Wednesday 29 November 2017

எது கவிதை? (கவிதை)


Siragu chettinadu poet1

புதுமைதான் கவிதை என்றால்
ஒவ்வொரு விடியலும் கவிதைதான்!
வேதனை தான் கவிதை என்றால்
ஒவ்வாரு பிரிவும் கவிதைதான்!

இயற்கைதான் கவிதை என்றால்
ஒவ்வாரு சீற்றமும் கவிதைதான்!

காதல் தான் கவிதை என்றால்

மேலும் படிக்க கீழே உள்ள சுட்டியை சுட்டவும்.
http://siragu.com/%E0%AE%8E%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%95%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%88-%E0%AE%95%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%88/

செம்மொழி இலக்கியப் பெண் புனைவுகள்


siragu semmoli2

சங்க இலக்கியங்களில் பல புனைவுகள் இடம்பெற்றுள்ளன. குறிப்பாக சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ள பெண் குறித்தான புனைவுகள் கூர்ந்து கவனிக்கத்தக்கன. பெண்ணியம் விழித்து எழுந்து மூன்றாம் அலையாய்ப் பரவும் இக்கால எல்லையில் அப்புனைவுகளைப் பெண்ணிய நோக்கில் ஆராய்வது என்பது புதிய வெளிச்சத்தைப் பரப்பும் என்பதில் ஐயமில்லை.
சங்கஇலக்கியங்களில் காணப்படும் பெண் சார்ந்த புனைவுகளாகப் பின் வருவனவற்றைக் கொள்ள இயலும். கொல்லிப்பாவை, பெண்கொலை புரிந்த நன்னன், திருமாவுண்ணி, அன்னிமிஞிலி ஆகிய புனைவுகளில் பெண் பாத்திரங்கள் மையமாக அமைகின்றன. இக்கதைகள் வாய்மொழிப் புனைவுகளாகும். இவற்றை உருவாக்கியவர்கள் யார் என்று அறியாத நிலையில் இவை எவரால் சொல்லப்பட்ட புனைவுகள் என்பதை அறிய இயலாத நிலை உள்ளது. இவை உவமைகளாக, எடுத்துரைப்புகளாக இருப்பதை எண்ணிப் பார்க்குங்கால் தமிழ்ச் சமுதாயத்தில் இவை வழிவழியாகப் பயன்படுத்தப் பெற்று வந்துள்ளன என்பதை மட்டும் உணரமுடிகின்றது.

தற்காலத்தில் தொன்மம் சார்ந்த புனைவுகளிலும் பெண்ணிய ஆய்வு மேற்கொள்ளப்பெறுகின்றது. இதுகுறித்த பின்வரும் ஆய்வாளரின் கருத்து நோக்கத்தக்கது. ‘‘தற்போதைய காலக்கட்டத்தில் பெண்ணிய இயக்கம் சமுதாய அறிவியல், தொல்லியல், தொல்மானிடவியல், இறையியில் போன்ற பலதுறைகளைக் கவனித்து வருகிறது. அதே நேரத்தில் அவற்றில் இடம்பெற்றுள்ள தொன்மக் கூறுகளை பெண்மையத்துடன் ஆராயத் தலைப்படுகிறது. அவற்றில் காணப்படும் ஆ;ண் மையமிட்ட  அரசியலை, ஆண்  பாத்திரங்களை அவை குறித்த சொல்லாடல்களை வெளிப்படுத்த பெண்ணிய நோக்கு முன்வருகிறது. இத்தொன்மங்களில் உள்ள பெண் மௌனம்,  பெண்ணுக்கான இடமில்லா நிலை போன்றனவும் நுணுக்கமாக கவனிக்கப்படுகின்றன என்ற கருத்தின் வழியாக பெண்ணியம் தொன்மங்களிலும் தன் ஆய்வினைச் செலுத்திவருகிறது என்பது உணரப்படுகின்றது.

மேலும் படிக்க கீழே உள்ள சுட்டியை சுட்டவும்.

