Wednesday 29 April 2020

முல்லைப்பாட்டுக்கு எழுதப்பட்ட உரைகள்


siragu mullaippaatu2
பத்துப்பாட்டு வரிசையில் ஐந்தாவதாக வைக்கப்பட்டுள்ள முல்லைப்பாட்டு நூல் 103 அடிகளைக் கொண்ட பாடல். நூலின் ஆசிரியர் காவிரிப்பூம்பட்டினத்துப் பொன்வணிகனார் மகனார் நப்பூதனார் என்பவர். சோழநாட்டைச் சேர்ந்த வணிகராக இவர் இருந்திருக்க வாய்ப்புண்டு. நேரிசை ஆசிரியப்பாவில் இந்நூலை எழுதியுள்ளார் நப்பூதனார். பாடலில் பாடப்பட்டவர் பெயர் இன்னதென்றுக் குறிப்பு இல்லாவிட்டாலும் தலையாலங்கானத்துச் செருவென்ற நெடுஞ்செழியன் என்று கருதப்படுகிறது. நப்பூதனார் நெடுஞ்செழியனின் அவைப்புலவர் என்றும் கருதப்படுகிறது. போருக்குச் சென்ற தலைவன் தான் மீண்டும் கார்காலத் துவக்கத்தில் திரும்புவதாக அறிவித்துச் செல்ல, அவன் வரவை எதிர்நோக்கித் தலைவியும், தலைவியின் நினைவாகப் போர்முனையிலிருந்த தலைவனும் வருத்தமுற்று, பின் மீண்டும் இணைவதைச் சொல்கிறது முல்லைப்பாட்டு நூலின் கருத்து. பாடலில் இரண்டிலிருந்து மூன்று விழுக்காடு வடமொழிச் சொற்கள் இருப்பதாகவும் பாடலில் காலம் கி. மு. 2 ஆம் நூற்றாண்டு என்பதும் மறைமலையடிகளின் கருத்து.

கார்காலத்தின் இயற்கை, தலைவியின் தனிமை உணர்வு, போர்க்களத்தின் சூழல் ஆகியன செம்மையாக விவரிக்கப்படுவதாகத் தமிழறிஞர்களின் பாராட்டைப் பெரும் இலக்கியம் முல்லைப்பாட்டு. முல்லை சார்ந்த ஒழுக்கங்களாகப் பாடலில் இடம்பெறுவது; பகை வெல்லும் பொருட்டு, வேற்றோர் அரசனின் நாடு கைப்பற்றும் நோக்கத்துடன் தலைவன் தானே போருக்குச் செல்லுதலான வஞ்சித்திணை புறவொழுக்கமும்,அதனால் பிரிந்த தலைவியும் தலைவனும் தனது காதல் துணையை எண்ணிக் காத்து இருத்தலும் இருத்தல் நிமித்தமுமான அகவொழுக்கமும் பாடலில் காணப்படுகிறது. இச்சூழல் உணர்த்தும் நிகழ்வை இக்காலத்தில் இயக்குநர் மணிரத்தினம் தளபதி படத்தில்,”சுந்தரி கண்ணால் ஒரு சேதி சொல்லடி இன்னாள் நல்ல தேதி” என்ற பாடலில் மிகச் சிறப்பாகக் காட்சிப் படுத்தியதையும் [https://youtu.be/6PPpbSB0iME] இங்கு நினைவு கூரலாம்.

மேலும் படிக்க கீழே உள்ள சுட்டியை சுட்டவும்.

Tuesday 28 April 2020

கரோனாவும் உலக நாடுகளில் அதன் பரவலும்


siragu coronavirus6
சீனாவின் வூஹான் நகரில் ஆரம்ப்பித்து உலகம் முழுதும் பரவிக்கொண்டுள்ள ஒரு வித வைரஸ் இந்த கரோனா. இதன் நோய் பாதிப்பை விட இது ஏற்படுத்திய பீதி மற்றும் பொருளாதார பாதிப்பு மிக அதிகம்.
உலகம் முழுக்க பரவினாலும், இதன் தாக்கம் ஐரோப்பா மற்றும் வட அமெரிக்காவிலேயே அதிகமாக உள்ளது. மூன்றில் ஒரு பகுதி மக்கள்தொகை கொண்ட ஆசியா, ஆப்பிரிக்காவைக் காட்டிலும் வெறும் 15% கொண்ட ஐரோப்பா மற்றும் வட அமெரிக்காவையே அதிகம் தாக்கியுள்ளது. ஏன் தென் அமெரிக்காவில் கூட அவ்வளவு பாதிப்பு இல்லை.
காரணம் என்ன?

