Tuesday 29 May 2018

அணங்கு

முன்னுரை:
அணங்கே விலங்கே கள்வர்தம் மிறையெனப்
பிணங்கல் சாலா அச்சம் நான்கே
          – தொல்காப்பியம், பொருளதிகாரம்: மெய்ப்பாட்டியல்-8/1
அணங்கு   முதலாய   நான்கும்   பற்றி    அச்சம்   பிறக்கும் என்று தொல்காப்பியம் மெய்ப்பாட்டியல் சூத்திரம் (257) வரையறுக்கிறது.  அதாவது,  ‘அணங்கு’,  ‘விலங்கு’,  ‘கள்வர்’,  ‘அரசர்’ ஆகியோர்  அச்சமென்னும்   மெய்ப்பாட்டிற்குக் காரணமாகியவர் என்கிறார் தொல்காப்பியர்.
அணங்கு என்பதற்குப் பொருள் கூறுமிடத்து பேராசிரியர், “அணங்கென்பன பேயும் பூதமும் பாம்பும் அசுரர் ஈறாகிய பதினென்கணனும் நிரயப்பாலரும், பிறரும் அணங்குதற்றொழிலராகிய சவந்தின் பெண்டிரும் உருமிசைத் தொடக்கத்தனவும்” என்பார். அவர், “கட்புலனாகாமல் தம்  ஆற்றலாற்றீண்டி  வருத்தும் சூர்முதலாய தெய்வங்களும் அணங்குதற்றொழிலுடைய பிறவுமாம்”, என்று இவ்வாறு தரும் இந்த விரிவான விளக்கத்தின் வழியாக ‘அணங்கு’ எனப்படுவது, ‘வருத்தும் திறன் கொண்டு, வருத்தும் தொழிலைச் செய்யும் ஆற்றல் கொண்டவை’  என்று புரிந்து கொள்ளலாம். ஆக, அணங்கு வருத்துவது அதனால் அது மக்களுக்கு அச்சம் விளைவிக்கிறது, அது கண்ணுக்குப் புலனாகாத ஒன்றாகவும் இருக்கலாம். இது பொதுமைப்படுத்தும் ஒரு விளக்கமாக, அச்சத்தை விளைவிக்கக் கூடிய அணங்கு வகைகளைக் குறிக்கிறது.
 siragu ananku1
I. இலக்கியங்களில் அணங்கு:

பொதுவாக இலக்கியங்களில் “அணங்கு” என்ற சொல் வருத்தும்-தெய்வத்தன்மை கொண்ட பெண் என்ற வகையில் பயன்கொள்ளப்படுவதைக்  காணமுடிகிறது. இங்கு எடுத்துக்காட்டுகளாகக் குறளில்  இருந்தும் சிலப்பதிகாரத்தில் இருந்தும் காணலாம்.

மேலும் படிக்க கீழே உள்ள சுட்டியை சுட்டவும்.

Friday 25 May 2018

அறிவை விடச் சிறந்தது அறம்


siragu friends2
மனிதனுக்கு இருக்கும் ஆறாம் அறிவு அவனைப் பகுத்தறிவுள்ளவனாக ஆக்குகின்றது. பகுத்தறிவு நல்லது எது, கெட்டது எது என்பதை மனிதன் அறிந்து நடக்க வழி சொல்லுகிறது.  இந்தப் பகுத்தறிவினைக் கொண்டு மனிதன்  ஆக்கங்களையும் உருவாக்கலாம். அழிவுகளையும் உருவாக்கலாம்.
ஆக்க அறிவினை விட அழிவு அறிவினால் தான் மனித உலகம்  பாழ்பட்டு வருகிறது. அணுவைப் பிளக்கலாம் என்ற அறிவு மெச்சத்தக்கது. ஆனால் அதனைக் கொண்டு அணுகுண்டு தயாரித்து மனித குலத்தையே அழிக்கலாம் என்பது எவ்வளவு நாசவேலை. எனவே அறிவு என்பது அற்றம் காக்கும் கருவியாக அமையவேண்டும். அற்றம் தரும் கருவியாக அமைந்துவிடக் கூடாது.
அறிவு நல்ல நிலையில் செயல்பட வேண்டும். அதற்கு என்ன வழி. நல்ல அறச்சிந்தனைகளைக் கண்டும், கேட்டும், ரசித்தும், விவாதித்தும் அறிவிற்கு அறத்தை உறுதுணையாக ஆக்க வேண்டும். அறமற்ற அறிவு பாழ்.

