Wednesday 20 May 2020

இரணியன் அல்லது இணையற்ற வீரன்!!


siragu iraniyan1
புரட்சிக் கவிஞர் என்றால் அது புதுவை தந்த கவிஞர் கனகு சுப்புரத்தினம் தான். அந்த அடையாளத்தை அவருக்கு வழங்கியது திராவிடர் இயக்கம். தந்தை பெரியாரின் ஒரே ஒரு பகுத்தறிவுப் பாதையில் பயணிக்கத் தொடங்கிய காலம் முதல், தந்தை பெரியாரின் எழுத்துக்களைக் கவிதையில் கொணர்ந்து மக்களிடம் கொண்டு சேர்த்த பெருமை அவருக்கே உண்டு!!
அதனால் தான் திராவிடர் இயக்கத்தின் முதல் தளபதியாக திகழ்ந்த பேரறிஞர் அண்ணா அவர்கள், பாரதிதாசன் அவர்கள் பற்றிக் கூறும்போது “முகிலைக் கிழித்து வெளிக்கிளம்பும் ஒரு முழுமதி போல தமிழ்நாட்டில் தோழர் பாரதிதாசன் கவிதை தோன்றியுள்ளது. புரட்சிக்கருத்துக்கள் அவரது உள்ளத்தில் பொங்கிப் பூரித்துப் புதுமைக் கவிகளாக வெளிவருகின்றன. இயற்கையின் எழில், கலை நுணுக்கம் முதலியவை பற்றி அவர் இயற்றியுள்ள கவிதைகள் படிப்போரைக் களிப்புக் கடலில் ஆழ்த்தும்.” என்று குறிப்பிடுகிறார்.

உலக அரங்கில் பாரதிதாசன் அவர்களுக்கு இணையான ஒரு கவிஞரை குறிப்பிட வேண்டுமென்றால் அமெரிக்காவின் வால்ட் விட்மனை கூறலாம். “பழைய கட்டுப்பாடுகளையும் முட்டுப்பாடுகளையும் உடைத்தெறிந்து, கவிதைக்கும் வசனத்திற்கும் புதிய சுதந்தர ஓட்டந்தருகிறேன்” என்றார் வால்ட் விட்மன். அதே போல தமிழ்நாட்டின் வால்ட் விட்மன் பாரதிதாசன் என்றால் மிகையாகாது.

மேலும் படிக்க கீழே உள்ள சுட்டியை சுட்டவும்.
http://siragu.com/%E0%AE%87%E0%AE%B0%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%87%E0%AE%A3%E0%AF%88%E0%AE%AF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1-%E0%AE%B5/

No comments:

Post a Comment