Wednesday 26 February 2020

திறன்மிகு தியாகராயர் சாலை இராமியா


siragu t nagar2
அண்மைக் காலமாய்த் “திறன்மிகு” (Smart) என்ற சொல் வெகுவாகப் பயன்படுத்தப்பட்டுக் கொண்டு இருக்கிறது. அந்த வகையில் சாலைகளில் போக்குவரத்து வசதியை மேம்படுத்தத் திறன்மிகு சாலைகளை  (Smart Roads) அரசு அமைத்துக்கொண்டு இருக்கிறது. அவற்றுள் சென்னை, தியாகராய நகரில் உள்ள தியாகராயர் சாலையும் ஒன்று.
முன்பு தியாகராயர் சாலையின் இரு மருங்கிலும் நடைபாதைக் கடைகள் நிரம்பி இருந்தன. அக்கடைகள் இருப்பது நடைபாதையில் நடப்பவர்களுக்கு இடையூறாக இருப்பாகக்கூறி அவற்றை அகற்ற முயன்றார்கள். ஆனால் தங்கள் வாழ்வுரிமை பாதிப்பதாகக்கூறி நடைபாதை வணிகர்கள் நீதிமன்றத்தில் வழக்காடி தங்கள் உரிமையைத் தக்கவைத்துக் கொண்டனர். வழக்கமான முறையில் நடைபாதைக் கடைகளை அகற்ற முடியாததைக் கண்ட “மிகத்திறமையான” அரசு அதிகாரிகள் திறன்மிகு சாலைத் திட்டத்தின் மூலம் அதை செய்துவிடலாம் என்று ஒருவழியைக் கண்டனர். “புலிக்குப் புல் வாங்கிப் போட்ட செலவுரூ.500″ என்பதுபோல் நடைபாதை வணிகர்களின் வாழ்வுரிமைக்கு மாற்று இடம் ஒதுக்கிக் கடைகள் கட்டுவதாக அத்திட்டத்தை வடிவமைத்தனர்.
திட்டம் செயல்படுத்தப்படுவதற்கு முன்பு அது தங்களைப் பாதிக்கும் என்று நிறுவமுடியாத நிலையில் நடைபாதை வணிகர்கள் அதை எதிர்க்க முடியவில்லை.

பணமதிப்பு இழப்பு கருப்புப் பணத்தை ஒழிக்கும் என்று உறுதிமொழி அளிக்கப்பட்டாலும் நடைமுறையில் அப்படி எதுவும் நடக்காததுபோல் நடைபாதை வணிகர்களுக்கு அளித்த உறுதிமொழியும் பொய்யாகிப்போனது. அதுஒருபக்கம் இருக்கட்டும். யார் யார் பயன் அடைந்தார்கள்? என்ன என்ன விளைவுகள் ஏற்பட்டன?

மேலும் படிக்க கீழே உள்ள சுட்டியை சுட்டவும்.

No comments:

Post a Comment