Tuesday 26 June 2018

புரட்சிப் பதிகம் பாடிய நங்கை


இந்திய வரலாற்றில் காலந்தோறும் சாதீயத்தையும் தீண்டாமையையும் எதிர்த்துக் குரல் கொடுத்தோர் பலர். தமிழகத்தில் பற்பல குலப் பின்னணி கொண்டவரையும் சமமாகக் கருதி தம்முடன் இணைத்துக் கொள்ளும் நோக்கத்தை முன்வைத்தது  மட்டுமின்றி,  நாயன்மார்களில் ஒருவராகவும், ஆழ்வார்களில் ஒருவராகவும் ஒடுக்கப்பட்ட குலப்பிரிவினர்களையும் ஏற்றுக்கொள்ளும் நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்பட்டது. இருப்பினும் இவ்வாறு மேற்கொள்ளப்பட்ட மறைமுக சமத்துவ முறைகள் பலனளிக்காமல் போனதும் வரலாறு காட்டும் உண்மை.
siragu nangai2
இம்முயற்சிகள் பலனளிக்காமல், இக்காலகட்டத்தையும் கடந்து,  தீண்டாமையும் சாதிச் சழக்குகளும் மக்களின் வாழ்வில் தலைவிரித்தாடியக்  கொடுமையைக் கண்டித்து நேரடியாகவே பார்ப்பன எதிர்ப்பு கலகக் குரல்கள் எழத் துவங்கிய காலம் 15 ஆம் நூற்றாண்டு. இக்காலகட்டம் சாதி எதிர்ப்பு இலக்கியங்கள் வெளிப்படையான பார்ப்பன எதிர்ப்பு இலக்கியங்களாகவே  உருவெடுக்கத் தொடங்கிய ஒரு திருப்புமுனைக் காலமாக, சமூகச்சீர்திருத்தக் கருத்துகளை  முன்வைக்கும் ஒரு காலமாக தமிழிலக்கிய வரலாற்றில் அறியப்படுகிறது.
மாரிதான்சிலரை வரைந்துபெய்யுமோ
காற்றுஞ்சிலரை நீக்கிவீசுமோ
மானிலஞ்சுமக்க மாட்டேனென்னுமோ
கதிரோன்சிலரைக் காயேனென்னுமோ
நீணான்குசாதிக் குணவுநாட்டிலுங்
கீணான்குசாதிக் குணவுகாட்டிலுமோ
                    -  கபிலர் அகவல்
சந்தனம் அகிலும் வேம்பும் தனித் தனி வாசம் வீசும்
அந்தணர் தீயில் வீழ்ந்தால் அதன் மணம் வேறதாமோ ?
செந்தலைப் புலையன் வீழ்ந்தால் தீ மணம் வேறதாமோ ?

பந்தமும்  தீயும் வேறோ  பாய்ச்சலூர்க் கிராமத்தாரே.

மேலும் படிக்க கீழே உள்ள சுட்டியை சுட்டவும்.

Friday 22 June 2018

செயற்கரிய செய்! (கவிதை)


siragu iru paadhaigalum4
உண்டு உறங்கிப்
பரிசெனும் வாழ்வை
வீணாய்த் துறக்கும்
வீரத் திறலே!
கற்றோம் பெற்றோம்
ஒருவழிப் பாதையாய்
உழைப்பில் களித்தோம்-
உழைத்துக் களைத்தோம்-
பிண்டம் வளர்க்க
உழைத்தது போதும்-
அயர்ந்தது போதும்-
அதிர்ந்தது போதும்!
அண்டம் வளர்க்க வேண்டும்!
புவி கீர்த்தி பெருக்க வேண்டும்-
எதையோ யாரிடம்
தேடித் தேடி
எங்கெங்கோ அலைந்து

மேலும் படிக்க கீழே உள்ள சுட்டியை சுட்டவும்.

