Friday 28 April 2017

ஏர்முனை நாகரீகம்(கவிதை)


siragu-Naanjil-nadu-fi

காலம் தோறும் வெயில் சாரலில்
எங்கள் வியர்வை குளியல்
வைரத் துளிகளையும் -வெண்
முத்துத் துளிகளையும் உதிர்க்கும்
எங்கள் கருமைத் தோள்கள்

செம்மண் புழுதியும்; கருமண் புழுதியும்

நாங்கள் நாள்தோறும் உடுத்தும் உடைகள்

மேலும் படிக்க கீழே உள்ள சுட்டியை சுட்டவும்.
http://siragu.com/%E0%AE%8F%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A9%E0%AF%88-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%95%E0%AE%B0%E0%AF%80%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%88/

Wednesday 26 April 2017

தமிழ்ப் படைப்புலகில் எழுத்தாளர் ஜெயகாந்தன்


05_D_Jayakanthan_vg

எழுத்தாளர் ஜெயகாந்தன் தமிழ்ப் படைப்புலகின் மிகச் சிறந்த அடையாளம். அவருக்கு முன்னும் அவருக்குப் பின்னும் எவ்வெழுத்தாளரும் அடைய முடியாத உயரங்களை, தனித்தன்மைகளை, புதுமைகளை  வல்லமைகளை அவர் செய்தார் அல்லது அவரின் எழுத்துகள் செய்தன.


சிலப்பதிகாரமும் மணிமேகலையும் இரட்டைக்காப்பியங்கள் என்று அழைக்கப்பெறுகின்றன. சிலப்பதிகாரக் கதையின் தொடர்ச்சி மணிமேகலைக் காப்பியம். சிலப்பதிகாரக் கதையில் கோவலன், கண்ணகி ஆகியோர் வாழ்நாளின் இறுதியைத் தொட்டுவிடுகின்றனர். முக்கியப் பாத்திரங்களுள் ஒன்றான மாதவி மட்டும் என்ன ஆனாள் என்பது தெரியாமல் சிலப்பதிகாரம் முற்றுப் பெற்றுவிடுகிறது. கோவலன், கண்ணகி இறப்பிற்குப் பின்னான மாதவியின் வாழ்க்கையை விரிக்க முயன்று மணிமேகலையின் கதையை வளர்க்கிறது மணிமேகலைக் காப்பியம். ஒரு பாத்திரம் அழிந்து கரைந்து போகும்வரை படைப்பாளனால் அப்பாத்திரம் வளர்த்தெடுக்கப்பட்டுக்கொண்டே இருக்கிறது.

மேலும் படிக்க கீழே உள்ள சுட்டியை சுட்டவும்.

http://siragu.com/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B2%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%8E%E0%AE%B4%E0%AF%81/

Tuesday 25 April 2017

பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம்


ஏப்ரல் மாதம் இரு பெரும் கவிஞர்களின் பிறந்த நாள். ஆசிரியருக்கும், மாணவருக்கும் ஒரே மாதத்தில் பிறந்த நாள்!! அவர்கள் புரட்சிக்கவிஞர் பாரதிதாசனும் அவரின் மாணவராகிய பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரமும்!

Siragu-pattukottai-kalyanasundaram2

இருவரும் புரட்சிகரக் கருத்துகளை இந்தத் தமிழ் மண்ணில் தங்கள் கவிதைகள் மூலம் ஆழமாக ஊன்றிவிட்டுச் சென்றவர்கள். திராவிட இயக்க கருத்துகளின் மறுவடிவமே புரட்சிக்கவிஞர் பாரதிதாசனின் கவிதைகள் என்றால் அது மிகையன்று. அதேப்போல பொதுவுடமை தத்துவங்களின் ஊற்றாக பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரத்தின் கவிதைகள் இருந்தது என்றால் அது மிகையன்று.


பட்டுக்கோட்டை அவர்கள் புரட்சிக்கவிஞர் அவர்களின் மாணவர். 1952 ஆம் ஆண்டு பாண்டிச்சேரி சென்று பாரதிதாசனிடம் தமிழ் பயின்றார். பின்னர் அவர் நடத்திய குயில் இதழின் உதவி ஆசிரியராகவும் பணியாற்றினார்.

மேலும் படிக்க கீழே உள்ள சுட்டியை சுட்டவும்.

