Thursday 30 August 2018

ஸ்காட்லாந்து மலைக்கோட்டை


siragu edinburg castle
எடின்பரோ மலைக்கோட்டை (EDINBURGH CASTLE)
சுமார் 12-ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்ட எடின்பரோ மலைக்கோட்டை இன்றும் ஸ்காட்லாந்தின் சின்னமாக விளங்குகிறது. சுமார் 400 அடி உயர மலை மீது அமைந்துள்ள இக்கோட்டையில் இருந்து தலைநகர் முழுவதும் காணமுடியும். இதன் மதில் மீதிருந்து பார்த்தால், உயர்ந்த கட்டிடங்கள், புறநகர் அதற்கடுத்த கடல் என காட்சி விரிகிறது. இதன் நுழைவாயிலில் சீரும் சிங்க கேடயமும் ஸ்காட்லாந்து கிரீடமும் பொறிக்கப்பட்டுள்ளது. இது  ஸ்காட்லாந்து மற்றும் பிரிட்டிஷ் படைவகுப்பின் முத்திரையாக இன்றும் உள்ளது.
இக்கோட்டையில் ராஜரீக மாளிகை, இரத்தின காட்சியம், கைதிகள்சிறைச்சாலை, ராணுவ சிறை, போர் நினைவிடம், ராணுவ அணிவகுப்பு, சர்ச், நாய்களின் கல்லறைஎன பல கட்டிடங்கள் அமைக்கப்பட்டுள்ளது.
கோட்டை அரண்
siragu edinburg jewels bldg
எந்தநேரமும் எதிரிகளை தாக்கும் விதத்தில், மதில் முழுவதும் பாதுகாப்பு பீரங்கிகள் அமைக்கப்பட்டுள்ளது. கோட்டையின் வட திசையில் வெள்ள கால்வாய் அமைத்து எதிரிகளுக்கு தடுப்பு உருவாக்கியிருக்கிறார்கள். பிற்காலத்தில் ஏற்பட்ட மாசு காரணமாக 18-ம் நூற்றாண்டில் வெள்ளம் வடிக்கப்பட்டது. இதைத் தவிர அக்காலத்தில் மாலுமிகளுக்கு வழிகாட்டவும், நகர மக்கள் நேரத்தை சரி பார்க்கவும், துல்லியமாக 1 மணிக்கு பீரங்கி குண்டு முழங்கப்பட்டது. அந்த வழக்கம் இன்றும் சுற்றுலாப் பயணிகளுக்காகத் தொடர்கிறது.


மேலும் படிக்க கீழே உள்ள சுட்டியை சுட்டவும்.

Monday 27 August 2018

அய்யாவும்-அண்ணாவும்


Siragu ayyaavum-annaavum1
அண்ணாவை விமான நிலையத்தில் வழி அனுப்பிய பின் ஓரளவிற்கு நிம்மதியுடன் இருந்ததுடன், அமெரிக்காவில் அண்ணாவுக்கு அறுவை சிகிச்சை வெற்றிகரமாக டாக்டர் மில்லர் அவர்களால் நடத்தப்பெற்றது என்ற செய்தி அறிந்து மிகவும் மகிழ்ந்தார் அய்யா. திருச்சி கல்வி நிறுவனங்களின் சார்பில் (அங்கு ஆண்டுதோறும் நடைபெறுகிறது) நடைபெற்ற நிறுவனர் நாள் விழாவில் தவத்திரு குன்றக்குடி அடிகளாருடன் கலந்து கொண்ட அய்யா அவர்கள், அண்ணாவிற்கு அறுவை சிகிச்சை நடைபெற்றது குறித்து மிகுந்த மகிழ்ச்சியான செய்தி என்று கூறி அண்ணா நலம் பெற தனது விருப்பத்தையும் தெரிவித்தார்!

அய்யாவின் பிறந்த நாள் செய்தி என்று ஆண்டுதோறும் மலருக்கென எழுதி, வாங்கும் முயற்சிகளை, நான் பொறுப்பேற்று மலர் வெளியிடுவதைத் தொடங்கிய 1962 ஆம் ஆண்டிலிருந்தே கடைப்பிடித்து வந்துள்ளேன். அய்யா மறைந்த ஆண்டான 1973, செப்டம்பர் வரை அவரது ஒவ்வொரு பிறந்த நாளுக்கு முன்னமே அவரது எண்ணக் குவியல், சிந்தனை ஓட்டம், அவர் மக்களுக்குத் தரும் செய்தியை அதில் உள்ளடக்கியே எழுதும் படி வேண்டிட அய்யாவும் மகிழ்ச்சியுடன் அதைச் செய்தார்கள்!

மேலும் படிக்க கீழே உள்ள சுட்டியை சுட்டவும்.

