Tuesday 28 April 2020

சர்வோதயம்


siragu agimsai1
காந்தியடிகளுக்கு மிகவும் பிடித்த நூல் கடையனுக்கும் கடைத்தேற்றம் என்ற நூல். இதனை எழுதியவர் ரஸ்கின் ஆவார். இவரின் இந்நூலைக் குஜராத்தி மொழியில் காந்தியடிகள் சர்வோதயம், அதாவது சர்வ ஜனநலம் என்ற பெயரில் மொழி பெயர்த்தார். அவருக்குள் பெருத்த மாற்றத்தை இந்நூல் ஏற்படுத்தியது. இந்நூல் ஏன் தன்னைக் கவர்ந்தது எப்படி அதற்கான காரணங்கள் என்ன என்று காந்தியடிகளே சொல்கிறார்.
எல்லாருடைய நலனில்தான் தனிப்பட்டவரின் நலனும் அடங்கியிருக்கிறது.
தங்கள் உழைப்பினால் தங்கள் வாழ்வினை நடத்த வேண்டியிருப்பதால் அனைவருக்கும் ஒரே வகையான உரிமை உண்டு. உயர் தொழில் செய்பர்கள், கீழ்நிலைத் தொழில் செய்பவர்கள் என அனைவருக்கும் ஒரே மாதிரியான உரிமை உண்டு. விவசாய வாழ்க்கை, பாட்டாளி வாழ்க்கை, கைத்தொழில் செய்பவரின் வாழ்க்கை போன்ற அனைத்துமே வாழ்வதற்கு உகந்த மென்மையான வாழ்க்கை முறைகள்.
இந்த மூன்று கருத்துகளை அந்நூல் காந்தியடிகளுக்குத் தெரிவித்தது கடையனுக்கும் கடைத்தேற்றம் என்ற நூல்.

இந்நூலின் வழியாகச் சர்வோதயம் அறிமுகமாகிறது காந்தியடிகளுக்கு. எல்லோரும் ஓர் குலம். எல்லோரும் ஓர் நிறை, எல்லோரும் இந்திய மக்கள் என்ற நன்னிலை அவருக்குள் உதயமாகிறது. கிராமமக்கள், நகர மக்கள் என்ற பாகுபாடு இருக்கக் கூடாது. இதற்கு ஒரே வழி தன்னிறைவான வாழ்க்கையை அனைவரும் அடைதலே ஆகும். 

மேலும் படிக்க கீழே உள்ள சுட்டியை சுட்டவும்.

No comments:

Post a Comment