Thursday 18 January 2018

அறிஞர் மெ.சுந்தரத்தின் ஆராய்ச்சித்திறன்


Siragu naattuppurappaadal1
சங்க இலக்கியங்களில் தோய்ந்தவரும், நாட்டுப்புற இலக்கியங்களைத் தொகுப்புதில் முன்னோடியுமாக விளங்கிய பேராசிரியர் முனைவர் மெ.சுந்தரம் ஆவார். இவரின் சொந்த ஊர் புதுக்கோட்டை மாவட்டத்தில் மேலைச் சிவபுரிக்கு அடுத்துள்ள வேந்தன்பட்டியாகும். இவரின் தந்தையார் மெய்யப்பச் செட்டியார் ஆவார். இவர் அக்காலத்தில் அப்பகுதி சார்ந்த காங்கிரசு தலைவராக விளங்கினார்.
மெ.சுந்தரம் முதுகலை, முனைவர், எம்.லிட் போன்ற பட்டங்களைப் பெற்றவர். கோனாபட்டு சரசுவதி உயர்நிலைப்பள்ளி, சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழகம், மதுரை தியாகராசர் கல்லூரி, சென்னைப் பல்கலைக்கழகம், மதுரை காமராசர் பல்கலைக்கழகம், சென்னை மாநிலக்கல்லூரி ஆகியவற்றில் பேராசிரியப் பணியாற்றியவர். இவரின் மாணவர்களுக்கு மெ.சுந்தரம் அவர்களிடம் படித்தோம் என்ற பெருமை உண்டு. அந்த அளவிற்கு ஆற்றலும் அன்பும் உடையவர்.

இவர் தமிழகம் சார்ந்த நாட்டுப்புறப்பாடல்களைத் தொகுத்து வெளியிட்ட பெருமைக்குரியவர். நாட்டுப் புறப்பாடல்கள் என்ற தலைப்பில் அந்நூல் வெளிவந்து நாட்டுப்புறவியல் துறையின் முன்னோடி நூலாக விளங்குகிறது. இதனை மறுபதிப்பு செய்வது தற்காலத் தேவையாகும். இந்நூல் தவிர ஐந்து நூல்களின் ஆசிரியராக இவர் விளங்கினார்.

மேலும் படிக்க கீழே உள்ள சுட்டியை சுட்டவும்.

No comments:

Post a Comment