தொகுப்பு கவிதை (கொடூரம், ஆண்டாள்)

கொடூரம்


siragu kodooram1

எண்ணங்களையும் எதிர்பார்ப்பையும்
கனவுகளாக்கினாய்!
அழகையும் ஆசையையும்
காதலாக்கினாய்!
அறிவையும் ஆக்கத்தையும்
கல்வியாக்கினாய்!
பந்தத்தையும் பாசத்தையும்
உறவுகளாக்கினாய்!

உணர்வையும் காமத்தையும்

மேலும் படிக்க கீழே உள்ள சுட்டியை சுட்டவும்.
http://siragu.com/%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%95%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%88-%E0%AE%95%E0%AF%8A%E0%AE%9F%E0%AF%82%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%86/

Thursday 23 August 2018

தமிழும் அறிவியலும்


Dec-23-2017-newsletter1
தமிழ்மொழி தொன்மை வாய்ந்த மொழி. அதனுள் பல்வகை, பல்வேறு இலக்கியங்கள் எழுந்துள்ளன. இரண்டாயிரத்திற்கு மேற்பட்ட கால அளவில் வளர்ந்துவரும் தமிழ்மொழியில்  அதன் இலக்கியங்களில் பல்வேறு பதிவுகள் காணப்படுகின்றன. மொழியியல், இலக்கணவியல், இலக்கியவியல்,  அழகியல்,  அறவியல், பண்பாட்டியல், அறிவியல் போன்ற பல்துறை சார் பதிவுகள் தமிழ் இலக்கியங்களில் பதிவு செய்யப்பெற்றுள்ளன. குறிப்பாக செம்மொழி இலக்கியங்கள் காலத்தாலும், கருப்பொருளாலும், வெளிப்பாட்டுத் தன்மையாலும், பல்துறை இயல் சார் அறிவின் பதிவுகளாலும் தனித்திறம் பெற்று விளங்குகின்றன.

‘‘முதலாவதாகத் தமிழ்மொழி மிகுந்த பழமைச் சிறப்பு வாய்ந்த மொழி. ஏனைய தற்கால இந்திய மொழிகளின் இலக்கியங்களுக்கெல்லாம் காலத்தால் மிகவும் முற்பட்ட, ஏறத்தாழ ஆயிரம் ஆண்டுகளுக்கும் அதற்கு மேலும் முற்பட்ட பேரிலக்கியங்களைக் கொண்டது தமிழ்மொழி. தமிழில் மிகப் பழம்பெரும் நூல் தொல்காப்பியம். தொன்மைக்காலக் கல்வெட்டுக்களிலிருந்து இந்நூலின் பகுதிகள் காலத்தால் மிக முற்பட்டவை எனவும், ஏறத்தாழ கி.மு. 200க்கு முன்பே இந்நூல் எழுந்துள்ளது எனவும் தெரிகிறது. பழந்தமிழரின் பேரிலக்கியங்கள் சங்க இலக்கியங்கள் ஆகும். அவை பத்துப்பாட்டும் எட்டுத்தொகை நூல்களும் பிறவும் ஆகும். அவை ஏறத்தாழ கி.பி. முதல் இரு நூற்றாண்டுகளில் எழுந்தவை எனக் கொள்ளலாம். அவை வடமொழியில் காளிதாசரின் பேரிலக்கியங்கள் தோன்றுவதற்கு இரு நூற்றாண்டுகளுக்கு முன்னமே தோன்றிவிட்டன. மதச் சார்பற்ற இந்தியாவில் முதன் முதலில் எழுந்த மதச் சார்பற்ற பெருங்கவிதைத் தொகுப்பு சங்கஇலக்கியங்கள் என்றால் அது மிகையாகாது” என்ற ஜார்ஜ் எல். ஹார்டுவின் கருத்துத் தமிழ்ச்செம்மொழி இலக்கியங்களின் தன்மையை எடுத்துக்காட்டுவதாக உள்ளது.

மேலும் படிக்க கீழே உள்ள சுட்டியை சுட்டவும்.

