Wednesday, 15 April 2020

கொரோனா நோய் தொற்றுப் பரவலும், மத்திய அரசின் பாரபட்ச நிதி ஒதுக்கீடும்!


siragu coronavirus2
உலகெங்கிலும் கொரோனா தொற்று நோய் பாதிப்பு படு தீவிரமாக உயர்ந்து வருகிறது. உயிரிழப்பு ஒரு லட்சத்தை நெருங்கிக்கொண்டிருக்கிறது என்பது நம் எல்லோருக்கும் பேரச்சத்தைத் தருவதாக இருக்கிறது. உலகிலுள்ள மனித குலமே செய்வதறியாது கலங்கி போய் தவிப்பதை பார்க்கும்போதும், வளர்ந்த நாடுகள் அனைத்தும் மிகுந்த உயிரிழப்புகளை சந்தித்து வரும் இவ்வேளையில், நாம் என்ன செய்யப் போகிறோம், நம் அரசு என்ன செய்யப் போகிறது என்பது பெரும் கேள்விக்குறியாகவே நம் முன்னே வந்து நிற்கிறது. இந்தியாவில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 6,412 ஆக உயர்ந்துள்ளது. உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 199 என அதிகரித்திருக்கிறது. மத்திய சுகாதாரத்துறை தெரிவித்திருக்கும் செய்தியில், கடந்த 12 மணிநேரத்தில், 30 பேர் உயிரிழந்திருப்பதாக கூறுகிறது. தமிழ்நாட்டின் நிலைமையோ கொஞ்சம் கொஞ்சமாக அதிகரித்த வண்ணம் இருக்கிறது. இன்றைய புள்ளிவிவரப்படி, கோவிட் 19 பாதிப்புள்ளானவர்களின் எண்ணிக்கை 911 எனவும், இறந்தவர்கள் 9 எனவும் கூறுகிறது. நாடு அளவில், பாதிப்புக்குள்ளானவர்கள் எண்ணிக்கையில், முதலிடத்தில் இருக்கும் மகாராஷ்டிரத்தை அடுத்து, தமிழ்நாடு இரண்டாவது இடத்தில் இருக்கிறது.
ஆனால், இந்நிலையில், கொரோனா நிதி வழங்கும் விசயத்தில் கூட, மத்திய பா.ச.க அரசு பாரபட்சம் காட்டுகிறது என்பது வேதனைக்குரிய ஒன்றாகவே இருக்கிறது. மனித நேயத்துடன், உயிர் காக்கும் இந்த நிதி வழங்கல் நடவடிக்கையில், வடமாநிலங்களுக்கு ஒரு விதமாகவும், தென் மாநிலங்களுக்கு ஒரு விதமாகவும் பாகுபாடு காட்டுகிறது. நம்மை விட குறைவாக பாதிக்கப்பட்டிருக்கும் மாநிலங்களுக்கு, அதாவது, 234 பேர்கள் பாதிப்புள்ள மாநிலமான உத்திரப்பிரதேசத்திற்கு ரூ.996 கோடியும், 179 பேர்கள் கூட இல்லாத மத்தியப்பிரதேசத்திற்கு, ரூ.910 கோடியும், 21 பேர்கள் பாதித்த ஒடிசாவிற்கு, 802 கோடியும், 32 பேர்கள் பாதித்த பீகார் மாநிலத்திற்கு ரூ.708 கோடியும் , 122 பேர் பாதித்திருக்கும் குஜராத் மாநிலத்திற்கு ரூ. 662 கோடியும், 571 பாதித்த தமிழ்நாட்டிற்கு ரூ.510 கோடி என ஒதுக்கீடு செய்திருக்கிறது. இந்த அறிவிப்பு ஒதுக்கீடு செய்த அன்று வெளியிடப்பட்டது. ஆனால், தற்போதைய நிலை தமிழ்நாட்டில் 911 என உயர்ந்திருக்கிறது. அன்றைய நிலவரப்படியே பார்த்தாலும் , நம்மைவிட குறைவான பாதிப்பு உள்ள மாநிலங்களுக்கு அதிக நிதி ஒதுக்கியிருக்கிறது பா.ச.க அரசு. பா.ச.க ஆளும் மாநிலங்களுக்கும், அது கூட்டணி வைத்திருக்கும் மாநிலங்களுக்கும் அதிக நிதி கொடுக்கிறது. தமிழ்நாடு என்றாலே எப்போதும் ஒரு வகையான பாகுபாட்டை கடைபிடிக்கிறது பா.ச.க அரசு. அதிலும், உட்சபட்ச பாகுபாடாக, பாதிக்கப்பட்ட மாநிலங்களின் வரிசையில், தமிழ்நாட்டை அடுத்து மூன்றாவதாக உள்ள கேரளத்திற்கு வெறும் ரூ. 157 கோடி அளிப்பதாகக் கூறியிருக்கிறது. இந்த விசயத்தில் கூடவா வன்மத்தைக் காட்ட வேண்டும்!

