Wednesday 8 November 2017

தாய் போற்றிய உடன்போக்கு


Siragu aganaanootru paadal1

அண்மைக்காலங்களில் ஆணவக்கொலைகள் அதிகமாக நடைபெறுகின்ற தமிழ்ச்சமூகம் படிக்க வேண்டியப் பாடல் அகநானூற்றுப் பாடல் 203, கபிலர் எழுதிய இந்தப் பாடல் பாலைத்திணையைச் சார்ந்தது. பாலைத்திணைப் பாடல்களின் சூழ்நிலைகள் இரண்டு. ஒன்று பணம் ஈட்டச் செல்லும் தலைவனின் பிரிவை தாங்கொணாது தலைவி வருந்தி இருத்தலைக் குறிக்கும் பாடல்கள், இரண்டாவது உடன்போக்கு (தலைவனும் தலைவியும் வீட்டை விட்டு வெளியேறுதல்) பற்றியச் செய்திகளைக் கூறும் பாடல்கள்.
இந்தப் பாடல் உடன்போக்கைப் பற்றியது. மகட்போகிய தாய் அல்லது செவிலித்தாய் கூறியது.
பாடல் :
உவக்குநள் ஆயினும், உடலுநள் ஆயினும்,
யாய் அறிந்து உணர்க என்னார், தீ வாய்
அலர் வினை மேவல் அம்பல் பெண்டிர்,
இன்னள் இனையள் நின் மகள் எனப் பல் நாள்
எனக்கு வந்து உரைப்பவும், தனக்கு உரைப்பு அறியேன், 5
மகிழ்ச்சி அடைந்தாலும், ஆத்திரம் கொள்வாள் என்றாலும் அதனை தாய் அவளே அறிந்து தெரிந்துக்கொள்ளட்டும் என்று விடாது, தீ மொழிகளைக் கொண்டு புறம் கூறும் பெண்கள், உன் மகள் களவொழுக்கத்தில் உள்ளாள் எனப் பல நாட்கள் என்னிடம் கூறியபோதும் நான் அதனைப்பற்றி என் மக்களிடம் கேட்கவில்லை.

மேலும் படிக்க கீழே உள்ள சுட்டியை சுட்டவும்.

No comments:

Post a Comment