Monday 10 April 2017

இந்தியாவில் ஓரினச்சேர்க்கையாளர்களின் உரிமைகள்


Siragu gay1

இந்தியாவைப் பொறுத்தவரை ஓரினச் சேர்க்கையாளர்கள் மிகப் பெரிய ஒடுக்குதலுக்கு உண்டாகின்றனர். உலகில் தென் ஆப்பிரிக்காதான் 1994 ஆம் ஆண்டு, ஓரினச் சேர்க்கையாளர்கள் (gays , lesbians) இவர்களின் உரிமைகளுக்குச் சட்டம் மூலமாக பாதுகாப்பு வழங்கியது. அதனைத் தொடர்ந்து கனடா, பிரான்ஸ், லூஸேம்போர்க், ஹொலண்ட், ஸ்லோவேனியா, ஸ்பெயின், நோர்வே, டென்மார்க், ஸ்வீடன் மற்றும் நியூஸிலண்ட் அதே போன்று சட்டங்கள் இயற்றின. இந்தியாவைப் பொறுத்தவரை ஓரினச்சேர்க்கையாளர்களுக்கு எந்தவிதச் சட்டப் பாதுகாப்பும் இல்லை.


யு.கே போன்ற நாடுகள் தங்கள் சட்டங்களில் ஓரினச்சேர்க்கையாளர்களுக்கு சற்று தளர்வு தந்து, சமூகத்திலும் அவர்களைப் பற்றிய புரிதலை ஏற்படுத்தியிருக்கின்றது. ஸ்பெயின், பெல்ஜியம், கனடா, நெதர்லாண்ட் போன்ற நாடுகள் ஓரினச்சேர்க்கையாளர்களின் திருமணங்களுக்கு ஒப்புதல் வழங்கி இருக்கின்றன. ஆனால் உலகின் பல நாடுகளில் இன்றும் ஓரினச்சேர்க்கையாளர்களின் திருமணம் தண்டனைக்குரிய குற்றம். இந்தியாவில் பலர் ஓரினச்சேர்க்கை என்பது தங்கள் மத நம்பிக்கைக்கு எதிராக இருப்பதாகவும், அடுத்த தலைமுறையினர் உருவாக வாய்ப்பு இல்லை என்பதற்காகவும் மறுக்கின்றனர்.

மேலும் படிக்க கீழே உள்ள சுட்டியை சுட்டவும்.

No comments:

Post a Comment