மேலும் படிக்க கீழே உள்ள சுட்டியை சுட்டவும்.

நாள் கூலித்தொழிலாளி (கவிதை)


siragu ooradangu1


இயற்கை
தன் விதியை
தானே எழுதிக்கொள்கிறது..
விஞ்ஞானமும் மெய்ஞானமும்
தமக்குள் முட்டி மோதிக்கொள்கையில்..

நாள் கூலித்தொழிலாளி!
வெளியே போனால்
கொரோனா வைரஸ் பிடிக்குமாம்..

வீட்டுள்

மேலும் படிக்க கீழே உள்ள சுட்டியை சுட்டவும்.

Friday, 10 April 2020

அவளும் அவனும் (சிறுகதை)


siragu coronavirus3
“டாக்டர், கொஞ்சம் சீக்கிரம் பாருங்களேன்” என்றாள் ரஞ்சித்தா. “இருங்க ஒவ்வொரு நோயாளியா தானே பார்க்க முடியும்”
“இல்ல டாக்டர் என் தோழிக்கு தலைல அடிபட்டிருச்சு ”
“சரி இருங்க வறேன் “
தலையில் பலமாக அடிபட்டிருந்தது பகுத்தறிவிற்கு. இரத்தம் வழிவதை ஒரு கைக்குட்டையால் அழுந்த பிடித்துக் கொண்டிருந்தாள். வலி அவள் கண்களில் தெரிந்தாலும் அதையும் தாண்டிய ஒரு துணிவு அவள் கண்களில் தெரிந்தது. வலியில் முனகவில்லை.
“எப்படி அடிபட்டது?” என்று கேட்டுக்கொண்டே பகுத்தறிவின் தலையில் வழிந்த இரத்தத்தைத் துடைத்து, மருந்திட்டான் முரசொலி.
“கூட்டத்துல பேசிட்டு இருந்தோம். நீட் எதிர்ப்பு மாநாடு. தீடிரென்று கலவரம். அப்போ யாரோ தலையில் அடிச்சுட்டாங்க” என்றாள் ரஞ்சித்தா.

“ஓ, போலீசிடம் சொல்லியாச்சா “

மேலும் படிக்க கீழே உள்ள சுட்டியை சுட்டவும்.

நாளைய உலகம்


siragu agimsai3
காந்தியடிகள் தற்கால உலகின் இன்னல்களுக்குச் சத்தியத்தின் வழியில் தீர்வுகள் சொன்னவர். அவர் எதிர்காலம் பற்றியும் சிந்தித்துள்ளார். நாளைய உலகம் பற்றி அவர் பேசியுள்ளார்.
நாளைய உலகம் பற்றிய அவரின் சிந்தனைகள் கேள்விகள் கொண்டு தொடங்குகின்றன.
      நாளைய உலகம் நன்முறை உடையதாக இருக்குமா?
      அல்லது வன்முறை உடையதாக இருக்குமா?
என்பது அவர் எழுப்பும் முதல் கேள்வி. இக்கேள்வியைத் தொடர்ந்து
எப்போதுமே பசி, பட்டினி, ஆழ்துயர் இவை தீரவே தீராதா. தொடர்ந்து வந்து கொண்டே இருக்குமா?
      என்று அடுத்த கேள்வியை முன்வைக்கிறார்.

