Monday 8 January 2018

ஆன்மீக அரசியலும், ரஜினியும்.


Siragu aanmeega arasiyal1

கடந்த வாரத்தில் நடிகர்  ரஜினிகாந்த் தன்னுடைய அரசியல் கட்சி தொடக்கத்தைப் பற்றி அறிவித்தது நம் அனைவருக்கும் தெரியும்.  அதனைத் தொடர்ந்து பலரால் பல்வேறு விதத்தில் தொலைக்காட்சிகளிலும், சமூக ஊடகங்களிலும்  விமர்சனங்கள்  வைக்கப்படுகின்றன. ஏன் இவ்வளவு விமர்சனங்கள் அவரை நோக்கி பாய்கின்றன என்பதை தமிழக மக்கள் நன்கு சிந்திக்க வேண்டும். மக்களுக்கு நன்மை செய்வது போன்ற ஒரு மாயையை ஏற்படுத்திக்கொண்டு தான் அரசியலில் நுழைகிறார் ரஜினிகாந்த். அவரின் பின்புலத்தில் யார் இயக்குகிறார் என்பது தெள்ளத்தெளிவாக தெரிகிறது. மத்திய பா.ச.க அரசும், ஆர்.எஸ்.எஸ்.வும் இவரை முன்னிறுத்தி தமிழகத்தில் தங்கள் மத அரசியல் எனும் அறுவடை செய்ய துடித்துக்கொண்டிருக்கின்றன என்பது தான் உண்மை.

முதலில் மக்களும், ரஜினி ரசிகர்களும் ஒன்றை தெளிவாக புரிந்துகொள்ள வேண்டும். திரு.ரஜினிகாந்த் மீது நமக்கு எந்த வன்மமும் கிடையாது. அவர் ஒரு நடிகர் என்பதாலோ, மராட்டியர் என்பதாலோ, கர்நாடகத்தில் வளர்ந்தவர் என்பதாலோ அல்ல இந்த நிலைப்பாடு. இந்தியா போன்ற ஒரு சனநாயக நாட்டில், யார் வேண்டுமானாலும் அரசியலுக்கு வரலாம், தேர்தலில் நிற்கலாம். ஆனால் இன்று  தமிழக மக்களுக்கு நன்மை செய்யப் போகிறேன் என்று சொல்லிக்கொண்டு, அரசியலுக்கு வரும் ரஜினி, இதுவரை இந்த மக்களுக்காக எதாவது செய்திருக்கிறாரா அல்லது ஏதேனும் அறிக்கையாவது வெளியிட்டு இருக்கிறாரா, கண்டனங்கள் தெரிவித்திருக்கிறாரா  என்பதை மக்கள் உணர வேண்டும்.

மேலும் படிக்க கீழே உள்ள சுட்டியை சுட்டவும்.

No comments:

Post a Comment