Sunday 23 April 2017

இந்தித்திணிப்பு ஒரு சர்வாதிகாரம்


Siragu hindhi1

இந்தியாவின் சிறப்பே, அதனுடைய பன்முகத்தன்மை தான். அதனை அழிக்கும் வேலையில், பாசக அரசு மும்முரமாக இறங்கி இருக்கிறது என்பது வெட்டவெளிச்சமாகிறது. மத்திய அரசு மறுபடியும் எடுத்திருக்கும் இந்த இந்தித்திணிப்பு மீண்டும் ஒரு மாபெரும் புரட்சிக்கு வித்திடும் என்பதே உண்மை. நாடு முழுவதும் இந்தியை கட்டாயமாக்குவோம் என்ற முனைப்பில் இறங்கியிருக்கிறது மத்திய பாசக அரசு. 1968 -ஆம் ஆண்டு கொண்டுவரப்பட்ட மும்மொழிக்கொள்கையை அமல்படுத்த துடித்துக் கொண்டிருக்கிறது மதவாத அரசு.


நாடாளுமன்றத்தில் அதிகாரப்பூர்வ மொழிகள் பற்றி பரிந்துரைகள் அளிப்பதற்கு குழு ஒன்று அமைக்கப்பட்டது. அக்குழு கடந்த காங்கிரசு ஆட்சியில் அமைக்கப்பட்டது என்றாலும், தற்போது 117 பரிந்துரைகளை தற்போது கொடுத்துள்ளது. அதில் சிலவற்றை குடியரசுத் தலைவர் நிராகரித்து இருக்கிறார். சிலவற்றிற்கு ஒப்புதல் அளித்துள்ளார்.

மேலும் படிக்க கீழே உள்ள சுட்டியை சுட்டவும்.

Wednesday 19 April 2017

எளியோர் இனமே எழுக! (கவிதை)


Siragu-tamilan


வலியோர் கொடுஞ்செயல் அறவே ஒழிந்திட
எளியோர் இனமே எழுக!
வலியார் கரங்குவியு மதிகார மதனை
உடைத்திட வீறுடன் எழுக!
எளியோர் எளிமை தனைஎடை போட்டு
ஏய்க்கும் அதிகார வர்க்க
அரசியல் நிலைமை அறவே ஒழிந்திட
எளியோர் இனமே எழுக!

சனநாயக போர்வையில் ஏதேச் சதிகாரம்
புரியும் அரசினை எதிர்த்து
சனநாயக முறையினை மீட்கும் “மக்கள்

புரட்சியை” நோக்கி எழுக!

மேலும் படிக்க கீழே உள்ள சுட்டியை சுட்டவும்.

http://siragu.com/%E0%AE%8E%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%8B%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%87-%E0%AE%8E%E0%AE%B4%E0%AF%81%E0%AE%95-%E0%AE%95%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%88/

Tuesday 18 April 2017

புரிதல் (சிறுகதை)


Siragu-mannichchidunga-article-fi.jpg

நேற்று இரவிலிருந்தே அகிலனுக்கு மனம் சரியில்லை, மனைவி செல்வி மருத்துவரிடம் சென்று வந்தவுடன் சொன்ன விசயம் தான் காரணம்,
‘ஏங்க, நான் டாக்டரிடம் போய் வந்தேன், உங்களை வந்து பாக்க சொன்னாங்க..’
‘ ஏன் … என்னாச்சு..இப்படி தலை கால் புரியாம சொல்லாதே, விவரமா சொல்லு’
‘ ஒண்ணுமில்லையாம், கொஞ்சம் பலகீனமாக இருக்கேனாம். இரும்புச்சத்து குறைவா இருக்காம், டானிக், மாத்திரை எல்லாம் கொடுத்திருக்காங்க… அவ்வளவு தான், நான் நேத்தே உங்களை கூப்பிட்டேன்.. நீங்க ஆபிசல வேலை அதிகம், நீயே போயிட்டு வந்துடுனு சொன்னீங்க, டாக்டர் என்னான்னா, தனியாவா வந்தீங்க… யாரையாவது கூட்டிட்டு வந்திருக்கலாமே, சரி.. நாளை நீங்கள் வர வேண்டாம், உங்கள் கணவரை வந்து என்னைப் பாக்கச் சொல்லுங்க.. அப்படினு சொன்னாங்க..! ‘

‘ ஓ.. ஏன் அப்படி சொன்னாங்க… நாளை காலையில போலாமா’

மேலும் படிக்க கீழே உள்ள சுட்டியை சுட்டவும்.

