Tuesday, 17 May 2016

இலவச சட்ட உதவி – ஒரு பார்வை


free legal advice1பணமில்லாத ஏழை மக்கள், தங்கள் வழக்கை நடத்த சட்ட உதவி அளிக்கப்பட வேண்டும் என்று இந்திய அரசமைப்புச் சட்டம் கூறுகின்றது. பொருளாதாரத்தில் பின்தங்கிய நிலையினால் எந்தவொரு இந்திய குடிமக்களுக்கும் நீதி மறுக்கப்படக் கூடாது என்று இந்திய அரசமைப்புச் சட்டம் சரத்து 39-A வலியுறுத்துகின்றது. ஒரு அரசின் கடமை, அதன் குடிமக்கள் அனைவரும் சட்டத்திற்கு முன் சமமாக நடத்தப்பட வேண்டும்  மற்றும் அனைவருக்கும் சம வாய்ப்பு வழங்கிட உறுதி செய்ய வேண்டும் என்பதே என்று இந்திய அரசமைப்புச் சட்டத்தின்  சரத்து 14 மற்றும் 22(1) வலியுறுத்துகின்றது.
குற்றவியல் நடைமுறை 304 இன் படி குற்றம் சாட்டப்பட்டவர் குற்றவியல் நடுவர் முன் நிறுத்தப்படும் அந்த நேரத்தில் இருந்தே, அவருக்கு பண வசதி இல்லாத நிலையில் சட்ட உதவி வழங்கிட வேண்டும் என்றும், பின் எப்போதெல்லாம் அந்த குற்றம் சாட்டப்பட்டவர் காவல் நீட்டிக்கப்படுகின்றதோ, சட்ட உதவி தொடர்ந்து அவருக்கு வழங்கப்பட வேண்டும் என்று வலியுறுத்துகின்றது.

மேலும் படிக்க கீழே உள்ள சுட்டியை சுட்டவும்.

தலையங்கம் – ஆறாம் ஆண்டில் நுழையும் உங்கள் சிறகு


thalayangam1சிறகு இணைய இதழ் வெற்றிகரமாக ஆறாம் ஆண்டில் அடியெடுத்து வைக்கிறது. 2011ம் ஆண்டு மே 17ம் நாள் அன்று தொடங்கப்பட்ட நமது சிறகு இதழ் நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாக வளர்ந்து வருகிறது. தமிழ் சமூகத்திற்கு அறிவார்ந்த வகையில் விழிப்புணர்வை தருகிற ஊடகமாக செயல்பட வேண்டும் என்ற பெருங்கனவை நனவாக்கிட பல்வேறு சோதனைகளுக்கு இடையே சிறகு செயல்பட்டு வருகிறது. தமிழ் மொழிக்கும், தமிழ் இனத்துக்கும் உறுதுணையாகவும், வழிகாட்டியாகவும் செயல்பட்டுவர முயற்சி செய்து வருகிறது.

மேலும் படிக்க கீழே உள்ள சுட்டியை சுட்டவும்.
http://siragu.com/?p=20585

Saturday, 14 May 2016

சிறகின் மேம்படுத்தப்பட்ட ஆன்ட்ராய்டு செயலி


siragu seyali1சிறகு இணையதளத்தை நீங்கள் தற்போது செயலி மூலமாகவும் வாசித்து மகிழலாம். எங்களது ஆன்ட்ராய்டு செயலி மேம்படுத்தப்பட்டுள்ளது. இதன் சிறப்பு என்னவென்றால் நீங்கள் ஒரு முறை செயலியைத் திறந்து கட்டுரைகளை தரவிறக்கம் செய்துகொண்டால் அவை உங்களது அலைபேசியில் சேகரிக்கப்பட்டுவிடும். அதன் பிறகு இணைய இணைப்பு இல்லாமலேயே உங்களால் படைப்புகளை வாசிக்க முடியும்.

மேலும் படிக்க கீழே உள்ள சுட்டியை சுட்டவும்.
http://siragu.com/?p=19486

Thursday, 12 May 2016

தலைவலியைப் போக்க வழிமுறைகள்


headache
  1. துளசி ,வேப்பிலை போட்டு ஆவி பிடிக்க தலைபாரம் குறையும்.
  2. ஐந்தாறு துளசி இலைகளும், ஒரு சிறு துண்டு சுக்கு, 2 லவங்கம் சேர்த்து நன்கு அரைத்து நெற்றியில் பற்றாகப் போட்டால் தலைவலி குணமாகும்.
மேலும் படிக்க கீழே உள்ள சுட்டியை சுட்டவும்.

Wednesday, 11 May 2016

எது பயங்கரவாதம்?(கவிதை)


bayangaravaadham1

அன்று தமிழர் என்றால்
ஸ்ரீலங்காவில் பயங்கரவாதி
இன்று தாடி வளர்த்த இஸ்லாமியர் எல்லாம்
உலகில் பயங்கரவாதி!