Tuesday 28 November 2017

இரு பாதைகளும் ஒரு பயணமும்


siragu iru paadhaigalum2

அமெரிக்கப் பண்பாட்டில் மிகவும் போற்றப்படுவது ஒருவர் தனித்தன்மையுடன் விளங்கும் பண்பு (empowered individualism). ஒருவரது தனித்தன்மை மிகவும் ஊக்கப்படுத்தப்படும், பாராட்டப்படும் (appreciation of / encouraging individualism, choice, and empowerment). குழந்தைகளை வளர்க்கும் பொழுதே நீ இவ்வாறு பிற்காலத்தில் உருவாக வேண்டும் என்று போதிக்கப்படுவதில்லை. வளர்ந்த பிறகு நீ என்னவாக விளங்க வேண்டும் என்பது உனது விருப்பம் என்றுதான் அவர்களிடம் சிறு வயது முதல் கேள்விகள் வைக்கப்படும். புதுமைகளைப் படைப்பதும், அதற்காகத் துணிச்சலாக மாறுபட்ட வாழ்க்கை முறையையோ கல்வியையோ சோதனை செய்வதும் உற்சாகப்படுத்தப்படும்.


பலர் சென்ற வழி இது, இதில் வெற்றி நிச்சயம், தடைகளும் தடங்கல்களும் குறைவு, வாழ்க்கை சீராக இருக்கும் என்ற கோணத்தில் பிள்ளைகளை வளர்ப்பது இந்தியப் பண்பாடு. தங்கள் பிள்ளைகள் மருத்துவராக வேண்டும், பொறியாளராகத் தொழில் செய்ய வேண்டும், சமூகத்தில் அதிகம் மதிக்கப்படும் புகழ் செல்வம் தரும் கல்வியைத் தேர்வு செய்ய வேண்டும் என்ற எதிர்பார்ப்பில் வளர்ப்பது அமெரிக்காவில் இருக்கும் இந்தியப் பின்புலம் கொண்ட பெற்றோர்களின் அணுகுமுறையாக இருக்கும். அவ்வாறு தாங்கள் வளர்க்கப்பட்டு, வழி நடத்தப்பட்டு வந்ததால்தான் அயல்மண்ணில் அந்நாட்டு மக்களுக்கு இணையாக தங்களால் வாழ முடிகிறது என்பது அவர்கள் நடைமுறையில் அறிந்தது. தாங்கள் பெற்ற கல்வியும் வளர்ப்பும் தங்களை வாழ வைத்துள்ளது என்று அவர்கள் தங்கள் வாழ்வையே சான்றாக எடுத்துக் கொள்ளும் அவர்களது கோணத்தைக் குறை சொல்லவும் வழியில்லை. அவ்வாறு அவர்கள் வளர்க்கப்பட்ட முறை இந்தியப் பண்பாட்டுக் கூற்றின் அடிப்படையில் அமைந்தது. அத்துடன் அவ்வாறு வழிநடத்தும் முறையைப் பிள்ளைகளின் நல்வாழ்வில் அக்கறை கொண்ட பெற்றோரது கடமை எனப் பார்ப்பதும் இந்தியப் பண்பாட்டுக் கோணம்.

மேலும் படிக்க கீழே உள்ள சுட்டியை சுட்டவும்.

Sunday 26 November 2017

தமிழிசை அரங்குகள் வேண்டும்! (கவிதை)


tamil-mozhi-fi

தேனமிர்த மாம்தமி ழிசையை –நாம்
தீந்தமிழ் சொல்லா லன்றோ கேட்கிறோம்?
மேனாட்டு இசையால் தாய்மொழிச் சொற்கள்
மேன்புகழ் நலிந்து வாடக் காணவோ?
தமிழராம் நம்வீட்டில் நிகழும் -நல்ல
தமிழ்ப்பண் பாட்டை வளர்த்தெடுக்க நாளும்
தேனிசை சுரக்கும் பண்பாட்டு முறைபேணி
இசைத்தமிழ் காப்பதைக் கடமையாய்க் கொள்வோம்.

நாளும் வளர்தமிழ் முறைக்கு -நாம்
நல்ல தமிழ்த்தொண் டாகத் தமிழர்
அரங்குகள் எல்லாம் தமிழ்இசை முழக்கி

மேலும் படிக்க கீழே உள்ள சுட்டியை சுட்டவும்.
http://siragu.com/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%9A%E0%AF%88-%E0%AE%85%E0%AE%B0%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%B5%E0%AF%87%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81/