இன்னா செய்யாமை என்ற ஓர் அறம் இன்றைய மனித குலத்திற்குத் தேவையான அறமேம்பாட்டுச் சிந்தனையாகும். பிற உயிர்களுக்குத் தீங்கு செய்யாமை என்பதே இன்னா செய்யாமை. ‘‘நீ வாழ பிறரைக் கெடுக்காதே”, ”வாழு, வாழவிடு” என்று மக்கள் மொழிகளில் இதனை எளிதாகச் சொல்லிவிடலாம்.

மேலும் படிக்க கீழே உள்ள சுட்டியை சுட்டவும்.

Thursday 24 May 2018

தலையாலங்கானம் போர்!! – சிறு குறிப்பு !!


siragu thalayaalangaanam1
தமிழர் வரலாற்றில் போரும், விறலும் மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்தவை. சங்க இலக்கியப் புறப் பாடல்களில் தமிழ் மன்னர்களின் போர் பற்றிய குறிப்புகள் உண்டு. அவற்றில் குறிப்பிடத்தக்கது தலையானங்கானத்து மற்றும் வெண்ணிப் போர்கள் ஆகும்.
தலையாலங்கானம் திருவாவூர் மாவட்டத்தில் உள்ள ஒரு ஊர். பாண்டியன் தலையாலங்கானத்துச் செருவென்ற நெடுஞ்செழியன் சேரனையும் சோழனையும் (சேரமான் யானைக்கட்சேய் மாந்தரஞ்சேரல் இரும்பொறை, சோழன் கிள்ளிவளவன்), ஐந்து வேளிரையும் (திதியன், எழினி, எருமையூரன், இருங்கோ வேண்மான், பொருநன்) சோழ நாட்டில் உள்ள தலையாலங்கானத்தில் தோற்கடித்தான், என்பதாக பல குறிப்புகள் புறநானுற்றுப் பாடல்கள், மதுரைக்காஞ்சி போன்ற பாடல் வரிகளின் மூலம் நாம் அறிந்து கொள்ள முடியும். நற்றிணை, அகநானூறு போன்று அகப் பாடல்களிலும் இந்தப் போர் பற்றியக் குறிப்புகள் உண்டு.

புறநானூறு 19 இல் பாண்டியன் நெடுஞ்செழியனை எதிர்த்த ஏழு அரசர்களைத் தலையாலங்கானப் போரில் வென்றான் என்றும், அந்தப் போரில் என் கணவனும் புதல்வரும் மாண்டனர். இனி நமக்கு என்ன இருக்கிறது என்ற மகளிர் கசிந்து அழுவதைப் பார்த்துக் கூற்றுவனே இரங்கிய போர்க்களம் அது என்ற குறிப்புகள் உண்டு.

மேலும் படிக்க கீழே உள்ள சுட்டியை சுட்டவும்.

Wednesday 23 May 2018

காவேரி மேலாண்மை ஆணையமும், மத்திய அரசின் தாமதமும்.!


