Thursday 26 March 2020

அறிவியலே துணை (கவிதை)



siragu corona1

புயலுக்குப் பின் அமைதி என்பர்
இங்கோ ஒரு பெரும் புயல்
மௌனமாகச் சுழன்றடிக்கிறது
வலியும் வேதனையும்
நாளை வரலாறு பதியும்
அதைப் படிக்க
நாம் இருப்போமா நாளை  ?

தேவையான பொருட்களனைத்தும்
தேவைக்கு மீறி அள்ளப்படுகின்றன
ஒரு சிறு குடும்பத்திற்கு எட்டு
லிட்டர் எண்ணெய்;இருபது கிலோ அரிசி
நவுட்டப்படுகிறது ;

ஒரு நுண் கிருமி நுரையீரலோடு
சண்டையிட்டு மரணம் தர -இங்கோ
வீதிகளில் மக்கள் துவக்கிகளோடு
மலம் துடைக்கும் காகிதத்திற்குச்

சண்டையிடுகின்றனர் ;

மேலும் படிக்க கீழே உள்ள சுட்டியை சுட்டவும்.

Wednesday 25 March 2020

அகிம்சை


siragu agimsai3
காந்தியடிகளின் தலையாய கொள்கைகளில் ஒன்று அகிம்சையாகும். அகிம்சை என்பதற்குக் காந்தியடிகள் உலகளாவிய அன்பு என்று பொருள் கொள்ளுகிறார் காந்தியடிகள்.
ஹிம்சை என்பது துன்புறுத்துதல் என்று பொருள்படும். அஹிம்சை என்றால் துன்புறுத்தாது இருத்தல் என்று சாதாரணமாகப் பொருள் கொள்ளலாம். என்றாலும் அகிம்சை என்பதை எதிர்மறை நிலையில் பொருள் உடையது என்று கொள்ளவேண்டாம் என்பது காந்தியடிகளின் கருத்தாகும். அகிம்சை என்பது தீங்கு செய்வருக்கும் கூட நன்மை செய்வது ஆகும்.
அகிம்சை என்பது தீங்கு செய்பவருக்கும் நன்மை செய்வது என்றால் தீங்கு செய்பவன் தீங்கு செய்து கொண்டே இருக்கலாமா என்று ஒரு கேள்வி எழும். அதற்கும் பதில் தருகிறார் காந்தியடிகள்.

தீங்கு செய்பவனைத் தொடர்ந்து அந்தத் தீங்கினைச் செய்து செய்யச் சொல்வதோ, அல்லது அதைப் பொறுத்துக் கொள்வதோ மட்டும் அகிம்சை அல்ல. அதற்கு மாறாக அன்பு என்கிற அகிம்சையின் செய்வினை வடிவம் உன்னைத் தவறு செய்கிறவர்களிடம் இருந்து விலகச் செய்யும். அதனால் அவனுக்கு உடல் ரீதியாகப் பாதிப்போ காயமோ ஏற்பட்டாலும் பரவாயில்லை. இதுவே அகிம்சை.

மேலும் படிக்க கீழே உள்ள சுட்டியை சுட்டவும்.

Tuesday 24 March 2020

அன்பழகன் அறியத் தரும் இட ஒதுக்கீட்டின் வரலாறு – பகுதி -2


siragu anbalagan1
தகுதி அடிப்படை என்ற பொருந்தாவாதத்தை அன்பழகன் நல்லதொரு உவமையுடன் தெளிவாக விளக்குகிறார். ஊர்மக்களுக்குப் பொதுவான விளைநிலத்தில் அனைவரிடம் இருந்தும் விதைநெல் பெற்று, விதைத்து, பயிர் விளைவித்த பின்னர், விளைச்சலைத் தக்க முறையில் பங்கிடாது, அவரவர் திறமைக்கும் வலுவுக்கும் ஏற்ப அறுவடை செய்து கட்டிக் கொண்டு போங்கள் என்று கூறுவோமானால், அறம் எதுவெனத் தெரிந்தவர் அதை ஏற்றுக்கொள்ள வழியில்லை என்கிறார் (பக்கம் – 64). ஆனால் கல்வித்துறைக்காகச் செலவிடும்வரிப் பணத்திற்கு அதுதான் அப்பொழுது விளைவாக இருந்திருக்கிறது. இந்த சுரண்டல் முறையை அநீதி என்று உணர்ந்தவர் வெகு சிலரே. அரசு குடியானவனின் தெரு கடைத்தேங்காயை எடுத்துச் சென்று அக்கிரகார தெரு பிள்ளையார் கோவிலில் உடைத்துக் கொண்டிருப்பது போல நிர்வாகம் செய்துள்ளனர் என்கிறார் அன்பழகன்.

