Tuesday 31 October 2017

கடவுளை அவமதித்தவர்கள் (சிறுகதை)


Siragu kadavulai1

மலையின் விளிம்பில் ஒதுங்கிக் கிடந்தது அந்த காலனி. அங்கொன்றும் இங்கொன்றுமாகக் கலைத்துப் போட்ட தீப்பெட்டிகளைப்போல வீடுகள் இருந்தது. ஊரின் நடுவே கொஞ்சம் சமதளமான இடம் எஞ்சியிருந்தது. அங்கேதான் மாரியம்மன் கோயிலின் அடையாளமாக ஒரு நாவல் மரம் ஒன்று நின்றது. அதனைச் சுற்றி தரையில் குத்தப்பட்ட வேல்கள் நின்றன. சிலவற்றில் எலுமிச்சை பழங்கள் குத்தப்பட்டிருந்தன. அந்த இடத்தைச்சுற்றி கொஞ்சம் காலி இடமிருந்தது. குழந்தைகள் விளையாடும் இடமாகவும் மாறிப்போக, கோயில் குழந்தைகளுக்கு மைதானமாகவும் மாறிப்போனது. ‘வொலிபோல்’ பந்துகளோ, சிறுவர்களின் குட்டி பந்துகளோ சில நேரம் வேலில் படுவதுண்டு. வேலை விட்டு வரும் சனங்கள் அதைப் பார்க்க நேரிட்டால்,
“இந்த சனியன் புடுச்ச வெள்ள காட்ட பாருங்க கோயில்ன்னு பாக்குதா, சாமிண்ணு பாக்குதா ஒரே ஆட்டம்தான்”
ஏசிக்கொண்டே போவார்கள். அவர்கள் காதில் வாங்கிக் கொள்வதாக இல்லை. கேட்டாலும் அவர்களிடம் பதிலுமில்லை. விளையாட்டு… விளையாட்டு…

சில நேரங்களில் யார் மேலிலாவது பந்து பட்டுவிடும். அன்றைக்கு காலனியே ரெண்டுபடும். எந்தப் பயலின் பந்து யார்மேலில் பட்டதோ அந்த இரண்டு வீட்டின் எல்லா விசயங்களும் பொது வெளிக்கு வந்து விடும். யார் யோக்கியம், யார் யோக்கியம் இல்லை, புள்ள வளர்த்த லெட்சணம் எல்லாம் வெளியே வந்து சந்தி சிரித்துவிடும்.

மேலும் படிக்க கீழே உள்ள சுட்டியை சுட்டவும்.

Monday 30 October 2017

அல்கட்ராஸ் தீவில் . . . (பகுதி-4)


IV. தி கிரேட் எஸ்கேப்:
எந்த ஒரு சிறைக்கைதியும் தப்பவே வழியில்லை என்ற பெயர் பெற்றிருந்த அமெரிக்காவின் அல்கட்ராஸ் தீவு சிறைச்சாலையின் பெருமையைக் குலைக்கும் வண்ணம் பலமுறை தப்பும் முயற்சிகள் நடந்தன. ஒருவரே இரண்டுமுறை தப்பிக்க முயன்றதும் உண்டு. ஆனால் தப்புவது என்பது எப்படி வரையறுக்கப்படுகிறது என்பதில்தான் உண்மையாகவே கைதிகள் தப்பினார்களா இல்லையா என்பது முடிவு செய்யப்படுகிறது.

