Thursday 7 June 2018

தமிழச்சியின் எஞ்சோட்டுப்பெண் தொகுப்பில் வெளிப்படும் போராட்டமிகு வாழ்க்கை


siragu enjottu pen1

கவிதைப் படைப்புகளில் பெண்களின் படைப்புகள் கவனமாக அணுகத்தக்கவை. சிக்கலும், சிடுக்கும், மறைபொருளும், உட்பொருளும், அடர்த்தியும், உண்மையும் நெருக்கிக் கிடக்கும் கவிதைகளாகத் தங்கள் கவிதைகளைப் பெண்கள் படைத்துக்கொள்கிறார்கள். பெண்கவிதைகளில் வெளிப்படும் அனுபவ உண்மைகள் பெண்பார்வையில் உலகை விமர்சிக்கின்றன.  இந்த விமர்சனங்கள் பெண் சார்ந்த உலகிற்குச் சார்பாகவும் ஆண் சார்ந்த உலகிற்கு எதிராகவும் கூட அமைந்திருக்கும். கவிதையின் நுண்பொருட்களை இதன்வழியாகப் பெண்கள் தொடமுடிகின்றது. எனவே கவிதையின் நுண்மையைவிட பெண் படைப்பின் நுண்மை என்பது தேர்ந்து அறிந்து கொள்ளத்தக்கதாகும்.

 தான் வாழ்ந்து மகிழ்ந்து கிராமத்து அனுபவங்களை நகரப்பெருவெளி நெருக்கத்தில் எண்ணிப் பார்த்து கவிதை செய்யும் கவிதைக்காரராக பெண்கவிஞர்களுள் உலா வருபவர் தமிழச்சி. அவரின் படைப்புகளில் ஒருங்கிணைந்த பழைய இராமநாதபுர மாவட்டத்தின் நினைவுகள் குமிழுகின்றன. அந்த மண்ணின் மனிதர்கள், பண்பாடுகள், உணவு, உடை, உறையுள் என அத்தனையையும் அவரின் கவிதைகள் பதிவுசெய்கின்றன.  கலர்பூந்தியும் கனகாம்பரமும்  அவரின் இளமைக் கால வாழ்வின் இனிய பொருளாக அமைந்திருக்கின்றன. இவ்வகையில்  அவரின் ‘எஞ்சோட்டுப்பெண் ’ குறிக்கத்தக்க கவிதைத்தொகுப்பாகும்.

மேலும் படிக்க கீழே உள்ள சுட்டியை சுட்டவும்.

No comments:

Post a Comment