Thursday 23 November 2017

குறிஞ்சிப்பாட்டில் பெண்ணின் ஆளுமைத்திறன்


Siragu-kurunjippattu2

ஆளுமைத்திறன் என்பது தான் சொல்ல வந்த செய்தியை உறுதியுடன் கூறுதல், நமக்கு என்ன தேவை என்பதை தயக்கமின்றி கூறுதல், தன் கோரிக்கை மறுக்கப்பட்டால் அதற்குரிய மாற்று முயற்சியைத் திட்டமிட்டு வைத்திருத்தல், மறுக்கப்படுகின்றபோது நிதானத்துடன் சமரசத்திற்கு தயாராதல். இவற்றைச் சரியாகக் கையாளுவதே ஆளுமைத்திறன் எனலாம். இங்கே கூறப்பட்ட இயல்புகளில் எதிலும் குறையாமல் செயல்பட்டவர்கள் குறிஞ்சிப்பாட்டுப் பெண்கள். குறிப்பாகத் தோழி. விளையாட்டுப் பெண்ணாக இருந்தாலும் பண்பாட்டுத் தளத்தின் ஆணிவேரை நன்கு அறிந்தவர்கள் தமிழ்ப் பெண்கள் என்று அறுதியிட்டுக் கூறும் கபிலரின் குரல்தான் தோழியின் வாயிலாக வெளிப்படுகிறது. பேசும் திறன், தான் சொல்ல வருகின்ற கருத்திற்குத் தக சூழல்களை உளப்படுத்தல், எதிர் நின்று கேட்பவர்களின் ஐயத்தை உணர்ந்து கொண்டு அதற்குரிய காரண காரியங்களை நிரல்பட மொழிதல், எதிர் உணர்வு அரும்பாமல் இதமாக எடுத்துரைத்தல் என்று எல்லா வகையிலும் தோழி பேசுகிறாள் என்றால் தோழியின் பேச்சு மட்டுமல்ல; ஒட்டு மொத்த தமிழ்ப் பெண்களின் அறிவார்ந்த பேச்சாற்றலை அறிந்த கபிலர், பெண்மையின் பேச்சாற்றலை உலகிற்கு வெளிப்படுத்தும் அற்புதப் படைப்பே குறிஞ்சிப்பாட்டுத் தோழி.

குறிஞ்சிப்பாட்டிலே நடக்கின்ற அத்துணைச் சொல் நாடகமும் தோழியின் சொல்லாற்றலே. பாட்டின் தொடக்கத்திலேயே, தான் சொல்லப் போகும் செய்தி தாய்க்குக் கோபத்தை உண்டுபண்ணக் கூடியது என்பதை அறிந்திருந்தும், கோபத்திற்கு ஆளாவோம் என்பது தெரிந்திருந்தும் அவள் கோபத்தினால் வரும் எதிர்வினையைத் தவிர்க்க, சிக்கலான செய்தியாக இருந்தும்கூட அதனை அவள் ஏற்றுக் கொள்ளும் வகையில் மேலாண்மைத் திறத்துடன் மொழிகின்றாள் தோழி.

மேலும் படிக்க கீழே உள்ள சுட்டியை சுட்டவும்.

Wednesday 22 November 2017

நவம்பர் 26


Siragu nov 26-1
நவம்பர் 26 1957 தமிழ்நாடு மறக்க முடியாத நாள்!!. ஆம் அன்று தான் தந்தை பெரியார் அவர்கள் சாதியைப் பாதுகாக்கும் அரசியல் சட்டப்பிரிவுகளை எரிக்க வேண்டும் எனும் போராட்டத்திற்கு அழைப்பு விடுத்தார்.
அந்தப் போராட்டத்தில் தந்தை பெரியாரின் தொண்டர்கள் 10000 பேர் பெருந்திரளாக அரசியல் சட்டத்தின் சாதியைப் பாதுகாக்கும் பக்கங்களைக் கொளுத்தினர். தமிழக காவல்துறை செய்வதறியாது 3000 பேரை கைது செய்தனர். அதில் பெண்களும், சிறுவர்களும் அடங்குவர்.
அரசியல் சட்ட எரிப்புப் போராட்டம் ஒரு ஊரில் ஒரு இடத்தில் என்ற அளவில் நடைபெறவில்லை.