Thursday 21 June 2018

நினைக்கப்பட வேண்டிய நெ.து.சுந்தரவடிவேலு


sirgu ne.thu.su1
(நெய்யாடுபாக்கம் துரைசாமி சுந்தரவடிவேலு)

ஆட்சி அதிகாரக் கல்வி பார்ப்பனர்களுக்கு மட்டுமே அளிக்கப்பட்ட நிலையை எதிர்த்து, பார்ப்பனர் அல்லாதவர்கள் போராடியதன் விளைவாக ஒடுக்கப்பட்ட வகுப்பு மக்களுக்குக் கல்வியிலும், அரசு வேலை வேலைகளிலும் வாய்ப்பு கிடைக்கத் தொடங்கியது. அவ்வாறு வாய்ப்பு கிடைத்த உடனேயே ஒடுக்கப்பட்ட வகுப்பு மக்கள் பார்ப்பனர்களை விடத் திறமைசாலிகள் என்று மெய்ப்பிக்கப்பட்டு விட்டது. இதனால் கதிகலங்கிப் போன பார்ப்பனர்கள் நாம் ஆட்சி அதிகாரக் கல்வி பெறுவதை எப்படியும் தடுத்து விட வேண்டும் என்று துடியாய்த் துடித்துக் கொண்டு இருந்தார்கள். (இன்னும் அப்படியே தான் இருக்கிறார்கள்.)
இந்நிலையில் ஆங்கிலேயர்கள் இந்தியாவை “இந்தியர்களிடம்” (அதாவது பார்ப்பனர்களின் நேரடி ஆட்சியில்) விட்டு விட்டு வெளியேறினார்கள். ஆங்கிலேயர்கள் நாட்டை விட்டு வெளியேறிய உடனேயே, நாம் பெற்றுக் கொண்டு இருந்த கல்வி வழியை அடைக்கும் பணியை அவாள் தொடங்கி விட்டார்கள்.

தமிழ் நாட்டில் இராஜாஜி குலக்கல்வித் திட்டத்தைக் கொண்டு வந்தார். இதன் மூலம் அதிகார வேலை வாய்ப்புகளில் ஒடுக்கப்பட்ட வகுப்பு மக்கள் பார்ப்பனர்களுக்குப் போட்டியாக வருவதைக் கிள்ளி எறிய முயன்றார். ஆனால் பெரியாரின் கடுமையான போராட்டத்தின் முன் தாக்குப் பிடிக்க முடியாமல் ஓடி விட்டார். அதன் பின் பெருந்தலைவர் காமராசர் பொறுப்பேற்ற உடன் தமிழகத்தில் அனைத்துக் குழந்தைகளும் கல்வி பெறும் வண்ணம் கிராமப் புறங்களில் பள்ளிகளைத் திறக்கும் திட்டத்தை வரைந்து கொண்டு வருமாறு அதிகாரிகளைக் கேட்டுக் கொண்டார்.

மேலும் படிக்க கீழே உள்ள சுட்டியை சுட்டவும்.

Tuesday 19 June 2018

எத்துணை மகள்களை இழப்பது ?


Siragu-eththunai1
எத்துணை மகள்களை தமிழ்நாடு இழந்து விட்டது? எந்த மண்ணில் பெண்ணடிமையை எதிர்த்து ஒரு பெரும் போர் நிகழ்த்தி தந்தை பெரியார் வெற்றி பெற்றாரோ, அந்த மண்ணில் கனவுகளைச் சுமந்த பறவைகளை நாம் ஈவு இரக்கமின்றி கொன்று போட்டிருக்கின்றோம். ஒவ்வொரு பறவையும் குறிபார்த்து அம்பெய்து கொல்லப்பட்ட பறவைகளே. வறுமையில் உழன்றாலும், அந்த வறுமையை ஒழித்து விடலாம் என்று கண் துஞ்சாது படித்து, கனவுகளை நெஞ்சிற்குள் அதன் நெருப்பின் தகிக்கும் தன்மை மாறாது காத்து வைத்து, உணவின்றி இளைத்தாலும், உணர்வுகளை இளைக்கவிடாது, உறுதியோடு படித்து வெற்றி பெற்ற அனிதாவை, தூக்கு கயிற்றுக்கு தூக்கிக் கொடுத்தோம். குடும்ப சூழ்நிலை ஒருபோதும் ஒரு குழந்தையை முன்னேற தடுத்திடக் கூடாது, பள்ளிக் கல்வி படித்து வந்து விட்டால் போதும், மதிப்பெண் அடிப்படையில் எப்படியேனும் மருத்துவமோ, பொறியியலோ படித்து கனவினை மெய்ப்பித்து, வாழ்க்கைத் தரத்தை உயர்த்திக் கொள்ளலாம் என்று இருந்த கட்டமைப்பை, ஒரு நூற்றாண்டாய் தலைவர்கள் அரும்பாடுபட்டு உருவாக்கிய உரிமைத் தளங்களை எல்லாம் ஓர் நொடியில் இழந்து நிற்கின்றது தமிழ்நாடு. 

