Wednesday 15 August 2018

மானமிகு சுயமரியாதைக்காரருக்கு வீரவணக்கம் !!


siragu karunanidhi1
யாயும் ஞாயும் யாரா கியரோ
எந்தையும் நுந்தையும் எம்முறைக் கேளிர்
யானும் நீயும் எவ்வழி அறிதும்
செம்புலப் பெயல்நீர் போல
அன்புடை நெஞ்சம் தாம் கலந்தனவே.
இந்தப் பாடலை காதல் கொண்டோருக்காக எடுத்துக்காட்டுவது உண்டு. ஆனால் முதல் முறையாக எம் தமிழ் நாட்டின் திராவிடத் தலைமகனுக்காக இதை கையாள்கின்றேன்! ஆகஸ்ட் 7 தலைவர் கலைஞர் மறைந்தார் என்ற செய்தியை தொலைக்காட்சியில், இணையத்தில் பார்த்த போது, கடல் கடந்து வாழும் என்னைப் போன்றவர்களுக்கு கண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது. தலைவரை நேரில் சந்திக்காத பல்லாயிரக்கணக்கான தொண்டர்களில் நானும் ஒருவள் என்ற போதும், அந்த தலைவரின் கருத்தியல் மீது ஈர்ப்புக் கொண்டு நம் நெஞ்சங்கள் செம்மண்ணில் கலந்திடும் நீர் எப்படி அதன் நிறத்தைப் பெற்று பாய்கின்றதோ அதேப் போல்தான் அந்தத் தலைவரின் மீதான அன்பு நமக்கு.

எந்த நிலையில் கலைஞர் இந்த அன்பைப் பெற முடிந்தது? ஏழு ஆண்டுகள் ஆட்சிகள் இல்லை, இறுதி 1.5 வருடங்கள் அரசியலிலும் இல்லை, ஆனால் கலைஞர் மீது மக்களுக்கு எத்துணை பேரன்பு எதற்கு? எதன் அடிப்படையில் சாத்தியம் எனச் சிந்தித்துப் பார்த்தால் அதற்கு காரணம் அவரின் 80 ஆண்டு கால அரசியல் தொண்டு என்று மட்டுமே சொல்ல முடியும்.

மேலும் படிக்க கீழே உள்ள சுட்டியை சுட்டவும்.

No comments:

Post a Comment