Wednesday 5 February 2020

புறநானூறு வழியே தமிழ்ச் சமுதாயத்தைக் காணல் – (பகுதி -2)

நெருப்பு
siragu neruppu1
மனித நாகரிகத்தின் வளர்ச்சிக்கு நெருப்பு ஒரு முக்கியமான கண்டுபிடிப்பு. அக்காலத்தில் நெருப்பை உண்டாக்க ஞெலிகோல் (தீக்கடைக்கோல்) பயன்படுத்தப்பட்டது. நிரந்தரமான வீடுகளில் வாழும் மருத நில மக்கள் இதை எந்நேரத்திலும் எளிதில் எடுக்கக் கூடிய வகையிலும் தாழ்வாரத்தின் முன்கூரையில் செருகிவைத்து இருந்தார்கள் (பாடல் 315) குறிஞ்சி, முல்லை நில மக்களும் வேட்டைக்குச் செல்பவர்களும் எப்பொழுதும் கையிலேயே வைத்து இருந்தனர் (பாடல் 247,33,1501).
சடங்குகளும் பழக்க வழக்கங்களும்
பிறப்பு முதல் இறப்பு வரையிலும் சடங்குகள் வாழ்க்கையின் பிரிக்க முடியாத கூறுகளாக இருந்தாலும் புறநானூறில், பிறப்பின் போதும், திருமணத்தின் போதும் பின்பற்றப்படும் சடங்குகளைப் பற்றிய செய்திகள் காணப்படவில்லை.
போருக்குப் புறப்படும் முன்னே அரசர்கள் வீரர்களுக்குக் கள் வழங்கும் பழக்கம் 258,262,286,290,292-வது பாடல்களில் காணப்படுகிறது.

மன்னர்கள் இறக்கும் பொழுது அவர்களுடைய உடல்களை எரிக்கும் வழக்கமும் (பாடல்கள் 231,239,240,245) முதுமக்கள் தாழியில் இட்டுக் கவிழ்த்துப் புதைக்கும் வழக்கமும் (பாடல்கள் 228,238,239) இருந்தன என்று தெரிகிறது. எரித்தாலும், புதைத்தாலும், அதன்பின் பிண்டம் இடுதலும் (பாடல் 234) நடுகல் நட்டலும் (பாடல்கள் 221,223,232) ஆகிய சடங்குகளும் பின்பற்றப்பட்டுள்ளன.

மேலும் படிக்க கீழே உள்ள சுட்டியை சுட்டவும்.
http://siragu.com/%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B1%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%82%E0%AE%B1%E0%AF%81-%E0%AE%B5%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%87-%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%8D-2/

No comments:

Post a Comment