Wednesday 28 February 2018

மதுரை மீனாட்சி அம்மன் தீ விபத்தும், இந்து சமய அறநிலையத்துறையை அபகரிக்கும் திட்டமும்.!


Siragu madurai1

சில வாரங்களுக்கு முன், மதுரை மீனாட்சியம்மன் கோவிலில் தீ விபத்து நடந்தது நம் எல்லோருக்கும் தெரிந்த ஒன்று தான். பல காரணங்கள் சொல்லப்பட்டாலும், முடிவில் மின் கசிவு என்று சொல்லப்படுகிறது. இனி, விசாரணையில் தான் முழு விவரம் தெரிய வரும். அதுவும், நேர்மையான விசாரணையாக இருக்கும் பட்சத்தில் தான். இதனையடுத்து, திருவள்ளூர் மாவட்டம் திருவாலங்காட்டில் உள்ள வடாரண்யேஸ்வரர் கோவில் தலவிருட்சமான ஆலமரத்தில், தீப்பிடித்து எரிந்தது. அதே போல, தஞ்சை மாவட்டத்திலுள்ள, கும்பகோணம் ஆதிகும்பேஸ்வரர் கோவிலில், சிவராத்திரி விழாவின் போது, கொடிமரத்தின் அருகே, பால் காய்ச்சிக்கொண்டிருந்த எரிவாயு உருளையிலுள்ள ரப்பர் குழாயில் தீப்பிடித்தது. பெரிய அசம்பாவிதம் ஏதும் நடவாமல், தீ அணைக்கப்பட்டது. இதனை அடுத்து, திருவாரூர் தியாகராஜர் கோவிலில், அம்மனுக்கு சாத்தப்பட்ட துணியில், பக்கத்திலிருந்த அகல்விளக்கின் மூலம் தீப்பிடித்து, உடனே அணைத்தனர். தொடர்ந்து, இது போன்ற செய்திகளை அதாவது தமிழ்நாட்டு கோவில்களில் தீப்பிடிக்கும் செய்திகள் வந்த வண்ணம் இருக்கின்றன. இதற்கெல்லாம் என்ன காரணம் என்று ஆராயாமல், பரிகாரங்கள் செய்யவேண்டும் என்ற மூடநம்பிக்கைகள் பரப்பப்படுகின்றன. இன்னும் சில பேர், ஆட்சிக்கு ஆபத்து, நாட்டு மக்களுக்கு ஆபத்து என்ற புரளியை கிளப்பி விடுகின்றனர். இதையெல்லாம் விட, மிகப்பெரிய பாறாங்கல்லை நம் தலையில் தூக்கிபோடுவது போல், ஆரியம் ஒரே விசயத்தை, திரும்பத் திரும்ப சொல்லிக்கொண்டிருக்கிறது.!


இதை வைத்து, இந்து அமைப்பினர், வலது சாரியினர், பாசக, என அனைத்து இந்துத்துவவாதிகளும் மக்கள் மனதில் நஞ்சை விதைக்க முயற்சி செய்கிறார்கள். அது என்னவென்றால், இந்து சமய அறநிலையத்துறையை நீக்க வேண்டும் என்பது தான். அதற்கான, அவர்களுடைய காரணம், ஊழல் மலிந்து விட்டது. லஞ்சம் லாவணியம் மிக சுலபமாக நடந்துகொண்டிருக்கிறது என்கிறார்கள்.

மேலும் படிக்க கீழே உள்ள சுட்டியை சுட்டவும்.

Thursday 22 February 2018

யாருடைய டீயை நீ விற்கிறாய்? (கவிதை)


ப்ரஜ் ரஞ்சன் மணி-யின் “கிஸ்கீ சாய் பேச்தா ஹை தூ” என்ற இந்திக் கவிதையின் தமிழாக்கம். இந்தியிலிருந்து தமிழுக்கு: க. பூரணச்சந்திரன்

Siragu tea virkiraai1


நீ ஏன் உன்னை டீவிற்றவன் என்று சொல்லிக் கொள்கிறாய்?
ஒவ்வொரு விஷயத்திலும் ஏன் நாடகமாடுகிறாய்?
டீவிற்பவர்களின் பெயரை ஏன் கெடுக்கிறாய் நீ?
தெளிவாகச் சொல்லிவிடு, யாருடைய டீயை நீ விற்கிறாய்?