‘விடுதலை’ நாளேட்டில் வந்த தகவல்படி, சென்னையில் – 35 இடங்கள், வடார்க்காடு மாவட்டம் – 30 இடங்கள், தென்னார்க்காடு மாவட்டம் – 26 இடங்கள், சேலம் மாவட்டம் – 41 இடங்கள், கோவை மாவட்டம் – 14 இடங்கள், இராமநாதபுரம் மாவட்டம் – 4 இடங்கள், மதுரை மாவட்டம் – 13 இடங்கள், நெல்லை மாவட்டம் – 8 இடங்கள், தர்மபுரி – 18 இடங்கள், செங்கல்பட்டு – 9 இடங்கள், கன்னியாகுமாரி – 5 இடங்கள், திருச்சிராப்பள்ளி – 107 இடங்கள், தஞ்சாவூர் – 161 இடங்கள், புதுச்சேரி – 6 இடங்கள், பெங்களூர் மற்றும் ஆந்திரா – 1 இடம்.

மேலும் படிக்க கீழே உள்ள சுட்டியை சுட்டவும்.

Wednesday 15 November 2017

தமிழ்க் கொடையாளர் மா.நன்னன்! (கவிதை)


Siragu tamil4

அள்ளி யள்ளிக் கொடுத்தாய் தமிழை
அன்பால் தமிழ்மொழி வளர்த்தாய் புலவ!
எண்ணும் எழுத்தும் ஓதுவித்து பாமரர்
ஏழைகள் தமிழ்படிப் பறிவுபெற உழைத்தாய்
கண்ணும் கருத்தாய் இருந்து அன்புடனே
கருத்தும் செயலாய் உழைத்தாய் புலவ!

தமிழ்நூல் போற்றும் நல்லுரை தந்து
தீந்தமிழ்ப் புகழை வளர்த்தாய் புலவ!
அன்பும் அறச்சீற்றம் கொண்டு உழைத்தாய்

மேலும் படிக்க கீழே உள்ள சுட்டியை சுட்டவும்.
http://siragu.com/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%8A%E0%AE%9F%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%BE-%E0%AE%A8%E0%AE%A9%E0%AF%8D/

Monday 13 November 2017

கொடுக்க மறந்தது!! (சிறுகதை)


Siragu kodukka marandhadhu1
ரம்யா கை ஒடிந்த மாதிரி இருந்தது. இருக்காதா பின்னே? வாட்ஸ் அப் பார்க்க முடியாம மொபைல் போனில் உள்ள சிம்மை தன்னுடன் கூட பணிப் புரியும் நந்தினிக்கு இரவல் கொடுத்து விட்டு இவள் அல்லவா திண்டாடுகிறாள். ”எல்லாம் பாஸ் வெங்கட்டால் வந்தது. அவர் ஆபிஸ் கணக்கில்  ஒரு சிம் கார்டை வாங்கிக் கொடுக்க வேண்டியதுதானே. அவர் நாசாமா போக” மனத்துக்குள் சபித்தாள்.
இரண்டு நாள் முன்னால் மாலை நாலு மணி இருக்கும். ஆடிட்டர்  வெங்கட் ரம்யாவைக் கூப்பிட்டுச் சொன்னார்.
”ரம்யா உங்கிட்டே இருக்கிற சிம்மை நந்தினிக்குக் கொடு. அவள் இரவு சென்னை போகிறாள், இண்டெர்நெட்டில் ஏதாவது பார்க்க வேண்டியிருக்கும்“.

”நான் ஃபேஸ் புக் பார்க்கணும், வாட்ஸ் அப் பார்க்கணும். எனக்கு வேண்டியிருக்குமே சார்.” மொபைல் சிம் கொடுப்பதைத் தவிர்க்கப் பார்த்தாள்.

மேலும் படிக்க கீழே உள்ள சுட்டியை சுட்டவும்.

Sunday 12 November 2017

மக்கள் பாதையின் மக்கள் மருந்தகம்

“திரு. சகாயம் IAS அவர்களின் வழிகாட்டுதலின் படி இயங்கும் “மக்கள் பாதை” நண்பர்கள் இணைந்து தமிழக மக்களுக்கு உன்னத நோக்கத்துடன் தரமான மருந்துகள் மிகக் குறைந்த விலையில் மத்திய அரசு அனுமதியுடன் சிவகங்கையில் முதல் JAN AUSHADHI MEDICAL STORE (மக்கள் மருந்தகம்) Generic Medical Shop துவங்கி உள்ளோம், இதை தமிழக மக்கள் பயன் படுத்திக்கொள்ளுங்கள். நீங்கள் மருத்துவரின் ஆலோசனையுடன் தங்களின் மருந்துப் பெயருடன் வாட்ஸ்அப் (9788052839) அல்லது svgjanaushadhi@gmail.comஎன்ற மின்னஞ்சலுக்கு அனுப்பவும். தங்கள் முகவரிக்கு அனுப்பி வைக்கிறோம். அனைத்து வகையான ஆங்கில மருந்துகளும் மிகக் குறைந்த விலையில் கிடைக்கும்.”