 siragu kauvery river2
காவேரி மேலாண்மை ஆணையம் என்ற பெயரில் திருத்தப்பட்ட வரைவுத்திட்டத்தை மத்திய அரசு வெளியிட்டு உள்ளது. அதனை உச்சநீதிமன்றம் ஏற்றுக்கொண்டிருக்கிறது என்ற செய்தி நமக்கு சற்று ஆறுதலை கொடுக்கிறது என கொள்ளலாம். இந்த அடிப்படை காவேரி நதிநீர் பங்கீட்டில், நாம் கடந்துவந்த பாதையை, கடந்தகால செயல்பாடுகளை நினைவுகூர்ந்தோமானால், தமிழக விவசாயிகள், காவேரி நீருக்காக எப்படியெல்லாம் தங்கள் சுயமரியாதையை இழந்து, போராடி வந்திருக்கிறார்கள் என்பதை இந்த நாடு மட்டுமல்ல, உலகமே பார்த்துக் கொண்டுதானிருக்கிறது. அவர்களை சந்திக்கக்கூட மனமில்லாமல் இந்நாட்டின் பிரதமர் எந்தளவிற்கு காலத்தை கடத்தி வந்திருக்கிறார் என்பதுவும் நாடறிந்த செய்தி. இப்படி இருக்கையில், கடந்த மூன்று மாதங்களாக காவேரி மேலாண்மை வாரியம் அமைப்பது பற்றிய செய்திகளை நாம் நாள்தோறும் தொடர்ந்து கூர்ந்து கவனித்து வருகிறோம். தமிழகம், இந்த விடயத்தில், மத்திய அரசால், கடுமையான விரோதப்போக்கை சந்தித்து வந்திருக்கிறது என்பது சொல்லித்தெரியவேண்டிய அவசியமில்லை. நம் மாநில அதிமுக அரசும், இதில் மேம்போக்காக இருந்திருக்கிறது என்பதுதான் நிதர்சனமான உண்மை.

கடந்த பிப்ரவரி மாதம் 16-ந்தேதியே, காவிரிநதிநீர் பங்கீடு குறித்து உச்சநீதிமன்றம், தெளிவான தீர்ப்பை வழங்கியது. நாம் கேட்ட நீரின் அளவை விட குறைத்து விட்டது என்பது நம் எல்லோருக்கும் ஏமாற்றம் என்றாலும் கூட, காவேரி மேலாண்மை வாரியம் அமைக்கப்படவேண்டும் என்றும், 15 ஆண்டுகளுக்கு, இது குறித்து எவ்வித மேல் முறையீடும் கூடாது என்றும் ஆறு வாரங்கள் அதற்கான காலஅவகாசம் கூட நிர்ணயித்து, தீர்ப்பு வழங்கியது. ஆனால், ஆறு வாரங்கள் கடந்த நிலையில், கடைசி நாளன்று, மத்திய அரசு, ஸ்கீம் என்பதற்கு பொருள் விளங்கவில்லையென்று கூறி மறுபடியும் தங்களுடைய வரைவு திட்ட அறிக்கையை தாக்கல் செய்வதற்கு நான்கு வார கால அவகாசம் வேண்டுமென்று கூறியது. 

மேலும் படிக்க கீழே உள்ள சுட்டியை சுட்டவும்.

Monday 21 May 2018

தொகுப்பு கவிதை (மீசை பாரதி நடந்தான், உடுக்கல்)


மீசை பாரதி நடந்தான்

siragu meesai bharadhi1

அவன்
அந்தத் தெருவில் நடந்து சென்றான்
‘ஏய்” என்று ஒரு குரல்
மீண்டும் வலுவான குரல்கள் ‘ஏய்”

அவன் காலடித்தடத்தின் சூடு நிலைகொள்ள
மிக உறுதியாக நின்றான்.
‘யாரடா” என்று திருப்பிக் கேட்டான்
வேசி மொழிகள் பல


மேலும் படிக்க கீழே உள்ள சுட்டியை சுட்டவும்.