இதைத் தொடர்ந்து அவர் எழுப்பும் மிக முக்கியமான கேள்வி தர்மத்தின் மீது எதிர்காலச் சந்ததியினருக்கும் ஆழமான நம்பிக்கை இருக்குமா?

மேலும் படிக்க கீழே உள்ள சுட்டியை சுட்டவும்.

கொவிட்-19 (கவிதை)


siragu coronavirus6


உள்ள கடவுளை
இல்லை என்கிறதா?
கடவுள் இல்லை
என்பதை மெய்பிக்கின்றதா?
நுண்ணுயிர் கொண்டு
மனிதரை கொன்றிடும்
நவீன விஞ்ஞான



சோதனைகளின் தொடர்ச்சியா?

மேலும் படிக்க கீழே உள்ள சுட்டியை சுட்டவும்.

Thursday, 2 April 2020

சிந்து சமவெளி குறியீடுகள் படிக்கப்பட்டது என்றொரு மோசடி

ஐயாயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் தோன்றி, மூவாயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் வரை (3300–1300 பொது காலத்திற்கு முன்னர் / பொ.கா.மு / BCE) சற்றொப்ப இரண்டாயிரம் ஆண்டுகள் சிறந்து விளங்கியது சிந்து சமவெளி நாகரிகம். இது இந்தியாவின் வடமேற்குப் பகுதியில் சிந்து ஆற்றங்கரையில் உருவான நகர நாகரிகம். பண்டைய உலகில் புகழ் பெற்று விளங்கியிருந்த சுமேரிய, எகிப்து, சீன நாகரிகங்கள் போன்று, வெண்கலக் கால உலகின் சிறந்து விளங்கிய ஆற்றங்கரை நகர நாகரிகம். சுட்டக் களிமண் செங்கற்களால் சீரிய முறையில் அமைக்கப்பட்ட கட்டடங்களும், நேரான வீதிகளும், பொதுமக்கள் குழுமும் இடங்களும், நீர்த் தேக்கங்களும், குளமும், திட்டமிடப்பட்டு அமைக்கப்பட்டிருந்த நகரின் கழிவுநீர் வடிகால்களும், நீர்நிலைகளும், வணிக முத்திரைகளும் இன்றைய நாகரிகத்தில் வாழும் பலரையும் கூட வியப்பில் மூழ்கச் செய்யும். சுற்றுச் சூழல் பாதிக்கப்பட்டு, நீரற்றுப் போன இந்த நகரத்தில் வாழ்ந்த மக்கள் புதிய நீர்நிலைகளைத் தேடி இடம் பெயர்ந்து கங்கைச் சமவெளியில் குடியேறினார்கள் என்றும், சிந்து ஆறு தனது தடத்தை மாற்றிக் கொண்டதால் நீரற்று உழவுத்தொழில் நலிவடைந்து மக்கள் நகரைக் கைவிட்டு வெளியேறி இந்தியா முழுவதும் பரவினர் என்பதும் ஆய்வாளர்களின் கருத்து.
siragu civilizations

ஆனால், இன்றுவரையிலும் உண்மையில் என்ன நடந்திருக்கலாம் என்பதை உறுதி செய்ய முடியாத நிலையில்தான் மறைந்துபோன சிந்துசமவெளி நாகரீகத்தின் வரலாறு இருக்கிறது. சிந்து சமவெளி மக்கள் பயன்படுத்திய முத்திரைகளின் எழுத்துக்கள் என்னதான் கூறுகின்றன என்பதும் பொதுமக்கள் மற்றும் ஆய்வாளர்களின் ஆர்வத்தைத் தூண்டிய வண்ணமே இருக்கிறது. கடந்த ஒரு நூற்றாண்டாகச் சிந்து சமவெளிப்பகுதியில் அகழாய்வுகள் தொடர்ந்து நடந்து வருகின்றன. பல தடயங்களும், ஆயிரத்திற்கும் மேலான நகரக் குடியிருப்புகளும் அவற்றில் பல ஆயிரக்கணக்கான மக்களும் வாழ்ந்து வந்தனர் என்பது மட்டுமே இப்பொழுது நமக்கு உறுதியாகத் தெரியும் தகவல். சிந்துசமவெளி நாகரிகத்தில் திராவிடக் கூறுகள் உள்ளன என்பது பெரும்பாலான ஆய்வாளர்கள் முடிவு. சிந்துவெளியின் மறைவுக்குப் பிறகு கைபர், போலன் கணவாய்கள் வழி இந்தியாவிற்குள் ஆரியர் குடியேறினர் என்ற கோட்பாட்டை மறுதலிக்கும் இந்துத்துவ தீவிரவாதிகள் சிந்துவெளி நாகரிகத்தை வேத கால நாகரீகம் என்றும் அது சரஸ்வதி-சிந்து நாகரிகம் என்று அழைக்கப்பட வேண்டும் என்று கூறி வருவதும் ஒவ்வொரு இந்தியரும் அறிந்ததே.

