங்கே விடைகளைவிடச் சிந்திக்கத் தூண்டும் இளைய சமூகத்தை விடைதேடும் முயற்சிகளைத் தொடங்கத் தூண்டுவதே நம் நோக்கம்.
செம்மொழிச் சமுதாயக் காலம்
Dec-23-2017-newsletter1
பழமையும் தனித்துவமும் வாய்ந்த மொழிகள் மிகச்சில. 2000 வருடங்களுக்குமேல் பழமை வாய்ந்த மொழிகள் விரல்விட்டு எண்ணிவிடக் கூடியவை. அவற்றில் தமிழும் ஒன்று. ஆனால் நம் தமிழ்ச்செம்மொழியைப் பற்றியும் தமிழ்ச்சமூகம் பற்றியும் பொதிய கள ஆய்வுகள் நடந்திருக்கிறதா? இல்லை என்றால் ஏன்?

ஒவ்வொரு செம்மொழிக்கும் உற்சாகமாகக் குரல் கொடுக்கவும் ஆய்வுகளை முன்னெடுக்கவும் அரசு சார்ந்த நிறுவனங்கள் முன்னால் நிற்கின்றன.

மேலும் படிக்க கீழே உள்ள சுட்டியை சுட்டவும்.

Tuesday 5 November 2019

தாயென தமிழ்நாடு பிறந்த நாள் ! (கவிதை)


siragu tamilnadu


கலைகளின் நாடு தீரத்தின் வீடு
கன்னல் சாற்றின் மொழியது பாடு
காலம் கனியும் தென்றல் வீசும்
கீழ்வானம் சிவந்து மாரி பொழியும்

எழில் ஓவியமாய் காலமகள் வரைந்த
ஏட்டின் பக்கங்கள் வரலாறு படைக்க
ஏற்றமிகு மிடுக்கோடு பாரில் ஒளியேற்றி
எவ்வம் துடைத்திட்ட சில்லெனும் தூறலாய்

மேலும் படிக்க கீழே உள்ள சுட்டியை சுட்டவும்.
http://siragu.com/%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%86%E0%AE%A9-%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%A8/

Monday 4 November 2019

ஆரேகாடு (Aarey forest)


siragu aarey forest4
ஆரேகாடு என்பது மும்பை மாநகரில் உள்ள ஒரு பெரும் திறந்த வெளிப்பகுதி. இது மும்பை நகரின் நுரையீரல் போல் அமைந்து மக்கள் சுவாசிக்க காற்றை அளிக்கிறது. மும்பை பெரு நகர இருப்புப் பாதைக்கழகம் (MMRCL – Mumbai Metro Rail Corporation Limited) இப்பகுதியில் தன் தொடர் வண்டிப் பெட்டிகளை நிறுத்திவைக்கத் (to park trains) திட்டமிட்டது. இதை செயல்படுத்துவதற்காக அங்கு உள்ள மரங்களை வெட்டுவதற்கு மும்பை மாநகராட்சி முனைந்தது. இதை எதிர்த்து சில தொண்டு நிறுவனங்கள் பம்பாய் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தன.
உடனே மாநகராட்சியினர் தொண்டு நிறுவனங்களின் எதிர்ப்பை முறியடிக்க “நாங்கள் மரங்களை வெட்டவில்லை, அவற்றை வேரோடு பெயர்த்து எடுத்து வேறு இடங்களில் நடப்போகிறோம்” என்று கூறி, சுமார் 1800 மரங்களைப் பிடுங்கி விட்டனர். அவற்றில் சுமார் 800 மரங்கள் வேறு இடங்களுக்குக் கொண்டு போகும் முன்பே செத்துவிட்டன.
இதைக் கண்ட தொண்டு நிறுவனங்கள் மரங்களை வேருடன் பெயர்த்து எடுப்பதற்கும் எதிர்ப்பு தெரிவித்தன.

இந்நிலையில் 4.10.2019  வெள்ளிக்கிழமை அன்று பம்பாய் உயர்நீதிமன்றம் ஆரே பகுதி ஒரு காடு என்று “சட்டப்படி” அறிவிக்கப்படவில்லை என்றும், ஆகவே அங்கு உள்ள மரங்களை வெட்டுவதற்குத் தடை விதிக்க முடியாது என்றும் தீர்ப்பு அளித்தது. இத்தீர்ப்பு வெளிவந்து ஒரு நாள் கழித்து, அதாவது 6.10.2019 ஞாயிறு அன்று மாநகராட்சியினர் முழுவீச்சில் மரங்களை வெட்டத் தொடங்கினர். மும்பை மாநகராட்சியின் இச்செயலுக்கு உள்ளூரில் இருந்து மட்டும் அல்லாமல் உலகெங்கிலும் உள்ள தொண்டு நிறுவனங்களிடம் இருந்தும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது.

மேலும் படிக்க கீழே உள்ள சுட்டியை சுட்டவும்.