விரல் நுனியிலும் காயம் படாமல்
உன்னைத் தியாகி என்று சொல்லிக் கொள்கிறாய்
கூட்டுக் குழுமங்களில் கிறிஸ்துக்களைத் தேடுகிறாய்
அம்பானி அதானி பேரரசை விகாசம் என்கிறாய்
அட பத்மாஷ், யாருடைய டீயை நீ விற்கிறாய்?

மேலும் படிக்க கீழே உள்ள சுட்டியை சுட்டவும்.
http://siragu.com/%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%81%E0%AE%9F%E0%AF%88%E0%AE%AF-%E0%AE%9F%E0%AF%80%E0%AE%AF%E0%AF%88-%E0%AE%A8%E0%AF%80-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%BE/

Wednesday 21 February 2018

திருமலைராயனும் காளமேகப்புலவரும்


 Siragu kaalamega pulavar1
விஜயநகர அரசன் மல்லிகார்ச்சுனராயரின் (1449 – 1465)  அரசப் பிரதிநிதியான “சாளுவத் திருமலைராயன்” (1453/1455-1468) என்பவர் காலத்தவர் கவி காளமேகம் என்று அறியப்படுகிறது. சாளுவத் திருமலைராயன் என்னும் தெலுங்கு மொழி சிற்றரசனைக் குறித்துத் தனது பாடல்கள் பலவற்றில் குறிப்பிட்டுள்ளார் காளமேகம்.

சகம் 1875ல் தோன்றிய சாளுவத் திருமலைராயனைக் குறிப்பிடும் கல்வெட்டொன்று திருவானைக்காவில் உள்ளது என்று ஔவை. சு. துரைசாமிப் பிள்ளை குறிப்பிடுகிறார். இவனது தலைநகரம் திருமலைராயன் பட்டினம் என்ற குறிப்பு அவனது கல்வெட்டிலும் காணப்படுகிறது என்றும், இவனுடைய கல்வெட்டுக்களில் கூறப்படும், ‘சுங்கத் தவிர்த்த சோழநல்லுனரான திருமலை ராசபுரம்’ என்பது திருமலைராயன் பட்டினம் என்றும்  ஔவை. சு. துரைசாமிப் பிள்ளை கருதுகிறார்.  தான் பண்டைய சளுக்க மன்னர்களின் வழித்தோன்றல் என்பதாக  இவன் தன்னைச் “சாளுவத் திருமலை தேவமகாராசர்” (S.I.I.Vol.II. No. 23) என்று கூறிக்கொள்ளுகிறான். இவன் காலத்தவரான காளமேகப்புலவரும் “கல்யாணிச் சாளுவத் திருமலைராயன்” என்றே குறிப்பிடுகின்றார். தம் பாடலொன்றில்,  “…..  நிலைசெய் கல்யாணிச்சாளுவத் திருமலைராயன்”  என்ற வரியில் காளமேகம்  குறிப்பிடும் கல்யாணி என்பது மேலைச் சாளுக்கிய மன்னர்களின் தலைநகரம்.

மேலும் படிக்க கீழே உள்ள சுட்டியை சுட்டவும்.

Tuesday 20 February 2018

பார்ப்பனர்களில் நல்லவர்கள்?!


Siragu paarppanargal1

“பார்ப்பனர்களில் நல்லவர்களே இல்லையா?” என்று கேட்பவர்கள் இருக்கிறார்கள். பார்ப்பனர்களை ஒட்டு மொத்தமாக எதிர்ப்பதன் / ஒதுக்குவதன் மூலம் அவர்களில் உள்ள நல்லவர்களின் சேவை கிடைக்காமல் போய்விடும் என்றும், அதனால் சமுதாயத்திற்குப் பேரிழப்பு ஏற்படும் என்றும் அவர்கள் கூறுகிறார்கள். ஆனால் இவ்வாறு கூறுபவர்கள் பார்ப்பன ஆதிக்கத்தை எதிர்த்து, ஒடுக்கப்பட்ட வகுப்பு மக்களை அதிகாரப்படுத்தும் பணியைச் செய்த ஒரு பார்ப்பனரையும் வரலாற்றின் எந்தக்கால கட்டத்திலும் எடுத்துக்காட்டியது இல்லை.