Wednesday 22 August 2018

உலகளாவிய வணிகத்தில் முன்னோடிகளாய் விளங்கிய பழந்தமிழ் வணிகர்கள்


Siragu ulagalaaviya1
நூலும் நூலாசிரியரும்:
இந்திய அளவில் உலகளாவிய கடல்வணிகத்தில் முன்னோடிகளாக விளங்கியவர்கள் பண்டைத்தமிழர் என்ற தனது ஆய்வின் முடிவை “The World of the Tamil Merchant: Pioneers of International Trade” என்ற நூலாக வெளியிட்டுள்ளார் இந்திய வரலாற்று ஆய்வாளர்களில் ஒருவரான முனைவர் கனகலதா முகுந்த். குர்சரண் தாஸ் வழங்கிய அணிந்துரையுடன் பெங்குவின் பதிப்பகத்தாரால் இந்த நூல் 2015 ஆம் ஆண்டு வெளியிடப்பட்டது. இந்த நூலுக்குத் தமிழில் “பழந்தமிழ் வணிகர்கள், சர்வதேச வர்த்தகத்தின் முன்னோடிகள்” எனத் தலைப்பிட்டு, எஸ். கிருஷ்ணன் அவர்களின் மொழிபெயர்ப்பில், டிசம்பர் 2016 இல் கிழக்குப் பதிப்பகம் வெளியிட்டுள்ளது.
இந்த நூலின் ஆசிரியரான முனைவர் கனகலதா முகுந்த் பொருளாதாரத்தில் முனைவர் பட்டம் பெற்றவர். மும்பை, போபால் பல்கலைக்கழகங்களிலும், ஐதராபாத் பொருளாதார – சமூக ஆய்வு மையத்திலும் பணியாற்றியவர். தென்னிந்திய வணிக வரலாறு குறித்தும்,  வரலாற்றில் பெண்களின் உரிமைகள் மற்றும் பணிகள் குறித்தும் ஆய்வு செய்தவர். பழந்தமிழ் வணிகம், கோவில்கள், ஆங்கிலேய வர்த்தகர்களின் துவக்ககாலத் தமிழகம் ஆகியவற்றைக் குறித்தும் மேலும் சில ஆய்வு நூல்களை எழுதியுள்ளார் இவர்.

சங்ககாலம் முதற்கொண்டு சோழப்பேரரசு முடிவுக்கு வரும்வரை இருந்த நீண்ட காலகட்டத்தில் தமிழிலக்கியச் சான்றுகள், தொல்லியல் சான்றுகள், கல்வெட்டுச் சான்றுகள் ஆகியவற்றின் மூலம் தமிழகவணிகர்கள் உலகளாவிய கடல் வணிகத்தில் பங்கேற்றதற்கும், உள்நாட்டு வணிகத்தை வளர்த்தமைக்கும், அவர்களது வணிகக்குழுக்கள் பலவற்றைக் குறித்தும் சான்றுகளுடன் நிறுவியுள்ளார் கனகலதா முகுந்த். தமிழக வணிகக் குழுவினர், குறிப்பாக வளமிக்க செல்வந்தர்களான வணிகர்கள், உற்பத்தியாளர்களுக்கும், நெசவாளர்களுக்கும், ஆங்கிலேயர்களுக்கும் என அவர்களின்  தேவையறிந்து பணம் கடன் வழங்கியும், ஒப்பந்த அடிப்படையில் உதவியும்,  வாணிபத்தின் மூலம் பொருளாதாரம் வளர்வதில் முக்கியப் பங்கு வகித்தவர்கள் என்று தனது ஆய்வுகளின் மூலம் எடுத்துக் காட்டியுள்ளார்.

மேலும் படிக்க கீழே உள்ள சுட்டியை சுட்டவும்.
http://siragu.com/%E0%AE%89%E0%AE%B2%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%B5%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%95%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A9%E0%AF%8D/

தொகுப்பு கவிதை (ஓயாது உழைத்த கலைஞர், கலைஞருக்கு கவிதாஞ்சலி!)

ஓயாது உழைத்த கலைஞர்

- தேமொழி
siragu karunanidhi5
உயிருடன்  தண்டவாளத்தில்  படுத்துப்
போராடியதெல்லாம்  ஒரு போராட்டமா
உயிரிழந்தும் இறுதியாகப் படுத்தவாறே
போராடி வென்றதற்கு  அது  ஈடாகுமா
படுத்துக்கொண்டே ஜெயிப்பேன் என்றவரை
மக்கள் தேர்தலில் அன்று  ஆதரிக்கவில்லை
படுத்துக்கொண்டே போராடி வென்றவரை
மக்கள் என்றும் மறக்கப் போவதுமில்லை
கிழக்கே உதிக்கும் சூரியன்
மேற்கே உதிக்காது ஒருநாளும்
சொல்லியிருக்கிறோம் நாம்
இயற்கை மாறாது என்பதற்காக

மேற்கே மறையும் சூரியன்

மேலும் படிக்க கீழே உள்ள சுட்டியை சுட்டவும்.