ஒரு நாட்டிலிருந்து மற்றொரு நாட்டிற்கு பரவ மிக முக்கியக்காரணம் விமான போக்குவரத்து. ஆனால் உள்நாட்டிற்குள் பரவுவது அந்நாட்டில் தட்பவெப்ப நிலை மற்றும் அந்நாட்டு மக்களின் நோய் எதிர்ப்பு சக்தியைப் பொறுத்தே அமைகிறது.

மேலும் படிக்க கீழே உள்ள சுட்டியை சுட்டவும்.

சர்வோதயம்


siragu agimsai1
காந்தியடிகளுக்கு மிகவும் பிடித்த நூல் கடையனுக்கும் கடைத்தேற்றம் என்ற நூல். இதனை எழுதியவர் ரஸ்கின் ஆவார். இவரின் இந்நூலைக் குஜராத்தி மொழியில் காந்தியடிகள் சர்வோதயம், அதாவது சர்வ ஜனநலம் என்ற பெயரில் மொழி பெயர்த்தார். அவருக்குள் பெருத்த மாற்றத்தை இந்நூல் ஏற்படுத்தியது. இந்நூல் ஏன் தன்னைக் கவர்ந்தது எப்படி அதற்கான காரணங்கள் என்ன என்று காந்தியடிகளே சொல்கிறார்.
எல்லாருடைய நலனில்தான் தனிப்பட்டவரின் நலனும் அடங்கியிருக்கிறது.
தங்கள் உழைப்பினால் தங்கள் வாழ்வினை நடத்த வேண்டியிருப்பதால் அனைவருக்கும் ஒரே வகையான உரிமை உண்டு. உயர் தொழில் செய்பர்கள், கீழ்நிலைத் தொழில் செய்பவர்கள் என அனைவருக்கும் ஒரே மாதிரியான உரிமை உண்டு. விவசாய வாழ்க்கை, பாட்டாளி வாழ்க்கை, கைத்தொழில் செய்பவரின் வாழ்க்கை போன்ற அனைத்துமே வாழ்வதற்கு உகந்த மென்மையான வாழ்க்கை முறைகள்.
இந்த மூன்று கருத்துகளை அந்நூல் காந்தியடிகளுக்குத் தெரிவித்தது கடையனுக்கும் கடைத்தேற்றம் என்ற நூல்.

இந்நூலின் வழியாகச் சர்வோதயம் அறிமுகமாகிறது காந்தியடிகளுக்கு. எல்லோரும் ஓர் குலம். எல்லோரும் ஓர் நிறை, எல்லோரும் இந்திய மக்கள் என்ற நன்னிலை அவருக்குள் உதயமாகிறது. கிராமமக்கள், நகர மக்கள் என்ற பாகுபாடு இருக்கக் கூடாது. இதற்கு ஒரே வழி தன்னிறைவான வாழ்க்கையை அனைவரும் அடைதலே ஆகும். 

மேலும் படிக்க கீழே உள்ள சுட்டியை சுட்டவும்.

Friday 24 April 2020

பாம்பையும் பார்ப்பானையும் கண்டால் பாம்பை விட்டுவிட்டுப் பார்ப்பானை அடிக்கச் சொன்னாரா பெரியார்?