இவனும் சரியில்ல அவனும் சரியில்ல என்ற புரியாத எலைட் குரல்கள் நடுத்தர மக்களை, அடித்தட்டு மக்களை குழப்பி, இருந்த ஓட்டைக் கோட்டையையும் இடித்துத் தள்ளி அரசியல் அனாதைகளை நிற்கின்றோம். ஈழத்தில் தலைவர் பிரபாகரன் அவர்கள் தேர்தலுக்கு ஓட்டுப் போட வேண்டாம் என்று எடுத்த முடிவே ராஜபக்க்ஷே எனும் இன அழிப்பாளனை அதிபராக்கியது. இந்த புரிந்துணர்வு இல்லாமல் தமிழ்நாட்டையும் இந்திய பார்ப்பனிய பனியா அரசு உள்நுழைந்து அழித்திட நாமே வழிவகை செய்தாகி விட்டது. மருத்துவ கட்டமைப்பில் நீட் கொண்டு வந்து பொது சுகாதார கட்டமைப்பை அவர்கள் சிதைத்ததை உணர இன்னும் சில நாட்களே இருக்கின்றன. அனிதாவை தொடர்ந்து மீண்டும் இந்த ஆண்டும் நீட்டின் தோல்வி தாங்க முடியாமல் பிரதிபா எனும் மாணவியை இழந்தோம். இவர்கள் அனைவருமே மருத்துவர் ஆகக் கூடிய வாய்ப்பு தமிழ் நாட்டில் ஏற்படுத்தி வைத்திருந்தது சமூக நீதி அரசியல் களங்கள். இந்த இழப்புகளுக்கு நம்மை ஆற்றுப்படுத்த இயலாமல் விழி மூடி வலிகளை கடக்கின்றோம்.

மேலும் படிக்க கீழே உள்ள சுட்டியை சுட்டவும்.

Friday 15 June 2018

புதுமை (கவிதை)


siragu pudhumai1

மேடுபள்ளங்களில் ஓடியும்
ஆறுகுளங்களில் விளையாடியும்
அயல்பக்க நட்போடும் இருந்த
குழந்தைகளை
வீடியோகேமிலும்
கணிணிவிளையாட்டிலும்
அடைத்துவைத்தது
நேரமற்றபுதுமை!

பல்லாங்குழி ஆடி பந்தங்களையும்
தாயம் ஆடி தங்கமானஉறவுகளையும்
பலப்படுத்திபொழுதுபோக்கிய

குமரிகளை வாட்ஸ்அப்பிலும்

மேலும் படிக்க கீழே உள்ள சுட்டியை சுட்டவும்.