உண்மையில் பார்ப்பன வகுப்புரிமைக்கான வாய்ப்பை அவர்கள் இழக்கவில்லை என்பதைத்தான் தரவுகள் காட்டுகிறது. இத்தரவுகளைக் கொடுத்த அன்பழகன் சதவிகித எண்களையும் அடைப்புக்குறிக்குள் கொடுத்திருக்க வேண்டும், அப்பொழுதுதான் நூலைப் படிப்பவர் கணக்குப் போட வேண்டிய தேவையின்றி ஒரு பார்வையிலேயே வகுப்புரிமை நிலையை அறிந்து கொள்ள உதவியாக இருந்திருக்கும். தரவுகள் குறித்து அன்பழகன் தனது நூலில் ஒரு கேள்வியை எழுப்பாமல் விட்டாலும்.. தரவுகளைப் பார்வையிட்ட பிறகு நமக்கு எழவேண்டிய கேள்வி… தகுதியும் திறமையும் உள்ளவர் என்று தொழிற்கல்வியை 1940களில் ஆக்கிரமித்த இந்தப் பிரிவினரிலிருந்து அப்துல்கலாம் போல எத்தனை விஞ்ஞானிகளை நாம் இவர்களிலிருந்து அடையாளம் காட்ட முடியும்? தரவுகள் காட்டும் காலகட்டத்தில் பள்ளியில் பயிலும் மாணவராகவே கலாம் இருந்திருப்பார். இவர்கள் அவருக்கும் மூத்த தலைமுறையினர்.

மேலும் படிக்க கீழே உள்ள சுட்டியை சுட்டவும்.

Monday 23 March 2020

கவியரசு கண்ணதாசனின் திரையிசைப் பாடல்களில் இறை சிந்தனைகள்


siragu kannadasan1
திரையிசைப் பாடல்கள் மக்கள் இலக்கியங்களாகும். எளிய மக்களின் அயர்வைப் போக்கி ஆனந்தம் தரும் இன்பப்பாடல்கள் திரையிசைப் பாடல்கள் ஆகும். தற்காலத்தில், திரையிசைப் பாடல்கள் இல்லாத பொழுதுகள் இல்லை என்ற அளவிற்கு மக்கள் வாழ்வில் தகவல் தொடர்பு சாதனங்களுடன் திரையிசைப் பாடல்கள் கலந்து நிறைந்து நிற்கின்றன. இத்திரையிசைப் பாடல்களில் தனக்கெனத் தனித்த இடம் பிடித்தவர் கவியரசு கண்ணதாசன். இவர் ஐயாயிரத்திற்கும் மேற்பட்ட திரையிசைப் பாடல்களை எழுதியுள்ளார். அவரின் பாடல் திறத்தை “காமம் ஞானம் என்பன அவர் கவிதை நாணயத்தின் இருபக்கங்களாக ஒளிர்ந்தன. அரசயில் அலைகளில் இருந்து மீண்டு அருளியலை நோக்கி நடந்த அவரின் பாடல்களில் ஆன்மிக உணர்வு மிளிர்ந்தது” (சிற்பி, சேதுபதி, தமிழ் இலக்கியவரலாறு, ப.395) என்று ஆய்வாளர்கள் மதிப்பிடுகின்றனர்.
கவியரசு கண்ணதாசன் கவிதைகளில் ஆன்மிகம், தத்துவம், ஞானம் கலக்காத பகுதிகளே இல்லை என்னும் அளவிற்கு இறைதேடல்கள் இடம்பெற்றுள்ளன. அவரின் திரையிசைப் பாடல்களில் இறை சிந்தனைகள் இடம் பெறும் நிலையை இக்கட்டுரை விவரிக்கின்றது.
இறைவனின் இருப்பிடம்

உழைப்பு இருக்கும் இடம்,  இறைவன் இருக்கும் இடம் என்கிறார் கண்ணதாசன். உழைப்பாளிகளின் உள்ளத்தில் வியர்வையில் இறைவன் நிற்பதாக அவர் உரைக்கிறார். அவ்வாறு உழைப்பவரை அணைப்பவரிடத்திலும் இறைவன் குடி கொண்டுள்ளான் என்பது அவரின் தத்துவம்.