Siragu alkatras4-1


சிறையில் இருந்து தப்பி தீவின் கரைவரை வந்து பிடிபட்டவர்களும் உண்டு, தப்பி கடலில் குதித்து நீந்தும்பொழுது சுடப்பட்டு இறந்தவர்களும் உண்டு, நீரின் குளிர் தாளாமல் விறைத்துப்போய் இறந்த உடலாக மிதந்து மீட்கப்பட்டவர்களும் உண்டு, தீவின் பாறைகளுக்கிடையில் மறைந்து கொண்டாலும் குளிர் தாங்காமல் தானே சிறைக்குத் திரும்ப வந்துவிட்டவர்களும் உண்டு, கரையேறித் தப்பினாலும் கைது செய்யப்பட்டு திரும்பியும் கொண்டுவரப்பட்டவர்களும் உண்டு, இல்லை ஹைப்போதெர்மியாவில் விறைத்துப்போய்க் கரையில் ஒதுங்கிக் கிடந்தவர்களை மருத்துவமனைக்கு எடுத்துச் சென்று உயிரைக் காப்பாற்றி திரும்பவும் சிறையில் அடைக்கப்பட்டவர்களும் உண்டு. எனவே, அல்கட்ராஸ் சிறை அதிகாரிகளும், எஃப்.பி.ஐ. அதிகாரிகளும் தப்பியவர்கள் யாவரும் உயிருடனோ, உயிரற்ற உடலாகவோ கிடைத்துவிட்டால் அவர்கள் தப்பிக்கவில்லை என்றும், அவ்வாறு உயிருடனோ, உயிரற்ற உடலாகவோ கிடைக்காவிட்டாலும் கூட அவர்கள் கடலில் மூழ்கி இறந்திருக்கலாம் என்ற வரையறையை வகுத்துக் கொண்டு இதுவரை யாருமே அல்கட்ராஸ் சிறையில் இருந்து தப்பியதில்லை என்று சொல்லி வந்தார்கள்.

மேலும் படிக்க கீழே உள்ள சுட்டியை சுட்டவும்.

Thursday 26 October 2017

கவிதைச்சோலை (நீதி இன்னும் சாகவில்லை!, மாற்றம் வருகுது)


நீதி இன்னும் சாகவில்லை!


Siragu needhi saagavillai1

இங்கு
நீதி இன்னும் சாகவில்லை
உயிர்த்துக்கொண்டது மீண்டும்
வித்தியாக்களின் ஆன்மா வடிவில்!

தர்மம் அழிந்துவிடும் என்று
இனியாவது யாரும் கனவு காணவேண்டாம்

அதர்மம் அழிந்துவிடாது என்றும்

மேலும் படிக்க கீழே உள்ள சுட்டியை சுட்டவும்.
http://siragu.com/%E0%AE%95%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%88%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%8B%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%A8%E0%AF%80%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%87%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%81%E0%AE%AE/

Wednesday 25 October 2017

அல்கட்ராஸ் தீவில் . . .(பகுதி-3)


Siragu alkatras1

III. உலகப்புகழ் பெற்ற அல்கட்ராஸ்:
லண்டன் நகரில் (செப்டம்பர் 28, 2017 அன்று) அமெரிக்காவின் அல்கட்ராஸ் சிறைச்சாலை அமைப்பை அடிப்படையாகக் கொண்ட “Alcotraz” (speakeasy-style bar called Alcotraz) என்ற ஒரு மதுபான விடுதி திறக்கப்பட்டுள்ளது. ஒரு சிறைச்சாலையின் மாதிரியில் துவக்கப்படும் மதுபான விடுதி என்பதுமக்களை எந்த அளவு அல்கட்ராஸ் சிறைச்சாலை ஈர்த்துள்ளது என்பதையே காட்டி நிற்கிறது.


உலகப் புகழ் பெற்றுள்ள அல்கட்ராஸ் மத்திய சிறைச்சாலையின் நோக்கம் கைதிகளை சீர்திருத்தி மறுவாழ்வு அளிக்கும் நோக்கமல்ல. ஒருமுறை அல்கட்ராஸ் வந்தால் அதுவே அவர்களின் முடிவு என்ற நிலையே இருந்தது. அதைக் கைதிகளும் அறிந்திருந்தனர். எந்த நீதிமன்றமும் அல்கட்ராஸ் சிறையில் அடைக்கவும் எனக் கைதிகளுக்கு தண்டனைக் கொடுத்ததில்லை. பிற மத்திய சிறைச்சாலைகளில் இருந்து தப்பிக்க முயல்பவர்கள், வன்முறையாளர்கள், அதிக அளவு கண்காணிப்பில் இருக்க வேண்டியவர்கள் என்பவர்கள் அல்கட்ராஸ் சிறைக்கு மாற்றப்படுவார்கள். அதாவது தண்டனை பெற்ற கைதிகள், குற்றம் செய்து அதிக அளவு தண்டனையாக அல்கட்ராஸ் சிறைக்குப் போவது (“the prison system’s prison”) வழக்கம். அல்கட்ராஸ் சிறைச்சாலைகளின் சிறை.