Friday 17 August 2018

எப்போ வருவாரோ … ? (சிறுகதை)


siragu eppa varuvaro1
”வைதேகி, வைதேகி” என்று சிவகாமி கத்தியது சமையல் அறையில் கூட்டுக்குத் தாளித்துக் கொண்டிருந்த வைதேகி காதில் விழுந்தது. அடுப்பை அணைத்துவிட்டு வந்து ”என்னம்மா வேண்டும் உங்களுக்கு?”  என்று மாமியாரைக் கேட்டாள்.
சிவகாமி படுத்தப் படுக்கையாய் இருக்கும் ஒரு நோயாளி. வயசு எழுபத்து ஆறு. போன வருடம்வரை கோலோடு நடமாடிக் கொண்டிருந்தாள். இப்போது டையாபர் கட்டும் நோயாளியாய் மாறி விட்டாள். வைதேகிதான் மாமியாருக்கு  டையாபர் மாற்றி, குளிப்பாட்டி, வேளாவேளைக்கு மருந்து கொடுத்து சாப்பிடக் கொடுத்து கவனித்துக் கொள்கிறாள்.
மாமனார் சம்பத் எண்பது வயது ஆகிறது. அவருக்கு இருக்கும் ஒரே பிரச்சனை டெம்னிஷியா என்று சொல்லப்படும் ஞாபக மறதிதான். வெளியே போனால் வீட்டு முகவரியை மறந்து விடுவார். ஏன் அவர் பெயரையே சில சமயம் மறந்து விடுவார். அவரை ஜாக்கிரதையாகப் பார்த்துக் கொள்வது கடினமென்றாலும் பக்கத்தில் உள்ள தெரிந்தவர்கள் உதவியுடன் வைதேகி  எப்படியோ அவரைப் பார்த்துக்கொள்கிறாள்.

கிருஷ்ண குமாருக்கும் வைதேகிக்கும் ஜாதகம் பொருத்தம் பார்த்து சாஸ்திர சம்பிரதாயப்படி கல்யாணம் நடந்தது. மாப்பிள்ளைக்கு மதுரையில்  வங்கியில் வேலை. கை நிறையச் சம்பளம். பத்து மணியிலிருந்து ஐந்து மணி வரை வேலை. மாலை ஆறு மணிக்குள் வீட்டுக்கு வந்துவிடுவார். வைதேகி மிகவும் மகிழ்ச்சியாய் குடும்பம் நடத்தினாள். மகிழ்ச்சியான குடும்ப வாழ்க்கைக்குச் சான்றாக அக்‌ஷயா பிறந்தாள். மழலை தரும் இன்பத்தில் வாழ்க்கைப் படகு ஆனந்தமாய் போய் கொண்டிருந்தது.

மேலும் படிக்க கீழே உள்ள சுட்டியை சுட்டவும்.

Wednesday 15 August 2018

மானமிகு சுயமரியாதைக்காரருக்கு வீரவணக்கம் !!


siragu karunanidhi1
யாயும் ஞாயும் யாரா கியரோ
எந்தையும் நுந்தையும் எம்முறைக் கேளிர்
யானும் நீயும் எவ்வழி அறிதும்
செம்புலப் பெயல்நீர் போல
அன்புடை நெஞ்சம் தாம் கலந்தனவே.
இந்தப் பாடலை காதல் கொண்டோருக்காக எடுத்துக்காட்டுவது உண்டு. ஆனால் முதல் முறையாக எம் தமிழ் நாட்டின் திராவிடத் தலைமகனுக்காக இதை கையாள்கின்றேன்! ஆகஸ்ட் 7 தலைவர் கலைஞர் மறைந்தார் என்ற செய்தியை தொலைக்காட்சியில், இணையத்தில் பார்த்த போது, கடல் கடந்து வாழும் என்னைப் போன்றவர்களுக்கு கண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது. தலைவரை நேரில் சந்திக்காத பல்லாயிரக்கணக்கான தொண்டர்களில் நானும் ஒருவள் என்ற போதும், அந்த தலைவரின் கருத்தியல் மீது ஈர்ப்புக் கொண்டு நம் நெஞ்சங்கள் செம்மண்ணில் கலந்திடும் நீர் எப்படி அதன் நிறத்தைப் பெற்று பாய்கின்றதோ அதேப் போல்தான் அந்தத் தலைவரின் மீதான அன்பு நமக்கு.

எந்த நிலையில் கலைஞர் இந்த அன்பைப் பெற முடிந்தது? ஏழு ஆண்டுகள் ஆட்சிகள் இல்லை, இறுதி 1.5 வருடங்கள் அரசியலிலும் இல்லை, ஆனால் கலைஞர் மீது மக்களுக்கு எத்துணை பேரன்பு எதற்கு? எதன் அடிப்படையில் சாத்தியம் எனச் சிந்தித்துப் பார்த்தால் அதற்கு காரணம் அவரின் 80 ஆண்டு கால அரசியல் தொண்டு என்று மட்டுமே சொல்ல முடியும்.

மேலும் படிக்க கீழே உள்ள சுட்டியை சுட்டவும்.

