Sunday 9 April 2017

சிறகுகளின் இலக்கிய மேடை(கவிதை)

tamil mozhi fi


பொற்கனகக் கோட்டுக் கதிர்மழைச் சாரல்
பொழியும் காலைப் பொழுதில் எங்கள்
இன்னிசை கானம் காற்றினில் பிறக்கும்
இசையருவி பொழியும்; ராகம் இசைத்
தாளம் மெட்டுச் சந்தம் விருத்தம்
தரவு வண்ணம் “பா”வினம் துறைகள்
இவையா வையும் நாங்கள் கற்கவில்லை
இலக்கணம் போற்றும் மோனை எதுகை
இயைபு முற்று தொடை யாவுமெங்கள்
இலக்கிய சுவைக்குத் தடையேது மில்லை

வண்ணக் கூத்தாடும் சோலையும் தென்றல்
வீசுங் கானகமும் எங்கள் இலக்கிய
அரங்கேற்ற மேடை; எங்கள் இலக்கிய
ஆய்வு வரையறை யற்றது; அதன்மொழி

மேலும் படிக்க கீழே உள்ள சுட்டியை சுட்டவும்.
http://siragu.com/?p=26648

No comments:

Post a Comment