மேலும் படிக்க கீழே உள்ள சுட்டியை சுட்டவும்.

Tuesday 24 October 2017

தமிழ் எழுத்து கற்றல்! (கவிதை)


Siragu tamil4
உயிரெழுத்து பன்னிரண்டு அதை – உன்
உடலோடு ஒற்றிடு!
மெய்யெழுத்து பதினெட்டு அதை –உன்
உயிரோடு கலந்திடு!

உயிரும் மெய்யும் கலந்த –உன்
உயிர் தமிழைக் கற்றிடு!
உயிர் தமிழைக் காக்க போர்

மேலும் படிக்க கீழே உள்ள சுட்டியை சுட்டவும்.
http://siragu.com/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D-%E0%AE%8E%E0%AE%B4%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%95%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%B5%E0%AE%BF/

நடுகல் வழிபாடு பற்றிக் கூறும் சங்க இலக்கியப் பாடல்கள்


Siragu nadugal2
அண்மையில் கீழடியில் நடத்தப்பட்ட அகழ்வாராய்ச்சி தமிழர் பண்பாடு பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்டது என்பதை நிரூபித்து உள்ளது. அதே போல பழங்காலத் தமிழர் பண்பாடு மூத்தோர் வழிபாடு, நடுகல் வழிபாடு சார்ந்த பண்பாடாகும். பிற்காலத்தில் மதங்கள் தோன்றியிருக்கின்றன. தமிழ் மொழி ஒரு சமயச்சார்பற்ற மொழி என கால்டுவெல் எனும் மொழியியல் அறிஞர் குறிப்பிட்டு உள்ளதை நாம் எண்ணிப்பார்க்க வேண்டும்.

அந்த வகையில், சங்க இலக்கியப் பாடல்களைப் படிக்கின்றபோது, நடுகல் வழிபாடு நம் தமிழர்களின் வாழ்வியல் முறையாக இருந்திருக்கின்றது எனத் தெரிய வருகின்றது. வீரர்களுக்கும், மன்னர்களுக்கும் அவர்கள் இறந்தபின் நடுகல் வைத்து வணங்கும் பழக்கம் நம்மிடையே இருந்திருக்கின்றது. மதம் என்ற நிறுவனமயம் ஆக்கப்பட்ட அமைப்பு நம்மிடையே சங்க காலத்தில் இல்லை. திணை வழிபாடு இருந்துள்ளது. இயற்கையை தமிழர்கள் வழிபட்டிருக்கின்றனர். ஆனால் இயற்கைக்கு அப்பாற்பட்ட சக்தி ஒன்று இருக்கின்றது என்றோ அது தான் இயற்கையை, மனித வாழ்க்கையை கட்டுப்படுத்துகின்றது என்றோ, மனிதர்களை ஒரு கடவுள் தான் படைத்தார் என்ற கருத்து முதல்வாதம் எந்த மதம் சார்ந்தும் வாழாத தமிழர்களிடம் ஆதியில் இல்லை.

மேலும் படிக்க கீழே உள்ள சுட்டியை சுட்டவும்.

