Thursday 17 May 2018

“ஆசிபா” (கவிதை)


siragu baby1


குருதிக் குழம்பில்
உயிர் உறைந்து போன
கருவறை ஓவியம்
பால் மனம் மாறா
சிறு முத்து,
மதம் எனின்
என்னென்றே அறியாத
வெண்மனச் சிறுமி ;
மதம் பிடித்த வேழம்
காடுகளைக் கடந்து
ஊருக்குள் ஓடிவர
கண்டதுண்டு
ஊருக்குள் ஒளிந்திருக்கும்
மதம் கொண்ட மனங்கள்

முனிகளும் ரிஷிகளும்
கடவுளர் அவதாரங்களும்
பெண்களை காமப்
பிண்டங்களாய் கருதியே
சிதைத்த கதைகளை
படிப்போன் நெஞ்சு
குறள் நெறியிலா
நடைபோடும்?
கோயில் இருக்கின்ற ஊரில்
குடியிருக்க கூடாதென
சட்டம் வரின்

குற்றங்கள் குறையலாமோ!?

மேலும் படிக்க கீழே உள்ள சுட்டியை சுட்டவும்.
http://siragu.com/%E0%AE%86%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%BE-%E0%AE%95%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%88/

No comments:

Post a Comment