Monday 24 February 2020

ஜெயகாந்தனின் சாளரம் காட்டும் நாகரீகம்


siragu jeyakandhan1
ஜெயகாந்தனின் சிறுதைகளில் ஒன்றான ‘‘புதிய வார்ப்புகள்” தொகுப்பில் சாளரம் என்ற கதையை தேர்ந்தெடுத்துள்ளேன். இச்சிறுகதையில் நடந்திருக்கும் செய்தியை மறைமுகமாக கூறியுள்ளார். அப்படியென்றால் இக்கதையை புரிந்து கொள்வதற்கு இரண்டு முறை படிக்க வேண்டும் ஏனென்றால் நடைமுறைக்கு மாறான விசயத்தை பார்க்கும் பொழுது நாமும் அதை அப்படியே கூறக்கூடாது என்று நாகரீகமாக இக்கதையை கையாண்டுள்ளார்.
சாளரத்தின் தலைப்பு பொருத்தம்

சாளரம் என்பது சன்னல் அவர் வீட்டில் உள்ள சாளரத்தை அவர் திறந்ததே கிடையாது. ஏனென்றால் அது வாடகை வீடு. அதனுடன் அந்த சாளரத்தை திறந்தால் கீழ்வீட்டில் நடக்கும் நிகழ்ச்சி தெரியும். ஒருநாள் புழுக்கமாக இருக்கிறது என்று சாளரத்தை திறந்த பொழுதுதான் ஒரு காட்சியை கண்டார். அக்காட்சியை வைத்து வேறு ஒரு கதை எழுத முடிவு செய்தார் ஆனால் அக்கதைக்கு ஏற்ற தலைப்பு அவருக்குக் கிடைக்கவில்லை. யோசித்துக் கொண்டே இருக்கும். பொழுது வேறு ஒரு சாளரத்தின் வழியே பார்க்கிறார். மீண்டும் ஒரு அவருவருப்பான விசயத்தை அவரால் காணமுடிந்தது. அதைக் கண்டவுடன் தன் கதைக்கு ஏற்ற தலைப்பு ‘‘மிருகம்” என்று வைத்தார். மிகுந்த சந்தோசம் அவருக்கு எவ்வளவு பொருத்தமான தலைப்பு என்று இறுமாப்பு அடைந்தார். எந்த சாளரத்தின் வழி கேள்வி எழும்பியதோ அந்த சாளரத்தின் வழியே பதிலும் கிடைத்தது என்று உற்சாகம் அடைந்தார்.

மேலும் படிக்க கீழே உள்ள சுட்டியை சுட்டவும்.

No comments:

Post a Comment