Friday 24 April 2020

பாம்பையும் பார்ப்பானையும் கண்டால் பாம்பை விட்டுவிட்டுப் பார்ப்பானை அடிக்கச் சொன்னாரா பெரியார்?


siragu karpu4
பெரியரைப் பற்றி பல அவதூறுகள் தொடர்ந்து பரப்பப்பட்டுக் கொண்டே வந்திருக்கின்றன. இன்றைய இணையக் காலத்தில் தான் என்றல்ல, அவர் என்றைக்குக் காங்கிரசு கட்சியை விட்டு வெளியேறி, பார்ப்பன ஆதிக்கத்தை அடக்கியே தீருவேன் என்று சுயமரியாதை இயக்கத்தை 1925 இல் தொடங்கினாரோ அன்றிலிருந்தே அவரைப் பற்றிய அவதூறுகளும் தொடங்கி விட்டன. இதனைப் புராணக் கதைகளோடு பொருத்திப் பார்க்க இயலும். கதைகளில் அரக்கர் எனச் சொல்லப்படுவோர் அனைவருமே திராவிடர் இன மக்கள் தான் அண்ணல் அம்பேத்கர், ஜவஹர்லால் நேரு போன்றவர்களே ஆதாரத்துடன் குறிப்பிட்டுள்ளார்கள். அந்த அரக்கர் என்பவர்கள் தேவர்களுக்கு (பார்ப்பனர்கள்) இடையூறாக இருந்தனர் என்றும், அவர்கள் மிக மோசமானவர்கள் என்றும் கதைகளில் எழுதி வைத்தவர் பார்ப்பனர்கள்.
அவர்களைப் பொறுத்தவரையில் பார்ப்பனர்களின் ஆதிக்கத்தைத் தட்டிக் கேட்டால் அவர்கள் கெட்டவர்கள் என்று கதை கட்டுவது அவர்களுக்கு வழக்கம். அந்த வகையில் தான் திராவிடர் இயக்கத் தலைவர்கள் அனைவரின் மீதும் ஆதாரம் இல்லா கதை எழுதிப் பரப்பி விடுவார்கள்.

மேலும் படிக்க கீழே உள்ள சுட்டியை சுட்டவும்.

No comments:

Post a Comment