Thursday 19 October 2017

அதிதி (சிறுகதை)


Siragu adhithi1
பாலுவிட்டத்தைப் பார்த்து எதையோ யோசித்துக் கொண்டிருந்தான். அடிக்கடி கற்பனையில் மூழ்கி விடுவது அவன் பழக்கம்.
அப்போது தேங்காய் உடைக்கும் சப்தம் கேட்டது. அவன் வெளியே ஓடினான். வீட்டுக்கு எதிரே இருக்கும் கோவிலின் அர்ச்சகர் தேங்காயை   சூரைத்தேங்காய் உடைத்தார். பூ விற்பவள், மற்றும் இரண்டு சிறுவர்களும் தேங்காயை எடுக்க ஓடினர். பாலுவும் ஒரு பெரிய தேங்காய் சிதறலை எடுத்துக் கொண்டான். அது அவனுடைய வழக்கம். சூரைத்தேங்காய் சிதறலை எடுக்க வெட்கப்பட மாட்டான்.

அவனுக்கு ஐம்பது வயது ஆகிறது. பொறுப்பு என்பதே கொஞ்சம் கூட கிடையாது. எப்போதும் கனவு உலத்தில் சஞ்சரிப்பான். கடவுள் பக்தி உண்டு. எதிரேயிருக்கும் கோவிலுக்கு அடிக்கடி செல்வான். அப்படிப் போகும்போதெல்லாம் சிதறு தேங்காய் கிடைத்தால் பொறுக்கி வருவான். அவனை அறியாமலேயே அவனுக்கு அது பழக்கமாகி விட்டது.

மேலும் படிக்க கீழே உள்ள சுட்டியை சுட்டவும்.

Wednesday 18 October 2017

அல்கட்ராஸ் தீவில் . . .(பகுதி-2)


II. சிறைச்சாலை சுற்றுலா:
Siragu alkatraas2-1
அல்கட்ராஸ் தீவிற்குச் சுற்றுலா செல்ல விரும்பினால் சில முன்னேற்பாடுகள் தேவை, கலிபோர்னியா மாநிலம் நல்ல தட்பவெப்பநிலை உள்ள இடம்தானே என நினைத்து சாதாரண உடைகளுடன் வர நினைத்தால் குளிரில் நடுங்க வேண்டிய நிலையும் ஏற்படலாம். வானிலை எப்படி இருக்கக்கூடும் என்று நிர்ணயிக்க முடியாத ஒரு பகுதி சான் பிரான்சிஸ்கோ நகர். “நான் அறிந்த மிகவும் குளிரான ஒரு காலம் சான் பிரான்சிஸ்கோவில் நான் வசித்த கோடைக்காலம்” என மார்க் ட்வைன்   (“The coldest winter I ever saw was the summer I spent in San Francisco”― Mark Twain) கூறியதாகவும் சொல்லப்படுகிறது. எனவே குளிராடை கைவசம் இருப்பதும், தேவையினால் நீண்ட நடைப் பயணம் செய்ய வசதியான காலணியும் இருப்பதும் இங்கு வரும் சுற்றுலாப் பயணிகளுக்கு அவசியம். வாடகை ஊர்திகளையும், நகரப் பேருந்துகளையும் கொண்டு தீவுக்கான ‘படகுத்துறை எண் 33′ இருக்கும் புகழ்பெற்ற ‘ஃபிஷெர் மேன்ஸ் வார்ஃப்’ (Fisherman’s Wharf) பகுதிக்கு வருவதே சிறந்த வழி. சொந்த ஊர்தியில் பயணித்து சான் பிரான்சிஸ்கோ வந்த பிறகு அதை நிறுத்த இடம் தேடுவதோ மிகப்பெரிய தலைவலி.

