Wednesday, 11 October 2017

புதிய பாதை நோக்கி! (கவிதை)


puratchi kavignar14

பரிதி எழுந்த நல்பொழுது
பாவை யவள்துயில் கலைந்தாள்
பாரின் மிசையொளி காணப்
பாவை யவள்முகம் பூத்தாள்
அஞ்ஞன விழிக்கதிர் காயும்
அருணண் முகம்நேர தொழுதாள்

தந்தை தாய்முகம் கண்டு
தாள்வணங்கி பள்ளி சென்றாள்
வாழ்வுக் கின்பந் தரும்நற்
பாடம் அதனைக் கற்றாள்
வாழைக் குலைபோல் பெண்வாழ்வு



வீணாதல் நன்றோ?யென விழித்தாள்

மேலும் படிக்க கீழே உள்ள சுட்டியை சுட்டவும்.
http://siragu.com/%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%88-%E0%AE%A8%E0%AF%8B%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF-%E0%AE%95%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%88/

Tuesday, 10 October 2017

அல்கட்ராஸ் தீவில் . . .


Siragu alkatras1
அமெரிக்காவின் மேற்குக் கடற்கரையை ஒட்டி, கலிபோர்னியா மாநிலத்தின் சான் பிரான்சிஸ்கோ நகருக்கு வடக்கே, வளைகுடாவில் உள்ள பாறையிலான ஒரு சிறிய தீவான “அல்கட்ராஸ் தீவு” என்ற இடம் மிகவும் புகழ்பெறக் காரணமாக இருந்தது அங்கிருந்த அமெரிக்க மத்திய சிறைச்சாலை. மிகவும் கொடுமையான கொள்ளைக்காரர்களும், கொலைகாரர்களும், கடத்தல்காரர்களும் அங்கு அடைக்கப்பட்டிருந்ததுடன் அல்லாமல், யாரும் தப்பவே வழியில்லை என்றிருந்த நம்பிக்கையையும் முறியடித்து சிறைக்கைதிகள் சிலர் அங்கிருந்து தப்பிவிட்டதும் சாதாரண ஒரு சிறைச்சாலைக்கு இந்தப் புகழ் வரக் காரணமாக இருந்தது. சிறை மூடப்பட்ட பின்னர், இன்று அல்கட்ராஸ் தீவு அமெரிக்க வனத்துறையின் (U.S. National Park Service) கட்டுப்பாட்டில் உள்ள ஒரு சுற்றுலாத்தலமாக மாற்றப்பட்ட பின்னர் ஆண்டொன்றுக்கு சுமார் ஒன்றரை மில்லியன் மக்கள் உலகிலேயே கடுமையான சிறைச்சாலை எப்படி இருக்கும் என்ற ஆர்வத்தில் இத்தீவைப் பார்வையிட வருகிறார்கள். இத்தீவின் பாறைத் தன்மையால் இது ‘தி ராக்’ (“The Rock”) என்றும் அழைக்கப்படுகிறது.
I. பாறையின் வரலாறு:
அல்கட்ராஸ் தீவின் வரலாற்றைப் பொதுவாக பழங்குடியினர் குடியிருப்புக் காலம் (1769 ஆண்டுக்கு முன்னர்), ஸ்பானிஷ் ஆட்சியர் காலம் (1770-1848), அமெரிக்க இராணுவத்தின் காலம் (1849 – 1933), அமெரிக்க மத்திய சிறைச்சாலைக் காலம் (1934-1963), பழங்குடியினர் உரிமைப் போராட்டக் காலம் (1969-1971), அமெரிக்க வனத்துறையின் வரலாற்றுச் சுற்றுலாத்தலம் காலம் (1973 –) எனப் பல பிரிவுகளாக நிகழ்வுகளின் வரலாற்று முக்கியத்துவத்தின் அடிப்படையில் பிரித்துக் கூறினாலும், இன்றென்னவோ அனைவரையும் கவரும் வண்ணம் நிலைத்து விட்டது அது சிறைச்சாலையாக இருந்த காலம் மட்டும்தான்.

மேலும் படிக்க கீழே உள்ள சுட்டியை சுட்டவும்.