என்று தொடங்கி ஒரு நீண்ட செய்தி புலனத்திலும் (whatsapp), முகநூலிலும் (facebook) பலருக்கு அனுப்பப்பட்டு உள்ளது. அனுப்பப்பட்டுக் கொண்டும் இருக்கிறது. இச்செய்தியில், மருத்துவர்கள் எழுதிக் கொடுக்கும் மருந்துச் சீட்டில் மருந்து உற்பத்தி நிறுவனங்கள் சூட்டி உள்ள பெயரை எழுதுவதாகவும், அப்படி இல்லாமல் மருந்துகளின் பெயரை எழுதிக் கொடுக்கும் படி கேட்டுக் கொள்ள வேண்டும் என்றும் குறிப்பு உள்ளது. மேலும் உச்ச நீதிமன்றம் இதில் மிகுந்த அக்கறை கொண்டு உள்ளது என்றும் குறிப்பிடப்பட்டு உள்ளது.

Siragu makkal marundhagam3

மக்களுக்கு மலிவு விலையில் மருந்துகள் கிடைக்க வேண்டும் என்ற எண்ணத்துடன் செயல்படும் “மக்கள் பாதை” நண்பர்கள் குழுவினர் அவர்களுடைய உயர்ந்த எண்ணத்திற்காகப் பாராட்டப்பட வேண்டியவர்கள். அதே சமயம் அவர்கள் கள்ளம் கபடம் சிறிதளவும் இல்லாமல், சூழ்ச்சியே உருவான உலக மகா அயோக்கியர்களுக்கு எதிராகப் போராட முனைந்து இருக்கிறார்கள் என்பதையும் குறிப்பிட வேண்டி உள்ளது.

மேலும் படிக்க கீழே உள்ள சுட்டியை சுட்டவும்.

Friday 10 November 2017

ஒரு யானை ஒரு ராஜா (சிறுகதை)


Mother with daughter in the park
ஒரு காட்டில் யானை ஒன்று இருந்தது, நீண்ட தந்தங்களுடன் கரியமேகம் ஒன்று தரைக்கு இறங்கி வந்தது போன்று கம்பீரமாக இருக்கும். அது காட்டின் ஒரு நீர்நிலைப் பிரதேசத்தைத் தனதாக்கிக் கொண்டு அதில் வசித்து வந்தது. அந்தப்பகுதியில் மான்கள், வரிக்குதிரை, ஒட்டகச்சிவிங்கி போன்ற தாவரஉண்ணிகளை மட்டுமே யானை அனுமதிக்கும், மற்ற விலங்குகளை அனுமதிக்காது. ஒவ்வொரு நாளும் தனது வழித்தடத்தில் யானை மகிழ்ச்சியாக உலாச் செல்லும். அவ்வாறு செல்லுமபோதுசமயங்களில் சிங்கம், சிறுத்தை புலி போன்ற மிருகங்கள் எதிர்படும். ஆனால் அவைகள் யானையைக் கண்டு அஞ்சிப் பின்வாங்கிவிடும்.
அந்தக் காட்டில் நரிகள் கூட்டம் ஒன்று இருந்தது. அந்த நரிகளுக்கு யானையின் களிப்பும், மதர்ப்பும் பிடிக்கவில்லை. அது அவைகளுக்கு மிகுந்த எரிச்சலைத் தந்தது. அவைகள் யானையை வீழ்த்த எண்ணின் ஒரு நாள் கூட்டமாக அவைகள் யானையை எதிர்கொண்டன யானை சிறிதும் அஞ்சவில்லை. நரிகளைப் பந்தாடியது. நரிகள் ஓடி ஒளிந்தன, யானையை நேருக்குநேர் எதிர்கொள்ள முடியாது என்பதை அவைகள் புரிந்து கொண்டன, யானையை வீழ்த்த அவைகள் சந்தர்ப்பத்திற்குக் காத்திருந்தன.

மேலும் படிக்க கீழே உள்ள சுட்டியை சுட்டவும்.