மேலும், அல்கட்ராஸ் தீவு சுற்றுலாவுக்கான அனுமதிச் சீட்டை இணையம் வழி முன்பதிவு செய்து கொள்ள வேண்டும். நாளொன்றுக்கு ஒரு குறிப்பிட்ட அளவிலேயே பார்வையாளர்கள் அனுமதிக்கப்படுவதாலும், பார்வையாளர் கூட்டம் அதிகமிருப்பதாலும் முன்பதிவு செய்வது ஏமாற்றத்தைத் தவிர்க்கும். அரைமணி நேரத்திற்கு ஒரு முறை நூற்றுக்கும் மேற்பட்ட பார்வையாளர்களுடன் படகுத்துறையில் இருந்து படகுகள் தீவை நோக்கிச் செல்லும். மேலும் படகில் அனுமதிக்கும் முன்னர் அரசு வழங்கிய அடையாள அட்டையையும் காட்டத் தேவை. தீவின் கடைசிப் பார்வையாளர் நேரம் வரை அங்கு எவ்வளவு நேரமானாலும் தங்கலாம். தீவைச் சுற்றிப்பார்க்க குறைந்தது மூன்று மணி நேரமாவது தேவை. அதனால் சுற்றிப் பார்த்து முடித்த பிறகு அவரவர் விருப்பம் போல கிடைக்கும் அடுத்த படகைப் பிடித்து சான் பிரான்சிஸ்கோ வரலாம். தீவில் மலர்களை இலைகளைப் பறிப்பது போன்ற செடி கொடி மரங்களுக்குத் தீங்கு செய்யும் நடவடிக்கைகளையும், பறவைகளுக்கு உணவளிப்பது போன்ற செய்கைகளையும் செய்ய அனுமதியில்லை.

மேலும் படிக்க கீழே உள்ள சுட்டியை சுட்டவும்.

Tuesday 17 October 2017

நாஞ்சில் நாடன் சிறுகதைகளில் நாட்டுப்புற மருத்துவம்


Siragu naanjil naadan2
கதை மனித சமுதாயத்திற்கு மிகப்பழமையான சொத்து. காவியங்களில் நீண்ட பாட்டுக்களில் கதை அமைத்து வந்தனர். நாவல்களும் சிறுகதைகளுமாகிய இக்கால இலக்கிய வடிவங்கள் இல்லையாயினும் கதைகள் பல இருந்தன.
பாடுபொருளின் பரிணாம வளர்ச்சி, தட்டச்சின் கண்டுபிடிப்பு, போன்றவை சிறுகதை என்னும் இலக்கிய வகைமையை தனித்துறையாக வளர்த்தியது. வீரமாமுனிவர், வா.வே.சு ஐயர், புதுமைப்பித்தன் போன்றோர் இத்துறை வளர்ச்சிக்கு மூலாதாரமாக விளங்கினர்.
சமூகத்தின் அவலங்களை அப்படியே பிரதிபலித்துக் காட்டி தான்கூற வந்த கருத்துக்களை அழகாகவும், ஆழமாகவும்பதியவைக்கும் திறன் சிறுகதைக்குண்டு.

இன்றைய இலக்கியங்கள் சோலையில் தினம் தினம் வளரும்பூக்களாய், வண்ணத்துப் பூச்சிகளாய், புற்றீசல்களாய் தோன்றிக் கொண்டேயிருக்கின்றன. இக்கால இலக்கியங்களின் பாடுபொருள் மிக விரிவுடையதாக அமைய வேண்டும் என்ற அவசியமில்லை. நம் அன்றாட வாழ்வில் நடந்த நிகழ்ச்சிகளை, மற்றும் நினைவுகளை, நடக்கின்ற நிகழ்ச்சிகளை செயல்களை நடக்கவிருக்கும் எண்ணங்களைக் கனவுகளை என அனைத்தையும் தனது கற்பனையின் மூலம் பாடுபொருளாகக் கொண்டு இலக்கியங்களைப் படைக்கின்றனர் தற்காலப் படைப்பாளர்கள்.

மேலும் படிக்க கீழே உள்ள சுட்டியை சுட்டவும்.

Wednesday 11 October 2017

புதிய பாதை நோக்கி! (கவிதை)


puratchi kavignar14

பரிதி எழுந்த நல்பொழுது
பாவை யவள்துயில் கலைந்தாள்
பாரின் மிசையொளி காணப்
பாவை யவள்முகம் பூத்தாள்
அஞ்ஞன விழிக்கதிர் காயும்
அருணண் முகம்நேர தொழுதாள்

தந்தை தாய்முகம் கண்டு
தாள்வணங்கி பள்ளி சென்றாள்
வாழ்வுக் கின்பந் தரும்நற்
பாடம் அதனைக் கற்றாள்
வாழைக் குலைபோல் பெண்வாழ்வு



வீணாதல் நன்றோ?யென விழித்தாள்

மேலும் படிக்க கீழே உள்ள சுட்டியை சுட்டவும்.
http://siragu.com/%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%88-%E0%AE%A8%E0%AF%8B%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF-%E0%AE%95%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%88/

Tuesday 10 October 2017

அல்கட்ராஸ் தீவில் . . .