siragu karpu4
பெரியரைப் பற்றி பல அவதூறுகள் தொடர்ந்து பரப்பப்பட்டுக் கொண்டே வந்திருக்கின்றன. இன்றைய இணையக் காலத்தில் தான் என்றல்ல, அவர் என்றைக்குக் காங்கிரசு கட்சியை விட்டு வெளியேறி, பார்ப்பன ஆதிக்கத்தை அடக்கியே தீருவேன் என்று சுயமரியாதை இயக்கத்தை 1925 இல் தொடங்கினாரோ அன்றிலிருந்தே அவரைப் பற்றிய அவதூறுகளும் தொடங்கி விட்டன. இதனைப் புராணக் கதைகளோடு பொருத்திப் பார்க்க இயலும். கதைகளில் அரக்கர் எனச் சொல்லப்படுவோர் அனைவருமே திராவிடர் இன மக்கள் தான் அண்ணல் அம்பேத்கர், ஜவஹர்லால் நேரு போன்றவர்களே ஆதாரத்துடன் குறிப்பிட்டுள்ளார்கள். அந்த அரக்கர் என்பவர்கள் தேவர்களுக்கு (பார்ப்பனர்கள்) இடையூறாக இருந்தனர் என்றும், அவர்கள் மிக மோசமானவர்கள் என்றும் கதைகளில் எழுதி வைத்தவர் பார்ப்பனர்கள்.
அவர்களைப் பொறுத்தவரையில் பார்ப்பனர்களின் ஆதிக்கத்தைத் தட்டிக் கேட்டால் அவர்கள் கெட்டவர்கள் என்று கதை கட்டுவது அவர்களுக்கு வழக்கம். அந்த வகையில் தான் திராவிடர் இயக்கத் தலைவர்கள் அனைவரின் மீதும் ஆதாரம் இல்லா கதை எழுதிப் பரப்பி விடுவார்கள்.

மேலும் படிக்க கீழே உள்ள சுட்டியை சுட்டவும்.

நோய்நாடி நோய்முதல் நாடி…


siragu coronavirus2
ஊரடங்கு – இன்று நம் ஒவ்வொருவரின் வீட்டிலும் நாள்தோறும் எதிரொலிக்கும் வார்த்தை. தமிழ் அகராதியில் நாமனைவரும் மிக அதிகம் பயன்படுத்தும் வார்த்தையும் இதுவாகத்தான் இருக்கும். விலகியிரு, தனித்திரு, வீட்டிலிரு – இவையெல்லாம் இந்த பந்தயத்தில் அடுத்ததடுத்து பதக்கம் பெறும் சொற்கள். தெருவெல்லாம் டிராபிக்ஜாம், ஜவுளிகடை, பாத்திரக்கடை, நகைக்கடை, பரோட்டாகடை என்று எங்கெங்கும் நீக்கமற நிறைந்திருந்த நாம் எப்படி இப்படி ஒடுங்கிபோனோம்? ஆஸ்பத்திரி அல்லது வீடு இந்த இரண்டு இடங்களைத் தவிர இன்று வேறு எந்த இடத்திலும் ஒரே மனிதனை பத்து நிமிடத்திற்கு மேல் பார்க்கமுடியாது. ஏன்? எவ்வாறு? கொரோனா – ஆடாத ஆட்டம் ஆடிய மானுடத்தை பெட்டி பாம்பாக கட்டி போட்டிருக்கும் இந்த குட்டி வைரஸின் நதிமூலம், ரிஷிமூலம் சிறிது ஆராய்வோம் …

நவம்பர் 2019 உலகின் வல்லரசுகளில் ஒன்றான சீனாவின் ஹூபே மாகாணத்தில் உள்ள வூஹான் நகரம். இங்குதான் அந்த நாட்டின் மிகப்பெரிய இறைச்சி சந்தைகளில் ஒன்றான ஹுனான் மொத்த விற்பனைச்சந்தை செயல்படுகிறது. இங்கு இறைச்சி, உயிருள்ள மீன்கள் மற்றும் உயிருள்ள வனவிலங்குகளும் விற்பனைக்கு உண்டு.

மேலும் படிக்க கீழே உள்ள சுட்டியை சுட்டவும்.

