Thursday 21 May 2020

இராமநாதபுரம் மாவட்ட இலக்கிய ஆளுமைகள் – பாகம்-1


siragu ramanathapuram1
சேதுபதிகள் காலத்தில் வாழ்ந்த இலக்கிய ஆளுமைகள்
இராமநாதபுர மாவட்டப் பகுதிகளை ஆண்ட சேதுபதி அரசர்கள் தமிழும், தெய்வீகமும் வளரப் பாடுபட்டவர்கள் ஆவர். இவர்கள் அரசவையில் தமிழ்ப்புலவர்களுக்கு தக்க இடம் அளித்தனர். பல சிற்றிலக்கியங்கள் இவர்கள் காலத்தில் எழுதப்பெற்றன.
இராமநாதபுர தமிழ் இலக்கிய காலத்தின் வளமான காலம் இக்காலம் ஆகும்.
புராணங்கள், காப்பியம், மான்மியம்
வீரை ஆசுகவி
அரிச்சந்திர புராணம் என்பதை எழுதியவர் வீரை ஆசுகவி ஆவார். இவரின் ஊர் நல்லூர் வீரை ஆகும். இவ்வூர் குலோத்துங்க சோழ நல்லூர் என்றும் குறிக்கப் படுகிறது. காப்பியத்திற்கு நிகரான அளவில் அரிச்சந்திர புராணத்தை இவர் செய்துள்ளார். இப்புராணம் திருப்புல்லாணி திருக்கோயிலில் அரங்கேற்றம் செய்யப்பெற்றுள்ளது.
உமறுப்புலவர்
எட்டய புரத்தில் பிறந்த உமறுப்புவலர் சீறாப் புராணம் எழுதியவர். இவரை கீழக்கரை சார்ந்த வள்ளல் சீதக்காதி என்பவர் கொடையளித்துக் காத்தார். இசுலாமியப் பெருங்காப்பியம் இதனால் எழுந்தது.

திருவாடானை புராணம் என்பதனை திருவாரூரைச் சார்ந்த சாமிநாத தேசிகர் என்பவர் செய்துள்ளார். திருவாடானை மான்மியம் என்ற நூலும் சிற்றம்பல தேசிகர் என்பரால் இயற்றப்பெற்றுள்ளது.

மேலும் படிக்க கீழே உள்ள சுட்டியை சுட்டவும்.

Wednesday 20 May 2020

இரணியன் அல்லது இணையற்ற வீரன்!!


siragu iraniyan1
புரட்சிக் கவிஞர் என்றால் அது புதுவை தந்த கவிஞர் கனகு சுப்புரத்தினம் தான். அந்த அடையாளத்தை அவருக்கு வழங்கியது திராவிடர் இயக்கம். தந்தை பெரியாரின் ஒரே ஒரு பகுத்தறிவுப் பாதையில் பயணிக்கத் தொடங்கிய காலம் முதல், தந்தை பெரியாரின் எழுத்துக்களைக் கவிதையில் கொணர்ந்து மக்களிடம் கொண்டு சேர்த்த பெருமை அவருக்கே உண்டு!!
அதனால் தான் திராவிடர் இயக்கத்தின் முதல் தளபதியாக திகழ்ந்த பேரறிஞர் அண்ணா அவர்கள், பாரதிதாசன் அவர்கள் பற்றிக் கூறும்போது “முகிலைக் கிழித்து வெளிக்கிளம்பும் ஒரு முழுமதி போல தமிழ்நாட்டில் தோழர் பாரதிதாசன் கவிதை தோன்றியுள்ளது. புரட்சிக்கருத்துக்கள் அவரது உள்ளத்தில் பொங்கிப் பூரித்துப் புதுமைக் கவிகளாக வெளிவருகின்றன. இயற்கையின் எழில், கலை நுணுக்கம் முதலியவை பற்றி அவர் இயற்றியுள்ள கவிதைகள் படிப்போரைக் களிப்புக் கடலில் ஆழ்த்தும்.” என்று குறிப்பிடுகிறார்.

