Wednesday 15 April 2020

கொரோனா நோய் தொற்றுப் பரவலும், மத்திய அரசின் பாரபட்ச நிதி ஒதுக்கீடும்!


siragu coronavirus2
உலகெங்கிலும் கொரோனா தொற்று நோய் பாதிப்பு படு தீவிரமாக உயர்ந்து வருகிறது. உயிரிழப்பு ஒரு லட்சத்தை நெருங்கிக்கொண்டிருக்கிறது என்பது நம் எல்லோருக்கும் பேரச்சத்தைத் தருவதாக இருக்கிறது. உலகிலுள்ள மனித குலமே செய்வதறியாது கலங்கி போய் தவிப்பதை பார்க்கும்போதும், வளர்ந்த நாடுகள் அனைத்தும் மிகுந்த உயிரிழப்புகளை சந்தித்து வரும் இவ்வேளையில், நாம் என்ன செய்யப் போகிறோம், நம் அரசு என்ன செய்யப் போகிறது என்பது பெரும் கேள்விக்குறியாகவே நம் முன்னே வந்து நிற்கிறது. இந்தியாவில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 6,412 ஆக உயர்ந்துள்ளது. உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 199 என அதிகரித்திருக்கிறது. மத்திய சுகாதாரத்துறை தெரிவித்திருக்கும் செய்தியில், கடந்த 12 மணிநேரத்தில், 30 பேர் உயிரிழந்திருப்பதாக கூறுகிறது. தமிழ்நாட்டின் நிலைமையோ கொஞ்சம் கொஞ்சமாக அதிகரித்த வண்ணம் இருக்கிறது. இன்றைய புள்ளிவிவரப்படி, கோவிட் 19 பாதிப்புள்ளானவர்களின் எண்ணிக்கை 911 எனவும், இறந்தவர்கள் 9 எனவும் கூறுகிறது. நாடு அளவில், பாதிப்புக்குள்ளானவர்கள் எண்ணிக்கையில், முதலிடத்தில் இருக்கும் மகாராஷ்டிரத்தை அடுத்து, தமிழ்நாடு இரண்டாவது இடத்தில் இருக்கிறது.
ஆனால், இந்நிலையில், கொரோனா நிதி வழங்கும் விசயத்தில் கூட, மத்திய பா.ச.க அரசு பாரபட்சம் காட்டுகிறது என்பது வேதனைக்குரிய ஒன்றாகவே இருக்கிறது. மனித நேயத்துடன், உயிர் காக்கும் இந்த நிதி வழங்கல் நடவடிக்கையில், வடமாநிலங்களுக்கு ஒரு விதமாகவும், தென் மாநிலங்களுக்கு ஒரு விதமாகவும் பாகுபாடு காட்டுகிறது. நம்மை விட குறைவாக பாதிக்கப்பட்டிருக்கும் மாநிலங்களுக்கு, அதாவது, 234 பேர்கள் பாதிப்புள்ள மாநிலமான உத்திரப்பிரதேசத்திற்கு ரூ.996 கோடியும், 179 பேர்கள் கூட இல்லாத மத்தியப்பிரதேசத்திற்கு, ரூ.910 கோடியும், 21 பேர்கள் பாதித்த ஒடிசாவிற்கு, 802 கோடியும், 32 பேர்கள் பாதித்த பீகார் மாநிலத்திற்கு ரூ.708 கோடியும் , 122 பேர் பாதித்திருக்கும் குஜராத் மாநிலத்திற்கு ரூ. 662 கோடியும், 571 பாதித்த தமிழ்நாட்டிற்கு ரூ.510 கோடி என ஒதுக்கீடு செய்திருக்கிறது. இந்த அறிவிப்பு ஒதுக்கீடு செய்த அன்று வெளியிடப்பட்டது. ஆனால், தற்போதைய நிலை தமிழ்நாட்டில் 911 என உயர்ந்திருக்கிறது. அன்றைய நிலவரப்படியே பார்த்தாலும் , நம்மைவிட குறைவான பாதிப்பு உள்ள மாநிலங்களுக்கு அதிக நிதி ஒதுக்கியிருக்கிறது பா.ச.க அரசு. பா.ச.க ஆளும் மாநிலங்களுக்கும், அது கூட்டணி வைத்திருக்கும் மாநிலங்களுக்கும் அதிக நிதி கொடுக்கிறது. தமிழ்நாடு என்றாலே எப்போதும் ஒரு வகையான பாகுபாட்டை கடைபிடிக்கிறது பா.ச.க அரசு. அதிலும், உட்சபட்ச பாகுபாடாக, பாதிக்கப்பட்ட மாநிலங்களின் வரிசையில், தமிழ்நாட்டை அடுத்து மூன்றாவதாக உள்ள கேரளத்திற்கு வெறும் ரூ. 157 கோடி அளிப்பதாகக் கூறியிருக்கிறது. இந்த விசயத்தில் கூடவா வன்மத்தைக் காட்ட வேண்டும்!

மேலும் படிக்க கீழே உள்ள சுட்டியை சுட்டவும்.

No comments:

Post a Comment