Tuesday 20 February 2018

பார்ப்பனர்களில் நல்லவர்கள்?!


Siragu paarppanargal1

“பார்ப்பனர்களில் நல்லவர்களே இல்லையா?” என்று கேட்பவர்கள் இருக்கிறார்கள். பார்ப்பனர்களை ஒட்டு மொத்தமாக எதிர்ப்பதன் / ஒதுக்குவதன் மூலம் அவர்களில் உள்ள நல்லவர்களின் சேவை கிடைக்காமல் போய்விடும் என்றும், அதனால் சமுதாயத்திற்குப் பேரிழப்பு ஏற்படும் என்றும் அவர்கள் கூறுகிறார்கள். ஆனால் இவ்வாறு கூறுபவர்கள் பார்ப்பன ஆதிக்கத்தை எதிர்த்து, ஒடுக்கப்பட்ட வகுப்பு மக்களை அதிகாரப்படுத்தும் பணியைச் செய்த ஒரு பார்ப்பனரையும் வரலாற்றின் எந்தக்கால கட்டத்திலும் எடுத்துக்காட்டியது இல்லை.

பார்ப்பனர்களை/ பார்ப்பன ஆதிக்கத்தை எதிர்த்து முதன்முதலாகப் போர்க்கொடி உயர்த்தி வரலாற்றில் முத்திரை பதித்தவர் புத்தரே. அப்படி அவர் போராடியபோது, அவர் பக்கம் நியாயம் இருக்கிறது என்றுகூறி, அவருடன் சேர்ந்து, பார்ப்பன ஆதிக்கத்திற்கு எதிராக எந்த ஒரு பார்ப்பனரும் துணைநின்றது இல்லை. அவருடைய மறைவுக்குப்பின், புத்தமதத்தை ஆக்கிரமித்து, நாத்திகரான புத்தரை கடவுள் அவதாரம் ஆக்கி, அம்மதத்தின் புரட்சிகர அம்சங்களை எல்லாம் நீர்த்துப்போகச் செய்தனர். ஒரு பார்ப்பனர்கூட புத்தரின் மனிதகுலச் சமத்துவக் கொள்கையை ஏற்கவில்லை என்பது மட்டும்அல்ல, அதை எதிர்த்துப் பார்ப்பன அதிகாரத்தை நிலைகுலையாமல் பார்த்துக் கொள்வதிலேயே உறுதியாக இருந்தனர்.

மேலும் படிக்க கீழே உள்ள சுட்டியை சுட்டவும்.

No comments:

Post a Comment