மேலும் படிக்க கீழே உள்ள சுட்டியை சுட்டவும்.

தமிழ் மலையாள இலக்கியங்கள் ஓர் ஒப்பீடு


siragu pakthi ilakkiyam1
பக்தி என்பது இலக்கியமாக இயக்கமாக இந்தியாவில் வளர்த்தெடுக்கப்பெற்று வருகிறது. பக்தியின் வழியாக  உயிர்க்கான நிறைநிலையான பிறவாமையை அடைவது, அறிவுக்கான நிறைநிலையான ஞானத்தை அடைவது என்பன குறிக்கோள்களாக விளங்குகின்றன. தமிழகத்திலும், கேரளத்திலும் கிருஷ்ண பக்தி என்பது கலை சார்ந்த நிலையில் வளர்ந்து வருகிறது. குழந்தையாகக் கண்ணனைப் பாவித்து அவனது ஆடல்களை, ஆட்டுவிப்புகளைப் புகழ்வது, அவனைச் சரணடைவது என்பன கிருஷ்ண பக்தி நூல்களின் பொதுப்பண்புகளாக விளங்குகின்றன.

கேரளத்தில் பதினாறாம் நூற்றாண்டில் வாழ்ந்த பக்தியாளர் பூந்தானம் என்பவர் ஆவார். இவரின் இயற்பெயர் தெரியவில்லை. இவரின் குடும்பப் பெயர் பூந்தானம் என்பதாகும். அதுவே இவர் பெயராகவும் ஆகிவிட்டது. இவர் ஓரளவிற்கு கற்றவர். வேதப்பயிற்சி, இலக்கியப் படைப்பாக்கப் பயிற்சிகளை ஓரளவு பெற்றவர். இவர் எழுதிய மலையாள மொழி சார்ந்த வேதாந்த நூல் ‘‘ஞானப்பானா” என்பதாகும். ஞானத்தைப் பற்றிய பானா (பானை) என்ற கவிவடிவத்தில் எழுதப்பெற்ற நூல் இதுவாகும். இது பூந்தானத்தின் மகன் மறைவின்போது ஏற்பட்ட பற்றற்ற தன்மையின் காரணமாகப் பாடப்பெற்ற நெடும்பாடல் ஆகும். இது முன்னூற்று ஐம்பத்தாறு அடிகளை உடையது. ‘‘உலக வாழ்வு அர்த்தமற்றது. கலிகாலத்தில் மக்கள் இறைசிந்தனையைப் பெருக்கிக்கொள்ளவேண்டும். விஷ்ணு நாமத்தைத் தொடர்ந்து உச்சரிக்கவேண்டும். எவரும் கர்மபலனை அடைந்தே தீரவேண்டும்” போன்ற பல்வேறு கருத்துகளை எடுத்துரைக்கிறது. வேதங்கள், கீதை ஆகியவற்றை அடிப்படையாக வைத்து இப்பனுவல் எழுதப்பெற்றுள்ளது. இந்நூல் மலையாள மொழி சார்ந்தது. அதிகம் வடமொழி கலப்பில்லாத பதினாறாம் நூற்றாண்டுத் தமிழ் நடை சார்ந்த பனுவலாக இது விளங்குகிறது. பல பாடல்கள் பகுதிகள் தமிழாகவே உள்ளன.

மேலும் படிக்க கீழே உள்ள சுட்டியை சுட்டவும்.

