Thursday 9 November 2017

நகுலன் -புதுக்கவிதையில் தனித்த குரல்


Siragu nagulan1

தமிழ் நவீன இலக்கிய உலகில் கவிதையில் பெரிய நிகழ்வுகள் தொடங்கியிருந்த காலம் அது 1950முதல் 1970கள வரையிலான தொடக்க காலம். ந.பிச்சமூர்த்தி நிகழ்த்திக் கொண்டிருந்த சாதனைகள் பற்றி பேசத்தொடங்கிய காலம். சி.சு செல்லப்பாவின் எழுத்து இதழ் விமர்சனத்திற்காக தொடங்கப்பட்டாலும் தமிழில் நவீனத்தை முன்னெடுக்க ஒரு உத்தியை கையாண்டது. அது புதுக்கவிதையை வளர்தெடுப்பதென்று.

தமிழில் புதிய எழுத்தாளர்களை கவிஞர்களை ‘எழுத்து’இதழ் அறிமுகம் செய்தது. எழுத்து இதழ் 1960-61ம் ஆண்டுகளில் புதுக்கவிதைகளை வெளியிட்டு பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியது என்று சொல்லலாம்.. தருமு.சிவராமின் கவிதைகள் அவற்றில் குறிப்பிடத்தக்க கவனத்தை வாசர்களிடையே கொண்டிருந்தது. இதே காலகட்டத்தில் வல்லிக்கண்ணன், க.நா.சு, சி.சு.செல்லப்பா போன்றவர்களும் தீவிரமாக இயங்கிக் கொண்டிருந்தனர். இவற்றுக்கு மத்தியில் ஒரு புதிய குரல் ஒலிக்கத் தொடங்கியது. அக்குரல் மற்ற கவிஞர்களின் குரலின் தன்மையிலிருந்து வேறுபட்டதாக இருந்தது. அக்குரல் புரியாத புதிர்கள் என ஒன்றையும் மறைக்கவும் இல்லை. அதே சமயத்தில் எதையும் தனக்குச் சுயமாக ஒன்று இருப்பதாக எண்ணவும் இல்லை. அப்படியான குரல் ‘நகுலன்’என்ற நவீன சித்தர்.

மேலும் படிக்க கீழே உள்ள சுட்டியை சுட்டவும்.

No comments:

Post a Comment