Thursday 14 June 2018

காதுகள்- நூலும் வாசிப்பும்


siragu kaadhugal1
(எம்.வி.வெங்கட்ராமனின் சாகித்திய அகாதமி விருது பெற்ற நூலைப் பற்றிய மறுவாசிப்பு.)
இயல்பான சம்பவங்கள்:
அது என் கல்லூரியின் மூன்றாமாண்டின் தொடக்க காலம். கல்லூரி முடிந்து பேருந்தைப் பிடிக்கச் செல்லும் போது சாலையின் சற்றுத் தொலைவில் கூட்டம் தென்பட்டது.
அதன் நடுவே ஒரு இருபத்தைந்து வயது மதிக்கத்தக்க ஒரு இளைஞன் நின்று கொண்டிருந்தான்.
எதற்காக அந்தக் கூட்டம், யார் அந்த நபர், அவருக்கு என்ன ஆயிற்று? என்று

எங்களுக்கு ஒன்றும் புரியவில்லை. இதற்கிடையே ஒருசில நிமிடம் திடீரென்று ஓடிச் சென்று சாலையை நெருக்கடிக்கு ஆக்கிய பேருந்தை நெறிப்படுத்த நம்மூர் டிராபிக் போலீசைப் போல தானும் சைகைகளைக் காட்டி அப்பேருந்தையும் சில வாகனங்களையும் சாலையையும் நெறிப்படுத்தினார். கூடத்தில் நின்றிருந்த சிலர் ‘இவன் ஏதோ பைத்தியம் போலிருக்கு” என்று தங்களுக்குள் பேசிக் கொண்டனர். இடையே தன்னையும் தன்னுணர்வற்ற நிலையிலும் இடையிடையே

மேலும் படிக்க கீழே உள்ள சுட்டியை சுட்டவும்.

Wednesday 13 June 2018

ஜி.யு. போப்பைக் கவர்ந்த புலவர் கபிலரும் புறநானூறும்


siragu puranaanooru1
டாக்டர் ஜி.யு. போப் (1820-1908) ஆராய்ந்து குறிப்புக்கள் எழுதிய புறநானூறு மூலமும் உரையும் நூல், பேராசிரியர் திருமணம் செல்வக் கேசவராயர் முதலியாரால் பயன்படுத்தப்பட்டது. இந்த நூலைச் செல்வக் கேசவராயரின் பேரன் தி. நம்பிராசன் மறைமலையடிகள் நூல்நிலையத்திற்கு அன்பளிப்பாக வழங்கியுள்ளார். இந்த நூலைத் தமிழ் இணையக் கல்விக்கழகம் (Tamil Virtual Academy) ஒளிவருடிய படக்கோப்பு வடிவில் (scanned PDF document) இணையத்தில் வழங்கியுள்ளது:  (http://www.tamilvu.org/library/nationalized/scholars/pdf/others/tcl/dr_gu_pope_purananuru.pdf).  இந்த புறநானூறு மூலமும் உரையும்  நூல், உ.வே.சா. அவர்களால் வே. நா. ஜூபிலி அச்சுக்கூடத்தின் வழியாக 1894 ஆம் ஆண்டு வெளியிடப்பட முதற்பதிப்பு  ஆகும் (இதன் விலை  4 ரூபாய்).

இந்த நூலில் ஜி.யு. போப் குறிப்புக்கள் எழுதியுள்ள விதம்,  அவரது ஆழ்ந்து படிக்கும் முறைக்கும் தமிழார்வத்திற்கும் சான்றாக உள்ளது. நூல் முழுவதும் ஒரு பக்கம் விடாது அவரது குறிப்புக்கள் நிரம்பியுள்ளன. இது மிகைப்படுத்துதல் அல்ல, மெய்யாகவே அவர் ஒரே ஒரு பக்கத்தையும் கூட  குறிப்பின்றி விட்டுவைத்தாரில்லை!!! புறநானூற்றுப் பாடல்களுக்கு அவர் குறிப்பெடுத்துக் கொண்ட முறை குறித்து கண்டவை இங்கே கொடுக்கப்படுகிறது.

மேலும் படிக்க கீழே உள்ள சுட்டியை சுட்டவும்.