Monday, 9 October 2017

இவரைத் தெரியுமா? சாக்கிலி இல்லமா


Siragu chakali ilamma1
தெலுங்கானா ஹைதராபாத் மாநிலத்திலுள்ள தெலுங்கு மொழி பேசும் மக்களைக் கொண்ட பிரதேசமாகும். இப்பகுதி நிலப்பிரபுத்துவ மேட்டிமை வர்க்கத்தினரால் ஆளப்பட்டு வந்தது.
ஜாகிர்தார், நேர்முக மற்றும் குத்தகை அமைப்பும் அதன் காரணமாக நிலப்பிரபுத்துவச் சுரண்டலும், ஒடுக்குமுறையும் நடப்பில் இருந்தன.
தெலுங்கானா மக்கள் அடிமைத்தனமான ஒரு வாழ்வையே நடத்தினர்.
நிலப்பிரபுக்களைக் காணும் போது “எஜமானனே இங்கே இருக்கிறேன் உங்கள் அடிமை உங்கள் கால்களை நான் தொடுவேனாக” என்று ஒவ்வொரு சாதாரண மனிதனும் வார்த்தைகளை வெளிப்படுத்துவது அவர்களின் பரிதாபமான நிலைமையையும் அவர்கள் அனுபவித்து வந்த ஒடுக்குமுறை தன்மையினையும் பிரதிபலிப்பதாய் இருந்தன.

தெலுங்கானாவின் பாதிக்கும் மேற்பட்ட நிலங்கள் நிஜாம் நவாப்புக்குச் சொந்தமாக இருந்தன, அதே நேரத்தில் எஞ்சிய 50% நிலம் பெரும் நிலப்பிரபுக்களின் கைகளில் இருந்தன.

மேலும் படிக்க கீழே உள்ள சுட்டியை சுட்டவும்.

Friday, 6 October 2017

கீழடித் தொல்லியல்! (கவிதை)


Siragu keezhadi1

எத்துணை எத்துணை ஆதாரங்கள் -பல
தலைமுறை தலைமுறை யாய்வாய் செவிவழிச்
செய்தியாய் சங்கநூற் குறிப்புகளாய்த் தொடாந்த
பழந்தமிழர் வாழ்விற் கொருபுது ஆதாரம்
“கீழடி”யெனும் பெருநகரம் ஆ!ஆ!

மேலும் படிக்க கீழே உள்ள சுட்டியை சுட்டவும்.

Thursday, 5 October 2017

உடை தடையல்ல…(சிறுகதை)


Siragu IT staffs1
பட்டுப்புடவையில் ஒய்யாரமாய் அலுவலகம் நுழைந்த ஸ்னேகாவை அபிஷேக், வைத்தக் கண்ணை எடுக்காமல் பார்த்துக் கொண்டிருந்தான். அழகு நவீனமாக பொற்சிலை போலுள்ள ஸ்னேகாவைப் பார்த்து அவள் அலுவலகத்தில் ஜொள்ளு விடாத ஆண்களே இல்லை. வசீகர கண்களையுடைய கட்டழகி. தலையை வாராமல் படர்ந்திருந்த அவள் கருங்கூந்தல் தோகை போலிருக்க, கோவில் செப்பு சிலையை மிஞ்சும் அவளின் இளமை செழிப்பு பட்டுப் புடவையில் எடுப்பாக கண்ணுக்கு விருந்தளித்தது. அவளுடன் வேலை செய்யும் அந்த அலுவலகத்தில் உள்ள எல்லா ஆண்களும் செய்யும் வேலையை மறந்து விட்டு அவளைக் குதூகலத்துடன் பார்த்தனர். அவள் அபிஷேக்கைப் பார்த்து கையை அசைத்தாள். தேர் ஆடுவது போலிருந்தது.
ஸ்நேகா, சாதனா, அபிஷேக் எல்லாம் பொறியியல் கல்லூரியில் ஒன்றாகப் படித்தவர்கள். கேம்பஸ் இண்டெர்வியூவில் செலக்ட் ஆகி பிரபலமான சாப்ட்வேர் கம்பெனியில் பணி செய்து கொண்டிருக்கிறார்கள்.

மேலும் படிக்க கீழே உள்ள சுட்டியை சுட்டவும்.