Friday 20 March 2020

அன்பழகன் அறியத் தரும் இட ஒதுக்கீட்டின் வரலாறு


siragu anbalagan1
“வகுப்புரிமைப் போராட்டம்” என்ற நூல் பேராசிரியர் க. அன்பழகன் அவர்களால் 1951 ஆம் ஆண்டில்எழுதப்பட்டு, மக்கள் மன்றம் பதிப்பாக வெளியிடப்பட்ட நூல். அண்மையில் காலமான, இனமான பேராசிரியர் என அழைக்கப்பட்ட பேராசிரியர் க. அன்பழகன் 1944 முதல் 1957 வரை சென்னை பச்சையப்பன் கல்லூரியில் துணைப் பேராசிரியராகப் பணியாற்றியவர். திராவிட முன்னேற்றக் கழகத்தின் மூத்த தலைவர்களில் ஒருவராக தி.மு.க. உருவான நாள் முதல் அதன் உறுப்பினராகவும், 1977 முதல் 2020இல் இறக்கும் வரை நாற்பது ஆண்டுகளுக்கும் மேலாக திமுகவின் பொது செயலாளராகவும் இருந்துள்ளார். தமிழகத்தின் நிதி, கல்வி ஆகிய துறைகளின் அமைச்சராகவும் பணியாற்றியவர். சட்டமன்ற உறுப்பினராக ஒன்பது முறையும், நாடாளுமன்ற உறுப்பினராக ஒரு முறையும், சட்டமன்ற மேல்சபை உறுப்பினராக ஒரு முறையும் தேர்ந்தெடுக்கப்பட்டு நீண்ட அரசியல் பங்களிப்பைச் செய்தவர்.
siragu anbalagan2
siragu anbalagan3

இந்த நூலை எழுதிய காலத்தில் க.அன்பழகன் ஒரு ஆறேழு ஆண்டுகளாகப் பேராசிரியராகப் பணியாற்றியவராகவும், திராவிட கொள்கைகளில் ஊறிப்போன 30 வயதுக்கும் குறைவான இளைஞராகவும் இருந்துள்ளார் என்பது தெரிகிறது. புள்ளிவிவரங்கள், தரவுகள் நிரம்பப் பெற்ற நூலாக இருப்பினும் நூலின் நடை எளிமையாகவும் உள்ளது. வகுப்புரிமை கொள்கைக்காகப் போராடிய தமிழகத்தின் வரலாற்றை ஆவணப்படுத்தும் ஒரு வரலாற்று ஆவணம் என்றே இந்நூலை வகைப்படுத்த முடியும். தமிழக ஆசிரியப்பணியில் இருப்போர் வரலாற்று அடிப்படையில் அறிந்திருக்க வேண்டிய நூல் இது.

மேலும் படிக்க கீழே உள்ள சுட்டியை சுட்டவும்.

ஆண்டாளும் வடநாட்டு வைணவத்தலங்களும்


siragu pakthi ilakkiyam1
பக்தி இலக்கியகாலத் தமிழகத்தில் சைவசமயம், வைணவ சமயம் ஆகிய இரண்டும் இலக்கிய இயக்கமாகவும் சமுதாய நல இயக்கமாகவும் செயல்பட்டுவந்தன என்பது எல்லாரும் அறிந்தது. இதே காலத்தில் வடநாட்டில் வைணவ சைவ சமய வளர்ச்சிகள் எப்படி இருந்தன என்ற கேள்விக்குத் தமிழ் இலக்கியங்களில் பதில் இருக்கிறதா என்பதைத் தேடினால் கண்டறிந்து பெறமுடிகின்றது. தென்னகக் கோயில்கள் போலவே வடநாட்டுக் கோயில்களையும் பக்தி இலக்கிய பெருமக்கள் பாடியுள்ளனர். சைவப் பெருமக்கள் வடநாட்டின் தலைப்பகுதியான கைலாயம் என்பதை எட்டவும் தொழவும் முயற்சி செய்ததை திருநாவுக்கரசர், காரைக்காலம்மையார் வழி பெறமுடிகிறது. வைணவ சமய வளர்ச்சி வடநாட்டில் இருந்த தன்மையை ஆண்டாளின் பனுவல்கள் வழி பெறமுடிகின்றது. ஆண்டாள் தன் பாடல்களில் வடநாட்டு வைணவத் திருத்தலங்கள் பற்றிய குறிப்புகளைத் தருகின்றார். அவர் பெண் என்பதால் தானிருந்த திருவில்லிப்புத்தூர், மற்றும் திருவரங்கம் ஆகிய இடங்களுக்குப் பயணிக்க முடிந்தது. ஆனால் வட நாட்டு வைணவத் தலங்களைப் பயணித்துப் பார்க்க வேண்டும் என்ற ஆவல் ஆண்டாளிடம் இருந்துள்ளது. மேலும் வடநாட்டில் வைணவத் தலங்கள் சிறப்புற்று விளங்கியதால் அவை பற்றிய குறிப்புகளைச் செவிவழிச்செய்திகளாகக் கேட்டு ஆண்டாள் பதிவு செய்துள்ளார் என்பதும் தெரியவருகிறது.