Tuesday 12 June 2018

தமிழ் கலைச் சொற்களை மீட்டெடுத்தல் வேண்டும்! (கவிதை)


tamil-mozhi-fi
(பல்லாண்டாய் தமிழ்ச் சமூகத்தில் வழங்கப்பட்டு வந்த சொற்கள் பிறமொழிக்கலப்பால் வழக்கிலிருந்து மறைந்து போயுள்ளன என்பது வருந்துதற்குரிய வேண்டியது. எனவே காரணங் கருதியும் பிற சூழ்நிலைகளாலும் வழக்கிலிருக்கும் அரிய தமிழ்ச் சொற்களைமீண்டும் பயண்பாட்டிற்கு கொண்டுவருதல் தேவையெனஉணரவேண்டிய தரும் இக்காலகட்டம். இத்தகைய ஆராய்ச்சியில் ஈடுபடுதலும் தேவை.)

திகழ்பரத நாடு தமிழர்தம் நாடென
தெள்ளமு தாய்த்தமிழ் புகழ்பாடக் கேட்டு
தினந்தோறும் வருகின்ற நாளெல்லாம் திருநாள்
என்றே அகத்தே உவந்து மகிழ்ந்தார்!
இற்றைத் தலைமுறை இளைஞர் எல்லாம்
இங்கிலீசும் தமிழும் கலந்து பேசுங்கால்
தங்கிலீசு என்னும் மொழியாம் புதுமை
புனைவு எனப்பேசி திரிவதிலோர் நன்மையோ?

பிறமொழி கற்பினும் தம்மொழியிற் பேசுவது

போல்தம் உறவுஉணர் வினைகாட்ட இயலுமோ?

மேலும் படிக்க கீழே உள்ள சுட்டியை சுட்டவும்.

Friday 8 June 2018

சேய்த்தொண்டர் புராணம் உணர்த்தும் நக்கீரர் வரலாறு


siragu nakkeerar1

நக்கீரர் கடைச் சங்க புலவர் ஆவார். இவர் இறையனார் பாடலில் குற்றம் கண்டுபிடித்தவர். இவர் திருமுருகாற்றுப்படை, கைலை பாதி காளாத்தி பாதி காளத்தி அந்தாதி, இறையனார் அகப்பொருள் உரை, திருவீங்கோய் மலை எழுபது, திருவலஞ்சுழி மும்மணிக்கோவை, திருவெழுகூற்றிருக்கை, பெருந்தேவபாணி, கோபப்பிரசாதம், காரெட்டு, போற்றிக்கலிவெண்பா, திருக்கண்ணப்பத் தேவர் திருமறம் போன்றவற்றை இயற்றியவர். மேலும் இவர் பாடியனவாக நற்றிணையில் ஏழு பாடல்களும், குறுந்தொகையில் எட்டுப் பாடல்களும், அகநானூற்றில் பதினேழு பாடல்களும், திருவள்ளுவமாலையில் ஒன்றும் அமைந்துள்ளன. இவரைப் பற்றி சேய்த்தொண்டர் புராணத்தில் ஒரு புராணம் பாடப்பெற்றுள்ளது. இப்புராணம் இவரின் வரலாற்றையும் இவரின் படைப்புகளையும் இணைத்துப் பாடப்பெற்றுள்ளது. அப்புராணம் தரும் செய்திகளை ஆய்வு நோக்கில் தருவதாக இக்கட்டுரை அமைகிறது.

சேய்த்தொண்டார் புராணம் என்பது முருகத் தொண்டர்களின் வரலாறுகளைத் தொகுத்துப் பாடும் புராணம் ஆகும். முருகவேள் பன்னிரு திருமுறை என்ற தொகுப்பினடிப்படையில் பன்னிரண்டாவது திருமுறையாக இது அமைகிறது, இதனை இயற்றியவர் தேனூர் வரகவி சொக்கலிங்கனார் ஆவார். இப்புராணத்தில் அறுபத்தாறு தனியடியார்களின் வரலாறும், பன்னிரு தொகை அடியார்களின் வரலாறும் இணைத்துப் பாடப்பெற்றுள்ளன. இது நிலம் என்ற சொல்லில் ஆரம்பித்து நிலம் என்ற சொல்லில் முடிக்கப்பெற்றுள்ளது. இதனுள் நக்கீரர் வரலாறு ஆறாவது புராணமாகக் காட்டப்பெற்றுள்ளது.