Siragu alkatras1
அமெரிக்காவின் மேற்குக் கடற்கரையை ஒட்டி, கலிபோர்னியா மாநிலத்தின் சான் பிரான்சிஸ்கோ நகருக்கு வடக்கே, வளைகுடாவில் உள்ள பாறையிலான ஒரு சிறிய தீவான “அல்கட்ராஸ் தீவு” என்ற இடம் மிகவும் புகழ்பெறக் காரணமாக இருந்தது அங்கிருந்த அமெரிக்க மத்திய சிறைச்சாலை. மிகவும் கொடுமையான கொள்ளைக்காரர்களும், கொலைகாரர்களும், கடத்தல்காரர்களும் அங்கு அடைக்கப்பட்டிருந்ததுடன் அல்லாமல், யாரும் தப்பவே வழியில்லை என்றிருந்த நம்பிக்கையையும் முறியடித்து சிறைக்கைதிகள் சிலர் அங்கிருந்து தப்பிவிட்டதும் சாதாரண ஒரு சிறைச்சாலைக்கு இந்தப் புகழ் வரக் காரணமாக இருந்தது. சிறை மூடப்பட்ட பின்னர், இன்று அல்கட்ராஸ் தீவு அமெரிக்க வனத்துறையின் (U.S. National Park Service) கட்டுப்பாட்டில் உள்ள ஒரு சுற்றுலாத்தலமாக மாற்றப்பட்ட பின்னர் ஆண்டொன்றுக்கு சுமார் ஒன்றரை மில்லியன் மக்கள் உலகிலேயே கடுமையான சிறைச்சாலை எப்படி இருக்கும் என்ற ஆர்வத்தில் இத்தீவைப் பார்வையிட வருகிறார்கள். இத்தீவின் பாறைத் தன்மையால் இது ‘தி ராக்’ (“The Rock”) என்றும் அழைக்கப்படுகிறது.
I. பாறையின் வரலாறு:
அல்கட்ராஸ் தீவின் வரலாற்றைப் பொதுவாக பழங்குடியினர் குடியிருப்புக் காலம் (1769 ஆண்டுக்கு முன்னர்), ஸ்பானிஷ் ஆட்சியர் காலம் (1770-1848), அமெரிக்க இராணுவத்தின் காலம் (1849 – 1933), அமெரிக்க மத்திய சிறைச்சாலைக் காலம் (1934-1963), பழங்குடியினர் உரிமைப் போராட்டக் காலம் (1969-1971), அமெரிக்க வனத்துறையின் வரலாற்றுச் சுற்றுலாத்தலம் காலம் (1973 –) எனப் பல பிரிவுகளாக நிகழ்வுகளின் வரலாற்று முக்கியத்துவத்தின் அடிப்படையில் பிரித்துக் கூறினாலும், இன்றென்னவோ அனைவரையும் கவரும் வண்ணம் நிலைத்து விட்டது அது சிறைச்சாலையாக இருந்த காலம் மட்டும்தான்.

மேலும் படிக்க கீழே உள்ள சுட்டியை சுட்டவும்.