Friday 18 May 2018

செம்மொழி இலக்கியங்களில் பரத்தை அழைப்பு முறைகள்


Siragu sanga ilakkiya thirumanam3
செம்மொழி இலக்கியங்கள் பன்னூறு ஆண்டுகாலத்திற்கு முன்னால் தமிழர்தம் பண்பாடுச் செறிவு மிக்க வாழ்வினைப் படம் பிடித்துக்காட்டும் வரலாற்று ஆவணங்களாக விளங்குகின்றன. தலைவன்,தலைவி ஆகிய இருவருக்குமான இல்லறப் பாங்கினையும்,தலைவனின் வீரப்பாங்கினையும் எடுத்துரைக்கும் செம்மொழி இலக்கியங்கள்,பண்பாட்டு விலகல்களையும் சுட்டிக்காட்டாமலில்லை. குறிப்பாகத் தலைவனின் ஒழுக்கம் தலைவியைத் தாண்டி மற்றொரு பெண்ணை நோக்கிச் செல்லும் நிலையில் அதாவது கற்பு கடந்து செல்லும் நிலையில் ஏற்படும் பண்பாட்டு விலகல்களையும் செம்மொழி இலக்கியங்கள் நேர்மையுடன் பதிவு செய்துள்ளன. அதே நேரத்தில்,பரத்தை என்ற அழகு,அன்பு,ஏக்கம்  கொண்ட பெண்ணின் அவல மிகு வாழ்வினையும் அவை எடுத்துக்காட்டுகின்றன.
சங்க காலத் தலைவன் என்பவன் வண்டு போன்ற இயல்பினன். பல மலர்கள் தாவும் நிலையை அவன் வண்டுகளிடம் இருந்துப் பெற்றானா அல்லது வண்டு அவனிடம் இருந்துப் பெற்றதா என்பது புரியாமல் ஒரு பரத்தை தன்னை வெறுக்கும் தலைவியைச் சாடுகிறாள்.
    ~~மகிழ்நன் மாண்குணம் வண்டு கொண்டனகொல்?
 வண்டின் மாண்குணம் மகிழ்நன் கொண்டான்கொல்?
 அன்னது ஆகலும் அறியாள்,
     எம்மொடு புலக்கும்,அவன் புதல்வன் தாயே”
(ஓரம்போகியார்,ஐங்குநூறு பாடல் எண். 90)

பூக்களாய்ப் பெண்களும் வண்டினமாய் ஆண்களும் சங்க காலத்தில் வாழ்ந்திருந்தனர் என்பது இப்பாடலின் வழி பெறப்படும் கருத்தாகும்.

மேலும் படிக்க கீழே உள்ள சுட்டியை சுட்டவும்.

புறநானூற்றுப் பாடல்களின் திணையும் துறையும்


siragu puranaanooru1
சங்க இலக்கியங்களாக அறியப்படும் பாட்டும் தொகையும் ஆன பத்துப்பாட்டு மற்றும் எட்டுத்தொகை நூல்களுள், எட்டுத்தொகையுள் எட்டாவதாகிய இலக்கியம் புறநானூறு. இந்த நூலில் முடியுடைக் காவலரும் முத்தமிழ்ப் பாவலராக தமிழை வளர்த்த காலத்திலும்; கற்றறிந்த புலவரும் புவியாண்ட புரவலரும் தமிழைப் போற்றிய காலத்தில் நிகழ்ந்தவையாக 400 பாடல்கள் தொகுக்கப்பட்டுள்ளன. இவற்றுள் ஆண்பாற் புலவர்களும், அரசர்களும் யாத்த பாடல்கள் மட்டுமன்றி, அரசமகளிரான பெருங்கோப்பெண்டும், பாரியின் மகளிரும் பாடிய  பாடல்களுண்டு. அவ்வாறே, குறமகள் பாடியதாகவும் பாடலுண்டு.  குயவர்மகள் பாடியதாகவும் பாடலுண்டு. பாடல்கள் யாவும் சங்ககாலத் தலைவர்களின் படைத்திறத்தையும் கொடைத்திறத்தையும் நமக்கு இன்று அறியத் தருகின்றன. எடுத்துக்காட்டாகக் கீழ்க்காணும் இரு சிறு பாடல்களைக் காணலாம்.
கொடைத்திறமும் …
“பாரி பாரி யென்றுபல வேத்தி
ஒருவற் புகழ்வர் செந்நாப் புலவர்
பாரி யொருவனு மல்லன்
மாரியு முண்டீண் டுலகுபுரப் பதுவே.” (புறநானூறு: 107)
Siragu Purananuru1
(பொருள்: “பாரி, பாரி” என்று பாரி ஒருவனே கொடையிற் சிறந்தவனாகவும்  உலகைக் காப்பவனாகவும் புலவர் பலரும் புகழ்ந்து பாடுகிறார்கள். பாரி மட்டுமல்ல மழையும் தன் கொடையால் உலகைக் காக்கிறது.)
படைத்திறமும்…
“நெல்லும் உயிர்அன்றே; நீரும் உயிர்அன்றே;
மன்னன் உயிர்த்தே மலர்தலை உலகம்;
அதனால், யான்உயிர் என்ப தறிகை

வேன்மிகு தானை வேந்தற்குக் கடனே.” (புறநானூறு: 186)

மேலும் படிக்க கீழே உள்ள சுட்டியை சுட்டவும்.