ஆண்டாளின் நாச்சியார் திருமொழியில் பன்னிரண்டாம் திருமொழி கண்ணன் இருக்குமிடம் கொண்டு செல்வீர் என்ற தலைப்பில் அமைகின்றது. இத்திருமொழியில் ஆண்டாள் வட நாட்டு வைணவத் தலங்களைக் குறிப்பாக கண்ணன் சார்புடைய தலங்களைக் குறித்துப் பாடியுள்ளார். கண்ணன் வாழ்ந்த வடநாட்டு ஊர்களுக்கு என்னைக் கொண்டு சேருங்கள் என்பது அப்பாடலின் பொதுப்பொருள். ஆண்டாள் தானாகப்போக இயலாத நிலையில் கண்ணன் மீதான காதல் அதிகரிக்கும் சூழலில் தன்னைச் சார்ந்தவர்களைக் கண்ணன் இருப்பிடங்களுக்கு அழைத்துச்செல்லக் கோருவதுபோல இப்பாடல்கள் பாடப்பெற்றுள்ளன.

மேலும் படிக்க கீழே உள்ள சுட்டியை சுட்டவும்.

Thursday 12 March 2020

குமரகுருபரரின் தன் வயப்படும் நிலை


siragu kumarakrubarar2
சைவ இலக்கிய படைப்பாளர்களின் வரிசையில் தனித்த இடம் பெறுபவர் குமரகுருபரர். அவர் தமிழையும் சைவத்தையும் இருகண்களெனக் கொண்டு காசியில் மடம் நிறுவிய பெருமையர். அவரின் படைப்புகள் அனைத்தும் சைவத்தின், சிவத்தின் பெருமையைக் காட்டுவன. குமரகுருபரர் எத்தலத்திற்குச் செல்கிறாரோ அத்தலத்தைப் பற்றிய படைப்பினை அத்தலச் செய்திகளுடன் நேரில் காணும் வண்ணம் படைத்துத் தரும் பாங்கினை உடையவர். இவரின் படைப்புகளில் தன்வயமாகும் பண்பு பெரிதும் காணப்படுகிறது.

திருவாரூர் தலத்திற்குச் செல்லும் குமரகுருபரர் அத்தலத்து இறைவனைப் பற்றி திருவாரூர் நான்மணிமாலை என்ற சிற்றிலக்கியத்தைப் பாடுகிறார். இச்சிற்றிலக்கியத்தில் திருவாரூரின் அனைத்து பெருமைகளையும், அத்தலத்து இறைவனின் சிறப்புகளையும், அத்தல அமைப்பு பற்றிய செய்திகளையும், இவற்றைத் தாண்டி தான் அனுபவித்த இறைஅனுபவங்களையும் அவர் வெளிப்படுத்தி நிற்கிறார். இவரின் பாடல்களில் காணப்படும் சிறப்புக் கூறு தன் வயமாதல் ஆகும். எங்கு சென்றாலும் அங்குள்ள இறைவனுடன், ஊருடன் தன்வயமாகி இவர் நின்று கலந்து நிற்பார். இத்தன்வயமாகும் பண்பு இறைவனுக்கு உரியது. இந்தத் தன்வயப்பண்பே இறையடியாரான குமரகுருபரருக்கும் ஏற்பட்டுள்ளது. ஆண்டவனின் அடியார் அவனைப் போலவே தன்வயத்தனாகும் பண்பினையும் பெறுவர் என்பதற்குக் குமரகுருபர சுவாமிகள் ஓர் எடுத்துக்காட்டு.
\
மேலும் படிக்க கீழே உள்ள சுட்டியை சுட்டவும்.