Thursday 9 November 2017

நகுலன் -புதுக்கவிதையில் தனித்த குரல்


Siragu nagulan1

தமிழ் நவீன இலக்கிய உலகில் கவிதையில் பெரிய நிகழ்வுகள் தொடங்கியிருந்த காலம் அது 1950முதல் 1970கள வரையிலான தொடக்க காலம். ந.பிச்சமூர்த்தி நிகழ்த்திக் கொண்டிருந்த சாதனைகள் பற்றி பேசத்தொடங்கிய காலம். சி.சு செல்லப்பாவின் எழுத்து இதழ் விமர்சனத்திற்காக தொடங்கப்பட்டாலும் தமிழில் நவீனத்தை முன்னெடுக்க ஒரு உத்தியை கையாண்டது. அது புதுக்கவிதையை வளர்தெடுப்பதென்று.

தமிழில் புதிய எழுத்தாளர்களை கவிஞர்களை ‘எழுத்து’இதழ் அறிமுகம் செய்தது. எழுத்து இதழ் 1960-61ம் ஆண்டுகளில் புதுக்கவிதைகளை வெளியிட்டு பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியது என்று சொல்லலாம்.. தருமு.சிவராமின் கவிதைகள் அவற்றில் குறிப்பிடத்தக்க கவனத்தை வாசர்களிடையே கொண்டிருந்தது. இதே காலகட்டத்தில் வல்லிக்கண்ணன், க.நா.சு, சி.சு.செல்லப்பா போன்றவர்களும் தீவிரமாக இயங்கிக் கொண்டிருந்தனர். இவற்றுக்கு மத்தியில் ஒரு புதிய குரல் ஒலிக்கத் தொடங்கியது. அக்குரல் மற்ற கவிஞர்களின் குரலின் தன்மையிலிருந்து வேறுபட்டதாக இருந்தது. அக்குரல் புரியாத புதிர்கள் என ஒன்றையும் மறைக்கவும் இல்லை. அதே சமயத்தில் எதையும் தனக்குச் சுயமாக ஒன்று இருப்பதாக எண்ணவும் இல்லை. அப்படியான குரல் ‘நகுலன்’என்ற நவீன சித்தர்.

மேலும் படிக்க கீழே உள்ள சுட்டியை சுட்டவும்.

Wednesday 8 November 2017

தாய் போற்றிய உடன்போக்கு


Siragu aganaanootru paadal1

அண்மைக்காலங்களில் ஆணவக்கொலைகள் அதிகமாக நடைபெறுகின்ற தமிழ்ச்சமூகம் படிக்க வேண்டியப் பாடல் அகநானூற்றுப் பாடல் 203, கபிலர் எழுதிய இந்தப் பாடல் பாலைத்திணையைச் சார்ந்தது. பாலைத்திணைப் பாடல்களின் சூழ்நிலைகள் இரண்டு. ஒன்று பணம் ஈட்டச் செல்லும் தலைவனின் பிரிவை தாங்கொணாது தலைவி வருந்தி இருத்தலைக் குறிக்கும் பாடல்கள், இரண்டாவது உடன்போக்கு (தலைவனும் தலைவியும் வீட்டை விட்டு வெளியேறுதல்) பற்றியச் செய்திகளைக் கூறும் பாடல்கள்.
இந்தப் பாடல் உடன்போக்கைப் பற்றியது. மகட்போகிய தாய் அல்லது செவிலித்தாய் கூறியது.
பாடல் :
உவக்குநள் ஆயினும், உடலுநள் ஆயினும்,
யாய் அறிந்து உணர்க என்னார், தீ வாய்
அலர் வினை மேவல் அம்பல் பெண்டிர்,
இன்னள் இனையள் நின் மகள் எனப் பல் நாள்
எனக்கு வந்து உரைப்பவும், தனக்கு உரைப்பு அறியேன், 5
மகிழ்ச்சி அடைந்தாலும், ஆத்திரம் கொள்வாள் என்றாலும் அதனை தாய் அவளே அறிந்து தெரிந்துக்கொள்ளட்டும் என்று விடாது, தீ மொழிகளைக் கொண்டு புறம் கூறும் பெண்கள், உன் மகள் களவொழுக்கத்தில் உள்ளாள் எனப் பல நாட்கள் என்னிடம் கூறியபோதும் நான் அதனைப்பற்றி என் மக்களிடம் கேட்கவில்லை.

