Wednesday 27 December 2017

முத்திரள் ஆத்திச்சூடி! (கவிதை)


Siragu aathichudi1

அன்பினால் ஆள்;
அச்சமின்றி இயங்கு;
அகிலத்தை உயர்த்து;
ஆளுமை கூட்டு;
ஆக்கமுடன் இணை;
ஆன்றோர் போற்று;
இன்முகம் காட்டு;
இயன்றவரை உதவு;
இயற்கையோடு இயை;
ஈவதில் மகிழ்;
ஈர நெஞ்சில் இழை;

ஈடுபாடு கொள்;

மேலும் படிக்க கீழே உள்ள சுட்டியை சுட்டவும்.
http://siragu.com/%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%86%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%82%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%95/

Monday 25 December 2017

நல்லாயிடுவீங்க… (சிறுகதை)


Siragu positive thinking3

நிவேதிதா பன்னாட்டு கம்பெனி ஒன்றில் விற்பனைப் பிரிவில் மேலாளராக பணி செய்கிறாள். வயது முப்பத்திரண்டு. படிப்பு பி.காம், எம்.பி.ஏ, வசீகரிக்கும்  குரல். இசை ஞானம் உடையவள். தெய்வீக  விசயங்களிலும் அவளுக்கு ஈடுபாடு அதிகம். கவிதையின் நயமுள்ளவள். சராசரி பெண்ணாக இல்லாமல் சாதிக்க வேண்டும் என்னும் லட்சியத்தையுடைய அவளுக்கு இரண்டு குழந்தைகள். ஐந்து  வயதில்  நரேன், இரண்டு வயதில் ஸ்வாதி.  கணவர் முகுந்தன் ஒரு நிறுவனத்தில் பொறியாளராக வேலை செய்கிறான். அவர்களுடைய குடும்ப படகு, வாழ்க்கை என்னும் நதியில் அமைதியாய் போய்க் கொண்டிருந்தது.
அவள் கருணை உள்ளம் கொண்டவள். இல்லாவிட்டால் வீட்டு வேலைகாரிக்கு மிக்சி வாங்கிக் கொடுக்க மனம் வருமா?.
ஒரு நாள்  அவளின் மார்பில் உண்டான சிறு கட்டி  வலியைக் கொடுத்தது. டாக்டரிடம் காண்பிக்கலாம் என்று சில காலம் தள்ளிப் போட்டாள்.

நாட்கள் ஆக ஆக அவளால் நெஞ்சு வலியைத் தாங்க முடியவில்லை. மார்பில் இருந்த கட்டி கொஞ்சம் கொஞ்மாக வளர்ந்து கொண்டே வந்தது.  மருத்துவரிடம் போய் காண்பிக்க வேண்டும் என்று நினைத்தாள். ஆனால் அவள் பணி செய்யும் அலுவலகத்தில் ஆண்டு விழா நடைபெற இருப்பதால் அது முடிந்ததும் மருத்துவரிடம் கண்டிப்பாக போகலாம் என்று தள்ளிப் போட்டாள். அவள் எப்போதும் அப்படித்தான். வேலை, வேலை, வேலை …………….என்றிருப்பாள்.

மேலும் படிக்க கீழே உள்ள சுட்டியை சுட்டவும்.

தனித்தமிழும் இனித்தமிழும்


tamil-mozhi-fi
தனித்தமிழ் நடை… மறைமலையடிகள் நடந்த பாதை. வ.சுப. மாணிக்கனார் சுட்டிய பாதை. மொழித் தூய்மை, ஒலித்தூய்மை கொண்டுத் தமிழைக் கண்ணெனக் காப்பது தமிழராய்ப் பிறந்த ஒவ்வொருவரின் கடமை.
தற்காலத்தின் பேச்சு வழக்கு அதிகமாக அயல் மொழி கலப்புடையதாக உள்ளது. பேச்சு மொழி சார்ந்து எழுதப்படும் படைப்பியலக்கியங்களிலும் அயல்மொழிக்கலப்பு என்பது தவிர்க்க முடியாதது ஆகிவிடுகிறது.