Thursday 17 May 2018

“ஆசிபா” (கவிதை)


siragu baby1


குருதிக் குழம்பில்
உயிர் உறைந்து போன
கருவறை ஓவியம்
பால் மனம் மாறா
சிறு முத்து,
மதம் எனின்
என்னென்றே அறியாத
வெண்மனச் சிறுமி ;
மதம் பிடித்த வேழம்
காடுகளைக் கடந்து
ஊருக்குள் ஓடிவர
கண்டதுண்டு
ஊருக்குள் ஒளிந்திருக்கும்
மதம் கொண்ட மனங்கள்

முனிகளும் ரிஷிகளும்
கடவுளர் அவதாரங்களும்
பெண்களை காமப்
பிண்டங்களாய் கருதியே
சிதைத்த கதைகளை
படிப்போன் நெஞ்சு
குறள் நெறியிலா
நடைபோடும்?
கோயில் இருக்கின்ற ஊரில்
குடியிருக்க கூடாதென
சட்டம் வரின்

குற்றங்கள் குறையலாமோ!?

மேலும் படிக்க கீழே உள்ள சுட்டியை சுட்டவும்.
http://siragu.com/%E0%AE%86%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%BE-%E0%AE%95%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%88/

வ.உ.சி.யும் சமூக நீதியும்


siragu voc1
கப்பலோட்டிய தமிழன், செக்கிழுத்த செம்மல் என்று வ.உ.சிதம்பரனாரைப் பற்றிக் கல்விக் கூடங்களில் நமக்குப் பாடம் சொல்லித் தந்து இருக்கிறார்கள். அவர் ஒரு தொழிற்சங்கவாதி என்று பள்ளிகளில் சொல்லித் தருவது இல்லை. ஆனால் பொதுவுடைமை இயக்கங்களின் பரப்புரைகள் மூலம் அச்செய்தி ஓரளவிற்குத் தெரிகிறது. ஆனால் அவர் சமூக நீதிக்காக விட்டுக் கொடுக்காத போராட்டத்தை முன்னெடுத்தவர் என்ற செய்தி அடர்ந்த இருளுக்குள் திட்டமிட்டே மறைத்து வைக்கப்பட்டு உள்ளது.

இந்திய வரலாற்றில் ஆங்கிலேயர்களுக்கு எதிராகப் போராட்டம் நடந்து கொண்டு இருக்கையில் மகாத்மா ஃபுலே, தந்தை பெரியார், அண்ணல் அம்பேத்கர் மற்றும் பிற தலைவர்களின் தலைமையில் சமூக நீதிப் போராட்டங்களும் நடந்து கொண்டு தான் இருந்தன. அப்படிப்பட்ட போராட்டங்களில் ஒன்று தான் சேலம் நகரில் 5.11.1927 அன்று வ.உ.சி. தலைமையில் நடந்த ஒரு மாநாடு. இம்மாநாட்டில் தலைமை உரையை ஆற்றுகையில் நாட்டு மக்களிடையே பிளவுகளும் பகைமைகளும் இருப்பதற்குக் காரணமே கல்வியிலும் வேலை வாய்ப்பிலும் வகுப்புவாரிப் பிரதிநிதித்துவம் இல்லாமையே (அதாவது பார்ப்பனர்கள் மேல் நிலை வேலைகளில் கொடூரமான அளவில் நிரம்பி வழிவது தான்) என்று பின் வரும் சொற்களில் வ.உ.சி. தெளிவாக விளக்குகிறார்.

மேலும் படிக்க கீழே உள்ள சுட்டியை சுட்டவும்.

