Wednesday 3 January 2018

மலைபடுகடாம்- ஒரு அறிமுகம்!!


Siragu-malaipadukadam2

மலைபடுகடாம் என்னும் இலக்கிய நூல் பத்துப்பாட்டு நூல்களில் ஒன்று. நம் பழந்செந்தமிழ் நாடு இயற்கை வளஞ்சான்றது. காடும், மலையும், புள்ளினங்களும், முகிலனங்களும் கவின் பெறக் காட்சியளிப்பனவாக இருந்தது. அவ்வியற்கைச் சூழலிடையே நம் மக்கள் வாழ்ந்தனர். அவர்கள் காண்பது இயற்கை காட்சி, கேட்பன புள்ளின் பாட்டொலி, இத்தகைய இயற்கை காட்சிகளை நம் கண் முன்னே கொண்டு வரும் சுவை மிகுந்த இலக்கிய நூலே மலைபடுகடாம்.
இந்நூல் கூத்தாற்றுப்படை என்னும் வகைகளுள் வரும். அதாவது ஆற்றுப்படுத்தும் கூத்தன், எதிர்வரும் கூத்தனை அழைத்து, “யாம் இவ்விடத்தே சென்று இன்னவளம் பெற்று வருகின்றோம், நீயும் அவ்வள்ளல்பாற் சென்று வளம் பெற்று வாழுதி!! என்று கூறுவது.
தொல்காப்பியம் புறத்திணையியலுள்,
“ தாவி னல்லிசை கருதிய கிடந்தோர்க்கு”
என்று தொடங்கும் நூற்பாவின் கண்,

“ கூத்தரும் பாணரும் பொருநரும் விறலியும்
ஆற்றிடைக் காட்சி உறழத் தோன்றிப்
பெற்ற பெருவளம் பெறாஅர்க் கறிவுறீஇச்
சென்றுபயன் எதிரச் சொன்ன பக்கமும்”

மேலும் படிக்க கீழே உள்ள சுட்டியை சுட்டவும்.

No comments:

Post a Comment