Monday 9 October 2017

இவரைத் தெரியுமா? சாக்கிலி இல்லமா


Siragu chakali ilamma1
தெலுங்கானா ஹைதராபாத் மாநிலத்திலுள்ள தெலுங்கு மொழி பேசும் மக்களைக் கொண்ட பிரதேசமாகும். இப்பகுதி நிலப்பிரபுத்துவ மேட்டிமை வர்க்கத்தினரால் ஆளப்பட்டு வந்தது.
ஜாகிர்தார், நேர்முக மற்றும் குத்தகை அமைப்பும் அதன் காரணமாக நிலப்பிரபுத்துவச் சுரண்டலும், ஒடுக்குமுறையும் நடப்பில் இருந்தன.
தெலுங்கானா மக்கள் அடிமைத்தனமான ஒரு வாழ்வையே நடத்தினர்.
நிலப்பிரபுக்களைக் காணும் போது “எஜமானனே இங்கே இருக்கிறேன் உங்கள் அடிமை உங்கள் கால்களை நான் தொடுவேனாக” என்று ஒவ்வொரு சாதாரண மனிதனும் வார்த்தைகளை வெளிப்படுத்துவது அவர்களின் பரிதாபமான நிலைமையையும் அவர்கள் அனுபவித்து வந்த ஒடுக்குமுறை தன்மையினையும் பிரதிபலிப்பதாய் இருந்தன.

தெலுங்கானாவின் பாதிக்கும் மேற்பட்ட நிலங்கள் நிஜாம் நவாப்புக்குச் சொந்தமாக இருந்தன, அதே நேரத்தில் எஞ்சிய 50% நிலம் பெரும் நிலப்பிரபுக்களின் கைகளில் இருந்தன.

மேலும் படிக்க கீழே உள்ள சுட்டியை சுட்டவும்.

Friday 6 October 2017

கீழடித் தொல்லியல்! (கவிதை)


Siragu keezhadi1

எத்துணை எத்துணை ஆதாரங்கள் -பல
தலைமுறை தலைமுறை யாய்வாய் செவிவழிச்
செய்தியாய் சங்கநூற் குறிப்புகளாய்த் தொடாந்த
பழந்தமிழர் வாழ்விற் கொருபுது ஆதாரம்
“கீழடி”யெனும் பெருநகரம் ஆ!ஆ!

மேலும் படிக்க கீழே உள்ள சுட்டியை சுட்டவும்.

Thursday 5 October 2017

உடை தடையல்ல…(சிறுகதை)


Siragu IT staffs1
பட்டுப்புடவையில் ஒய்யாரமாய் அலுவலகம் நுழைந்த ஸ்னேகாவை அபிஷேக், வைத்தக் கண்ணை எடுக்காமல் பார்த்துக் கொண்டிருந்தான். அழகு நவீனமாக பொற்சிலை போலுள்ள ஸ்னேகாவைப் பார்த்து அவள் அலுவலகத்தில் ஜொள்ளு விடாத ஆண்களே இல்லை. வசீகர கண்களையுடைய கட்டழகி. தலையை வாராமல் படர்ந்திருந்த அவள் கருங்கூந்தல் தோகை போலிருக்க, கோவில் செப்பு சிலையை மிஞ்சும் அவளின் இளமை செழிப்பு பட்டுப் புடவையில் எடுப்பாக கண்ணுக்கு விருந்தளித்தது. அவளுடன் வேலை செய்யும் அந்த அலுவலகத்தில் உள்ள எல்லா ஆண்களும் செய்யும் வேலையை மறந்து விட்டு அவளைக் குதூகலத்துடன் பார்த்தனர். அவள் அபிஷேக்கைப் பார்த்து கையை அசைத்தாள். தேர் ஆடுவது போலிருந்தது.
ஸ்நேகா, சாதனா, அபிஷேக் எல்லாம் பொறியியல் கல்லூரியில் ஒன்றாகப் படித்தவர்கள். கேம்பஸ் இண்டெர்வியூவில் செலக்ட் ஆகி பிரபலமான சாப்ட்வேர் கம்பெனியில் பணி செய்து கொண்டிருக்கிறார்கள்.

மேலும் படிக்க கீழே உள்ள சுட்டியை சுட்டவும்.

