Thursday 13 February 2020

புதிய வார்ப்புகளில் மனிதநேயச் சிந்தனைகள்


siragu puthiya vaarppugal1
இலக்கியங்கள் காலம் காட்டும் கண்ணாடி. இவை மனிதனை அடிப்படையாகக் கொண்டு மனிதனால் மனிதனுக்குப் படைக்கப்படுகிறது. மனிதன் தன்னலம், பொதுநலம் என இரண்டு நிலைகளில் வாழ்கிறான். தான் தனது எனும்போது அது தன்னலம். பிற மனிதனின் நலன் விரும்பும் தன்மையைப் பெறும்போது அது பொதுநலம் எனப்படுகிறது. அவ்வகையில் எழுத்தாளர் ஜெயகாந்தனின் படைப்புகளில் ஒன்றான ‘‘புதிய வார்ப்புகள்;’‘ சிறுகதைத் தொகுப்பில் காணப்படும் மனிதநேயச் சிந்தனைகள் பற்றி விளக்குவது இக்கட்டுரையின் நோக்கமாக அமைகிறது.
மனிதநேயம்
இன்றைய காலகட்டத்தில் மனிதநேயம், பேச்சளவிலும், எழுத்தளவிலும் மட்டும் காணப்படுகிறது. இரண்டாயிரம் ஆண்டுகால தமிழ் இலக்கியப் பயணத்தில் தொன்று தொட்டு மனிதநேயச் சிந்தனைகள் தொடர்ந்து வருகின்றன.
‘‘எல்லோரும் இன்புற்றிருக்க நினைப்பதுவே அல்லால்
வேறொன்றும் அறியேன் பராபரமே’‘
எனத் தாயுமானவரும்,
‘‘வாடிய பயிரைக் கண்டபோதெல்லாம் வாடினேன்’‘ என்று வள்ளலாரும்
‘‘ஏழை என்றும் அடிமையென்றும் எவனுமில்லை ஜாதியில்
இழிவு கொண்ட மனிதரென்று இந்தியாவில் இல்லையே’‘
எனப் பாரதியாரும் பாடிய பாடல்கள் மனித நேய உணர்வுகளை வெளிப்படுத்துகின்றன.

அன்பு, பாசம், பற்று, ஈவு, இரக்கம், கருணை, பண்பு, சகோதரத்துவம், தாய்மை போன்றவைகள் மூலம் மக்களிடம் மனிதநேயத்தை உணரமுடிகிறது. கிடைத்தற்கரிய மனிதப்பிறவியை நேசிப்பதும், சாதி மதங்களுக்கு அப்பாற்பட்டு மனிதனோடு மனிதன் இணைந்து அன்பு செலுத்தி மகிழ்வோடும் வாழ்வதுமே மனித நேயமாகும்.

மேலும் படிக்க கீழே உள்ள சுட்டியை சுட்டவும்.

No comments:

Post a Comment