அந்தரப் பிழைப்பின் அவலம்


(இலங்கை தோட்ட இந்திய தொழிலாளர் அந்தரப் பிழைப்பு – கோ .நடேசய்யர் நாடகத்தை முன்வைத்து)
Siragu andhara pizhai10
அரசாங்கத்தின் பேருந்து மட்டும் சென்று வரும். தனியார் வாகனங்கள் செல்ல இயலாது. அப்படி செல்ல வேண்டியிருந்தாலும் சோதனைச் சாவடியில் எல்லா விபரங்களையும் பதிவு செய்தபின்பே செல்லமுடியும். தொழிலாளர் வீடுகளில் நடக்கும் எந்த நிகழ்வுகளுக்கும் உறவினர் யாரேனும் வருவதாக இருப்பின் நிர்வாகத்திற்கு முன்னமே சொல்லி அவர்களின் விபரங்களையெல்லாம் கொடுத்து அனுமதி பெறவேண்டும். தொழிலாளிக்கு திடீரென உடல்நிலை கோளாறு ஏற்படால்கூட நிர்வாகத்தின் அனுமதியின்றி வெளியில் மருத்துவமனைக்கு செல்லக்கூடாது.

மேலும் படிக்க கீழே உள்ள சுட்டியை சுட்டவும்.

Monday, 2 October 2017

ஜிஸ்டி ஏற்படுத்திய மாபெரும் இழப்பு


Siragu GST1
இந்த மத்திய அரசு எடுக்கும் எந்த ஒரு திட்டமும் தோல்வியில் தான் முடிந்திருக்கிறது என்பதற்கான மற்றொரு சான்றுதான் இந்த ஜிஎஸ்டி எனும் சரக்கு மற்றும் சேவை வரி விதிப்பு. இந்த ஜிஎஸ்டி ஏற்படுத்திய தாக்கம் என்பது மக்களிடையே மிகப்பெரிய மனஉளைச்சலை ஏற்படுத்தி இருக்கிறது என்பது வருத்தத்துக்குரிய ஒன்றாகும். இது மக்களுக்கு உண்டான வாழ்வியல் தொடர்பான பாதிப்பு மட்டுமல்ல. ஒட்டுமொத்த இந்த இந்திய தேசத்திற்கான வருவாய் இழப்பு என்பதை தற்போதைய புள்ளிவிவரம் தெரிவிக்கிறது. மத்திய பா.ச.க அரசின் இந்த ஜிஎஸ்டி வரி விதிப்பால், வணிகவரித்துறைக்கு சுமார் ரூ.4 ஆயிரம் கோடி இழப்பு ஏற்பட்டிருக்கிறது. குறிப்பாக பெட்ரோல், டீசல், மது, இயற்கை வாயு மூலம் கிடைக்கும் வருவாய் சரிந்திருப்பது தற்போது தெரிய வந்திருக்கிறது.
நம் தமிழக மாநில வணிகவரித்துறையில், ஆண்டுக்கு ரூ. 20 லட்சம் வரை வணிகம் செய்பவர்கள் கட்டாயம் அரசிடம் பதிவு செய்ய வேண்டும். அவர்களின் கணக்குகளை மாதம் ஒருமுறை என தாக்கல் செய்து வரி செலுத்த வேண்டும். மதிப்பு கூட்டு வரி, விற்பனை வரி, ஆடம்பர வரி, கேளிக்கை வரி உள்ளிட்ட வரிகள் வசூலிக்கப்பட்டு அதன் மூலம் வருவாய் கிடைக்கும்படியான முறை இருக்கிறது. ஆனால், இந்த ஜிஎஸ்டி வரி விதிப்பிற்கு முன், அதாவது சென்ற ஆண்டு ரூ. 67 ஆயிரம் கோடி நம் மாநில வணிகவரித்துறை வருவாயாக ஈட்டி இருந்தது. இதனிடையே இந்த சரக்கு மற்றும் சேவை வரி விதிப்பின் மூலம், கடந்த ஜூலை மாதம் முதல், 2,12,18, 28 என்ற சதவிகிதம் முறையே நான்கு அடுக்காக பொருட்களைப்பிரித்து வரி விதிக்கப்படுகிறது. இதில் என்ன கொடுமையென்றால், 
மேலும் படிக்க கீழே உள்ள சுட்டியை சுட்டவும்.