பேச்சுத்தமிழும் எழுத்துத் தமிழும் வேறு வேறு என்ற நிலையை எய்திவிட்டால் பேச்சுத்தமிழ் ஒரு தமிழாகிவிடும். எழுத்துத்தமிழ் ஒரு தமிழாகிவிடும். எனவே பேச்சுத்தமிழும் எழுத்துத்தமிழும் ஒன்றைஒன்று அதிக அளவில் சார்ந்தே இயங்கவேண்டும். செய்யுள்நடை, வழக்கு நடை ஆகிய இரண்டு நடைகள் தொன்று தொட்டே வந்துகொண்டுள்ளன. செந்தமிழ், கொடுந்தமிழ் ஆகிய இரண்டும் இருந்துள்ளன. செய்யுள் நடையில் திசைச் சொற்கள் குறைவு. வழக்கு நடையில் திசைச் சொற்கள் கலப்பது ஏற்கத்தக்கது. கொடுந்தமிழைத் தாண்டி, வழக்குத் தமிழைத்தாண்டி செய்யுள் நடை இன்னமும் நிலைத்து நிற்கிறது. அன்றைக்கு எழுதிய சிலப்பதிகாரம் இன்றைக்கும் புரிகிறது என்றால் எழுத்துநடைத் தமிழ் உயரிய நிலையில் பேணப்பட்டு வந்துள்ளது என்றே பொருள்.

மேலும் படிக்க கீழே உள்ள சுட்டியை சுட்டவும்.

Thursday 21 December 2017

அவர்கள் (கவிதை)


Siragu fisherman1

கடல் அலைகள்
ஓய்வதில்லை ஆர்ப்பரித்திடும்
அதன் ஆரவாரங்கள்
முடிவதில்லை
முகிலினங்கள் பொழிந்திடும்
துளிகளை ஏந்திடும்
கடலின்  மடி
இவர்களின் கண்ணீர்த்
துளிகளையும் ஏந்துகின்றது

காலங்காலமாய்…

மேலும் படிக்க கீழே உள்ள சுட்டியை சுட்டவும்.
http://siragu.com/%E0%AE%85%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%88/

Wednesday 20 December 2017

பிரபஞ்சத்தின் மகத்தான நூறு புதிர்கள் – நூல் மதிப்புரை


நூல்: பிரபஞ்சத்தின் மகத்தான நூறு புதிர்கள்
ஆசிரியர்: சி. ஜெயபாரதன்
Siragu prapancham1
அறிவியல் தமிழுக்கு ஆக்கப்பூர்வமான பங்களிப்பு செய்துவரும் அணுவியல் விஞ்ஞானி திரு. சி. ஜெயபாரதன் அவர்களுக்கு அறிமுகம் தேவையில்லை. இணையம் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு 2000 ஆண்டுகளில் அறிமுகமாவதற்கும் ஒரு கால் நூற்றாண்டிற்கும் முன்னரே எழுதுவதை ஒரு தன்னார்வப் பணியாகத் தொடங்கியவர் அவர். கதை, கவிதை, நாடகம், மொழிபெயர்ப்பு போன்ற இலக்கியப் பங்களிப்புகளும், அறிவியல் கட்டுரைகள் வழங்குவதிலும் இவருக்கு ஈடு இணை கிடையாது. அவர் எழுத்துக்களில் மிகவும் பாராட்டப்பட வேண்டிய பகுதி அவரது அறிவியல் பங்களிப்புகளே. தமிழில் கதையும், கவிதையும், கட்டுரைகளும் எழுத எண்ணிறைந்தவர்கள் உள்ளனர். ஆனால் தமிழில் அறிவியல் குறித்து எழுதுபவர்கள் மிகவும் சொற்பமே. ஆகவே அவரது அளப்பரிய பங்களிப்பின் தேவையை விளக்கிச் சொல்லத் தேவையில்லை.

நாம் எதிர் கொள்ளும் சம கால நிகழ்வுகளான புவியதிர்ச்சி, ஆழிப்பேரலைகள், சந்திர கிரகணங்கள், சூரிய கிரகணங்கள், எரிமலை வெடிப்பு, துருவப்பனி உருகுதல், சுற்றுச் சூழல் மாற்றங்கள், செயற்கை விண்கோள்கள், செவ்வாய் கோளுக்குப் பயணம் என அறிவியல் உலகத்தின் தற்காலச் செய்திகளை, கடந்த 15 ஆண்டுகளாக இணையம் வழியாக விரைவில் அவர் தமிழுக்கு மாற்றும் இடையறா முனைப்பின் காரணமாக நாம் அந்த நிகழ்வுகளின் அறிவியல் பின்னணிகளை விளக்கமாக அவரது கட்டுரைகளின் மூலம் அறிந்து கொள்கிறோம். ஒரு அறிவியலாளர் ஆய்வு நோக்கில் செய்திகளைத் தொகுத்து, படங்களுடன் எளிமையாக விளக்கி, சான்றுகளுடன் இணைத்துத் தரும் முறை நம்பிக்கையுடன் அறிவியல் அறியும் வாய்ப்பாகவும் தமிழருக்கு அமைந்துள்ளது.