மேலும் படிக்க கீழே உள்ள சுட்டியை சுட்டவும்.

இப்பல்லாம்….??


siragu ippellaam3

இப்ப எல்லாம் யாருங்க சாதி பாக்குறா? இந்த ஒற்றை வரியை நாம் கேட்காமல் இருந்ததில்லை. தங்களை சாதிக்கு அப்பாற்பட்டவர்கள் எனப் பறைச்சாற்றி கொள்வோரும் தங்கள் சாதியைப் பற்றி குறை கூறிவிட்டால் தங்கள் சாதிப் பிணைப்பை, பாசத்தை விட்டுவிட முடியாது சாதியின் பெயரில் நடக்கும் கொடுமைகளை, ஆதிக்கத்தை தட்டிக் கேட்போரை விசமிகள் என்றும் வெறுப்புரை பரப்புவோர் என்றும் வசை பாடுவதை பார்க்கின்றோம். சாதிகள் இல்லையடி பாப்பா என்று பாரதியின் பாடலைப் பாடுவோர், தங்கள் முதுகில் சாதியை வெளிப்படுத்தும் குறியீட்டை சுமந்து கொண்டே அதை பாடுகின்றனர். ஏணியின் முதல் படியில் இருக்கின்றவனின் திமிர் தான் இப்படி என்றுப் பார்த்தால், பிற்படுத்தப்பட்ட சமூகங்களில் உள்ள மக்கள், முதல் அல்லது இரண்டாவது தலைமுறையாக படிப்பின் நீரோடை தடையின்றி கிடைக்கப்பெற்றவர்களும் தங்களின் சமூக இழிவின் காரணமான கூட்டத்தையும், வேத உபநிடந்தங்களையும் விட்டுவிட்டு, தங்களின் சாதிய அதிகாரத்தை நிலை நாட்டிக்கொள்ளத் தனக்கு கீழ் இருப்பதாக நினைத்துக் கொண்டிருக்கும் மக்களிடம் வன்மமாக, மனிதம் மறந்து நவீன பார்ப்பனியத்தை கடைப்பிடிக்கும் போக்கு கண்டிக்கப்பட வேண்டிய செயல். அந்த வகையில் மீண்டும் சாதியம் தன் கோர முகத்தை, கச்சநத்தத்தில் காட்டியுள்ளது.

மானாமதுரை வட்டம், திருப்பாச்சேத்தி அருகில் உள்ளது கச்சநத்தம். கச்சநத்தம் கிராமத்தில் தேவேந்திரகுல பிரிவைச் சேர்ந்த ஐம்பது குடும்பங்களும், ஆதிக்க சாதிப் பிரிவினர் ஐந்து குடும்பங்களாகவும் வசிக்கிறார்கள். இதில் சுமன் குடும்பம் கஞ்சா வியாபாரம் செய்துவருகிறார். இதை எதிர்த்து அங்கு வாழும் தலித் மக்கள் காவல்துறைக்கு புகார் கொடுத்தும், காவல்துறையினர் இதில் உறுதியான நடவடிக்கை எடுக்கமால் ஆதிக்க சக்திக்கு ஆதரவாக இருந்துள்ளனர்.

மேலும் படிக்க கீழே உள்ள சுட்டியை சுட்டவும்.

Thursday 7 June 2018

புத்தரும் நதி நீர்ப் பிரச்சினையும்


siragu puththar1

புத்தரைப் பற்றி நமக்குக் கிடைக்கும் செய்திகளில் பெரும்பாலானவை உண்மைக்கு மாறானவையே. அவர் ஒரு பரம நாத்திகர். ஆனால் அவர் திருமாலின் ஒன்பதாவது அவதாரம் என்று கதை கட்டிக் கொண்டு இருப்பவர்கள் பலர் இருக்கிறார்கள். அவர் ஒரு முரணற்ற லோகாயதவாதி அதாவது பொருள் முதல்வாதி. ஆனால் அவர் பெயரில் கணக்கற்ற ஆன்மீகக் கதைகள் உலவிக் கொண்டு இருக்கின்றன.