Monday 17 April 2017

காலம் கனியும்!


siragu-image1

எந்த ஒரு செயலாக இருந்தாலும் சரி, நாம் அதில் எதிர்பார்ப்பது வெற்றி ஒன்றை மட்டும்தான். புதிதாகத் துவங்கிய தொழிலாக இருக்கட்டும், முதற் முயற்சியிலேயே சென்ற வேலைக்கான நேர்முகத் தேர்வாக இருக்கட்டும், பணியில் முன்னேற்றம், இப்படி எல்லாவிதமான செயல்களிலும் மனம் விரும்புவது வெற்றியைத்தான். வெற்றி கிடைக்கவேண்டும் என்பதே எல்லாருடைய எண்ணமும் அதில் தவறேதும் இல்லை, ஆனால் எனக்கு இன்றிரவே வேண்டும்! அடுத்த நொடியே வேண்டும்! என்று எண்ணுவது தான் அனைத்துப் பிரச்சனைகளுக்கும் வழிவகுக்கிறது.

மேலும் படிக்க கீழே உள்ள சுட்டியை சுட்டவும்.

Sunday 16 April 2017

ஆஸ்திரேலியப் பழங்குடியினருக்கும் தமிழருக்கும் தொடர்புண்டா?

தொல்லியல் மற்றும் மானுடவியல் துறையினர் குறிக்கும் வரலாற்றுக் காலம் என்பது, பொதுவாக இறுதியான உறைபனிக் காலத்தின் (last glacial period) முடிவான சுமார் 10,000 ஆண்டுகளுக்குப் பின்னர் உள்ள காலம். இக்காலத்தில் இருந்து நமக்கு காலக்குறிப்புகளைக் கொண்டு கணக்கிட்டு, மனித வரலாற்றைக் கட்டமைக்க உதவும் காலக்குறிப்புத் தடயங்களை ஏதோ ஒருவகையில் அக்காலத்தில் வாழ்ந்த மக்கள் விட்டுச் சென்றுள்ளார்கள். வரலாற்றுக் காலத்திற்கும் முற்பட்டு வாழ்ந்தவர்களைப்  பற்றி நாம் அறிவதற்கு,  தங்கள் வாழ்வின் எச்சங்களாக அவர்கள் விட்டுச் சென்றவையாக அகழாய்வின் போது கிடைக்கும் சான்றுகளை கதிரியக்கக்கரிமக் காலக்கணிப்பு (radiocarbon dating); வெப்பஒளிர்வு காலக்கணிப்பு (thermoluminescence dating) போன்ற அறிவியல் ஆய்வுகளுக்கு உட்படுத்தி காலத்தைக் கணிக்க வேண்டியுள்ளது. தொல்லியல்  தடயங்களையும், ஆய்வின் முடிவாகக் கிடைக்கும் காலத்தையும் இணைத்து அவர்களது வாழக்கைமுறையைக் குறித்து நாம் அறிய முயல்கிறோம்.

மனித வரலாறு அறிவதில் மரபணுவியலின் பங்கு:

Close View of a DNA Strand


தொல்லியல் அகழாய்வுத் துறையினர் போலவே உயிரியல் ஆய்வாளர்களும் மரபணு ஆய்வு போன்ற அறிவியல் ஆய்வுகள் வழியாக வரலாற்றுக்கு முற்பட்ட காலத்தினர் குறித்த தகவல்களை அறியத் தருகிறார்கள்.  இத்தகைய மரபணு ஆய்வுகளில், ஆணின் Y – குரோமோசோம் (chromosome) டி.என்.ஏ. வழியாகக் கண்டறியப்படுவது ‘தந்தை வழி மரபு’ (patrilineal line studied by Y – DNA) என அறியப்படுகிறது. பெண்கள் வழியில் மூதாதையர் குறித்து அறிய ‘மைட்டோகாண்ட்ரிய டி.என்.ஏ.’ (mitochondrial DNA/mtDNA) ஆய்வுகள் செய்யப்படுகின்றன.

