Tuesday 28 November 2017

இரு பாதைகளும் ஒரு பயணமும்


siragu iru paadhaigalum2

அமெரிக்கப் பண்பாட்டில் மிகவும் போற்றப்படுவது ஒருவர் தனித்தன்மையுடன் விளங்கும் பண்பு (empowered individualism). ஒருவரது தனித்தன்மை மிகவும் ஊக்கப்படுத்தப்படும், பாராட்டப்படும் (appreciation of / encouraging individualism, choice, and empowerment). குழந்தைகளை வளர்க்கும் பொழுதே நீ இவ்வாறு பிற்காலத்தில் உருவாக வேண்டும் என்று போதிக்கப்படுவதில்லை. வளர்ந்த பிறகு நீ என்னவாக விளங்க வேண்டும் என்பது உனது விருப்பம் என்றுதான் அவர்களிடம் சிறு வயது முதல் கேள்விகள் வைக்கப்படும். புதுமைகளைப் படைப்பதும், அதற்காகத் துணிச்சலாக மாறுபட்ட வாழ்க்கை முறையையோ கல்வியையோ சோதனை செய்வதும் உற்சாகப்படுத்தப்படும்.


பலர் சென்ற வழி இது, இதில் வெற்றி நிச்சயம், தடைகளும் தடங்கல்களும் குறைவு, வாழ்க்கை சீராக இருக்கும் என்ற கோணத்தில் பிள்ளைகளை வளர்ப்பது இந்தியப் பண்பாடு. தங்கள் பிள்ளைகள் மருத்துவராக வேண்டும், பொறியாளராகத் தொழில் செய்ய வேண்டும், சமூகத்தில் அதிகம் மதிக்கப்படும் புகழ் செல்வம் தரும் கல்வியைத் தேர்வு செய்ய வேண்டும் என்ற எதிர்பார்ப்பில் வளர்ப்பது அமெரிக்காவில் இருக்கும் இந்தியப் பின்புலம் கொண்ட பெற்றோர்களின் அணுகுமுறையாக இருக்கும். அவ்வாறு தாங்கள் வளர்க்கப்பட்டு, வழி நடத்தப்பட்டு வந்ததால்தான் அயல்மண்ணில் அந்நாட்டு மக்களுக்கு இணையாக தங்களால் வாழ முடிகிறது என்பது அவர்கள் நடைமுறையில் அறிந்தது. தாங்கள் பெற்ற கல்வியும் வளர்ப்பும் தங்களை வாழ வைத்துள்ளது என்று அவர்கள் தங்கள் வாழ்வையே சான்றாக எடுத்துக் கொள்ளும் அவர்களது கோணத்தைக் குறை சொல்லவும் வழியில்லை. அவ்வாறு அவர்கள் வளர்க்கப்பட்ட முறை இந்தியப் பண்பாட்டுக் கூற்றின் அடிப்படையில் அமைந்தது. அத்துடன் அவ்வாறு வழிநடத்தும் முறையைப் பிள்ளைகளின் நல்வாழ்வில் அக்கறை கொண்ட பெற்றோரது கடமை எனப் பார்ப்பதும் இந்தியப் பண்பாட்டுக் கோணம்.

மேலும் படிக்க கீழே உள்ள சுட்டியை சுட்டவும்.

No comments:

Post a Comment