Friday 8 June 2018

இப்பல்லாம்….??


siragu ippellaam3

இப்ப எல்லாம் யாருங்க சாதி பாக்குறா? இந்த ஒற்றை வரியை நாம் கேட்காமல் இருந்ததில்லை. தங்களை சாதிக்கு அப்பாற்பட்டவர்கள் எனப் பறைச்சாற்றி கொள்வோரும் தங்கள் சாதியைப் பற்றி குறை கூறிவிட்டால் தங்கள் சாதிப் பிணைப்பை, பாசத்தை விட்டுவிட முடியாது சாதியின் பெயரில் நடக்கும் கொடுமைகளை, ஆதிக்கத்தை தட்டிக் கேட்போரை விசமிகள் என்றும் வெறுப்புரை பரப்புவோர் என்றும் வசை பாடுவதை பார்க்கின்றோம். சாதிகள் இல்லையடி பாப்பா என்று பாரதியின் பாடலைப் பாடுவோர், தங்கள் முதுகில் சாதியை வெளிப்படுத்தும் குறியீட்டை சுமந்து கொண்டே அதை பாடுகின்றனர். ஏணியின் முதல் படியில் இருக்கின்றவனின் திமிர் தான் இப்படி என்றுப் பார்த்தால், பிற்படுத்தப்பட்ட சமூகங்களில் உள்ள மக்கள், முதல் அல்லது இரண்டாவது தலைமுறையாக படிப்பின் நீரோடை தடையின்றி கிடைக்கப்பெற்றவர்களும் தங்களின் சமூக இழிவின் காரணமான கூட்டத்தையும், வேத உபநிடந்தங்களையும் விட்டுவிட்டு, தங்களின் சாதிய அதிகாரத்தை நிலை நாட்டிக்கொள்ளத் தனக்கு கீழ் இருப்பதாக நினைத்துக் கொண்டிருக்கும் மக்களிடம் வன்மமாக, மனிதம் மறந்து நவீன பார்ப்பனியத்தை கடைப்பிடிக்கும் போக்கு கண்டிக்கப்பட வேண்டிய செயல். அந்த வகையில் மீண்டும் சாதியம் தன் கோர முகத்தை, கச்சநத்தத்தில் காட்டியுள்ளது.

மானாமதுரை வட்டம், திருப்பாச்சேத்தி அருகில் உள்ளது கச்சநத்தம். கச்சநத்தம் கிராமத்தில் தேவேந்திரகுல பிரிவைச் சேர்ந்த ஐம்பது குடும்பங்களும், ஆதிக்க சாதிப் பிரிவினர் ஐந்து குடும்பங்களாகவும் வசிக்கிறார்கள். இதில் சுமன் குடும்பம் கஞ்சா வியாபாரம் செய்துவருகிறார். இதை எதிர்த்து அங்கு வாழும் தலித் மக்கள் காவல்துறைக்கு புகார் கொடுத்தும், காவல்துறையினர் இதில் உறுதியான நடவடிக்கை எடுக்கமால் ஆதிக்க சக்திக்கு ஆதரவாக இருந்துள்ளனர்.

மேலும் படிக்க கீழே உள்ள சுட்டியை சுட்டவும்.

No comments:

Post a Comment