Monday 30 October 2017

அல்கட்ராஸ் தீவில் . . . (பகுதி-4)


IV. தி கிரேட் எஸ்கேப்:
எந்த ஒரு சிறைக்கைதியும் தப்பவே வழியில்லை என்ற பெயர் பெற்றிருந்த அமெரிக்காவின் அல்கட்ராஸ் தீவு சிறைச்சாலையின் பெருமையைக் குலைக்கும் வண்ணம் பலமுறை தப்பும் முயற்சிகள் நடந்தன. ஒருவரே இரண்டுமுறை தப்பிக்க முயன்றதும் உண்டு. ஆனால் தப்புவது என்பது எப்படி வரையறுக்கப்படுகிறது என்பதில்தான் உண்மையாகவே கைதிகள் தப்பினார்களா இல்லையா என்பது முடிவு செய்யப்படுகிறது.

Siragu alkatras4-1


சிறையில் இருந்து தப்பி தீவின் கரைவரை வந்து பிடிபட்டவர்களும் உண்டு, தப்பி கடலில் குதித்து நீந்தும்பொழுது சுடப்பட்டு இறந்தவர்களும் உண்டு, நீரின் குளிர் தாளாமல் விறைத்துப்போய் இறந்த உடலாக மிதந்து மீட்கப்பட்டவர்களும் உண்டு, தீவின் பாறைகளுக்கிடையில் மறைந்து கொண்டாலும் குளிர் தாங்காமல் தானே சிறைக்குத் திரும்ப வந்துவிட்டவர்களும் உண்டு, கரையேறித் தப்பினாலும் கைது செய்யப்பட்டு திரும்பியும் கொண்டுவரப்பட்டவர்களும் உண்டு, இல்லை ஹைப்போதெர்மியாவில் விறைத்துப்போய்க் கரையில் ஒதுங்கிக் கிடந்தவர்களை மருத்துவமனைக்கு எடுத்துச் சென்று உயிரைக் காப்பாற்றி திரும்பவும் சிறையில் அடைக்கப்பட்டவர்களும் உண்டு. எனவே, அல்கட்ராஸ் சிறை அதிகாரிகளும், எஃப்.பி.ஐ. அதிகாரிகளும் தப்பியவர்கள் யாவரும் உயிருடனோ, உயிரற்ற உடலாகவோ கிடைத்துவிட்டால் அவர்கள் தப்பிக்கவில்லை என்றும், அவ்வாறு உயிருடனோ, உயிரற்ற உடலாகவோ கிடைக்காவிட்டாலும் கூட அவர்கள் கடலில் மூழ்கி இறந்திருக்கலாம் என்ற வரையறையை வகுத்துக் கொண்டு இதுவரை யாருமே அல்கட்ராஸ் சிறையில் இருந்து தப்பியதில்லை என்று சொல்லி வந்தார்கள்.

மேலும் படிக்க கீழே உள்ள சுட்டியை சுட்டவும்.

No comments:

Post a Comment