Wednesday 25 April 2018

சிற்றில்


siragu sitril2
ஆத்தோரம் மணல் எடுத்து அழகழகாய் வீடு கட்டி
தோட்டமிட்டு செடி வளர்த்து ஜோராக குடியிருப்போம்
வெய்யிலிலே குளிர்ந்திருக்கும் வேலியிலே குடிலிருக்கும்
கையளவு கதவிருக்கும் காற்று வர வழியிருக்கும்
வழிமேலே விழி இருக்கும் வந்தவர்க்கெல்லாம் இடமிருக்கும்…..!
ஒரு பழைய தமிழ்த் திரைப்படப் பாடல். கண்ணதாசனின் வரிகள் இவை. இந்தப் பாடலைக் கேட்கும் போதெல்லாம் சிற்றில் அதாவது சிறிய மணல் வீடு என சங்க இலக்கியப் பாடல்களில் குறிப்பிடப்பட்ட வரிகள் தான் நினைவிற்கு வரும். சங்க இலக்கியப் பாடல்கள் சிலவற்றில் இந்த மணல் வீடு பற்றியக் குறிப்புகள் உண்டு.

பிள்ளைத் தமிழ் இலக்கணத்தில் சிற்றில் பற்றியப் பாடல்கள் உண்டு. புலவர்கள் தாங்கள் விரும்பிய கடவுளையோ, அரசனையோ, வள்ளலையோ, சான்றோரையோ குழந்தையாக எண்ணிப் பாடுவது பிள்ளைத்தமிழ் ஆகும். இது குழந்தையின் மூன்றாம் மாதம் முதல் 21ஆம் மாதம் வரை ஒரு பருவத்திற்கு இரண்டு திங்கள் என வகுத்துக் கொண்டு பத்துப் பருவங்களில் வைத்துப் பாடப்படுவதாகும். இதில் ஒரு பருவத்திற்குப் பத்துப் பாடல்கள் வீதம் பத்துப் பருவங்களுக்கு மொத்தம் 100 பாடல்கள் பாடப்படும். இவ்விலக்கியம் ஆண்பாற் பிள்ளைத் தமிழ், பெண்பாற் பிள்ளைத் தமிழ் என இரண்டு வகைப்படும். இதில் பதினேழாவது மாதத்தில் பாடப்படும் பாடல்கள் சிற்றில் இடம்பெறும். இப்பருவத்தில் பெண் குழந்தைகள் கட்டி விளையாடும் சிற்றிலை ஆண் குழந்தைகள் சென்று சிதைப்பதாகக் கூறப்படும். (சிற்றில் = சிறு வீடு)

மேலும் படிக்க கீழே உள்ள சுட்டியை சுட்டவும்.
http://siragu.com/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D/

No comments:

Post a Comment