Thursday 23 November 2017

குறிஞ்சிப்பாட்டில் பெண்ணின் ஆளுமைத்திறன்


Siragu-kurunjippattu2

ஆளுமைத்திறன் என்பது தான் சொல்ல வந்த செய்தியை உறுதியுடன் கூறுதல், நமக்கு என்ன தேவை என்பதை தயக்கமின்றி கூறுதல், தன் கோரிக்கை மறுக்கப்பட்டால் அதற்குரிய மாற்று முயற்சியைத் திட்டமிட்டு வைத்திருத்தல், மறுக்கப்படுகின்றபோது நிதானத்துடன் சமரசத்திற்கு தயாராதல். இவற்றைச் சரியாகக் கையாளுவதே ஆளுமைத்திறன் எனலாம். இங்கே கூறப்பட்ட இயல்புகளில் எதிலும் குறையாமல் செயல்பட்டவர்கள் குறிஞ்சிப்பாட்டுப் பெண்கள். குறிப்பாகத் தோழி. விளையாட்டுப் பெண்ணாக இருந்தாலும் பண்பாட்டுத் தளத்தின் ஆணிவேரை நன்கு அறிந்தவர்கள் தமிழ்ப் பெண்கள் என்று அறுதியிட்டுக் கூறும் கபிலரின் குரல்தான் தோழியின் வாயிலாக வெளிப்படுகிறது. பேசும் திறன், தான் சொல்ல வருகின்ற கருத்திற்குத் தக சூழல்களை உளப்படுத்தல், எதிர் நின்று கேட்பவர்களின் ஐயத்தை உணர்ந்து கொண்டு அதற்குரிய காரண காரியங்களை நிரல்பட மொழிதல், எதிர் உணர்வு அரும்பாமல் இதமாக எடுத்துரைத்தல் என்று எல்லா வகையிலும் தோழி பேசுகிறாள் என்றால் தோழியின் பேச்சு மட்டுமல்ல; ஒட்டு மொத்த தமிழ்ப் பெண்களின் அறிவார்ந்த பேச்சாற்றலை அறிந்த கபிலர், பெண்மையின் பேச்சாற்றலை உலகிற்கு வெளிப்படுத்தும் அற்புதப் படைப்பே குறிஞ்சிப்பாட்டுத் தோழி.

குறிஞ்சிப்பாட்டிலே நடக்கின்ற அத்துணைச் சொல் நாடகமும் தோழியின் சொல்லாற்றலே. பாட்டின் தொடக்கத்திலேயே, தான் சொல்லப் போகும் செய்தி தாய்க்குக் கோபத்தை உண்டுபண்ணக் கூடியது என்பதை அறிந்திருந்தும், கோபத்திற்கு ஆளாவோம் என்பது தெரிந்திருந்தும் அவள் கோபத்தினால் வரும் எதிர்வினையைத் தவிர்க்க, சிக்கலான செய்தியாக இருந்தும்கூட அதனை அவள் ஏற்றுக் கொள்ளும் வகையில் மேலாண்மைத் திறத்துடன் மொழிகின்றாள் தோழி.

மேலும் படிக்க கீழே உள்ள சுட்டியை சுட்டவும்.

No comments:

Post a Comment