மேலும் படிக்க கீழே உள்ள சுட்டியை சுட்டவும்.

மிக வேகமாக பரவிவரும் கொரோனா வைரசும், ஊரடங்கு உத்தரவும்!


siragu coronavirus1
மனிதகுல வரலாற்றில் நாம் பல தொற்று நோய்கள், பல உயிரிழப்புகளைக் கண்டு, அனுபவித்துக் கடந்து தான் வந்திருக்கிறோம். அதன் அனுபவத்திலிருந்து பல பாடங்களும் கற்றிருக்கிறோம். மனித மூளை சிந்தித்து அறிவியலை கண்டடைந்தபோது, இன்னும் பல முன்னேற்றங்கள் ஏற்பட்டன. அந்தந்த காலத்திற்கேற்ப பல புதிய தீர்வுகள் உண்டாகின, அறிவியலார்கள் உருவாகினர், புதிய மருந்துகள் கண்டுபிடிக்கப்பட்டன, அதன் மூலம் பல்லாயிரகணக்கான மக்கள் காப்பாற்றப்பட்டிருக்கிறார்கள் என்றுதான் வரலாறு பதிவு செய்திருக்கிறது. கடந்த சில நூற்றாண்டுகளில் கூட, பெரியம்மை, காலரா, பிளேக் போன்ற தொற்றுநோய்கள் உருவாகி, மக்களை கொன்று குவித்திருக்கிறது.
1918-ல், ஏற்பட்ட ஸ்பானிஷ் ஃப்ளு காய்ச்சலில், இந்தியாவில் மட்டுமே கோடிக்கணக்கில் மக்கள் மடிந்தார்கள் என்று வரலாறு கூறுகிறது. அவ்வப்போது இயற்கை இப்படிப்பட்ட பேரழிவுகளை ஏற்படுத்திக்கொண்டுதான் இருக்கிறது. இவ்வுலகில் மனிதர்களுடன், தாவரங்கள், விலங்கினங்கள் வாழ்வது போல், கண்ணுக்குத் தெரியாத கிருமிகளும் கூட சேர்ந்து தான் வாழ்கின்றன. அவைகளும் நம்மைப் போலவே, நோய் எதிர்ப்பு சக்தியை கூட்டிக்கொண்டே போவதற்கான வழிமுறைகளை கையாளுகின்றன. தங்களுக்குத் தாங்களே தகவமைத்துக்கொள்கின்றன என்பதுதான் உண்மை. அவற்றிலிருந்து மனிதகுலம் ஒவ்வொரு முறையும் மீண்டு வந்துகொண்டுதானிருக்கின்றது. ஆனாலும், உயிரிழப்புகள் நேர்வதைத் தவிர்க்க முடியாது என்பதை நாம் உணர வேண்டும். அது அதிகளவில் நேராத வண்ணம் தடுப்பதற்கான ஆய்வுகள், அறிவியலின் மருத்துவ உலகம் ஒவ்வொரு முறையும் சாதனை புரிந்துக் கொண்டுதானிக்கிறது. இந்த உலக மக்களும், அவர்களை ஆளும் அரசுகளும் அதற்கான முன்னெடுப்பு முயற்சிகளை கைவிடாமல் தொடர்ந்து கொண்டு இருக்கிறார்கள் என்பது நிதர்சனமான உண்மை.

மேலும் படிக்க கீழே உள்ள சுட்டியை சுட்டவும்.