பார்ப்பனர்களை/ பார்ப்பன ஆதிக்கத்தை எதிர்த்து முதன்முதலாகப் போர்க்கொடி உயர்த்தி வரலாற்றில் முத்திரை பதித்தவர் புத்தரே. அப்படி அவர் போராடியபோது, அவர் பக்கம் நியாயம் இருக்கிறது என்றுகூறி, அவருடன் சேர்ந்து, பார்ப்பன ஆதிக்கத்திற்கு எதிராக எந்த ஒரு பார்ப்பனரும் துணைநின்றது இல்லை. அவருடைய மறைவுக்குப்பின், புத்தமதத்தை ஆக்கிரமித்து, நாத்திகரான புத்தரை கடவுள் அவதாரம் ஆக்கி, அம்மதத்தின் புரட்சிகர அம்சங்களை எல்லாம் நீர்த்துப்போகச் செய்தனர். ஒரு பார்ப்பனர்கூட புத்தரின் மனிதகுலச் சமத்துவக் கொள்கையை ஏற்கவில்லை என்பது மட்டும்அல்ல, அதை எதிர்த்துப் பார்ப்பன அதிகாரத்தை நிலைகுலையாமல் பார்த்துக் கொள்வதிலேயே உறுதியாக இருந்தனர்.

மேலும் படிக்க கீழே உள்ள சுட்டியை சுட்டவும்.

Thursday 15 February 2018

அலைபேசியினால் வந்த ஆபத்து (சிறுகதை)


Siragu smart phone1

“அம்மா எனக்கு இந்தப் பாடம் புரியல, சொல்லிக் கொடும்மா” என்று புத்தகத்தோடு தன் அருகில் வந்த அர்ச்சனாவிடம் லட்சுமி,”போடி அந்தாண்டே, அம்மா வேலையாயிருக்கிறது தெரியலையா?” என்று எரிந்து விழுந்தாள்.
அர்ச்சனா அம்மாவை அச்சத்துடன் பார்த்துக் கொண்டே நகர்ந்தாள். லட்சுமி படித்தவள். பெயரில் மட்டுமல்ல, அழகிலும் மகாலட்சுமியைக் கொண்டிருந்தாள்.
அலைபேசி (Smart Phone) வந்தப் பிறகு ஆறு மாசமாய் அம்மா தன்னிடமிருந்து விலகிப் போவதை அந்தச் சிறுமி உணர்ந்தாள்.
லட்சுமி அர்ச்சனாவிடமிருந்து மட்டும் விலகிப் போகவில்லை. அவள் கணவன் ஹரியிடமிருந்தும்  விலகிக் கொண்டிருந்தாள்.

எல்லாம் ஆறு மாசத்துக்கு முன்னால் ஹரிக்கு அணி தலைவராக பதவி உயர்வு கிடைத்த மகிழ்ச்சியைக் கொண்டாட லட்சுமிக்கு அலைபேசி ஒன்று வாங்கிக் கொடுத்தான். அதுதான் அவன் செய்த தவறு. லட்சுமி வாட்ஸ் செயலியைப் பார்க்க ஆரம்பித்தாள். முதல் காதல் மாதிரி அவள் மனம் அதில் ஈடுபட்டது. பழைய நண்பர்களுடன் தொடர்பு கொண்டாள். கல்லூரியில் படித்த ஆண் நண்பர்கள், பெண் நண்பர்கள் எல்லோருடன் நட்பு தொடர்ந்தது. இந்தியாவில் மட்டுமில்லாமல் வெளிநாட்டிலும் அவளுடன் கல்லூரியில் படித்த நண்பர்களுடன் தொடர்பு மலர்ந்தது. வாட்ஸ் அப்பில் அவள் புகைப்படத்தை அடிக்கடி மாற்றினாள். செய்திகளை போட ஆரம்பித்தாள். வாட்ஸ் அப்பில் அரட்டை(chatting) செய்ய ஆரம்பித்தாள். ஆண் நண்பர்களிடமிருந்து அவள் அழகைப் புகழ்ந்து அவளுக்கு செய்தி வரும், அதுவும் எப்படி, ”டார்லிங், அன்பே, ஆருயிரே, தங்கச்சிலை, செல்லச் சிறுக்கி …” இதைவிட மோசமாய் வரும். அவள் மறுப்புச் சொல்லாமல் அரட்டை செய்வாள். இரவு நேரத்தில் மிகவும் மோசமாய் வரம்பு மீறி அரட்டை செய்யும் ஆண் நண்பர்களும் உண்டு.