உலக அரங்கில் பாரதிதாசன் அவர்களுக்கு இணையான ஒரு கவிஞரை குறிப்பிட வேண்டுமென்றால் அமெரிக்காவின் வால்ட் விட்மனை கூறலாம். “பழைய கட்டுப்பாடுகளையும் முட்டுப்பாடுகளையும் உடைத்தெறிந்து, கவிதைக்கும் வசனத்திற்கும் புதிய சுதந்தர ஓட்டந்தருகிறேன்” என்றார் வால்ட் விட்மன். அதே போல தமிழ்நாட்டின் வால்ட் விட்மன் பாரதிதாசன் என்றால் மிகையாகாது.

மேலும் படிக்க கீழே உள்ள சுட்டியை சுட்டவும்.
http://siragu.com/%E0%AE%87%E0%AE%B0%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%87%E0%AE%A3%E0%AF%88%E0%AE%AF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1-%E0%AE%B5/

கல்வி


siragu agimsai1
காந்தியடிகள் கல்வி பற்றியும் தீவிரக் கருத்துடையவராக இருந்துள்ளார். கல்வி பற்றிய பல கட்டுரைகளை அவர் எழுதியுள்ளார். பயிற்றுமொழி பற்றிய அவரின் கருத்துகள் வரவேற்கத்தக்கன.
அந்நிய மொழி வழிக் கல்வி மூளைக் களைப்பை விளைவித்துள்ளது. அதன் சுமை நமது குழந்தைகளின் நரம்புணர்வுகளை அளவுக்கு மீறிப் பாதிக்கிறது. சிறார்கள் பாடங்களை உருபோட்டுத் திணித்துக் கொள்ள வேண்டியுள்ளது. அவர்களைப் போலித்தனத்திற்கு உட்படுத்துகிறது. சுயமாகச் சிந்திக்கவோ செயல்படவோ அவர்கள் தகுதியற்றவர்களாக ஆகிவிடுகின்றனர். இவற்றின் மொத்த விளைவாக அவர்களால் த்hம் பெறும் அறிவைத் தமது குடும்பத்திற்கோ மக்களுக்கோ வடித்து வழங்க இயலாதவர்களாகி விட்டனர். அந்நிய மொழி வழிக் கல்வி என்பது குழந்தைகளைத் தமது சொந்த நாட்டிலேயே நடைமுறையில் அந்நியர்களாக்கி விட்டது என்று காந்தியடிகள் பயிற்று மொழி பற்றிக் கருத்துரைத்துள்ளார். தன்னிடம் ஆட்சி அதிகாரம் இருக்குமானால் புதிய மாற்றுக்கல்வி முறையை உடனடியாக அமலுக்குக் கொண்டுவருவேன் என்று காந்தியடிகள் பேசியுள்ளார்.

மேலும் படிக்க கீழே உள்ள சுட்டியை சுட்டவும்.

Thursday 14 May 2020

இராமநாதபுரம் மாவட்ட இலக்கிய ஆளுமைகள்


siragu ramanathapuram1
இராமநாதபுர மாவட்டம் தென்தமிழகத்தில் அமைந்துள்ள கடற்கரை சார்ந்த மாவட்டம் ஆகும். இம்மாவட்டத்தின் கிழக்கே பாக் ஜல சந்தியும்.   (பாக் நீரிணையம்), வடக்கில் சிவகங்கை மாவட்டமும், வடகிழக்கில் புதக்கோட்டை மாவட்டமும், தெற்கில் மன்னார் வளைகுடாவும், வடகிழக்கில் புதுக்கோட்டை மாவட்டமும், மேற்கில் மதுரை மாவட்டமும், தென் மேற்கில் தூத்துக்குடி மாவட்டமும் அமைந்துள்ளன.
பாண்டிய மன்னர்களாலும், நாயக்கர்களாலும், சேதுபதி மன்னர்களாலும் ஆண்டு வரப்பட்ட இப்பகுதி ஆங்கிலேயர் காலத்தில் அதாவது ஆயிரத்துத் தொள்ளாயிரத்துப் பத்தாம் ஆண்டில் மதுரை, திருநெல்வேலி மாவட்டப் பகுதிகளில் சிலவற்றை இணைத்து உருவாக்கப்பெற்றது. புதிதாக உருவாக்கப்பட்ட இம்மாவட்டத்தின் முதல் மாவட்ட ஆட்சியர் திரு. ஜெ. எப். பிரையண்ட் என்பவராவர். ஆங்கிலேயர் காலத்தில் இம்மாவட்டம் ‘‘ராம் நாடு” என்று அழைக்கப்பெற்றது. விடுதலைக்குப் பின்பு இராமநாதபுர மாவட்டம் என்று அழைக்கப்படுகிறது.