மேலும் படிக்க கீழே உள்ள சுட்டியை சுட்டவும்.

Thursday 13 April 2017

செட்டிநாட்டுக் கவிஞர்கள்

Siragu chettinadu poet1
செட்டிநாடு பற்பல கவிஞர்களால் பொலிவு பெற்று வருகிறது. சங்ககாலத்தில் கணியன் பூங்குன்றனார், ஒக்கூர் மசாத்தியார், பாரி மகளிர், கபிலர் போன்ற புலவர்கள் இவ்வகையில் எண்ணத்தக்கவர்கள். நாவுக்கரசர் திருப்புத்தூர் வருகைத் தந்துப் பதிகம் பாடியுள்ளார். ஞான சம்பந்தர் செட்டி நாட்டுத் தேவாரத் தலங்களைப் பாடியுள்ளார்.
பட்டினத்தார், பாடுவார் முத்தப்பர் போன்ற புலவர்கள் பக்தி இலக்கிய கால புலவர்களாக அமைகின்றனர். கம்பர் நாட்டரசன் கோட்டையில் தன் நிறைவுகால வாழ்வை வாழ்ந்துள்ளார். இதனைத் தொடர்ந்து சிற்றிலக்கிய காலத்தில் பல புலவர்கள் சிற்றிலக்கிய வகைகளைப் பாடியுள்ளனர். குறிப்பாக குன்றக்குடி முருகன் மீது பல சிற்றிலக்கியங்கள் பாடப்பெற்றன.
மேலும் படிக்க கீழே உள்ள சுட்டியை சுட்டவும்.

Tuesday 11 April 2017

தற்போதைய தேவை கூட்டணி


Siragu mega team1

‘வேற்றுமையில் ஒற்றுமை’ என்ற இந்திய கொள்கைக்கு எதிராக இப்போதிருக்கும் பா.ச.க ஆட்சி செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. இந்தியா தற்போது மிகப்பெரிய அழிவு சூழலில் சிக்கி தத்தளித்துக் கொண்டிருக்கிறது என்பதில் சிறிதும் சந்தேகமில்லை. மத்திய மதவாத பா.ச.க அரசு, ஆர்.எஸ்.எஸ்.-ன் ஆலோசனை பேரில் மிகப் பல மக்கள் விரோத செயல்களிலும், மதவெறியைத் தூண்டும் விதத்திலும், சிறுபான்மையினர் பாதுகாப்பின்மையிலும், பெண் விடுதலைக்கு எதிராகவும், ஒடுக்கப்பட்ட மக்களுக்கு அநீதி இழைக்கவும், மாநில உரிமைக்கு பங்கம் விளைவிக்கும் விதமாகவும் செயல்பட்டுக் கொண்டிருக்கிறது.

நம் தேசம் ஒரு நாடு அல்ல. பல மொழிகள், பல இனங்கள், பல பண்பாடுகள், பல வாழ்க்கை முறைகள் என வாழ்ந்து கொண்டிருக்கும் மக்களைக் கொண்ட ஒரு துணைக்கண்டம். இதில் ஒரே மொழி, ஒரே மதம், ஒரே பண்பாடு என்ற குரலில், ஒரே பரந்த இந்து தேசமாக மாற்றுவதற்கு பா.ச.க துடித்துக் கொண்டிருக்கிறது. அதற்கான முயற்சிகளிலும் இறங்கி வேலை செய்ய ஆரம்பித்திருக்கிறது. ஒவ்வொரு மாநிலமாக தங்கள் ஆட்சி அதிகாரத்தை பயன்படுத்தி, ஆதிக்கமுறையை செலுத்தி வருகிறது. அதற்கு தக்க சான்றுகளாக தற்போது நடந்த கோவா, மணிப்பூர் சட்டசபைத் தேர்தல்கள்.

மேலும் படிக்க கீழே உள்ள சுட்டியை சுட்டவும்.