அந்தரப் பிழைப்பின் அவலம்


(இலங்கை தோட்ட இந்திய தொழிலாளர் அந்தரப் பிழைப்பு – கோ .நடேசய்யர் நாடகத்தை முன்வைத்து)
Siragu andhara pizhai10
அரசாங்கத்தின் பேருந்து மட்டும் சென்று வரும். தனியார் வாகனங்கள் செல்ல இயலாது. அப்படி செல்ல வேண்டியிருந்தாலும் சோதனைச் சாவடியில் எல்லா விபரங்களையும் பதிவு செய்தபின்பே செல்லமுடியும். தொழிலாளர் வீடுகளில் நடக்கும் எந்த நிகழ்வுகளுக்கும் உறவினர் யாரேனும் வருவதாக இருப்பின் நிர்வாகத்திற்கு முன்னமே சொல்லி அவர்களின் விபரங்களையெல்லாம் கொடுத்து அனுமதி பெறவேண்டும். தொழிலாளிக்கு திடீரென உடல்நிலை கோளாறு ஏற்படால்கூட நிர்வாகத்தின் அனுமதியின்றி வெளியில் மருத்துவமனைக்கு செல்லக்கூடாது.

மேலும் படிக்க கீழே உள்ள சுட்டியை சுட்டவும்.

Monday 2 October 2017

ஜிஸ்டி ஏற்படுத்திய மாபெரும் இழப்பு


Siragu GST1
இந்த மத்திய அரசு எடுக்கும் எந்த ஒரு திட்டமும் தோல்வியில் தான் முடிந்திருக்கிறது என்பதற்கான மற்றொரு சான்றுதான் இந்த ஜிஎஸ்டி எனும் சரக்கு மற்றும் சேவை வரி விதிப்பு. இந்த ஜிஎஸ்டி ஏற்படுத்திய தாக்கம் என்பது மக்களிடையே மிகப்பெரிய மனஉளைச்சலை ஏற்படுத்தி இருக்கிறது என்பது வருத்தத்துக்குரிய ஒன்றாகும். இது மக்களுக்கு உண்டான வாழ்வியல் தொடர்பான பாதிப்பு மட்டுமல்ல. ஒட்டுமொத்த இந்த இந்திய தேசத்திற்கான வருவாய் இழப்பு என்பதை தற்போதைய புள்ளிவிவரம் தெரிவிக்கிறது. மத்திய பா.ச.க அரசின் இந்த ஜிஎஸ்டி வரி விதிப்பால், வணிகவரித்துறைக்கு சுமார் ரூ.4 ஆயிரம் கோடி இழப்பு ஏற்பட்டிருக்கிறது. குறிப்பாக பெட்ரோல், டீசல், மது, இயற்கை வாயு மூலம் கிடைக்கும் வருவாய் சரிந்திருப்பது தற்போது தெரிய வந்திருக்கிறது.
நம் தமிழக மாநில வணிகவரித்துறையில், ஆண்டுக்கு ரூ. 20 லட்சம் வரை வணிகம் செய்பவர்கள் கட்டாயம் அரசிடம் பதிவு செய்ய வேண்டும். அவர்களின் கணக்குகளை மாதம் ஒருமுறை என தாக்கல் செய்து வரி செலுத்த வேண்டும். மதிப்பு கூட்டு வரி, விற்பனை வரி, ஆடம்பர வரி, கேளிக்கை வரி உள்ளிட்ட வரிகள் வசூலிக்கப்பட்டு அதன் மூலம் வருவாய் கிடைக்கும்படியான முறை இருக்கிறது. ஆனால், இந்த ஜிஎஸ்டி வரி விதிப்பிற்கு முன், அதாவது சென்ற ஆண்டு ரூ. 67 ஆயிரம் கோடி நம் மாநில வணிகவரித்துறை வருவாயாக ஈட்டி இருந்தது. இதனிடையே இந்த சரக்கு மற்றும் சேவை வரி விதிப்பின் மூலம், கடந்த ஜூலை மாதம் முதல், 2,12,18, 28 என்ற சதவிகிதம் முறையே நான்கு அடுக்காக பொருட்களைப்பிரித்து வரி விதிக்கப்படுகிறது. இதில் என்ன கொடுமையென்றால், 
மேலும் படிக்க கீழே உள்ள சுட்டியை சுட்டவும்.