Tuesday 8 May 2018

பெண்களுக்கும், பெண்குழந்தைகளுக்கும் பாதுகாப்பில்லா ஆட்சி, தற்போதைய பா.ச.க ஆட்சி.!


siragu baby3
கடந்த காலங்களில், நாம் சொல்லிக்கொண்டிருந்தது என்னவென்றால், பெண்களுக்கு பாதுகாப்பில்லை, பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் என்பதைத்தான் வலியுறுத்திக்கொண்டும் இருந்தோம். ஆனால், தற்போதைய நிலைமை மிகவும் மோசமாக அல்லவா சென்று கொண்டிருக்கிறது. பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்யவேண்டும் என்பது போக, இந்த பா.ச.க ஆட்சி, பெண்குழந்தைகளை பாதுகாப்பது என்பதை கேள்விக்குறியாக்கி வைத்திருக்கிறது என்பதுதானே நிதர்சனமான உண்மை.

கடந்த மாதத்தில், உத்திர பிரதேச மாநிலத்தில், ஒரு 16 வயது சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு ஆளாகி இருக்கிறாள், அதற்கு காரணமானவர், அந்த மாநில அமைச்சரவையில் அமர்ந்திருக்கும் ஒரு எம்.எல்.ஏ என்பது நம் எல்லோருக்கும் அதிர்ச்சியை உண்டாக்கியது. அதிலும், தங்களுக்கு நியாயம் வேண்டி போராடிய அந்த குடும்பத்தைத் தாக்கி, அந்தப் பெண்ணின் தந்தையை விசாரணை என்ற பெயரில் கொன்றிருக்கிறார்கள் என்ற செய்தி நம்மை அதிக வேதனைக்கு உள்ளாகியது. அதில் இருந்து மீண்டு வருவதற்குள், காசுமீரில், ஆசிபா என்ற 8 வயது இசுலாமிய ஆடு, மாடு மேய்த்து பிழைக்கும் நாடோடி சமூகத்தைச் சேர்ந்த ஒரு சிறுமி, கோவிலுக்குள் அடைத்து வைத்து, 8 நாட்கள் வன்புணர்வு செய்து கொல்லப்பட்டிருக்கிறாள் என்ற செய்தியை நம் எல்லோரையும் உலுக்கி எடுத்துவிட்டது. அது மட்டுமல்ல, இந்த வெறி செயலுக்கு பின்னாலும், பா.ச.க பிரமுகர்கள் இருக்கின்றனர். அங்கு குடியிருக்கும் இசுலாமிய குடும்பங்களை வெளியிருவதற்காக, செய்யப்பட்டசெயல் என்று சொல்லப்படுகிறது. மயக்க மருந்து கொடுக்கப்பட்டு, உணவின்றி, நீரின்றி, 8 நாட்கள் 8 பேர்களால், (தேட வந்த காவல்துறையைச் சேர்ந்த நபர் உட்பட) பாலியல் வன்புணர்வு செய்யப்பட்டு, காலை வளைத்து, உடைத்து, விலா எலும்பை உடைத்து, தலையில் கல்லால் அடித்து கொன்றிருக்கிறார்கள்.

மேலும் படிக்க கீழே உள்ள சுட்டியை சுட்டவும்.

Friday 4 May 2018

தொகுப்பு கவிதை (நாடோடியின் ஏக்கம், ஐக்கூவும் தமிழ்வார்ப்பே)



நாடோடியின் ஏக்கம்

                                    -இல.பிரகாசம்
siragu naadodi1
நெஞ்சமோ ஏக்கம் கொள்ளுதடி –என்
கண்ணிலோ துன்பம் கசியுதடி!

உழைச்சு வாழுங் குடிநாம் இருப்பதற்கோ
ஒருவீடு இல்லை யடியே!
ஊரோடு வாழக் குடிசையு மின்றி
தெருவே வீடென வாழவோ

ஏழை என்ற பெயரொடு நாம்வாழ
தனிதே சமொன்று உண்டோ?
கூழ்குடிப் பதற்கும் பஞ்சம் பொழப்பு

கூடிபெற்ற பிள்ளையும் பாவமோ?