Tuesday 10 March 2020

ஒரு கோப்பை நஞ்சு !!


siragu oru koppai nanju1
சாக்ரடீஸ் உலக தத்துவ ஞானிகளின் தந்தை. ஏதென்ஸ் நகரின் ஏற்றமிகு தலைவர். வாலிபர்களை, இளைஞர்களைச் சிந்திக்கத் தூண்டினார் என்ற குற்றத்திற்காக ஒரு கோப்பை நஞ்சு கொடுத்துக் கொல்லப்பட்டவர். அந்தத் தந்தை, தன்னை தப்பித்துப் போகும்படி தன் தோழர்கள் கட்டாயப்படுத்தியபோதும், அதற்கான வழிகள் இருந்த போதும் அதை விரும்பாது, அந்த தண்டனையை ஏற்றுக்கொண்டு தன் மரணத்தின் வாயிலாக இந்த மக்கள் உணர்வு பெற்று சிந்திக்கத் தொடங்குவார்கள் என்று எண்ணி அந்த நஞ்சு கோப்பையை விரும்பி குடித்து தன் உயிரை மக்களின் அறிவுத் தூண்டலுக்காக மகிழ்ச்சியாக உரமாக்கியவர்.
வரலாறு ஏதென்ஸ் நகரத்திற்கு ஒரு அறிவுத்தந்தையை ஈன்றது போல தமிழ்நாட்டிற்கும் காலம் ஈன்ற அறிவுத் தந்தை தான் பெரியார். ஏதென்ஸ் நகர நீதிமன்றம் சாக்ரடீஸ்க்கு நஞ்சு குடிக்க வேண்டும் என்று தண்டனை வழங்காமலிருந்திருந்தால் கிரேக்கம் பழம் பெருமைகளில் இன்புற்று அழிந்து போயிருக்காது. ஒரு அறிவியக்கம் கண்டிருக்கலாம். அந்தக் குறையை வரலாறு தமிழ் நாட்டின் மண்ணில் தீர்த்துக் கொண்டது தான் காலத்தின் திருப்புமுனை. பெரியார் தோன்றினார். பழம் பெருமைகளைப் பேசவில்லை, புராண – இதிகாசங்களின் பெருமை பேசவில்லை – கடவுள் பெருமை பேசவில்லை – அவர் சமத்துவம் பேசினார். சக மனிதனை மதிக்கத் தடையாக இருக்கும் சாதி – மதம் – கடவுள் ஒழிந்து போக வேண்டும் என்று பேசினார். அந்த பேச்சைப் போகிற போக்கில் பேசிவிட்டுப் போகாமல் இயக்கமாகக் கட்டமைத்துப் பேசினார். இந்த தந்தை தனக்கு வளமான வாழ்வு இருந்தபோதும் தன் மண்ணின் மக்கள் அடிமையாக இருக்கக் கூடாது என்பதற்காக இறக்கும் வரை ஊர் ஊரக சுற்றி பரப்புரைச் செய்தார். உலக அறிஞர்களின் சிந்தனைகளை எல்லாம் தமிழில் மொழிபெயர்த்து வெளியிட்டுப் பேசினார். தமிழ்நாடு சாக்ரடீசை அறிந்ததும் தமிழ்நாட்டின் அறிவியக்க தந்தையின் வாயிலாகத் தானே!!

மேலும் படிக்க கீழே உள்ள சுட்டியை சுட்டவும்.
http://siragu.com/%E0%AE%92%E0%AE%B0%E0%AF%81-%E0%AE%95%E0%AF%8B%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%88-%E0%AE%A8%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%81/