Monday 10 April 2017

இந்தியாவில் ஓரினச்சேர்க்கையாளர்களின் உரிமைகள்


Siragu gay1

இந்தியாவைப் பொறுத்தவரை ஓரினச் சேர்க்கையாளர்கள் மிகப் பெரிய ஒடுக்குதலுக்கு உண்டாகின்றனர். உலகில் தென் ஆப்பிரிக்காதான் 1994 ஆம் ஆண்டு, ஓரினச் சேர்க்கையாளர்கள் (gays , lesbians) இவர்களின் உரிமைகளுக்குச் சட்டம் மூலமாக பாதுகாப்பு வழங்கியது. அதனைத் தொடர்ந்து கனடா, பிரான்ஸ், லூஸேம்போர்க், ஹொலண்ட், ஸ்லோவேனியா, ஸ்பெயின், நோர்வே, டென்மார்க், ஸ்வீடன் மற்றும் நியூஸிலண்ட் அதே போன்று சட்டங்கள் இயற்றின. இந்தியாவைப் பொறுத்தவரை ஓரினச்சேர்க்கையாளர்களுக்கு எந்தவிதச் சட்டப் பாதுகாப்பும் இல்லை.


யு.கே போன்ற நாடுகள் தங்கள் சட்டங்களில் ஓரினச்சேர்க்கையாளர்களுக்கு சற்று தளர்வு தந்து, சமூகத்திலும் அவர்களைப் பற்றிய புரிதலை ஏற்படுத்தியிருக்கின்றது. ஸ்பெயின், பெல்ஜியம், கனடா, நெதர்லாண்ட் போன்ற நாடுகள் ஓரினச்சேர்க்கையாளர்களின் திருமணங்களுக்கு ஒப்புதல் வழங்கி இருக்கின்றன. ஆனால் உலகின் பல நாடுகளில் இன்றும் ஓரினச்சேர்க்கையாளர்களின் திருமணம் தண்டனைக்குரிய குற்றம். இந்தியாவில் பலர் ஓரினச்சேர்க்கை என்பது தங்கள் மத நம்பிக்கைக்கு எதிராக இருப்பதாகவும், அடுத்த தலைமுறையினர் உருவாக வாய்ப்பு இல்லை என்பதற்காகவும் மறுக்கின்றனர்.

மேலும் படிக்க கீழே உள்ள சுட்டியை சுட்டவும்.

Sunday 9 April 2017

சிறகுகளின் இலக்கிய மேடை(கவிதை)

tamil mozhi fi


பொற்கனகக் கோட்டுக் கதிர்மழைச் சாரல்
பொழியும் காலைப் பொழுதில் எங்கள்
இன்னிசை கானம் காற்றினில் பிறக்கும்
இசையருவி பொழியும்; ராகம் இசைத்
தாளம் மெட்டுச் சந்தம் விருத்தம்
தரவு வண்ணம் “பா”வினம் துறைகள்
இவையா வையும் நாங்கள் கற்கவில்லை
இலக்கணம் போற்றும் மோனை எதுகை
இயைபு முற்று தொடை யாவுமெங்கள்
இலக்கிய சுவைக்குத் தடையேது மில்லை

வண்ணக் கூத்தாடும் சோலையும் தென்றல்
வீசுங் கானகமும் எங்கள் இலக்கிய
அரங்கேற்ற மேடை; எங்கள் இலக்கிய
ஆய்வு வரையறை யற்றது; அதன்மொழி

மேலும் படிக்க கீழே உள்ள சுட்டியை சுட்டவும்.
http://siragu.com/?p=26648

பகல்நேரத்து ஆந்தை(சிறுகதை)


Siragu pagal neraththu aandhai2

பொதுவாக இரவாடிப் பறவைகளை மனிதர்கள் அதிகம் கண்டுகொள்வதில்லை. அவைகளை விரும்புவதுமில்லை. பகல்நேரத்து பறவைகளைத்தான் அவர்கள் அதிகம் நேசிக்கிறார்கள். ஏனென்றால் பகலில் விழித்திருந்து இரவில் உறங்குவது அவர்களின் வழக்கம். கிளி, புறா, மைனா போன்ற பறவைகள் பகலாடிகள் அதனால் தங்கள் கண்ணில்படும் அவைகளை அவர்கள் பைங்கிளி, மாடப்புறா, அழகுமைனா என்றெல்லாம் கொஞ்சுகிறார்கள். அந்தப்பறவைகளைக் கொஞ்சுவது போன்று, மனிதர்கள் தன்னையும் கொஞ்சவேண்டும் என ஆந்தை ஒன்று ஏங்கியது. அதற்கு அது மனிதர்களின் கண்ணில்படும் விதத்தில் பகலாடிப் பறவையாக நடமாட வேண்டும். அதுவுமல்லாமல் உலகமே பகலில் விழித்திருந்து இரவில்தான் உறங்குகிறது. அப்படி இருக்கும்போது நாம்மட்டும் ஏன் இரவில் அலைந்து திரியவேண்டும் என்றும் அது நினைத்தது. அது தனது விருப்பத்தை கடவுளிடம் வரமாகக் கேட்டது. கடவுளும் வரம் தந்தார். அப்போது முதல் அது பகலாடிப் பறவையாக மாறிப்போனது.

