Thursday 8 February 2018

வைரமுத்துகளுக்கு எச்சரிக்கை


Siragu vairamuththu2

தருண்விஜய் என்ற பா.ச.க. தலைவர் ஒருவர் திருக்குறளின்மேல் ஆர்வம் கொண்டு அதன் அருமை, பெருமைகளைப் பரப்புரை செய்துவருகிறார். அப்படிச் செய்வதன்மூலம் தமிழக மக்களைக் காவி வட்டத்திற்குள் இழுத்துப்போகவும் கடுமையாக முயல்கிறார். பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் சிறப்பொவ்வாது செய்தொழில் வேற்றுமையான் என்ற திருக்குறளின் உயிருக்கு நிகரான கருத்தைப் புறந்தள்ளிவிட்டு,அதற்கு நேர் எதிரான வர்ணாசிரம அதர்மத்தை வலுப்படுத்த முனையும் அவரது நோக்கத்தை தமிழகமக்கள் பலர் புரிந்துகொண்டு உள்ளனர். ஆனால் ஆளும் வர்க்கத்தை அனுசரித்துப் போனால் ஆதாயம் கிடைக்கும் என்று நம்பும் சிலர் அவருக்கு ஆரத்தி எடுத்து வரவேற்கவும் செய்தனர். அப்படிப்பட்டவர்களுள் வைரமுத்துவும் ஒருவர்.


வைரமுத்து அத்துடன் நிற்கவில்லை. காவிகளை மேலும்மேலும் புகழ்வதன் மூலம் தனக்குப் பேரும்புகழும் கூடும் என நினைத்தார். மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் அவர்களை “நட்டுவைத்த வேலுக்குப் பொட்டு வைத்ததுபோல் நிமிர்ந்து நிற்கிறார்” புகழ்ந்து தள்ளினார்.

மேலும் படிக்க கீழே உள்ள சுட்டியை சுட்டவும்.

No comments:

Post a Comment