Thursday 1 February 2018

உதிர்ந்த மலர் (சிறுகதை)


siragu udhirndha malar

நான்  கடிகாரத்தைப் பார்த்தேன். மாலை மணி ஆறு ஆகிவிட்டது என்பதைப் பார்த்ததும் அரக்கப் பரக்க எழுந்தேன். அடடே, நேரம் ஆகிவிட்டதே என்று அலுவலகத்தை விட்டு வெளியே வந்தேன். நான் தி.நகரிலிருந்து  திருவான்மியூர் போக வேண்டும். பேருந்து நிலையத்தில் ராதிகாவைப் பார்த்தேன். அவளை  தினந்தோறும் அங்கு பார்க்கிறேன். அவள் தோழி சந்தியாவுடன் மைலாப்பூர் பேருந்தைப் பிடிக்க நின்றிருப்பாள். அவர்கள் இருவரும் தனியார் நிறுவனத்தில் வேலை செய்கிறார்கள். ”ஹலோ” என்றால் அவளும் ”ஹலோ” என்பாள். ராதிகா கொடிபோல் வசீகரமாய் இருப்பாள். சந்தியாவை விட ராதிகா அழகானவள். என்னைப் பார்த்தவுடன் புன்னகை பூப்பாள்.மிகவும் மென்மையானவள்,சுவையாகப் பேசுவாள். புத்திசாலியும்கூட  எதையும் சட்டென்று புரிந்து கொள்வாள். குறும்பு அவள் கூட பிறந்த குணம். ஒரு முறை வெளுத்து கட்டறே! என்று வாட்ஸ்அப்பில் மெசெஜ் போட்டிருந்தேன். ”நான் துணியெல்லாம் நல்லா வெளுக்கிறதில்லேன்னு வீட்டிலே சொல்றாங்க“! என்று குறுநகை பதில் வந்தது.

அன்று ஏனோ தெரியவில்லை. சந்தியாவை மட்டும்தான் பார்க்க முடிந்தது. ராதிகா தென்படவில்லை. அவள் இல்லாமல் ஒரு வாரம் போனது. பொறுக்க முடியாமல் “எங்கே உங்க தோழியைக் காணோம். விடுமுறையில் வெளியூருக்குப் போயிருக்காங்களா? நான் சந்தியாவிடம் கேட்டு விட்டேன்.

மேலும் படிக்க கீழே உள்ள சுட்டியை சுட்டவும்.

No comments:

Post a Comment