Tuesday 11 April 2017

தற்போதைய தேவை கூட்டணி


Siragu mega team1

‘வேற்றுமையில் ஒற்றுமை’ என்ற இந்திய கொள்கைக்கு எதிராக இப்போதிருக்கும் பா.ச.க ஆட்சி செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. இந்தியா தற்போது மிகப்பெரிய அழிவு சூழலில் சிக்கி தத்தளித்துக் கொண்டிருக்கிறது என்பதில் சிறிதும் சந்தேகமில்லை. மத்திய மதவாத பா.ச.க அரசு, ஆர்.எஸ்.எஸ்.-ன் ஆலோசனை பேரில் மிகப் பல மக்கள் விரோத செயல்களிலும், மதவெறியைத் தூண்டும் விதத்திலும், சிறுபான்மையினர் பாதுகாப்பின்மையிலும், பெண் விடுதலைக்கு எதிராகவும், ஒடுக்கப்பட்ட மக்களுக்கு அநீதி இழைக்கவும், மாநில உரிமைக்கு பங்கம் விளைவிக்கும் விதமாகவும் செயல்பட்டுக் கொண்டிருக்கிறது.

நம் தேசம் ஒரு நாடு அல்ல. பல மொழிகள், பல இனங்கள், பல பண்பாடுகள், பல வாழ்க்கை முறைகள் என வாழ்ந்து கொண்டிருக்கும் மக்களைக் கொண்ட ஒரு துணைக்கண்டம். இதில் ஒரே மொழி, ஒரே மதம், ஒரே பண்பாடு என்ற குரலில், ஒரே பரந்த இந்து தேசமாக மாற்றுவதற்கு பா.ச.க துடித்துக் கொண்டிருக்கிறது. அதற்கான முயற்சிகளிலும் இறங்கி வேலை செய்ய ஆரம்பித்திருக்கிறது. ஒவ்வொரு மாநிலமாக தங்கள் ஆட்சி அதிகாரத்தை பயன்படுத்தி, ஆதிக்கமுறையை செலுத்தி வருகிறது. அதற்கு தக்க சான்றுகளாக தற்போது நடந்த கோவா, மணிப்பூர் சட்டசபைத் தேர்தல்கள்.

மேலும் படிக்க கீழே உள்ள சுட்டியை சுட்டவும்.

No comments:

Post a Comment