Thursday 12 March 2020

குமரகுருபரரின் தன் வயப்படும் நிலை


siragu kumarakrubarar2
சைவ இலக்கிய படைப்பாளர்களின் வரிசையில் தனித்த இடம் பெறுபவர் குமரகுருபரர். அவர் தமிழையும் சைவத்தையும் இருகண்களெனக் கொண்டு காசியில் மடம் நிறுவிய பெருமையர். அவரின் படைப்புகள் அனைத்தும் சைவத்தின், சிவத்தின் பெருமையைக் காட்டுவன. குமரகுருபரர் எத்தலத்திற்குச் செல்கிறாரோ அத்தலத்தைப் பற்றிய படைப்பினை அத்தலச் செய்திகளுடன் நேரில் காணும் வண்ணம் படைத்துத் தரும் பாங்கினை உடையவர். இவரின் படைப்புகளில் தன்வயமாகும் பண்பு பெரிதும் காணப்படுகிறது.

திருவாரூர் தலத்திற்குச் செல்லும் குமரகுருபரர் அத்தலத்து இறைவனைப் பற்றி திருவாரூர் நான்மணிமாலை என்ற சிற்றிலக்கியத்தைப் பாடுகிறார். இச்சிற்றிலக்கியத்தில் திருவாரூரின் அனைத்து பெருமைகளையும், அத்தலத்து இறைவனின் சிறப்புகளையும், அத்தல அமைப்பு பற்றிய செய்திகளையும், இவற்றைத் தாண்டி தான் அனுபவித்த இறைஅனுபவங்களையும் அவர் வெளிப்படுத்தி நிற்கிறார். இவரின் பாடல்களில் காணப்படும் சிறப்புக் கூறு தன் வயமாதல் ஆகும். எங்கு சென்றாலும் அங்குள்ள இறைவனுடன், ஊருடன் தன்வயமாகி இவர் நின்று கலந்து நிற்பார். இத்தன்வயமாகும் பண்பு இறைவனுக்கு உரியது. இந்தத் தன்வயப்பண்பே இறையடியாரான குமரகுருபரருக்கும் ஏற்பட்டுள்ளது. ஆண்டவனின் அடியார் அவனைப் போலவே தன்வயத்தனாகும் பண்பினையும் பெறுவர் என்பதற்குக் குமரகுருபர சுவாமிகள் ஓர் எடுத்துக்காட்டு.
\
மேலும் படிக்க கீழே உள்ள சுட்டியை சுட்டவும்.

No comments:

Post a Comment