மேலும் படிக்க கீழே உள்ள சுட்டியை சுட்டவும்.

சங்க இலக்கியத்தில் வெறியாட்டம்


siragu veriyaattam1

தலைவனும் தலைவியும் காதல் மொழி பேசி மகிழ்ந்து இருக்கின்றனர். அப்படி இல்லாத காலங்களில், தலைவனின் பிரிவை எண்ணி தலைவி வருந்தி வாடுகின்றாள். அதன் காரணமாக பசலை கொண்டு உடல் இளைத்து, தோல் வெளுத்து விடுகின்றாள். அவள் கைகள் மெலிந்து வளையல்கள் அணிய முடியாது கழன்றுவிடுகின்றன. அவளின் களவொழுக்கத்தை அறியாத தலைவியின் தாயும், செவிலித் தாயும், கட்டுவிச்சியை அழைத்து குறிச் சொல்ல வேண்டுகின்றனர்.
கட்டுவிச்சி என்பவள் குறிஞ்சி மலையில் வாழும் அகவன் மகள். அவள் அரிசியைத் தூவி அந்த அரிசிகள் விழும் அமைப்பைக் கொண்டு குறி சொல்கின்றாள். குறிஞ்சி நிலக் கடவுள் முருகனின் அணங்கினால் தலைவிக்கு பாதிப்பு என கூறுகிறாள். முருகனின் கோபம் தணிய வேலனை அழைத்து வந்து வெறியாட்டம் ஆட வேண்டும் எனச் சொல்கிறாள் வேலன் என்பவன் குறிஞ்சி நிலக் கடவுளான முருகனுக்கு வழிபாட்டுக்கு தேவையானவற்றை செய்பவன்.

தொல்காப்பியம் கட்டுவிச்சி, வேலனை பற்றிக் கூறும்போது, ‘களவு அலர் ஆயினும், காமம் மெய்ப்படுப்பினும், அளவு மிகத் தோன்றினும், தலைப்பெய்து காணினும், கட்டினும் கழங்கினும் வெறி என இருவரும் ஒட்டிய திறத்தான் செய்திக்கண்ணும் ஆடிய சென்றுழி அழிவு தலைவரினும்’ (தொலகாப்பியம், பொருளதிகாரம் 115). என்கின்றது.

மேலும் படிக்க கீழே உள்ள சுட்டியை சுட்டவும்.

Wednesday 14 February 2018

நசுக்கப்படும் தமிழ்மக்களின் வாழ்வாதாரங்கள்

தமிழகத்தில் நடக்கும் தற்போதைய நிகழ்வுகள் அனைத்தையும் பார்க்கும்போது தமிழர்களின் வாழ்வுரிமை மற்றும் அதற்கான ஆதாரங்களை திட்டமிட்டே அழிக்கும் செயலில், மத்திய அரசாங்கம்  ஈடுபடுகிறது என்பதில் எல்லோருக்கும் மாற்றுக்கருத்து இருக்க முடியாது.  அதிலும் கடந்த ஓராண்டாக, தமிழகத்தின் ஆட்சி, மத்திய அரசிடம் அடகு வைக்கப்பட்டிருப்பதாகவே தெரிகிறது. மக்கள் அனைவருக்கும் இந்த அச்சவுணர்வு இருக்கிறது என்பது நிதர்சனமான உண்மை. தமிழ்நாட்டிற்கு எவ்வித வளர்ச்சித்திட்டங்களும் போடப்படவில்லை, அமல்படுத்தபபடவில்லை. அது மட்டுமல்லாமல், அனைத்து ஆதாரங்களையும் சுரண்டுவதில் கண்ணும் கருத்துமாக இருக்கிறது என்பது தெளிவாகிறது.
Siragu-farmers