மேலும் படிக்க கீழே உள்ள சுட்டியை சுட்டவும்.

Monday 3 April 2017

செட்டிநாடும் செந்தமிழும் தந்த சோம. லெ


Siragu-chettinaadum-sentamilum1.jpg

‘‘எல்லா நாடும் தன் நாடாய், எங்கும் சுற்றி ஆராய்ந்து
நல்லார் பலரின் கருத்தையெலாம் நாளும் தேடித் தமிழ்மக்கள்
பல்லார் அறியச் செந்தமிழில் பண்பாய் உரைக்கும் என்நண்பன்
சொல்லால் அமுதை வெற்றிடுவோன் சோம லக்கு மணன்வாழ்க’’


என்று கவிமணி தேசிக விநாயகம் பிள்ளை ‘‘சோம.லெ’’ எனப்படும் சோம.லட்சுமணன் அவர்களைப் பாராட்டுகிறார். இப்பாடலில் பயண இலக்கிய முன்னோடியாக விளங்கியவர் சோம. லெ. என்ற குறிப்பு இடம்பெற்றுள்ளது. ‘‘பல்லார் அறியச் செந்தமிழில் பண்பாய் உரைக்கும் என் நண்பன்” என்று கவிமணி தன் நண்பனாக செந்தமிழ் வளர்ப்பவராக சோம .லெ அவர்களைக் காணுகிறார். சோம.லெ அவர்களுக்கும் செந்தமிழுக்கும் நீங்காத தொடர்பு உண்டு. அவர் எழுதிய செட்டிநாடும் செந்தமிழும் என்ற நூல் நகரத்தார்தம் தமிழ்ப்பணிகளை இனிய தமிழில் கணியன் பூங்குன்றனார் காலம் முதல் கவிஞர் கண்ணதாசன் காலம் வரையான கால எல்லையில் விவரிப்பதாக உள்ளது. இதே நூலின் தடத்தில் கவிஞர் கண்ணதாசனுக்குப் பின்னான காலத்தை எழுதுவதற்கான களம் விரிந்து கிடக்கிறது.

மேலும் படிக்க கீழே உள்ள சுட்டியை சுட்டவும்.

Sunday 2 April 2017

அச்சமற்ற பெண்


Siragu fearless girl2

அமெரிக்க மக்களைக் கவர்ந்த காளைக்கும் ஒரு போட்டி வந்து சேர்ந்தது… அதுவும் எதிர்பாராதவிதமாக ஒரு சின்னஞ்சிறுமியின் வடிவில்!!!!!


இங்குக் குறிப்பிடப்படும் காளை, “சார்ஜ்ஜிங் புல்” (Charging Bull) என அழைக்கப்படும் “பாயும் காளை” உருவில் உள்ள நியூயார்க் நகரின் வெண்கலச் சிற்பம். நியூயார்க் நகருக்கு வரும் சுற்றுலாப்பயணிகள் பார்க்கவிரும்பும் இடங்கள் என்ற பட்டியலில் இடம் பிடித்துள்ள இந்தப் புகழ்பெற்ற “வால் ஸ்ட்ரீட் புல்” (Wall Street Bull) சிற்பம் 3,200 கிலோகிராம் எடையும், 11 அடி உயரமும், 18 அடி நீளமும் கொண்ட ஒரு மிகப் பெரிய உருவம். இந்தப் பாயும் காளையை உருவாக்கிய சிற்பி “ஆர்ட்டுரோ டி மோடிக்கா” (Arturo Di Modica) என்பவர் (இந்தச் சிற்பம் குறித்த விரிவான சிறகு இதழின் கட்டுரையை http://siragu.com/?p=19567 பக்கத்தில் காணலாம்).

மேலும் படிக்க கீழே உள்ள சுட்டியை சுட்டவும்.