Wednesday 22 April 2020

அகிம்சையின் வெற்றி


 siragu agimsai1
அண்ணல் காந்தியடிகளின் மிக முக்கியமான வாழ்வியல் கோட்பாடு அகிம்சையாகும். இதனை உணர்த்த, இதன் வலிமையை உணர்த்த அவர் பல பக்கங்கள் எழுதியுள்ளார், பேசியுள்ளார், அனுபவித்துள்ளார். அகிம்சை  வெற்றிக்கான வழி என்கிறார் காந்தியடிகள். அந்த வெற்றிக்கான வழியைப் பெற பெற சில நிபந்தனைகளையும் அவர் முன்வைக்கிறார். அகிம்சையே மானிட வர்க்கத்தின் நியதி. அகிம்சையே மிருக பலத்தைக் காட்டிலும் கணக்கிலடங்காச் சிறப்பும் உன்னதமும் வாய்ந்தது.
அகிம்சை ஒருவரின் தன்மான உணர்விற்கும், சுயமரியாதைக்கும் பாதுகாப்பு தருவது. சொத்துகளை, செல்வங்களை ஆட்கள் வைத்துப் பாதுகாப்பதை விட அகிம்சையைப் பின்பற்றினால் அதுவே மிகப் பெரிய பாதுகாப்பாக இருக்கும். தவறான வழிகளில் சேர்த்த பொருள்களுக்கும், ஒழுக்கக்கேடான நடவடிக்கைகளுக்கும் ஒருபோதும் அகிம்சை துணை நிற்காது. ஒரு நாட்டைத் தன் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்கும் தன்மைக்கு எதிரானது அகிம்சை.
அன்புடைய எவரும் அகிம்சை வழி நிற்கலாம். அதற்கு இளைஞர்கள், குழந்தைகள், பெரியவர்கள், பெண்கள் என்ற பாகுபாடு கிடையாது. அன்பிற்கு என்ன வேறுபாடுகள்.

      “ வாழ்க்கைச் செயல்கள் முழுவதும் அகிம்சையில் அமையவேண்டும்.

மேலும் படிக்க கீழே உள்ள சுட்டியை சுட்டவும்.

குறள் கூறும் பகுத்தறிவின் இலக்கணம்


siragu thirukkural1
அறிவுடைமை (அதிகாரம் 43) என்றே 10 குறள்கள் கொண்ட ஒரு அதிகாரத்தை அறிவுக்காக ஒதுக்கியுள்ளார் வள்ளுவர். மேலும் அறி, அறிய, அறிவு, அறிக, அறியும், அறிந்து, அறிந்த, அறிவது, அறியா, அறியாமை, அறியார், அறிந்தார், அறிவார், அறிவான், அறியான், அறியேன், அறிவுடையார், அறிவிலார், அறிவிலான், அறிவினவர் போன்ற அறிவு குறித்த 50க்கும் மேற்பட்ட சொற்களை (54 சொற்கள்), 100க்கும் மேற்பட்ட முறை (163 முறை) அறிவின் இன்றியமையாமை, அது இல்லாவிட்டால் ஏற்படும் துன்பம் ஆகியவற்றைக் குறித்து அறிவுறுத்தும் நோக்கில் வள்ளுவர் கையாண்டுள்ளார். இவற்றில் அறிந்து (39 முறை) மற்றும் அறிவு (22 முறை) ஆகிய இரு சொற்களும் அதிக முறை அதிக அளவில் குறள்களில் இடம்பெற்றுள்ளன. அறிவின் தேவை குறித்து வள்ளுவர் அறிவுடைமை அதிகாரம் மட்டுமின்றி மேலும் பல அதிகாரங்களிலும் தேவைக்கேற்ப குறிப்பிடுகிறார்.
அறிவுடைமை என்பதன் விளக்கம்:
அறிவுடைமை அதிகாரம் அறிவு என்பதைக் கீழ் வருமாறு விளக்குகிறது;
பகைவரிடம் இருந்து நம்மைக் காக்கும் அரண் அறிவு (421),
மனதை அலையவிடாமல் தீமையை விலக்கி நன்மையைத் தெரிந்தெடுக்க உதவுவது அறிவு (422),
சான்றோர் அறிவுரைப்படி இன்பம் துன்பம் ஆகியவற்றை ஒரே போன்று கருதும் மனப்பான்மையைக் கடைப்பிடிக்க அறிவுறுத்துவது அறிவு (425),
அவர்கள் வழிகாட்டியபடி உலகவழக்கை ஒட்டி நடக்கச் செய்வது அறிவு (426),
தனது செயலினால் விளையக் கூடியவற்றை அறிந்திருக்க உதவுவது அறிவு (427),
அஞ்ச வேண்டியவற்றுக்கு அஞ்சி நடக்கச் செய்வது அறிவு (428),
எதிர்கொள்ளக்கூடிய துன்பத்திலிருந்து தடுத்துக் கொள்ளும் வகையை அறியச் செய்வது அறிவு (429),

இவ்வாறாக அறியும் திறன் பெற்றவருக்கு அறிவே எல்லா செல்வத்துக்கும் இணையாக அமையும் (430) என்று அறிவின் சிறப்பை குறள்கள் வழியே கோடிட்டுக் காட்டுகிறார் வள்ளுவர்.