Thursday 5 March 2020

தொடரடைவு


Siragu tamil in computer2
ஒரு மொழி வளரக் கணினியின் துணை என்பது இப்போது அத்தியாவசியமாகி விட்டது. குறிப்பாக இணையப் பரவல் என்பதும் மொழியின் வளர்ச்சிக்குத் துணை புரிவதாக உள்ளது. அகராதிகள் பல வகைகளில் தற்போது இணைய வழி கிடைக்கின்றன. தமிழ்மொழிக்கான அகராதிகளும் பல நிலைகளில் இணையவழி கிடைக்கின்றன. தமிழ்த் தொடரடைவுகள் மதுரையைச் சார்ந்த கணிதத்துறைப் பேராசிரியர் முனைவர் ப. பாண்டியராஜா என்பவர் உருவாக்கிய தமிழ் கன்கார்டன்ஸ் (http://tamilconcordance.in/) ஒரு சிறந்த தளமாக விளங்குகின்றது. இதனுள் பல இலக்கியங்கள் தொகுக்கப்பெற்று அவற்றில் இருந்து சொல்சொல்லாக தொடர் தொடராகத் தேடி அந்த சொல், அந்தத் தொடர் எந்த இலக்கியத்தில் எந்த இடத்தில் வருகிறது என்பதைக் காட்டுவதாக உள்ளது. இது ஆய்வாளர்களுக்கு மிகத் தேவையான நல்ல இணைய தளம். இதன்வழி ஆய்வாளர் வெகு சீக்கிரமாக தான் தேட வேண்டிய வார்த்தை, அல்லது தொடர்களை உடன் பெற இயலும். ஒரு பொருள் குறித்துக் கட்டுரை வரைவோர் அச்சொல் இத்தளத்தில் இட்டு அது எந்நத எந்த இலக்கியத்தில் உள்ளது என்றை அறிந்து கொள்ள இயலும்.
தொடர் அடைவு (concordance)

ஒரு இலக்கியத்தில் அல்லது ஒரு படைப்பாளர் எழுதிய படைப்புகளில் ஒரு குறிப்பிட்ட சொல் எவ்வகையில் பயன்படுத்தப்பெற்றுள்ளது என்பதை அகரவரிசைப்படி இடம் பெற்றுள்ளத் தொடராகக் காட்டுவது தொடர் அடைவு (a book or document that is an alphabetical list of the words used in a book or a writer’s work, with information about where the words can be found and in which sentences) எனப்படுகிறது. ஆங்கில இலக்கியத்திற்குப் பல்வேறு தொடரடைவுகள் இணைய அளவில் உள்ளன. தமிழில் முனைவர் பா. பாண்டியராஜா உருவாக்கிய தொடரடைவு தமிழ் ஆய்வு உலகிற்குப் பெரிதும் பயன்படுவதாக உள்ளது.

மேலும் படிக்க கீழே உள்ள சுட்டியை சுட்டவும்.

Wednesday 4 March 2020

குமரிக்கண்டமா? அது எங்கே இருக்கிறது?


siragu kumarikandam11
தமிழில் நமக்குக் கிடைக்கும் முதல் நூலான தொல்காப்பியத்தின் காலத்தில் தமிழகத்தின் எல்லைகளாக வடக்கே வேங்கடமும் தெற்கே குமரியும் கிழக்கிலும் மேற்கிலும் கடல்கள் எல்லைகளாக இருந்தன எனத் தெரிகிறது. இதனைத் தொல்காப்பியத்திற்குப் பாயிரம் தந்த பனம்பாரனார், “வடவேங்கடம் தென்குமரி ஆயிடைத் தமிழ்கூறு நல்லுலகம்” எனக் குறிப்பிட்டு தமிழ்கூறும் நல்லுலகம் வடக்கில் வேங்கடமலைக்கும், தெற்கில் குமரிமுனைக்கும் இடையில் பரந்துகிடந்ததை (தொல்காப்பியம், சிறப்புப்பாயிரம்:1-3) விளக்குவார்.
   “தென்குமரி வடபெருங்கல்
   குணகுட கடலா எல்லை”
என்ற குறுங்கோழியூர் கிழார் (புறநானூறு:17:1-2); மாங்குடி மருதனார் (மதுரைக்காஞ்சி:70-71) சங்கப்பாடல்களிலும்,
  “நெடியோன் குன்றமும் தொடியோள் பௌவமும்
   தமிழ் வரம்பறுத்த தண்புனல் நல்நாட்டு”
என இவ்வாறே இளங்கோவடிகள் சிலப்பதிகாரம் வேனிற் காதையிலும் (வேனிற்காதை:1-2) குறிப்பிடுவதால் பண்டையத் தமிழகத்தின் எல்லையை நாம் அறிகிறோம்.
தென்குமரி:
இலக்கியங்களில் குறிப்பிடப்பட்ட தமிழகத்தின் தென் எல்லையான குமரிமுனையைக் கடல் கொண்டது என்பதை,
  “வடிவேல் எறிந்த வான்பகை பொறாது
   பஃறுளி ஆற்றுடன் பன்மலை அடுக்கத்து
   குமரிக்கோடும் கொடுங்கடல் கொள்ள” (சிலப்பதிகாரம், காடுகாண் காதை:19-22)

என்று இளங்கோவடிகள் குறிப்பிடுவார்.