மேலும் படிக்க கீழே உள்ள சுட்டியை சுட்டவும்.

Tuesday 19 December 2017

மடிந்து ஒழியட்டும் … ஆணவப்படுகொலைகள்


Siragu-aanavapadukolai1

இரு தினங்களுக்கு முன்பு திருப்பூர் நீதிமன்றம், ஒரு வரலாற்று சிறப்புமிக்க தீர்ப்பு ஒன்றை வழங்கி இருக்கிறது. அது நீதிபதி அலமேலு நடராஜன் அவர்கள் வழங்கிய தீர்ப்பு, என்னவெனில் ஆணவப்படுகொலைக்கு எதிராக முதல்முறையாக கடுமையான, அதிகபட்ச தீர்ப்பு வழங்கப்பட்டிருக்கிறது என்றுதான் சொல்லியாக வேண்டும்.!

உடுமலைப்பேட்டை சங்கர் கடந்த ஆண்டு மார்ச் மாதத்தில், பட்டப்பகலில், நாடு ரோட்டில் படுகொலை செய்யப்பட்டார். சாதி மாறி திருமணம் செய்துகொண்ட ஒரு செயலால் சாதிவெறியர்களால், அதுவும், தன்னுடைய மனைவியின் பெற்றோர்களாலேயே, கூலிப்படையினரைக்கொண்டு அரிவாளால் சரமாரி வெட்டப்பட்டு உயிரிழந்தார். இவையெல்லாம், கணநேரத்தில் தன் மனைவி கண்முன்னாலேயே நடந்து முடிந்திருக்கிறது. அது மட்டுமல்ல… சங்கரின் மனைவி, கௌசல்யாவையும் தாக்கியிருக்கிறார்கள். தீவிர சிகிச்சைக்குப்பிறகு உயிர்பிழைத்திருக்கிறார் கௌசல்யா.

மேலும் படிக்க கீழே உள்ள சுட்டியை சுட்டவும்.

Friday 15 December 2017

கைத்தறி ஆடை! (கவிதை)


siragu kaiththari1

உழைக்கும் பாமரர் அவர்கைகள்
உழைத்து இழைத்த நூலே
நம்மானங் காக்கும் உடையாம்!
நூலிழை யோடவர் கைத்திறம்
நுணங்கிய வேலையே சித்திரமாம்!
அணிய அணியபே ரானந்தம்!

பாடுபட் டுழைக்கும் பாமரர்
வாழ்வினை மானத்தால் காக்கும்
உடையின் தேர்ந்த சிற்பி!
அவர்கை பட்டதாலே பட்டாடை

மேலும் படிக்க கீழே உள்ள சுட்டியை சுட்டவும்.
http://siragu.com/%E0%AE%95%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B1%E0%AE%BF-%E0%AE%86%E0%AE%9F%E0%AF%88-%E0%AE%95%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%88/

Thursday 14 December 2017

நல்லதேசம் (சிறுகதை)


siragu-nalla-desam1


மரகததேசத்தின் மன்னர் விக்ரமன், சிறுவயதிலேயே பட்டத்திற்கு வந்தவர். சிறந்த அறிவாற்றல் கொண்டவர். ஆனால் அரசகாரியங்களில் போதிய அனுபவம் இல்லாதவர். வயதில் மூத்தவர் என்ற முறையில் மந்திரியார் நிறைமதியார்தான் பல சந்தர்ப்பங்களில் மன்னருக்கு வழிகாட்டிவந்தார். “ஒரு தேசம் எப்படிப்பட்டதாக இருக்கவேண்டும், ஒரு தேசத்தின் குடிமக்கள் ஒரு மன்னனிடம் எதை எதிர்பார்ப்பார்கள் என்பதை எல்லாம் நிறைமதியார் மன்னருக்கு உணர்த்த விரும்பினார். மன்னருக்கு நேரிடையாக அறிவுரை கூறுவது ஏற்புடையதல்ல. வேறு எப்படிச் சொல்வது என்ற யோசனையில் இருந்த சமயம். ஒரு நாள் புலவர் மகேசன் நிறைமதியாரைக் காணவந்தார். 