மேலும் படிக்க கீழே உள்ள சுட்டியை சுட்டவும்.

Wednesday 15 April 2020

கொரோனா நோய் தொற்றுப் பரவலும், மத்திய அரசின் பாரபட்ச நிதி ஒதுக்கீடும்!


siragu coronavirus2
உலகெங்கிலும் கொரோனா தொற்று நோய் பாதிப்பு படு தீவிரமாக உயர்ந்து வருகிறது. உயிரிழப்பு ஒரு லட்சத்தை நெருங்கிக்கொண்டிருக்கிறது என்பது நம் எல்லோருக்கும் பேரச்சத்தைத் தருவதாக இருக்கிறது. உலகிலுள்ள மனித குலமே செய்வதறியாது கலங்கி போய் தவிப்பதை பார்க்கும்போதும், வளர்ந்த நாடுகள் அனைத்தும் மிகுந்த உயிரிழப்புகளை சந்தித்து வரும் இவ்வேளையில், நாம் என்ன செய்யப் போகிறோம், நம் அரசு என்ன செய்யப் போகிறது என்பது பெரும் கேள்விக்குறியாகவே நம் முன்னே வந்து நிற்கிறது. இந்தியாவில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 6,412 ஆக உயர்ந்துள்ளது. உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 199 என அதிகரித்திருக்கிறது. மத்திய சுகாதாரத்துறை தெரிவித்திருக்கும் செய்தியில், கடந்த 12 மணிநேரத்தில், 30 பேர் உயிரிழந்திருப்பதாக கூறுகிறது. தமிழ்நாட்டின் நிலைமையோ கொஞ்சம் கொஞ்சமாக அதிகரித்த வண்ணம் இருக்கிறது. இன்றைய புள்ளிவிவரப்படி, கோவிட் 19 பாதிப்புள்ளானவர்களின் எண்ணிக்கை 911 எனவும், இறந்தவர்கள் 9 எனவும் கூறுகிறது. நாடு அளவில், பாதிப்புக்குள்ளானவர்கள் எண்ணிக்கையில், முதலிடத்தில் இருக்கும் மகாராஷ்டிரத்தை அடுத்து, தமிழ்நாடு இரண்டாவது இடத்தில் இருக்கிறது.
ஆனால், இந்நிலையில், கொரோனா நிதி வழங்கும் விசயத்தில் கூட, மத்திய பா.ச.க அரசு பாரபட்சம் காட்டுகிறது என்பது வேதனைக்குரிய ஒன்றாகவே இருக்கிறது. மனித நேயத்துடன், உயிர் காக்கும் இந்த நிதி வழங்கல் நடவடிக்கையில், வடமாநிலங்களுக்கு ஒரு விதமாகவும், தென் மாநிலங்களுக்கு ஒரு விதமாகவும் பாகுபாடு காட்டுகிறது. நம்மை விட குறைவாக பாதிக்கப்பட்டிருக்கும் மாநிலங்களுக்கு, அதாவது, 234 பேர்கள் பாதிப்புள்ள மாநிலமான உத்திரப்பிரதேசத்திற்கு ரூ.996 கோடியும், 179 பேர்கள் கூட இல்லாத மத்தியப்பிரதேசத்திற்கு, ரூ.910 கோடியும், 21 பேர்கள் பாதித்த ஒடிசாவிற்கு, 802 கோடியும், 32 பேர்கள் பாதித்த பீகார் மாநிலத்திற்கு ரூ.708 கோடியும் , 122 பேர் பாதித்திருக்கும் குஜராத் மாநிலத்திற்கு ரூ. 662 கோடியும், 571 பாதித்த தமிழ்நாட்டிற்கு ரூ.510 கோடி என ஒதுக்கீடு செய்திருக்கிறது. இந்த அறிவிப்பு ஒதுக்கீடு செய்த அன்று வெளியிடப்பட்டது. ஆனால், தற்போதைய நிலை தமிழ்நாட்டில் 911 என உயர்ந்திருக்கிறது. அன்றைய நிலவரப்படியே பார்த்தாலும் , நம்மைவிட குறைவான பாதிப்பு உள்ள மாநிலங்களுக்கு அதிக நிதி ஒதுக்கியிருக்கிறது பா.ச.க அரசு. பா.ச.க ஆளும் மாநிலங்களுக்கும், அது கூட்டணி வைத்திருக்கும் மாநிலங்களுக்கும் அதிக நிதி கொடுக்கிறது. தமிழ்நாடு என்றாலே எப்போதும் ஒரு வகையான பாகுபாட்டை கடைபிடிக்கிறது பா.ச.க அரசு. அதிலும், உட்சபட்ச பாகுபாடாக, பாதிக்கப்பட்ட மாநிலங்களின் வரிசையில், தமிழ்நாட்டை அடுத்து மூன்றாவதாக உள்ள கேரளத்திற்கு வெறும் ரூ. 157 கோடி அளிப்பதாகக் கூறியிருக்கிறது. இந்த விசயத்தில் கூடவா வன்மத்தைக் காட்ட வேண்டும்!