அந்தத் தருணங்கள்! (கவிதை)


Siragu ovvoru nodiyilum
“அது நடந்துவிடுமோ?”
அச்சத்தில் பலர்..
“அது மட்டும் நடக்கக்கூடாது!”
பரிதவிப்பில்-
பதைபதைப்பில் பலர்..
அது நடந்தாலும்
எது நடந்தாலும்
எல்லாவற்றையும்
விமர்சிக்கும் பலர்-
எதிலும் கவனமில்லாது
விமர்சனங்களைக்
கடந்துபோகும் சிலர்-
விமர்சனங்களை உள்வாங்கி
விவகாரமாக்கிக் கொள்வர் பலர்-
எண்ணிய எண்ணியாங்கு
எய்தத் துடிப்பர் சிலர்-

இவ்வாறு பலவாறாய்த்

மேலும் படிக்க கீழே உள்ள சுட்டியை சுட்டவும்.
http://siragu.com/%E0%AE%85%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A3%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%88/

ஜசியா வரி


Siragu Zisya tax1
ஜசியா வரியைப் பற்றி நமது பார்ப்பன ஆதிக்கக் கல்வி முறை தவறான கருத்தை மக்களிடையே பரப்பி வைத்து இருக்கிறது. அதன் சுருக்கம் இது தான். இந்துக்களைக் கொடுமைப்படுத்துவதற்கு என்றே பாபர் இந்துக்கள் மீது ஜசியா வரி எனும் வரியை விதித்தார். இவ்வரி இந்துக்களுக்கு மட்டுமே பொருந்தும். இஸ்லாமியர்கள் இவ்வரியைச் செலுத்தத் தேவை இல்லை. அவருக்குப் பின் வந்த அக்பர் இக்கொடுமையைக் களைய ஜசியா வரியை நீக்கினார். ஆனால் அவுரங்கசீப் தன் மூன்று சகோதரர்களைக் கொன்று, தன் தந்தையைச் சிறைப்படுத்தி ஆட்சியில் அமர்ந்த பின் இவ்வரியை மீண்டும் விதித்தார். ஏனெனில் அவரங்கசீப் சகிப்புத் தன்மை இல்லாத ஒரு இஸ்லாமிய மதவாதி. இது போன்ற கருத்தை மதவாதிகள் மட்டும் அல்லாமல் அரசின் கல்வித் துறையே பரப்புவது வேதனைக்கு உரியது. ஆனால் உண்மை என்ன?

பாபர் முதன் முதலாக முகலாய அரசை நிறுவிய போது, ஆட்சியை நடத்துவதற்காக மக்களிடம் இருந்து வரி வசூல் செய்யும் திட்டத்தை வகுத்தார். இஸ்லாமிய மதச் சட்டத்தின் படியே வரிகளை விதிக்க அமைச்சர்கள் ஆலோசனை கூறிய போது பாபர் அதை மறுத்தார். இஸ்லாமிய மக்களிடம் இஸ்லாமியச் சட்டப்படி வரி வசூலிக்கலாம் என்றும், இந்துக்கள் மீது இஸ்லாமியச் சட்டங்களைத் திணிப்பது முறையல்ல என்றும், வேறு வழிகளைக் காணும் படியும் அவர் கூறினார். இதன் படி தோன்றியது தான் ஜசியா வரி. அதாவது ஜசியா வரி என்பது இந்துக்களைக் கொடுமைப்படுத்த அல்ல; மாறாக இந்துக்களுக்கு மதச் சுதந்திரம் அளிக்கும் வகையில் தான் ஜசியா வரி விதிக்கப்பட்டது.

மேலும் படிக்க கீழே உள்ள சுட்டியை சுட்டவும்.

ஸ்குடாய்ட்: கணித வடிவியலில் ஒரு புதிய வடிவம் அறிமுகம்


Siragu stcutoid1
ஸ்குடாய்ட் (Scutoid) வடிவம் இயற்கையில் எங்கும் காணும் ஒரு வடிவம். ஒரு நீண்ட ஐந்து பக்கங்கள் கொண்ட பட்டக வடிவத்தின் ஒரு முனையில் மட்டும் வெட்டப்பட்டு, அப்பகுதியில் மட்டும் ஆறு பக்கங்கள் கொண்ட தோற்றத்தில் அமைந்த வடிவம் ஸ்குடாய்ட். இவ்வடிவத்தின் நீண்ட முனையில் இருக்கும் சமதளப் பகுதிகளின் ஒரு புறம் அறுகோண வடிவையும், அதன் எதிர்ப்புறம் ஐங்கோண வடிவையும் கொண்டிருக்கும். இத்தகைய வடிவ அமைப்பால் ஆறு பக்கங்கள் கொண்ட ஒரு பட்டகத்தின் பகுதியையும், ஐந்து பக்கங்கள் கொண்ட மற்றொரு பட்டகத்தின் பகுதியையும் அருகருகே இடைவெளி இன்றி வளைவான தளங்களிலும் மாற்றி மாற்றி வரிசையாகவும் நெருக்கமாகவும் இணைக்க முடியும். நம் உடலில் உள்ள திசுக்களில் உள்ள உயிரணுக்கள் இந்த வடிவம் கொண்டவையே. இத்தகைய பல பக்கங்கள் கொண்ட பட்டக வடிவம் கொண்ட அமைப்பு, உயிரணுக்கள் ஒன்றுடன் ஒன்று நெருக்கமாக இடைவெளி இன்றி அமைந்திட உதவுகிறது. இத்தகைய மேம்பட்ட அமைப்பு உடலின் சக்தியை குறைவாகச் செலவழிக்க உதவுவதாக அறிவியல் ஆய்வாளர்கள் கூறுகிறார்கள்.