மேலும் படிக்க கீழே உள்ள சுட்டியை சுட்டவும்.

Tuesday 3 March 2020

தூண்டிவிடப்படும் மதவெறியும், துண்டாடப்படும் மக்களும்!


siragu caa1
குடியுரிமைத் திருத்தச் சட்டத்திற்கு எதிராக, கடந்த இரண்டு மாதங்களாக அறவழியில் அமைதியாகப் போராடிவந்த தலைநகர் தில்லி மக்கள், இன்று திடீரென்று தாக்குதலுக்கு உட்பட்டிருக்கிறார்கள் என்பதில்,  உலக அரங்கில் நாம் எல்லோரும் இந்தியர்கள் என்ற வகையில் மிகவும் வெட்கப்படவேண்டியவர்களாக, தலைகுனிந்து நிற்க வேண்டியவர்களாக இருக்கிறோம் என்பது வருந்தத்தக்க ஒரு நிகழ்வாக நடந்திருக்கிறது. வடகிழக்கு தில்லியில், கடந்த மூன்று தினங்களாக நடந்த வெறித்தனமான வன்முறையில் இதுவரை ஒரு தலைமை காவலர் உட்பட 38 பேர்கள் உயிரிழந்துள்ளனர். 300 பேர்களுக்கும் மேலாக காயமடைந்துள்ளனர் என்ற செய்தி நம்மை மிகவும் வேதனைக்குள்ளாக்க வைக்கிறது.
siragu caa2

குடியுரிமைத் திருத்தச் சட்டத்திற்கு ஆதரவாக போராட்டம் நடத்துகிறோம் என்ற பெயரில் சில இந்துத்துவ அமைப்புகள், வடகிழக்கு தில்லியிலுள்ள மாஜ்பூர், ஜபராபாத், சீலம்பூர், சந்த்பாக் ஆகிய இடங்களில் தங்களின் போராட்டத்தை நடத்தின. அதில், இச்சட்டத்திற்கு எதிராகவும், ஆதரவாகவும் போராடிய இரு தரப்பினர்கிடையே வன்முறை வெடித்தது. அதில், ஆதரவாக போராடியதாக கூறப்படுவோர், கண்ணில் பட்டவற்றையெல்லாம் அடித்து நொறுக்கினர். தீ வைத்து கொளுத்தினர். கடைகள், வீடுகள், கார்கள் என அனைத்தும் நாசமாக்கப்பட்டன. இவையனைத்தும் மத சிறுபான்மையினரான இசுலாம் மக்களை குறிவைத்தே தாக்கப்பட்டன. அதிகப்படியான அராஜகங்கள் நடந்தேறியது. தாக்கப்பட்டவர்களை அழைத்துச்செல்லும் ஆம்புலன்ஸ் கூட மருத்துவமனைக்குச் செல்ல முடியாதபடி அடித்து வழிமறிக்கபட்டன. வீடு புகுந்து உள்ளே இருக்கும் இசுலாமிய மக்களைத் தாக்கியிருக்கிறார்கள். இது எல்லாம் முன்னரே திட்டமிட்டு செயல்படுத்தப்பட்டிருக்கிறது. முன்கூட்டியே இசுலாம் வீடுகள் அடையாளம் கண்டு வைத்துக் கொண்டு, கலவரம் போது, மிகச்சரியாக அவர்களின் இல்லங்கள் மட்டும் அடித்து நொறுக்கப்பட்டிருக்கின்றன. தீக்கிரையாக்கப் பட்டிருக்கின்றன. மசூதிகளும் இதற்குத் தப்பவில்லை. தீவைக்கப்பட்டு, உள்ளே புனித நூல்கள் உட்பட அனைத்தும் எரிக்கப் பட்டிருக்கின்றன. சிசிடிவி கேமராக்கள் உட்பட உடைத்து ஒரு கொடூர வன்முறையை இசுலாம் மக்கள் மீது ஏவிவிடப்பட்டிருக்கிறது.

மேலும் படிக்க கீழே உள்ள சுட்டியை சுட்டவும்.