மேலும் படிக்க கீழே உள்ள சுட்டியை சுட்டவும்.

நாள் கூலித்தொழிலாளி (கவிதை)


siragu ooradangu1


இயற்கை
தன் விதியை
தானே எழுதிக்கொள்கிறது..
விஞ்ஞானமும் மெய்ஞானமும்
தமக்குள் முட்டி மோதிக்கொள்கையில்..

நாள் கூலித்தொழிலாளி!
வெளியே போனால்
கொரோனா வைரஸ் பிடிக்குமாம்..

வீட்டுள்

மேலும் படிக்க கீழே உள்ள சுட்டியை சுட்டவும்.

Friday 10 April 2020

அவளும் அவனும் (சிறுகதை)


siragu coronavirus3
“டாக்டர், கொஞ்சம் சீக்கிரம் பாருங்களேன்” என்றாள் ரஞ்சித்தா. “இருங்க ஒவ்வொரு நோயாளியா தானே பார்க்க முடியும்”
“இல்ல டாக்டர் என் தோழிக்கு தலைல அடிபட்டிருச்சு ”
“சரி இருங்க வறேன் “
தலையில் பலமாக அடிபட்டிருந்தது பகுத்தறிவிற்கு. இரத்தம் வழிவதை ஒரு கைக்குட்டையால் அழுந்த பிடித்துக் கொண்டிருந்தாள். வலி அவள் கண்களில் தெரிந்தாலும் அதையும் தாண்டிய ஒரு துணிவு அவள் கண்களில் தெரிந்தது. வலியில் முனகவில்லை.
“எப்படி அடிபட்டது?” என்று கேட்டுக்கொண்டே பகுத்தறிவின் தலையில் வழிந்த இரத்தத்தைத் துடைத்து, மருந்திட்டான் முரசொலி.
“கூட்டத்துல பேசிட்டு இருந்தோம். நீட் எதிர்ப்பு மாநாடு. தீடிரென்று கலவரம். அப்போ யாரோ தலையில் அடிச்சுட்டாங்க” என்றாள் ரஞ்சித்தா.

“ஓ, போலீசிடம் சொல்லியாச்சா “

மேலும் படிக்க கீழே உள்ள சுட்டியை சுட்டவும்.

நாளைய உலகம்


siragu agimsai3
காந்தியடிகள் தற்கால உலகின் இன்னல்களுக்குச் சத்தியத்தின் வழியில் தீர்வுகள் சொன்னவர். அவர் எதிர்காலம் பற்றியும் சிந்தித்துள்ளார். நாளைய உலகம் பற்றி அவர் பேசியுள்ளார்.
நாளைய உலகம் பற்றிய அவரின் சிந்தனைகள் கேள்விகள் கொண்டு தொடங்குகின்றன.
      நாளைய உலகம் நன்முறை உடையதாக இருக்குமா?
      அல்லது வன்முறை உடையதாக இருக்குமா?
என்பது அவர் எழுப்பும் முதல் கேள்வி. இக்கேள்வியைத் தொடர்ந்து
எப்போதுமே பசி, பட்டினி, ஆழ்துயர் இவை தீரவே தீராதா. தொடர்ந்து வந்து கொண்டே இருக்குமா?
      என்று அடுத்த கேள்வியை முன்வைக்கிறார்.