முப்பரிமாண தோற்றத்தில் காணும்பொழுது, வளைவுகள் கொண்ட உடலுறுப்புகளிலும் மிக நெருக்கமாக அடுக்கப்பட்டவகையில் இந்த ஸ்குடாய்ட் வடிவம் கொண்ட உயிரணுக்கள் அமைந்துள்ளன. தோலின் மேற்புறம் ‘எபித்தீலியல்’ உயிரணுக்களின் (epithelial cells) தோற்றமும் ஸ்குடாய்ட் வடிவமே. இவ்வாறு இயற்கையில் பரவலாக எங்கும் காணக்கிடைக்கும் இந்த வடிவத்திற்கு, வடிவியலில் இதுவரை பெயர் இல்லாதிருந்ததால், பெயர் சூட்ட எண்ணிய அறிவியலாளர்கள் வண்டுகள் சிலவற்றின் மேற்புறம் கவசம் போல அமைந்த ‘ஸ்கூட்டெல்லம்’ (scutellum) என்ற அமைப்பின் தோற்றத்தை ஒத்திருக்கும் இந்த வடிவத்திற்கு ஸ்குடாய்ட் வடிவம் என்று பெயர் சூட்டியுள்ளார்கள்.

மேலும் படிக்க கீழே உள்ள சுட்டியை சுட்டவும்.

Thursday 9 August 2018

ஒவ்வொருவருக்கும் சுயமரியாதை இருக்கிறது.


siragu poolaan devi1
4 ஆடி 10 அங்குல உயரத்தில் ஒரு பெண், மிகப் பெரிய கொள்ளைக்காரியாக திகழ்ந்தார் என்பது வியப்பைத் தருகின்றதா? ஆம் ஒடுக்கப்பட்டச் சமூகத்தில் பிறந்த ஒரு பெண் சாதியின், ஆணாதிக்கத்தின் விளைவால் எந்த அளவிற்கு மனம் வெறுத்து தன்னை பாலியல் வன்புணர்வு செய்த சாதியவாதிகளை பழிவாங்க கொள்ளைக்காரியாக மாறினார் என்பதை  பூலான் தேவி அவர்களின் வாழ்க்கையைப்  படிக்கும் போது தெரிந்துக் கொள்ள முடியும். பூலான் தேவி உத்திரபிரதேச மாநிலத்தில் ஆகஸ்ட் 10 1963 ஆம் ஆண்டு, ஜலான் மாவட்டத்தில் இருக்கும் ஜோர்க்கி கபர்வா என்ற கிராமத்தில் பிறந்தார். மல்லாஸ் எனப்படும் மிகவும் தாழ்த்தப்பட்ட குடும்பத்தைச் சேர்ந்தவள். படகு ஓட்டுவது தான் இவர்களின் வாழ்வாதாரம்.

அன்றைய காலக் கட்டங்களில் பெண் குழந்தைகள் வயதுக்கு வரும் முன்னரே திருமணம் செய்யும் முறை மிகத் தீவிரமாக வடநாடுகளில் (இன்றும் கூட ராஜஸ்தான் போன்ற மாநிலங்களில் கடைப்பிடிக்கப்படுகிறது) உண்டு. பூலான் தேவிக்கும் 11 வயதிலேயே (வயதுக்கு வரும் முன்னரே) திருமணம் நடந்தது. ஏற்கனவே இரண்டு முறை திருமணம் செய்த, 30 வயது புட்டிலால் என்பவன் கணவன். வயது வரும் வரை அம்மா வீட்டில் இருந்த பூலான் தேவியை வலுக்கட்டாயமாக புட்டிலால் இழுத்துச் சென்று பாலியல் வன்புணர்வுச் செய்து கொடுமை செய்தான். அங்கிருந்து சில நாட்களில் தப்பி வந்த பூலான் தேவி தன் வீட்டில் மகிழ்ச்சியாக இருந்தார். இந்த நிலையில் பூலான் தேவியின் கணவன் மீண்டும் வேறு பெண்ணை திருமணம் செய்து கொண்டான். கேட்கவே கொடுமையாக இருக்கின்றது அல்லவா? தமிழ் நாட்டில் இன்று தந்தை பெரியார் போன்ற தலைவர்கள், திராவிடர் காட்சிகள் கொண்டு வந்த திட்டங்கள் காரணமாக இந்தக் கொடுமைகள் ஓரளவு கட்டுக்குள் வந்திருக்கின்றது. ஆனால் வடநாடு நம்மை விட  இன்றும் பெண்கள் விடுதலை,  சமூக நீதி போன்ற தளங்களில் மிக பின்தங்கி இருக்கின்றன. அந்த பின்தங்கிய சூழலால் பாதிக்கப்பட்டவர் தான் பூலான் தேவி.