முதலில் விவசாயத்திலிருந்து ஆரம்பிப்போம். விவசாயத்திற்கான முக்கிய ஆதாரமே நீர் தான். அதனை தேவையான சமயத்தில் வழங்குவதில் முனைப்பு காட்டவில்லை இந்த மத்திய பா.ச.க அரசும், மாநில அ.தி.மு.க  அரசும். மழை பொய்த்துவிட்டது. நமக்கு முறையாக, கர்நாடகத்திலிருந்து  வழங்கப்படவேண்டிய தண்ணீர் வழங்கப்படவில்லை. கர்நாடகத்திலிருந்து நமக்கு கிடைக்கவேண்டிய நீரை பெற்றுத் தர மத்திய, மாநில  அரசுகள் தவறி விட்டன. காவேரி நீர் மேலாண்மை வாரியம் அமைக்க உச்சநீதிமன்றம் உத்தரவிட்டும், மத்திய அரசு, அதனை மறுத்துவிட்டது. தமிழகத்தில் விவசாயம் கேள்விக்குறியாகி விட்டது. விவசாயம் பொய்த்துவிட்டதால், வறுமையில் வாடும் விவசாயிகள் தற்கொலை செய்துகொள்ளும் நிலையினை இந்த இரு அரசுகளும் ஏற்படுத்தி விட்டன. கடன் தள்ளுபடி கேட்டு இன்னமும், விவசாயிகள் போராடி வருகின்றனர். மக்கள் அனைவருக்கும் உணவிடும் விவசாயிகள், இன்று உண்ண உணவில்லாமல் தவித்து வருகின்றனர். மேலும், மீத்தேன் எடுத்தல்,

மேலும் படிக்க கீழே உள்ள சுட்டியை சுட்டவும்.

விழித்திரு (கவிதை)


Siragu penniyam2

ஏடெடுத்துப் படித்துவிட்டு
எழுதுகோலைத் தூக்கிவந்து
பெண்ணினமேபேதமின்றி
மனிதப் பிறப்பாகஉருவெடுக்க
எழுந்திடுக…. எழுந்திடுக….
வீறுகொண்டேஎழுந்திடுக
எனக்கூற ஆசைகொண்டு – இங்கு
அவசரமாய் ஓடிவந்தேன்
பெண் இனமே–நீ



கண்ணினைக் கயலாக்கி

மேலும் படிக்க கீழே உள்ள சுட்டியை சுட்டவும்.
http://siragu.com/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81-%E0%AE%95%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%88/

Friday 9 February 2018

மறந்த மருத்துவம்


siragu iyarkai maruththuvam

“நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம்” என்னும் பழமொழிக்கேற்ப வாழ்வின் சிறந்த செல்வமாகக் கருதப்படும் நோயில்லாமல் ஆரோக்கியமாக வாழ்வெதென்பது இன்றைய சூழலில் எட்டாக் கனியாக உள்ளது. இதற்கு முக்கியக் காரணம் நம் வாழ்க்கை முறைதான். நமது உணவு முறையும், மருத்துவ முறையும் நாகரிகத்தை நோக்கிச் செல்ல செல்ல நமது ஆரோக்கியம் இழிநிலைக்கு போய்க்கொண்டிருக்கிறது. இயற்கையோடு ஒன்றிய வாழ்க்கை முறையையும் சித்த மருத்துவத்தின் மகத்துவத்தையும் உணர்ந்து வாழ்க்கை நடத்தி வந்த நம் முன்னோர்கள் நம்மை விட ஆரோக்கியத்துடனும், ஆயுளுடனும் வாழ்ந்து வந்தனர். நமது இன்றைய நிலைக்கான சில காரணங்களையும், சில எளிய மருத்துவ முறைகளையும் இக்கட்டுரையில் காண்போம்.
சமையல் அறை மாற்றங்கள்