இதைத் தொடர்ந்து அவர் எழுப்பும் மிக முக்கியமான கேள்வி தர்மத்தின் மீது எதிர்காலச் சந்ததியினருக்கும் ஆழமான நம்பிக்கை இருக்குமா?

மேலும் படிக்க கீழே உள்ள சுட்டியை சுட்டவும்.

கொவிட்-19 (கவிதை)


siragu coronavirus6


உள்ள கடவுளை
இல்லை என்கிறதா?
கடவுள் இல்லை
என்பதை மெய்பிக்கின்றதா?
நுண்ணுயிர் கொண்டு
மனிதரை கொன்றிடும்
நவீன விஞ்ஞான



சோதனைகளின் தொடர்ச்சியா?

மேலும் படிக்க கீழே உள்ள சுட்டியை சுட்டவும்.

Thursday 2 April 2020

சிந்து சமவெளி குறியீடுகள் படிக்கப்பட்டது என்றொரு மோசடி

ஐயாயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் தோன்றி, மூவாயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் வரை (3300–1300 பொது காலத்திற்கு முன்னர் / பொ.கா.மு / BCE) சற்றொப்ப இரண்டாயிரம் ஆண்டுகள் சிறந்து விளங்கியது சிந்து சமவெளி நாகரிகம். இது இந்தியாவின் வடமேற்குப் பகுதியில் சிந்து ஆற்றங்கரையில் உருவான நகர நாகரிகம். பண்டைய உலகில் புகழ் பெற்று விளங்கியிருந்த சுமேரிய, எகிப்து, சீன நாகரிகங்கள் போன்று, வெண்கலக் கால உலகின் சிறந்து விளங்கிய ஆற்றங்கரை நகர நாகரிகம். சுட்டக் களிமண் செங்கற்களால் சீரிய முறையில் அமைக்கப்பட்ட கட்டடங்களும், நேரான வீதிகளும், பொதுமக்கள் குழுமும் இடங்களும், நீர்த் தேக்கங்களும், குளமும், திட்டமிடப்பட்டு அமைக்கப்பட்டிருந்த நகரின் கழிவுநீர் வடிகால்களும், நீர்நிலைகளும், வணிக முத்திரைகளும் இன்றைய நாகரிகத்தில் வாழும் பலரையும் கூட வியப்பில் மூழ்கச் செய்யும். சுற்றுச் சூழல் பாதிக்கப்பட்டு, நீரற்றுப் போன இந்த நகரத்தில் வாழ்ந்த மக்கள் புதிய நீர்நிலைகளைத் தேடி இடம் பெயர்ந்து கங்கைச் சமவெளியில் குடியேறினார்கள் என்றும், சிந்து ஆறு தனது தடத்தை மாற்றிக் கொண்டதால் நீரற்று உழவுத்தொழில் நலிவடைந்து மக்கள் நகரைக் கைவிட்டு வெளியேறி இந்தியா முழுவதும் பரவினர் என்பதும் ஆய்வாளர்களின் கருத்து.
siragu civilizations

ஆனால், இன்றுவரையிலும் உண்மையில் என்ன நடந்திருக்கலாம் என்பதை உறுதி செய்ய முடியாத நிலையில்தான் மறைந்துபோன சிந்துசமவெளி நாகரீகத்தின் வரலாறு இருக்கிறது. சிந்து சமவெளி மக்கள் பயன்படுத்திய முத்திரைகளின் எழுத்துக்கள் என்னதான் கூறுகின்றன என்பதும் பொதுமக்கள் மற்றும் ஆய்வாளர்களின் ஆர்வத்தைத் தூண்டிய வண்ணமே இருக்கிறது. கடந்த ஒரு நூற்றாண்டாகச் சிந்து சமவெளிப்பகுதியில் அகழாய்வுகள் தொடர்ந்து நடந்து வருகின்றன. பல தடயங்களும், ஆயிரத்திற்கும் மேலான நகரக் குடியிருப்புகளும் அவற்றில் பல ஆயிரக்கணக்கான மக்களும் வாழ்ந்து வந்தனர் என்பது மட்டுமே இப்பொழுது நமக்கு உறுதியாகத் தெரியும் தகவல். சிந்துசமவெளி நாகரிகத்தில் திராவிடக் கூறுகள் உள்ளன என்பது பெரும்பாலான ஆய்வாளர்கள் முடிவு. சிந்துவெளியின் மறைவுக்குப் பிறகு கைபர், போலன் கணவாய்கள் வழி இந்தியாவிற்குள் ஆரியர் குடியேறினர் என்ற கோட்பாட்டை மறுதலிக்கும் இந்துத்துவ தீவிரவாதிகள் சிந்துவெளி நாகரிகத்தை வேத கால நாகரீகம் என்றும் அது சரஸ்வதி-சிந்து நாகரிகம் என்று அழைக்கப்பட வேண்டும் என்று கூறி வருவதும் ஒவ்வொரு இந்தியரும் அறிந்ததே.