மேலும் படிக்க கீழே உள்ள சுட்டியை சுட்டவும்.

Thursday 3 May 2018

சிறுகதை மன்னன் எஸ். எஸ். தென்னரசு


siragu-thennarasu3
இருபதாம் நூற்றாண்டின் இலக்கியப் பங்களிப்பிற்குத் திராவிட இயக்கம் சார்ந்த இலக்கிய வாணர்கள் குறிக்கத்தக்க பணிகளை ஆற்றியுள்ளனர். தந்தைப் பெரியார், அறிஞர் அண்ணா போன்றவர்களை முன்னவர்களாகக் கொண்டு தமிழ் இனத்தின் முன்னேற்றத்திற்கான ஆக்கப்பணிகளை இதழ்கள் வாயிலாகவும், படைப்புகள் வாயிலாகவும், ஆய்வுகள் வாயிலாகவும் திராவிட இலக்கிய வாணர்கள் திறம்பட செய்தனர். இவர்களுக்கு குறிப்பிடத்தக்க படைப்பாளர் சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூரைச் சார்ந்த எஸ். எஸ். தென்னரசு ஆவார். இவரின் வாழ்வினை எடுத்துரைத்து இவர் படைத்த சேதுநாட்டுச் செல்லக்கிளி என்ற நாவலை ஆராய்வதாக இக்கட்டுரை அமைகிறது.

எஸ். எஸ். தென்னரசு பிறந்த ஊர் சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் ஆகும். இவர் திராவிட முன்னேற்ற கழகத்தின் தொண்டராக விளங்கியவர். அறிஞர் அண்ணாவின் அரவணைப்பினைப் பெற்றவர். கலைஞர் மு. கருணாநிதியுடன் இவர் இலக்கியத் தோழமை பெற்றிருந்தார். சிறுகதை மன்னன் என்று போற்றப்பெறும் அளவிற்கு சிறுகதைப் படைப்புகளை அளித்தவர்.

மேலும் படிக்க கீழே உள்ள சுட்டியை சுட்டவும்.

Wednesday 2 May 2018

சி.என். அண்ணாதுரை விளக்கும் “ஆரியமாயை”


oct25முன்னுரை:
சி.என். அண்ணாதுரை எழுதிய நூல்களுள் மிகவும் சர்ச்சைக்குரிய நூலாகவும், தடைசெய்யப்பட்ட நூலாகவும், அதையும்விட அவருக்கு ஆறு  மாதங்கள் சிறைதண்டனையும்,  700 ரூபாய் அபராதத்தையும் சென்னை மாநில அரசு விதிப்பதற்குக் காரணமாக இருந்த நூல் “ஆரியமாயை”.  சுமார் அறுபது பக்கங்களைக் கொண்ட மிகச் சிறிய நூல் இது. இந்நூலில் ஆரியர்களாகிய பிராமணர்களை அண்ணாதுரை மிகக் கடுமையாகச் சாடுவதாகவும், ஆரிய இனச்சேர்க்கை, திரைமறைவுகளை உருவகப்படுத்தும் விதமாக எழுதப்பட்டிருப்பதாகவும் விமர்சனம் வைக்கப்பட்டதாக அறிய முடிகிறது. நூல் முழுவதும் அவர் அக்கால (1940 களில்) எதிரணியில் இருந்த ஆரியச் சார்பு கொண்டிருந்த அரசியல்வாதிகள் பலரைக் குறிப்பிட்டு அவர்களுக்கு மறுமொழி அளிக்கும் விதத்திலும், தமிழர்களை நோக்கி எழுதியிருப்பதையும் காணலாம். அவ்வாறே, நூலின் சில பகுதிகளில் மாணவர்களை நோக்கியும், சில பகுதிகளில் தமிழறிஞர்களை நோக்கியும் எழுதியிருப்பதையும் காணமுடிகிறது.