விளம்பர வாழ்க்கை வாழ விரும்பும் நாம் விளம்பரங்களைப் பார்த்து நமது வாழ்க்கை முறையையும் மாற்றிக் கொண்டுள்ளோம். மண்பானைகளாலும், கண்ணாடி பாட்டில்களாலும், உலோக உபகரணங்களாலும் நிறைந்த நம் சமையலறையை இன்று ஆடம்பர அலங்காரத்திற்காக பிளாஸ்டிக் பாட்டில்களாகவும், Nonstick, Airtight container பாத்திரங்களாகவும் மாற்றியுள்ளோம். உப்பு, புளி, ஊறுகாய் போன்றவை பிளாஸ்டிக் பாத்திரத்தில் வைத்து உபயோகப்படுத்துவது நமக்கு நாமே விசம் உண்பதற்கு சமம் என்று தெரிந்தும் பிளாஸ்டிக் ஜார்களில் விளம்பரப்படுத்திய ஊறுகாயைத்தானே வாங்கி பயன்படுத்துகிறோம். பிளாஸ்டிக் பாட்டில்களில் சூடான பொருட்களை ஊற்றுவது அதன் விசத்தன்மையைத் தரும் என்று தெரிந்திருந்தும் குழந்தைகளுக்கு பல வண்ணங்களில் பாட்டில்களை வாங்கி அதில் சுடச்சுட நீரை ஊற்றிக் கொடுத்து பள்ளிக்கு அனுப்புகிறோம்.

மேலும் படிக்க கீழே உள்ள சுட்டியை சுட்டவும்.

Thursday 8 February 2018

வைரமுத்துகளுக்கு எச்சரிக்கை


Siragu vairamuththu2

தருண்விஜய் என்ற பா.ச.க. தலைவர் ஒருவர் திருக்குறளின்மேல் ஆர்வம் கொண்டு அதன் அருமை, பெருமைகளைப் பரப்புரை செய்துவருகிறார். அப்படிச் செய்வதன்மூலம் தமிழக மக்களைக் காவி வட்டத்திற்குள் இழுத்துப்போகவும் கடுமையாக முயல்கிறார். பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் சிறப்பொவ்வாது செய்தொழில் வேற்றுமையான் என்ற திருக்குறளின் உயிருக்கு நிகரான கருத்தைப் புறந்தள்ளிவிட்டு,அதற்கு நேர் எதிரான வர்ணாசிரம அதர்மத்தை வலுப்படுத்த முனையும் அவரது நோக்கத்தை தமிழகமக்கள் பலர் புரிந்துகொண்டு உள்ளனர். ஆனால் ஆளும் வர்க்கத்தை அனுசரித்துப் போனால் ஆதாயம் கிடைக்கும் என்று நம்பும் சிலர் அவருக்கு ஆரத்தி எடுத்து வரவேற்கவும் செய்தனர். அப்படிப்பட்டவர்களுள் வைரமுத்துவும் ஒருவர்.


வைரமுத்து அத்துடன் நிற்கவில்லை. காவிகளை மேலும்மேலும் புகழ்வதன் மூலம் தனக்குப் பேரும்புகழும் கூடும் என நினைத்தார். மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் அவர்களை “நட்டுவைத்த வேலுக்குப் பொட்டு வைத்ததுபோல் நிமிர்ந்து நிற்கிறார்” புகழ்ந்து தள்ளினார்.

மேலும் படிக்க கீழே உள்ள சுட்டியை சுட்டவும்.

Wednesday 7 February 2018

பேருந்து கட்டண உயர்வும், அவதிப்படும் மக்களும்.!