புலவர் மகேசன் ஒரு வானம்பாடி. தேசம் தேசமாகச் சுற்றுபவர். பற்றுக்கள் இல்லாதவர். அனைத்து தேச மக்களும் வளமுடன் வாழவேண்டும் என்ற விருப்பம் கொண்டவர். அவரிடம் மந்திரியார் தனது எண்ணத்தைச் சொன்னார். நீண்ட தனது வெண்தாடியை வருடியபடி யோசித்த புலவர் “நான் இதற்கு ஒரு வழி செய்கிறேன்!” –என்றபடி மந்திரியாரின் காதில் ஏதோ கிசுகிசுத்தார். மந்திரியாரும் அதை ஆமோதித்து ஏற்றுக் கொண்டார்.

மன்னர் விக்ரமன் ஒருநாள் அவையில் அமர்ந்து அளவளாவிக் கொண்டிருந்தார். அப்போது புலவர் மகேசன் அங்கு வந்தார். புலவர்கள் என்றால் வறுமையில் வாடுபவர்கள், எதையாவது இரந்து பெற கவிபாடுபவர்கள் என்ற எண்ணம் கொண்டவர் மன்னர். அவர் புலவர் மகேசனை ஏளனம் செய்யும் விதமாக, என்ன புலவரே, உமது வீட்டுப் அடுக்களையில் பூனை படுத்துறங்குகிறதோ? எம்மைக் கவிபாடி பரிசில் பெறவந்தீரோ?” – என்று கேட்டார்.

மேலும் படிக்க கீழே உள்ள சுட்டியை சுட்டவும்.

Wednesday 13 December 2017

தமிழால் ஒன்றுபட்டால் உண்டு வாழ்வு

Siragu tamil4

தமிழ் உயரிய மொழி செம்மொழி என்ற பெருமைகளை எல்லாவற்றைக் காட்டிலும் உலகத் தமிழர்களை ஒருங்கிணைக்கும் உயிர்மொழி என்ற பெருமையே அதன் சிறப்பும் தேவையும் ஆகும். தமிழர்கள் பிரிந்து கிடக்கிறார்கள், உலகெங்கும் விரவிக் கிடக்கிறார்கள். அவர்களிடம் தமிழ்மொழி சற்றே ஒட்டிக் கிடக்கிறது. இதனை வலுப்படுத்தாவிட்டால் தமிழ் என்னும் தாய் மொழி தாயாகும் தன்மையை இழந்து வெறும் ஏட்டுமொழியாகிவிடலாம்.

இலங்கை, சிங்கப்பூர் மலேசியா, மொரிஷியஸ், ஆஸ்திரேலியா இன்னும் பற்பல இடங்களில் தமிழர்கள் இன்று தம் மொழியை முன்னிறுத்தி வாழ்ந்து வருகிறார்கள். இவர்கள் எதிர்கொள்ளும் சவால்களைச் சிக்கல்களை உற்றுக்கவனிக்க என்ன செய்ய இயலும்?


தமிழகத்திலும் தமிழர்கள் பிரிந்து கிடக்கிறார்கள். தமிழகத்தில் சாதி அவர்களைப் பிரிக்கிறது. சாதித் தொகுதிகள் பிரிக்கின்றன. தமிழர்களை ஒருங்கிணைக்க ஒரே வழி தமிழ்தான்.

மேலும் படிக்க கீழே உள்ள சுட்டியை சுட்டவும்.

Tuesday 12 December 2017

கவிஞர்தாம் சமுதாயச் சிற்பி (கவிதை)


siragu bharathidasan1


பொன்னாகச்   செங்கோலின்  ஆட்சி  நாட்டில்
பொலியாமல்   கடுங்கோலில்   கனலும்  போது
மன்னர்க்கே   அறிவுரைகள்   எடுத்து  ரைத்து
மண்ணாளும்   வழிமுறைகள்   எடுத்துக்  காட்டித்
தன்னலமே   இல்லாமல்   மக்க  ளெல்லாம்
தமராக   வாழ்வதற்குப்   பாக்கள்  யாத்து
நன்கீந்த   சங்கத்துப்   புலவ  ரெல்லாம்



நலம்காத்த   சமுதாயச்  சிற்பி   யாவார் !