மேலும் படிக்க கீழே உள்ள சுட்டியை சுட்டவும்.
http://siragu.com/%E0%AE%92%E0%AE%B5%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%8A%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%81%E0%AE%AF%E0%AE%AE%E0%AE%B0%E0%AE%BF/

தொகுப்பு கவிதை (மௌனம், பயணம்)


மௌனம்

siragu mounam1

அலங்கார மேடை
வண்ண
விளக்குகள்,

திடல் நிறைந்திருந்தது.
உள்ளூர்
வெளியூர் வாசிகளோடு.

சப்பானிலிருந்து
சாது
வருகிறார்.

இவர் உலகம்
முழுதும்
போனவராம்,
உயர்ந்த புகழ்
சேர்த்தவராம்.

மேலும் படிக்க கீழே உள்ள சுட்டியை சுட்டவும்.

வானவில் ஏன் கரைகிறது? (சிறுகதை)


Siragu vaanavil1
வானவில் ஒரு நாள் தரைக்கு இறங்கிவந்தது. அது ஒரு நதிக்கரையோரம் நடந்துசென்றது. அந்த நதிக்கரையை ஒட்டி இருந்த வனப்பகுதியில் நிறைய பறவைகள் இருந்தன. ஆனால் அவைகள் அனைத்தும் நிறமில்லாமல் அழகின்றி இருந்தன. பறவைகள் நிறமில்லாமல் இருந்தால் எப்படி இருக்கும்? வானவில் ஆச்சரியம் அடைந்தது. அது நடந்துசென்று கொண்டிருந்தபோது அதனிடம் கிளி ஒன்று வந்தது. கீச்…கீச்… என்ற அதன் குரலை வைத்துதான் அது கிளி என்றே அடையாளம் கண்டுகொண்டது வானவில்.
“நீ ரொம்ப அழகா இருக்க! எனக்குக் கொஞ்சம் நிறம் கொடேன்!”–கேட்டதுகிளி.
“சரி தர்றேன்! உனக்கு என்ன நிறம் வேணும்?”– இது வானவில்.
“பச்சையும் சிகப்பும் எனக்கு ரொம்பப் பிடிக்கும்!” – கிளி சொன்னது. மெத்தென்ற பஞ்சு போன்ற உடலுக்குப் பச்சை நிறத்தையும், கூரிய நாசிக்குக் கோவைப்பழம் போல் சிவந்த வண்ணத்தையும் தந்தது வானவில்: அதைப் பெற்றுக்கொண்ட கிளி அழகாக மாறியது. அது வானவில்லுக்கு நன்றி சொல்லிவிட்டு போனது.
சிறிது தூரத்தில் புறா ஒன்று எதிர்பட்டது. அது வானவில்லிடம் தனக்கு நிறம் தருமாறு கேட்ட.து.

“என்ன நிறம் வேணும்?”–கேட்டது வானவில்.

மேலும் படிக்க கீழே உள்ள சுட்டியை சுட்டவும்.

திறன்பேசியின் வளர்ச்சி


siragu thiranpesi2
இந்த 2018 ஆம் ஆண்டுடன் ‘திறன்பேசி’ உருவாக்கப்பட்டு கால்நூற்றாண்டு ஆகிவிட்டது.  திறன்பேசி என்பதன் பொருள் என்ன என்பதன் அடிப்படையில் 25 ஆண்டுகள் என்பது இந்தக் கணக்கு. இருப்பினும் இது குறித்து பலருக்கும் பல்வேறு கோணங்கள் இருக்கக்கூடும்.