புத்தர் துறவியாவார் என்று சோதிடர்கள் சொன்னதால், அவ்வாறு ஆகி விடாமல் தடுக்க அவரை வெளி உலகமே தெரியாமல் வளர்த்ததாக நமக்குப் பாடம் சொல்லிக் கொடுத்து இருக்கிறார்கள். அவர் எதேச்சையாக ஒரு நாள் ஒரு பிச்சைக்காரனைப் பார்த்ததாகவும், இன்னொரு நாள் நோயாளி ஒருவரைப் பார்த்ததாகவும், இன்னொரு நாள் மரணம் எய்திய ஒரு மனிதனைப் பார்த்ததாகவும் அவற்றின் மூலம் இவ்வுலகின் “நிலையாமைத்” தத்துவத்தைப் புரிந்து கொண்டதாகவும் நமக்குப் பாடம் சொல்லிக் கொடுத்து இருக்கிறார்கள். உலகின் நிலையாமையைக் கண்டு “மனம் கலங்கிய” அவர் இதற்கு விடை தேடும் பொருட்டுத் துறவு பூண்டார் என்றும், அதன் பின் ஒரு நாள் போதி (அரச) மரத்தடியில் திடீரென ஞானம் உதித்ததாகவும், தர்க்கவாதத்திற்குச் சற்றும் பொருத்தம் இல்லாத கதையை வலுக்கட்டாயமாக மக்களின் மனங்களில் திணித்து வைத்து இருக்கிறார்கள்.

மேலும் படிக்க கீழே உள்ள சுட்டியை சுட்டவும்.

தமிழச்சியின் எஞ்சோட்டுப்பெண் தொகுப்பில் வெளிப்படும் போராட்டமிகு வாழ்க்கை


siragu enjottu pen1

கவிதைப் படைப்புகளில் பெண்களின் படைப்புகள் கவனமாக அணுகத்தக்கவை. சிக்கலும், சிடுக்கும், மறைபொருளும், உட்பொருளும், அடர்த்தியும், உண்மையும் நெருக்கிக் கிடக்கும் கவிதைகளாகத் தங்கள் கவிதைகளைப் பெண்கள் படைத்துக்கொள்கிறார்கள். பெண்கவிதைகளில் வெளிப்படும் அனுபவ உண்மைகள் பெண்பார்வையில் உலகை விமர்சிக்கின்றன.  இந்த விமர்சனங்கள் பெண் சார்ந்த உலகிற்குச் சார்பாகவும் ஆண் சார்ந்த உலகிற்கு எதிராகவும் கூட அமைந்திருக்கும். கவிதையின் நுண்பொருட்களை இதன்வழியாகப் பெண்கள் தொடமுடிகின்றது. எனவே கவிதையின் நுண்மையைவிட பெண் படைப்பின் நுண்மை என்பது தேர்ந்து அறிந்து கொள்ளத்தக்கதாகும்.

 தான் வாழ்ந்து மகிழ்ந்து கிராமத்து அனுபவங்களை நகரப்பெருவெளி நெருக்கத்தில் எண்ணிப் பார்த்து கவிதை செய்யும் கவிதைக்காரராக பெண்கவிஞர்களுள் உலா வருபவர் தமிழச்சி. அவரின் படைப்புகளில் ஒருங்கிணைந்த பழைய இராமநாதபுர மாவட்டத்தின் நினைவுகள் குமிழுகின்றன. அந்த மண்ணின் மனிதர்கள், பண்பாடுகள், உணவு, உடை, உறையுள் என அத்தனையையும் அவரின் கவிதைகள் பதிவுசெய்கின்றன.  கலர்பூந்தியும் கனகாம்பரமும்  அவரின் இளமைக் கால வாழ்வின் இனிய பொருளாக அமைந்திருக்கின்றன. இவ்வகையில்  அவரின் ‘எஞ்சோட்டுப்பெண் ’ குறிக்கத்தக்க கவிதைத்தொகுப்பாகும்.

மேலும் படிக்க கீழே உள்ள சுட்டியை சுட்டவும்.