மேலும் படிக்க கீழே உள்ள சுட்டியை சுட்டவும்.

Monday 6 November 2017

அல்கட்ராஸ் தீவில் . . . (பகுதி- 5)


V. ‘மறைந்தாலும்’ மறக்கப்படாத கைதிகள்:
Siragu alcatraz5-1ஃபிரான்க் மோரிஸ் மற்றும் ஜான் ஆங்க்லின், கிலாரென்ஸ் ஆங்க்லின் சகோதரர்கள் அதிக கண்காணிப்பு கொண்ட அல்கட்ராஸ் தீவின் சிறையில் இருந்து தப்பியதற்கு மறுநாள், ஜூன் 12, 1962 அன்று காலையில் ஆறரை மணிக்கு மணியடித்து அனைவரையும் எழுப்பி அவர்கள் சிறைக் கதவருகில் நிற்கும் பொழுது எண்ணிக்கை எடுக்கப்பட்ட நேரம், தப்பிய மூவரும் தூங்குவது போலிருக்க, காவலாளிகள் அவர்களை அசைக்க முற்பட, பொம்மைத் தலைகள் தரையில் விழுந்து உருண்டோட, சிறையின் எச்சரிக்கை மணிகள் அலறியது. அறைகளைச் சோதனை செய்ததில் அவர்களது பொய்ச்சுவர் குட்டு வெளியாகியது, மற்ற அறைகளையும் சோதனை செய்த பொழுது ஆலன் வெஸ்ட்டும் மாட்டிக் கொண்டார். அவர் கூறிய தகவல்களைக் கொண்டும், புகை போக்கி அருகே கரி படிந்த கால் தடயங்கள் கொண்டும், மிதவை, துடுப்பு, தப்பிய முறை யாவும் காவலாளிகளுக்குத் தெரிய வந்தது. 
வழக்கமாக அனைவரும் முயற்சிப்பது போல தெற்கு நோக்கி சான் பிரான்சிஸ்கோ செல்லாமல், வடக்கு நோக்கி ஏஞ்சல் தீவுக்கு மூவரும் தப்பிச் சென்று, அங்கிருந்து மேலும் பயணித்து வடகரையில் ஏறி, ஒரு துணிக்கடையில் கொள்ளையடித்து ஆடைகளை மாற்றிக் கொண்டு, கார் ஒன்றைத் திருடி தப்பிவிடத் திட்டம் என்று ஆலன் வெஸ்ட் கூறியிருந்தார். காவல்துறையினர் தீவையும் கடலையும் அங்குலம் விடாமல் சோதனை செய்ததில் அவர்கள் அப்பகுதியில் இல்லை என்று தெளிவானது. இரண்டு நாட்கள் கழித்து மிதக்க உதவும் மேலங்கிகள் மூன்றும், துடுப்புகளும் கடலில் ஆங்காங்கே கிடைத்தன. அவற்றுடன் ஆங்க்லின் சகோதரர்கள் குடும்பப் படங்கள் நீர்ப்புகமுடியாத உரையொன்றில் கண்டெடுக்கப்பட்டது. அதனால் அவர்கள் மூழ்கிவிட்டார்கள் என்று கூறப்பட்டது. இல்லை அவர்கள் மூழ்கி இறந்துவிட்டதாக மற்றவர்கள் கருத வேண்டும் என்று ஏமாற்றும் நோக்கில் அவை வேண்டுமென்றே விட்டுச் செல்லப்பட்டன என்றும் மற்றொரு பிரிவினர் கருதினர்.

மேலும் படிக்க கீழே உள்ள சுட்டியை சுட்டவும்.

Wednesday 1 November 2017

நேரமில்லை(கவிதை)


siragu neramillai1

கம்ப்யூட்டர் யுகத்தில்
காவிரி பூம்பட்டினமும்
கலிபோர்னியாவும்
நெருங்கி விட்டன
செல்போன்களும்
தொலைக்காட்சியும்
குடும்ப உறவுகளை
குலைத்துப்போட்டன
தாயிக்குப் பிள்ளையை
கொஞ்ச நேரமில்லை



பிள்ளைக்கு தாயோடு

மேலும் படிக்க கீழே உள்ள சுட்டியை சுட்டவும்.
http://siragu.com/%E0%AE%A8%E0%AF%87%E0%AE%B0%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%88%E0%AE%95%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%88/