மக்களிடையே கிளர்ச்சி செய்கின்ற நூல் என்ற காரணத்திற்காக வழக்கு தொடரப்பட்டு அவர் பலமுறை நீதிமன்றத்திற்கு இழுத்தடிக்கப்பட்டதை, “ஆரிய மாயை வழக்குக்காகப் பலமுறை முக்கியமான அலுவல்களையெல்லாம் விட்டு விட்டு திருச்சிக்குச் சென்று வருகிறேன். அடிக்கடி வாயிதா போடுகிறார்கள். கம்பராமாயண சீலர் கலாரசிகர் தோழர் பாஸ்கரத் தொண்டைமானைத் தான் இந்த வழக்கை விசாரிப்பதற்காக ஏற்படுத்தியிருக்கிறார்கள். ஆரியமாயைக்கு அவர் தடை விதித்து என்னைச் சிறையில் தள்ளினால் மறுநாளே ஆயிரக்கணக்கான துண்டு பிரசுரங்கள் மூலம் ஆரிய மாயை அச்சாகி எங்கும் பறக்குமே! சர்க்கார் இப்போது ஆரியமாயை, இலட்சிய வரலாறு, இராவணகாவியம் போன்ற நல்ல நூல்களைப் படித்து வருவது பற்றி மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன்.  அண்ணாதுரை உள்ளதைத்தான் எழுதினான் என்று அவர்களுக்கு நன்று தெரிந்ததே. சர்க்கார் நூல்களின் மீது தடைவிதிப்பதை விட்டுவிட்டு முக்கியமாகச் செய்யவேண்டிய காரியங்களில் ஈடுபடுவது நல்லது” என்று அவர் வாயிலாகவே அவரது மேடைப்பேச்சு ஒன்றின் மூலம் அறியவும் முடிகிறது.

மேலும் படிக்க கீழே உள்ள சுட்டியை சுட்டவும்.

Tuesday 1 May 2018

அணிபெறும் திரையிசை


siragu thirai isai1
தமிழ் இலக்கணம் ஐவகைப்படும். எழுத்து, சொல், பொருள், யாப்பு, அணி என்பன அவையாகும். ஒரு படைப்பாளன் படைக்கும்போது பாடுபொருள் ஒன்றை முதலில் தேர்ந்து கொள்கிறான். அதன்பின் அதற்காக வடிவத்தைத் தேர்ந்து கொள்கிறான். வடிவத்தைத் தேர்ந்தபின் அவ்வடிவத்திற்கான சொற்களை இணைக்கிறான். இவையெல்லாம் மனதில் உருவாகி எண்ணத்தில் கிளை பரப்பி, எழுத்துவண்ணமாக வருகின்றன. ஆனால் படைப்பாளன் எண்ணாமலே வருவது அணி. அது படைப்பிற்று அணி செய்கிறது. அணி இலக்கணத்தைப் படைப்பாளன் படைக்கவேண்டும் என்று எண்ணிப் படைப்பதில்லை. தானாகவே அது இடம்பெற்று விடுகிறது. படைப்பாளன் திட்டமிடாமலே படைப்பிற்குள் அணியிலக்கணம் அமர்ந்து கொண்டு, அணிசெய்கிறது.

குறிப்பாகத் திரையிசைப் பாடல்களைப் புனையும்போது படைப்பாளன் பல நெருக்கடிகளுக்கு உள்ளாகிறான். காலம், அடி வரையறை, இசைக்கான இசைவு, பாடல் இடம் பெறுவதற்கான சூழல், அதனைப் பாடுவோர்க்கானப் பாத்திர இயல்பு இவற்றையெல்லாம் எண்ணத்தில் ஏற்றிக் கொண்டுப் படைப்பாளன் படைத்தாக வேண்டும். இந்நேரத்தில் அணியிலக்கணத்தைக் கொண்டு வந்துச் சேர்க்கவேண்டும் என்று கவிஞன் எண்ண இயலாது. தானாக வந்து அமர்ந்து கொள்கிறது அணியிலக்கணம். எனவே மற்ற இலக்கணங்களை விட நுட்பமானது அணியிலக்கணம்.

மேலும் படிக்க கீழே உள்ள சுட்டியை சுட்டவும்.