Siragu perundhu4

தமிழகமக்களின் தற்போதைய மிகப்பெரிய சுமை, இந்த பேருந்து கட்டண உயர்வு என்பது நம்மில் யாருக்கும் மாற்றுக் கருத்து இருக்கமுடியாது. அந்த அளவிற்கு மக்களை மிகவும் வாட்டி வதைத்துக்கொண்டிருக்கும் துயரம் இந்த பேருந்து கட்டண உயர்வு. இது சரியான நிர்வாக அமைப்பு இல்லாததையே காட்டுகிறது. நிதி பற்றாக்குறை மற்றும் போக்குவரத்து ஊழியர்கள் போராட்டம் என்ற ஒரு நொண்டி சாக்கை கூறிக்கொண்டிருக்கிறது. இந்த நிர்வாக திறமையற்ற அதிமுக அரசு.!


எல்லாவற்றிக்கும் முதன்மை காரணம் என்னவென்றால், போக்குவரத்து ஊழியர்களின் பிடிக்கப்பட்ட தொகையை வைப்பு கணக்கில் வைக்காமல், வேறு செலவினத்திற்காக திருப்பிவிட்ட காரணத்தினால் ஏற்பட்ட ஒரு மோசமான விளைவு தான், இந்த நெருக்கடியை ஏற்படுத்தி இருக்கிறது. அதனால் தான் அவர்கள் கேட்கும் நேரத்தில் கொடுக்க முடியாமல் போனது. இதனால் போராட்டம், வேலை நிறுத்தம். அதனைத் தொடர்ந்து பேருந்து கட்டண உயர்வு என அனைத்தும் நடக்க காரணமாக இருந்திருக்கிறது.

மேலும் படிக்க கீழே உள்ள சுட்டியை சுட்டவும்.

Thursday 1 February 2018

உதிர்ந்த மலர் (சிறுகதை)


siragu udhirndha malar

நான்  கடிகாரத்தைப் பார்த்தேன். மாலை மணி ஆறு ஆகிவிட்டது என்பதைப் பார்த்ததும் அரக்கப் பரக்க எழுந்தேன். அடடே, நேரம் ஆகிவிட்டதே என்று அலுவலகத்தை விட்டு வெளியே வந்தேன். நான் தி.நகரிலிருந்து  திருவான்மியூர் போக வேண்டும். பேருந்து நிலையத்தில் ராதிகாவைப் பார்த்தேன். அவளை  தினந்தோறும் அங்கு பார்க்கிறேன். அவள் தோழி சந்தியாவுடன் மைலாப்பூர் பேருந்தைப் பிடிக்க நின்றிருப்பாள். அவர்கள் இருவரும் தனியார் நிறுவனத்தில் வேலை செய்கிறார்கள். ”ஹலோ” என்றால் அவளும் ”ஹலோ” என்பாள். ராதிகா கொடிபோல் வசீகரமாய் இருப்பாள். சந்தியாவை விட ராதிகா அழகானவள். என்னைப் பார்த்தவுடன் புன்னகை பூப்பாள்.மிகவும் மென்மையானவள்,சுவையாகப் பேசுவாள். புத்திசாலியும்கூட  எதையும் சட்டென்று புரிந்து கொள்வாள். குறும்பு அவள் கூட பிறந்த குணம். ஒரு முறை வெளுத்து கட்டறே! என்று வாட்ஸ்அப்பில் மெசெஜ் போட்டிருந்தேன். ”நான் துணியெல்லாம் நல்லா வெளுக்கிறதில்லேன்னு வீட்டிலே சொல்றாங்க“! என்று குறுநகை பதில் வந்தது.

அன்று ஏனோ தெரியவில்லை. சந்தியாவை மட்டும்தான் பார்க்க முடிந்தது. ராதிகா தென்படவில்லை. அவள் இல்லாமல் ஒரு வாரம் போனது. பொறுக்க முடியாமல் “எங்கே உங்க தோழியைக் காணோம். விடுமுறையில் வெளியூருக்குப் போயிருக்காங்களா? நான் சந்தியாவிடம் கேட்டு விட்டேன்.

மேலும் படிக்க கீழே உள்ள சுட்டியை சுட்டவும்.