அடக்கி ஒடுக்கப்படும் இனம்
துணிந்து எதிர்த்து
தம் சுதந்திரத்துக்காக போராடினால்

அது பயங்கரவாதமோ?
தம் தேசத்து மக்களையே

மேலும் படிக்க கீழே உள்ள சுட்டியை சுட்டவும்.
http://siragu.com/?p=20542

Tuesday, 10 May 2016

பெண்ணின் பெயர் அவள் அடையாளமில்லை


pennin peyar2
பெயர்சூட்டும் சம்பிரதாயம் குழந்தை பிறந்த சில நாட்களில் நடைபெறுகிறது. இந்த நிமிடம் பெயர் சூட்டப்படாமலே வளரும் மனிதர்களின் எண்ணிக்கையை விடுத்து, மீதமிருப்பவர்களை கவனத்தில் கொள்வோம். புனைப் பெயர், நட்சத்திர அந்தஸ்துக்காக பெயர் மாற்றம் செய்துக் கொள்வது போன்ற விதிவிலக்குகளையும் விட்டுவிடலாம்.

கருப்பு, உயரம், சுருட்டை முடி போன்ற நீண்ட வர்ணனைகளைத் தவிர்த்து, ஒரு மனிதனை சுருங்க அடையாளப்படுத்திக் கொள்ள அவனுடைய/ அவளுடைய பெயர் உதவுகிறது.


அவரவர் குடும்ப வழக்கப்படியோ, தங்கள் சொந்த விருப்பப்படியோ பெயரை மட்டும் அல்லது தங்கள் ஊர் பெயருடன் சேர்த்து அல்லது தங்கள் குடும்பப் பெயரை சேர்த்து அல்லது தங்கள் சாதியின் பெயரை சேர்த்து எழுதும் வழக்கம் இருந்து வருகிறது. பொதுவாக தந்தையின் பெயரோ தந்தை வழி குடும்பப் பெயரோ சேர்க்கப்படுகிறது. பெரும்பான்மையான நாடுகளில் தாய் வழிப் பெயர்களை இணைத்துக் கொள்ளும் வழக்கம் இல்லை.

மேலும் படிக்க கீழே உள்ள சுட்டியை சுட்டவும்.

Monday, 9 May 2016

அமெரிக்கர்கள் இனக்கலப்பு உறவுகளுக்கு எதிரானவர்களா?


interracial marriage 7
கொலம்பஸ் மேற்குலகில் காலடி வைத்ததற்குப் பிறகு உள்ள குறுகிய வெகு சில நூற்றாண்டுகளே கொண்ட அமெரிக்க வரலாற்றை ஆராய்ந்தால், அதில்  இனஅழிப்புகள், இனபேதங்கள் அடிப்படையிலான வன்முறைகள், அமெரிக்கப் பழங்குடியினரைக் கொன்றுகுவித்தது, கறுப்பின மக்களை அடிமைப்படுத்தியிருந்தது என்று தற்கால உலகம் விரும்பாத பல நடவடிக்கைகள் நிறைந்ததாக இருக்கும். இன்றும்கூட ஆங்காங்கு பல துயர்களையும், சிலமுறை காவல்துறையின் பொறுப்பற்ற நடவடிக்கையில் அகப்பட்டு உயிரை விடுவதையும் கறுப்பின அமெரிக்கர்கள் எதிர்கொள்கின்றனர். இருப்பினும், அவர்களது நீதிக்காகப் போராடும் கூட்டத்தினரும் எண்ணிக்கையில் அதிகரித்துத்தான் வருகின்றனர். சட்டத்தை மதிக்கும் அமெரிக்க மண்ணில் இனபேத நடவடிக்கைகளால் அநீதி இழைக்கப்படுவதைத் தடுக்க சட்டங்களும் உருவாக்கப்பட்டுள்ளன. ஆனாலும் மக்களின் மனப்பான்மை உண்மையில் மாறிவிட்டதா?

அமெரிக்க வரலாற்றின் அடிப்படையில் பார்த்தால், ஆங்கிலேயர் விர்ஜீனியாவில் தங்கள் ஆட்சியை நிலைநாட்ட முற்பட்ட 1600 களிலேயே அமெரிக்கப் பழங்குடிப் பெண் ‘பாக்கஹாண்டஸ்’ என்பவரும், இங்கிலாந்து நாட்டைச் சேர்ந்த ‘ஜான் ரால்ஃப்’ (Pocahontas and John Rolfe) என்பவரும் திருமணம் செய்து கொண்ட நிகழ்வும் அமெரிக்க வரலாற்றின் ஒரு பகுதியே. இடைப்பட்ட காலங்களில் இனக்கலப்பு உறவில் கறுப்பின தந்தைக்கோ, அல்லது கறுப்பின தாய்க்கோ பிறந்த குழந்தைகளுக்கு சுதந்திரம் கிடையாது, 

மேலும் படிக்க கீழே உள்ள சுட்டியை சுட்டவும்.