Tuesday 25 February 2020

தமிழகத்தில், அரசுப்பள்ளி குழந்தைகளின் உணவிலும் மதவாத அரசியல்!


siragu school lunch1
2014 ஆம் ஆண்டு பதவியேற்றத்திலிருந்து, பா.ச.க மதவாத அரசியலை அனைத்துத் தளங்களிலும் திணித்துக் கொண்டிருப்பதை நாம் அனைவரும் கவனித்து கொண்டுதானிருக்கிறோம். உணவு விசயத்திலும், மாட்டிறைச்சிக்கு தடை என்ற ஒரு ஆணையை பிறப்பித்து நாடெங்கிலும் கலவரத்தைத் தூண்டிவிட்டது. தென்னிந்தியாவில் பெரியளவிற்கு கலவரங்கள் ஏற்படவில்லை என்றாலும், வடமாநிலங்களில் அதிகளவில் பாதிப்புகள் ஏற்பட்டது என்பது மறுக்கமுடியாத உண்மை. இதில் 300க்கும் மேலானவர்கள் கொல்லப்பட்டதாக புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன. தற்போது மத்திய அரசு நேரடியாக இறங்கவில்லை என்றாலும், என்ஜிஓ என்ற அமைப்பின் மூலம் தமிழகத்தில் கால்பதிக்க முயற்சி நடக்கிறது. இஸ்கான் என்ற மதப்பிரசார அமைப்பின் மூலம் தமிழகத்தின், சென்னை அரசுப்பள்ளிகளில் காலை உணவு வழங்குகிறோம் என்ற பெயரில் உள்ளே நுழைகிறார்கள். அதற்கு தமிழக அரசும் அனுமதியளிக்கிறது என்பது தான் தற்போது கடும் கண்டனத்துக்குரிய ஒன்றாக இருக்கிறது.
அமெரிக்காவின் இஸ்கான் (ISKCON) என்னும் ‘ஹரே ராமா, ஹரே கிருஷ்ணா’ என்ற அமைப்பின் துணை நிறுவனமான ‘அட்சய பாத்ரா’ என்கிற தனியார் தொண்டு நிறுவனம் ஒன்று இயங்கி வருகிறது. இந்த அமைப்பு, இந்தியாவின் பல மாநிலங்களில், குழந்தைகளுக்கு உணவு இலவசமாக அளிக்கும் சேவையை செய்து வருகிறது. இது ஒரு இந்து மத பிரசார அமைப்பு என்பதாகும். அமெரிக்காவை தலைமையிடமாகக் கொண்டு செயல்பட்டு வருகிறது. இது தற்சமயம் தமிழகத்தில், அரசின் உதவியுடன், சென்னை மாநகராட்சி எல்லைக்கு உட்பட்ட அரசுப்பள்ளிகளுக்கு, அக்குழந்தைகளுக்கு காலை உணவுத்திட்டம் ஒன்றை முன்னுறுத்தி, அனுமதி கேட்டிருக்கிறது.

மேலும் படிக்க கீழே உள்ள சுட்டியை சுட்டவும்.

No comments:

Post a Comment