இராமயாண காலம் தொட்டு இராமநாதபுரம் பதிவு செய்யப்பெற்று வந்துள்ளது. இதன் காரணமாக இம்மாவட்டம் தொன்மையும் சிறப்பும் வாய்ந்த்து என்பது தெளிவு. இராமபிரான் குரங்குக் கூட்டங்களை வைத்து பாலம் அமைத்து இலங்கை சென்ற நிலையில் கட்டப் பெற்ற சேது பாலம் இன்னமும் தொன்ப நிலையிலும், இயற்கை நிலையிலும் பெருவியப்பிற்கு உள்ளாக்குகிறது. இவ்வகையில் இராமாயணக் காலம் தொட்டு இராமநாதபுரம் குறிப்பிடத்தகுந்த மாவட்டமாக அமைந்திருந்த்து என்பது கருத்த்த்தக்கது.

மேலும் படிக்க கீழே உள்ள சுட்டியை சுட்டவும்.

Wednesday 13 May 2020

சரஸ்வதி என்பது சரஸ்வதிதானா?

சரஸ்வதி ஆறு குறித்த செய்திகளாக அகழாய்வுகள் அறிவியல் அடிப்படையில் முன்வைக்கும் தரவுகள் யாவும், தொன்ம இலக்கியங்கள் (அதாவது சமஸ்கிருத மொழியில் இயற்றப்பட்ட ரிக் வேதம், மகாபாரதம் போன்ற இதிகாசங்கள்) சொல்லும் சரஸ்வதி ஆறு குறித்த செய்திகளுடன் முரண்படுவதாக இருக்கிறது.
கீழடியின் தொல்லியல் தடயங்களை தமிழின் சங்க இலக்கியத் தரவுகளுடன் இணைத்துக் காட்ட முடிவது போல சரஸ்வதி ஆறு பற்றிய இலக்கியங்கள் தரும் வாழ்வியல் குறிப்புகளைக் கொண்டு 3300 -1300 கி. மு. காலத்திற்குரியதாக அறுதியிட்டுக் கூறப்படும் சிந்துவெளி பண்பாடு என்பது வேதகாலத் தொடர்புடையது என்று கூறவே இயலாது என்பதை ஆய்வாளர்கள் விளக்கமாக எடுத்துரைத்து விட்டனர். காலத்தால் முற்பட்ட சிந்து சமவெளிப்பகுதியில் அமைந்திருந்த இரும்பு காலத்திற்கும் முற்பட்ட நகர அமைப்புகள், குறியீடுகள் கொண்ட அக்கால மொழி, கருப்பு சிவப்பு பானை ஓட்டுச் சில்லுகள், குதிரை குறித்த தரவுகள் அப்பகுதியில் கிடைக்காமை போன்றன சிந்துவெளிப்பண்பாட்டின் தனிச்சிறப்பு கொண்ட அடையாள முத்திரைகள்.

காலத்தால் பிற்பட்ட (1500 கி. மு.) வேதகால இலக்கியங்கள் நகர வாழ்வியலைப் பற்றிக் குறிப்பிடாதவை, இரும்பு ஆயுதங்கள் குறித்து கூறுபவை, குதிரைகள் பற்றிய செய்திகள் தருபவை, வண்ணச்சுடுமண் பாண்டங்களைப் பயன்படுத்திய மக்களைக்குறிப்பவை, அத்துடன் அவை எழுதாக் கிளவி என்றும் எழுத்தில்லாத மொழி என்றும் குறிப்பிடப்படும் மொழியின் தனிச் சொத்து. ஆகவே இந்த உண்மை புரிந்தவுடன் சிந்து சமவெளி நாகரிகம் என்பது சரஸ்வதி ஆறு நாகரிகம் என்று கூறுவதை ஒரு கட்டுக்கதை என்று உணர்ந்து தவிர்த்துவிடுவது அறிவுடைமையாக இருக்க வேண்டும்.

மேலும் படிக்க கீழே உள்ள சுட்டியை சுட்டவும்.

