Friday 10 November 2017

ஒரு யானை ஒரு ராஜா (சிறுகதை)


Mother with daughter in the park
ஒரு காட்டில் யானை ஒன்று இருந்தது, நீண்ட தந்தங்களுடன் கரியமேகம் ஒன்று தரைக்கு இறங்கி வந்தது போன்று கம்பீரமாக இருக்கும். அது காட்டின் ஒரு நீர்நிலைப் பிரதேசத்தைத் தனதாக்கிக் கொண்டு அதில் வசித்து வந்தது. அந்தப்பகுதியில் மான்கள், வரிக்குதிரை, ஒட்டகச்சிவிங்கி போன்ற தாவரஉண்ணிகளை மட்டுமே யானை அனுமதிக்கும், மற்ற விலங்குகளை அனுமதிக்காது. ஒவ்வொரு நாளும் தனது வழித்தடத்தில் யானை மகிழ்ச்சியாக உலாச் செல்லும். அவ்வாறு செல்லுமபோதுசமயங்களில் சிங்கம், சிறுத்தை புலி போன்ற மிருகங்கள் எதிர்படும். ஆனால் அவைகள் யானையைக் கண்டு அஞ்சிப் பின்வாங்கிவிடும்.
அந்தக் காட்டில் நரிகள் கூட்டம் ஒன்று இருந்தது. அந்த நரிகளுக்கு யானையின் களிப்பும், மதர்ப்பும் பிடிக்கவில்லை. அது அவைகளுக்கு மிகுந்த எரிச்சலைத் தந்தது. அவைகள் யானையை வீழ்த்த எண்ணின் ஒரு நாள் கூட்டமாக அவைகள் யானையை எதிர்கொண்டன யானை சிறிதும் அஞ்சவில்லை. நரிகளைப் பந்தாடியது. நரிகள் ஓடி ஒளிந்தன, யானையை நேருக்குநேர் எதிர்கொள்ள முடியாது என்பதை அவைகள் புரிந்து கொண்டன, யானையை வீழ்த்த அவைகள் சந்தர்ப்பத்திற்குக் காத்திருந்தன.

மேலும் படிக்க கீழே உள்ள சுட்டியை சுட்டவும்.

No comments:

Post a Comment