மேலும் படிக்க கீழே உள்ள சுட்டியை சுட்டவும்.
http://siragu.com/%E0%AE%95%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9E%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%9A%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1/

சித்தூர் தீர்ப்பு


Sirgu siddur decison1

வேலூருக்கு அருகில் வேட்டவலம் ஊருக்கு அருகாமையில் சதுப்பேரி என்ற கிராமத்தில் விஸ்வகர்ம சாதியச் சார்ந்த மார்க்கசகாய வாத்தியார் என்பவர் வடமொழி வேத, சாத்திர, சம்பிரதாயங்களில் வல்லவர். இவர் தெலுங்கு ஆசாரி ஆவார். இவர் தன் இன குடும்பங்களுக்கு திருமணம் நடத்தி வைக்கும் புரோகிதராக செயல்பட்டுவந்தார். அப்படி அவர் ஒரு திருமணத்தை நடத்தியபோது, அந்த கிராமத்தைச் சார்ந்த பஞ்சாங்க குண்டையன் என்பவர் 

மேலும் படிக்க கீழே உள்ள சுட்டியை சுட்டவும்.

Friday 8 December 2017

அயல்நாட்டு மாணவர்களை விரும்பும் அமெரிக்கப் பல்கலைக்கழகங்கள்


Siragu america university1

அமெரிக்கப் பல்கலைக்கழகங்களில் பயில விரும்புவது உலகம் முழுவதுமுள்ள மாணவர் பலரின் விருப்பமாகப் பலகாலம் இருந்து வருகிறது. உலக அளவில் அதிக அளவு அயல்நாட்டு மாணவர்கள் கல்வி கற்பதும் அமெரிக்காவில்தான், அடுத்த இரு இடங்களில் இருப்பவை இங்கிலாந்தும் பிரான்சும். இவ்வாறு அமெரிக்கப் பல்கலைக்கழகங்களில் பயிலும் அயல்நாட்டு மாணவர்கள் குறித்து வெளியாகியுள்ள ஆய்வுக்  கட்டுரைகள் மற்றும் செய்திகள் வழி கிடைக்கும் சுவையான புள்ளிவிவரங்கள் பல. பொதுவாக அயல்நாட்டு மாணவர்கள் என எதன் அடிப்படையில் வரையறை செய்யப்படுகிறது?, அவர்கள் எந்த நாடுகளில் இருந்து வருகிறார்கள்? எந்தப் பாடங்களைப் படிக்க விரும்புகிறார்கள்?,  அவர்களுக்கு எந்தெந்த அமெரிக்கப் பல்கலைக்கழகங்கள் அதிக ஆதரவு தருகின்றன?,  நாட்டின் எந்தப் பகுதியில் உள்ள பல்கலைக்கழகங்களில் இவர்கள் அதிகம் சேருகிறார்கள்?, இவர்களைச் சேர்த்துக் கொள்ள விரும்பும் பல்கலைக்கழகங்களின் அடிப்படை நோக்கம் என்ன என்பது குறித்த தகவல்களின் தொகுப்பு இக்கட்டுரை.

மேலும் படிக்க கீழே உள்ள சுட்டியை சுட்டவும்.

Monday 4 December 2017

“நீட்” ஏன் வேண்டும்?


Siragu indhiya porulaadhaaram8

“சூத்திரர்களுக்குக் கல்வி மறுக்கப்பட்டது, கல்வி முழுவதையும் பார்ப்பனர்களே கவர்ந்து வைத்துக்கொண்டு இருந்தார்கள்” என்று பொத்தாம் பொதுவாக நாம் அனைவரும் சொல்லிக் கொண்டு இருக்கிறோம். இது உண்மை தான். ஆனால் முழுமை அல்ல.
பார்ப்பனர்கள் ஆட்சி அதிகாரக் கல்வியை மட்டுமே மற்றவர்கள் பெற்று விடக் கூடாது என்று எச்சரிக்கையுடனும், பிடிவாதத்துடனும் இருந்தனர். இப்போதும் அதற்காகவே போராடிக் கொண்டு இருக்கின்றனர்.

சத்திரியர்களுக்குப் போர்க் கல்வியையும், சூத்திரர்களுக்குப் பொருட்களை உற்பத்தி செய்யத் தேவைப்படும் கல்வியையும், வைஷ்யர்களுக்கு உழைக்கும் வர்க்கத்தினர், அதாவது சூத்திரர்கள் உற்பத்தி செய்த பொருட்களை, உயர் சாதியினருடைய அதிகாரப்படி மக்களிடையே விநியோகம் செய்யத் தேவைப்படும் கல்வியையும் திணித்து இருந்தனர்.

மேலும் படிக்க கீழே உள்ள சுட்டியை சுட்டவும்.