Friday 8 May 2020

காந்தியடிகளும் பெண்மையும்

siragu agimsai1
காந்தியடிகள் பெண்களையும் ஆண்களையும் ஒரே தட்டில் வைத்துப் பார்க்கிறார். ஆணும் பெண்ணும் அடிப்படையில் ஒன்றே. அவர்களின் ஆன்மாவும் ஒன்றே. இருவரும் அதே வகையான உணர்வுகளுடனும் ஒரே மாதிரியான வாழ்க்கையைத்தான் நடத்துகிறார்கள். ஒருவர் மற்றொருவரை நிறைவு செய்கின்றனர். ஒருவர் மற்றொருவரின் சுறுசுறுப்பான வாழ்க்கையின்றி வாழ்வதற்கில்லை.
பெண்கள் தாய்மை என்ற கடமையை ஏற்கின்றனர். இது ஆண்களைவிட அதிகமான கடமைகளுக்கு வழி வைக்கின்றது.  பெண் அகிம்சையின் அவதாரம். குழந்தையைப் பத்து மாதம் சுமப்பது, கருவுக்கு உணவூட்டி வளர்ப்பது, போன்றன அவளின் கடமைகள், துன்பங்கள். இவற்றில் அவள் இன்பம் காண்கிறாள். பிரசவ வேதனைக்கு ஒப்பான வேதனை வேறு எதுவும் உண்டா. ஆனால் ஓர் உயிரைப் படைப்பதினால் உண்டாகும் ஆனந்தத்தில் அவள் அந்த அவஸ்தைகளையெல்லாம் மறந்து விடுகிறாள்.

அதன்பின் குழந்தையை நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாக வளர்க்கிறாள். அன்போடு வளர்க்கிறாள். அந்தக் குழந்தைகள் அன்பினை உலகிற்குத் தரட்டும்

மேலும் படிக்க கீழே உள்ள சுட்டியை சுட்டவும்.

சர் பிட்டி தியாகராயர் – ஓர் அறிமுகம்


siragu sar.pitti.thiyaagaraayar1
ஏப்ரல் 27 1852 இல் பிறந்து, அதே மாதம் ஏப்ரல் 28 1925 இல் மறைந்த சர் பிட்டி தியாகராயர், நீதிக்கட்சி தொடங்கிய முன்னோடிகளில் ஒருவர். அவரைப் பற்றி, அறிஞர் அண்ணா அவர்கள் 30.6.1950 அன்று திருவல்லிக்கேணியில் நடைபெற்ற தியாகராயரது நினைவு நாள் கூட்டத்தில் ஆற்றிய உரையில்,

”திராவிடர்” என்ற உணர்ச்சியும் “திராவிட நாடு” என்ற எண்ணமும் குறைந்து, எங்கு நோக்கினும் திராவிடர் துன்ப வாழ்வில் சிக்கிச் சிதைந்துவந்த அந்தக் காலத்தில்தான் தியாகராயர் தோன்றினார். வேதனை மிகுந்த காட்சியைக் கண்டு உள்ளம் வெதும்பினார். சீறிப் போரிட்டுச் சீர்கேட்டை ஒழிக்கச் செயலிலே இறங்கினார். அவரைப் பொறுத்தமட்டும் அவருக்கு ஒரு குறையுமில்லை. மற்ற பிரச்சாரங்களைவிட அறிவுப் பிரச்சாரம் தான் முக்கியமானது என்று தியாகராயர் எண்ணினார். அன்றே அவர் அறப்போரைத் தொடங்கினார். அந்த அறப்போர் இன்று வெற்றிபெற்றிருப்பதைக் கண்டு பெருமை அடைகிறோம். அரசியல் வாழ்விலே பலர் இடம் பெற்றிருப்பதைக் கண்டு பெருமை அடைகிறோம். அன்று தியாகராயர் மத விடயங்களிலே புகவில்லை! புரோகிதத்தை எதிர்க்கவில்லை, ஏனென்றால், முதலில் அவர், திராவிடர்களுக்குத் தன்னுணர்வையும் தன்மானத்தையும் உண்டாக்கவே விரும்பினார். மக்களுக்கு முதன் முதலிலே தன்னுணர்வை ஏற்படுத்தி மக்களைத் தட்டி எழுப்பிய பின்தான் அவர் மத விடயத்திலே புக விரும்பினார். முதன் முதலில் நம் மக்களுக்கு என்ன தேவை என்பதை நன்குணர்ந்தே அவர் முதலிலே அப்படி ஈடுபட்டார்.

மேலும் படிக்க கீழே உள்ள சுட்டியை சுட்டவும்.