Monday 23 March 2020

கவியரசு கண்ணதாசனின் திரையிசைப் பாடல்களில் இறை சிந்தனைகள்


siragu kannadasan1
திரையிசைப் பாடல்கள் மக்கள் இலக்கியங்களாகும். எளிய மக்களின் அயர்வைப் போக்கி ஆனந்தம் தரும் இன்பப்பாடல்கள் திரையிசைப் பாடல்கள் ஆகும். தற்காலத்தில், திரையிசைப் பாடல்கள் இல்லாத பொழுதுகள் இல்லை என்ற அளவிற்கு மக்கள் வாழ்வில் தகவல் தொடர்பு சாதனங்களுடன் திரையிசைப் பாடல்கள் கலந்து நிறைந்து நிற்கின்றன. இத்திரையிசைப் பாடல்களில் தனக்கெனத் தனித்த இடம் பிடித்தவர் கவியரசு கண்ணதாசன். இவர் ஐயாயிரத்திற்கும் மேற்பட்ட திரையிசைப் பாடல்களை எழுதியுள்ளார். அவரின் பாடல் திறத்தை “காமம் ஞானம் என்பன அவர் கவிதை நாணயத்தின் இருபக்கங்களாக ஒளிர்ந்தன. அரசயில் அலைகளில் இருந்து மீண்டு அருளியலை நோக்கி நடந்த அவரின் பாடல்களில் ஆன்மிக உணர்வு மிளிர்ந்தது” (சிற்பி, சேதுபதி, தமிழ் இலக்கியவரலாறு, ப.395) என்று ஆய்வாளர்கள் மதிப்பிடுகின்றனர்.
கவியரசு கண்ணதாசன் கவிதைகளில் ஆன்மிகம், தத்துவம், ஞானம் கலக்காத பகுதிகளே இல்லை என்னும் அளவிற்கு இறைதேடல்கள் இடம்பெற்றுள்ளன. அவரின் திரையிசைப் பாடல்களில் இறை சிந்தனைகள் இடம் பெறும் நிலையை இக்கட்டுரை விவரிக்கின்றது.
இறைவனின் இருப்பிடம்

உழைப்பு இருக்கும் இடம்,  இறைவன் இருக்கும் இடம் என்கிறார் கண்ணதாசன். உழைப்பாளிகளின் உள்ளத்தில் வியர்வையில் இறைவன் நிற்பதாக அவர் உரைக்கிறார். அவ்வாறு உழைப்பவரை அணைப்பவரிடத்திலும் இறைவன் குடி கொண்டுள்ளான் என்பது அவரின் தத்துவம்.

மேலும் படிக்க கீழே உள்ள சுட்டியை சுட்டவும்.

No comments:

Post a Comment