இன்று வாழ்வோரில் “ஹலோ! யார் பேசறது?” என்று கேட்காதவர் இருக்க வழியில்லை என்றே தோன்றுகிறது. ஒலியைப் பல அலைவரிசைகளில் மின்துடிப்புகளாக (அல்லது அதிர்வுகளாக) மாற்றி, அதனைக் கம்பிவழி கடத்தி மீண்டும் ஒலியாக ஒலிக்கச் செய்யும் முறையைக் கொண்டு “தொலைபேசி” என்ற கருவியை 1876ல் கிரஹாம் பெல் உருவாக்கினார். தொடர்ந்து கம்பிவழி ஒலியைக் கடத்தும் தொலைபேசி பற்பல வளர்ச்சிகளைக் கண்டது. ஆனாலும் கருவியை விரும்பும் இடத்திற்கு ஒருவர் தம்முடன் எடுத்துச் செல்ல இயலாதிருந்தது. இந்நிலையை மாற்றியது செல்லிடத்திற்கு எடுத்துச் செல்லும் செல்பேசிகள். ‘மோட்டோரோலா’ நிறுவனமே முதலில், 1973 இல் கம்பிவழியின்றி அலைவரிசை வழியாகப் பேசும் மொபைல்ஃபோன் என்றழைக்கப்படும் தொலைபேசியை  உருவாக்கியது. மோட்டோரோலாவின் ஆய்வாளர் மார்ட்டின் கூப்பர் என்பவர் மன்ஹாட்டனில் இருந்து  ஏப்ரல் 3,  1973 அன்று, நியூஜெர்சியில் உள்ள பெல் ஆய்வு நிறுவனத்தின் தலைமையகத்தில் பணிபுரிந்த தனது போட்டியாளரான ஜோயல் எஸ். ஏங்கெல் என்பவருக்கு முதல் அழைப்பை அனுப்பிப் பேசினார். அதன் பிறகு இன்று நாம் பயன்படுத்தும் வகையில் அந்த கைபேசியின் வளர்ச்சி வியக்கத்தக்க வண்ணம் மாறியுள்ளது.

மேலும் படிக்க கீழே உள்ள சுட்டியை சுட்டவும்.

அரசியலின் உலகக் குறியீடு- பசி

(மாமிசம் சிறுகதைத் தொகுப்பு நூல்- தமிழில்: ரவிக்குமார்)
உலக அளவில் வெவ்வேறு வகையான அரசியல் தத்துவங்கள் பின்பற்றப்படுகின்றன. அவை நிலம் சார்ந்த மொழி, இனம், மதம், பண்பாடு ஆகியவைகளின் அடிப்படையில் வேறுபடுகின்றன. ஆனால் உண்மையில் அரசியல் எப்போதும் தனக்கான தனித்தன்மையை மேற்கண்ட எந்த ஒன்றுக்காகவும் இழக்க விரும்புவதில்லை என்பதே நிதர்சனம். எதனடிப்படையில்? இந்தியா ‘பன்முகம்” என்ற ஒரு வார்த்தையில் பல சிக்கலான அரசியல் கூறுகளைக் கொண்ட போதிலும், தேர்தல் அரசியலில் கட்சிகள் தங்களது அரசியலை வெவ்வேறு மாநில மக்களின் தன்மைக்கேற்ப கட்சிகள் தங்களின் நிலைப்பாடுகளை அமைத்துக் கொள்வதை ஒரு உதாரணமாகக் கொண்டால் மிக எளிதாக புரிந்து கொள்ளலாம்.

Sirgu pasi1


தென்னிந்திய மக்களின் மொழி, உணவு, உடை என்று எடுத்துக் கொண்டால் வடகிழக்குப் பகுதி மாநிலங்களான திரிபுரா, நாகலாந்து, மிசோரம் ஆகியவைகள் முற்றிலும் வேறுபடுகின்றன. அதே போல் பிற மாநிலங்களான பீகார், இராஜஸ்தான், குஜராத் போன்றவைகள் முழுக்க ஒரு சார்பிலான அடிப்படை பண்பாடுகளில் ஒற்றுமையுடனும் மொழி அடிப்படையில் வேறாகவும்இருப்பதை காண்கிறோம். மேலும் மத்திய, மாநிலங்களிலும் அரசியல் நிர்வாக ரீதியிலும் இது போன்று காணமுடிகிறது. ஆனால் இது முழுக்க மத்தியில் அரசியல் காரணங்களில் மாறுபடுகிறது என்பதை தேர்தல்களின் முடிவுகளின் மூலம் மக்களின் அரசியல் ரீதியிலான கோபங்களை பார்க்க முடிகிறது. ஆனாலும், சுதந்திர காலத்தில் பல வேறுபட்ட மொழி மற்றும் பண்பாடுகளைக் கொண்டிருந்தாலும் மக்கள் சுதந்திரம் என்ற ஒரு கோரிக்கையை முன்வைத்து ஒன்று திரண்டனர். அதற்கு அரசியலில் ‘சுதந்திரம்” என்ற சொல் மக்களிடத்தில் உணர்வு ரீதியிலான தேவையானதாக ஒரு குறியீட்டு மந்திரமாக பயன்படுத்தப்பட்டது என்பது அடிப்படையில் மிக எளிதில் விளங்கும்.

மேலும் படிக்க கீழே உள்ள சுட்டியை சுட்டவும்.