மேலும் படிக்க கீழே உள்ள சுட்டியை சுட்டவும்.

மிக வேகமாக பரவிவரும் கொரோனா வைரசும், ஊரடங்கு உத்தரவும்!


siragu coronavirus1
மனிதகுல வரலாற்றில் நாம் பல தொற்று நோய்கள், பல உயிரிழப்புகளைக் கண்டு, அனுபவித்துக் கடந்து தான் வந்திருக்கிறோம். அதன் அனுபவத்திலிருந்து பல பாடங்களும் கற்றிருக்கிறோம். மனித மூளை சிந்தித்து அறிவியலை கண்டடைந்தபோது, இன்னும் பல முன்னேற்றங்கள் ஏற்பட்டன. அந்தந்த காலத்திற்கேற்ப பல புதிய தீர்வுகள் உண்டாகின, அறிவியலார்கள் உருவாகினர், புதிய மருந்துகள் கண்டுபிடிக்கப்பட்டன, அதன் மூலம் பல்லாயிரகணக்கான மக்கள் காப்பாற்றப்பட்டிருக்கிறார்கள் என்றுதான் வரலாறு பதிவு செய்திருக்கிறது. கடந்த சில நூற்றாண்டுகளில் கூட, பெரியம்மை, காலரா, பிளேக் போன்ற தொற்றுநோய்கள் உருவாகி, மக்களை கொன்று குவித்திருக்கிறது.
1918-ல், ஏற்பட்ட ஸ்பானிஷ் ஃப்ளு காய்ச்சலில், இந்தியாவில் மட்டுமே கோடிக்கணக்கில் மக்கள் மடிந்தார்கள் என்று வரலாறு கூறுகிறது. அவ்வப்போது இயற்கை இப்படிப்பட்ட பேரழிவுகளை ஏற்படுத்திக்கொண்டுதான் இருக்கிறது. இவ்வுலகில் மனிதர்களுடன், தாவரங்கள், விலங்கினங்கள் வாழ்வது போல், கண்ணுக்குத் தெரியாத கிருமிகளும் கூட சேர்ந்து தான் வாழ்கின்றன. அவைகளும் நம்மைப் போலவே, நோய் எதிர்ப்பு சக்தியை கூட்டிக்கொண்டே போவதற்கான வழிமுறைகளை கையாளுகின்றன. தங்களுக்குத் தாங்களே தகவமைத்துக்கொள்கின்றன என்பதுதான் உண்மை. அவற்றிலிருந்து மனிதகுலம் ஒவ்வொரு முறையும் மீண்டு வந்துகொண்டுதானிருக்கின்றது. ஆனாலும், உயிரிழப்புகள் நேர்வதைத் தவிர்க்க முடியாது என்பதை நாம் உணர வேண்டும். அது அதிகளவில் நேராத வண்ணம் தடுப்பதற்கான ஆய்வுகள், அறிவியலின் மருத்துவ உலகம் ஒவ்வொரு முறையும் சாதனை புரிந்துக் கொண்டுதானிக்கிறது. இந்த உலக மக்களும், அவர்களை ஆளும் அரசுகளும் அதற்கான முன்னெடுப்பு முயற்சிகளை கைவிடாமல் தொடர்ந்து கொண்டு இருக்கிறார்கள் என்பது நிதர்சனமான உண்மை.

மேலும் படிக்க கீழே உள்ள சுட்டியை சுட்டவும்.