Wednesday 25 March 2020

அகிம்சை


siragu agimsai3
காந்தியடிகளின் தலையாய கொள்கைகளில் ஒன்று அகிம்சையாகும். அகிம்சை என்பதற்குக் காந்தியடிகள் உலகளாவிய அன்பு என்று பொருள் கொள்ளுகிறார் காந்தியடிகள்.
ஹிம்சை என்பது துன்புறுத்துதல் என்று பொருள்படும். அஹிம்சை என்றால் துன்புறுத்தாது இருத்தல் என்று சாதாரணமாகப் பொருள் கொள்ளலாம். என்றாலும் அகிம்சை என்பதை எதிர்மறை நிலையில் பொருள் உடையது என்று கொள்ளவேண்டாம் என்பது காந்தியடிகளின் கருத்தாகும். அகிம்சை என்பது தீங்கு செய்வருக்கும் கூட நன்மை செய்வது ஆகும்.
அகிம்சை என்பது தீங்கு செய்பவருக்கும் நன்மை செய்வது என்றால் தீங்கு செய்பவன் தீங்கு செய்து கொண்டே இருக்கலாமா என்று ஒரு கேள்வி எழும். அதற்கும் பதில் தருகிறார் காந்தியடிகள்.

தீங்கு செய்பவனைத் தொடர்ந்து அந்தத் தீங்கினைச் செய்து செய்யச் சொல்வதோ, அல்லது அதைப் பொறுத்துக் கொள்வதோ மட்டும் அகிம்சை அல்ல. அதற்கு மாறாக அன்பு என்கிற அகிம்சையின் செய்வினை வடிவம் உன்னைத் தவறு செய்கிறவர்களிடம் இருந்து விலகச் செய்யும். அதனால் அவனுக்கு உடல் ரீதியாகப் பாதிப்போ காயமோ ஏற்பட்டாலும் பரவாயில்லை. இதுவே அகிம்சை.

மேலும் படிக்க கீழே உள்ள சுட்டியை சுட்டவும்.

No comments:

Post a Comment