Thursday 9 August 2018

அரசியலின் உலகக் குறியீடு- பசி

(மாமிசம் சிறுகதைத் தொகுப்பு நூல்- தமிழில்: ரவிக்குமார்)
உலக அளவில் வெவ்வேறு வகையான அரசியல் தத்துவங்கள் பின்பற்றப்படுகின்றன. அவை நிலம் சார்ந்த மொழி, இனம், மதம், பண்பாடு ஆகியவைகளின் அடிப்படையில் வேறுபடுகின்றன. ஆனால் உண்மையில் அரசியல் எப்போதும் தனக்கான தனித்தன்மையை மேற்கண்ட எந்த ஒன்றுக்காகவும் இழக்க விரும்புவதில்லை என்பதே நிதர்சனம். எதனடிப்படையில்? இந்தியா ‘பன்முகம்” என்ற ஒரு வார்த்தையில் பல சிக்கலான அரசியல் கூறுகளைக் கொண்ட போதிலும், தேர்தல் அரசியலில் கட்சிகள் தங்களது அரசியலை வெவ்வேறு மாநில மக்களின் தன்மைக்கேற்ப கட்சிகள் தங்களின் நிலைப்பாடுகளை அமைத்துக் கொள்வதை ஒரு உதாரணமாகக் கொண்டால் மிக எளிதாக புரிந்து கொள்ளலாம்.

Sirgu pasi1


தென்னிந்திய மக்களின் மொழி, உணவு, உடை என்று எடுத்துக் கொண்டால் வடகிழக்குப் பகுதி மாநிலங்களான திரிபுரா, நாகலாந்து, மிசோரம் ஆகியவைகள் முற்றிலும் வேறுபடுகின்றன. அதே போல் பிற மாநிலங்களான பீகார், இராஜஸ்தான், குஜராத் போன்றவைகள் முழுக்க ஒரு சார்பிலான அடிப்படை பண்பாடுகளில் ஒற்றுமையுடனும் மொழி அடிப்படையில் வேறாகவும்இருப்பதை காண்கிறோம். மேலும் மத்திய, மாநிலங்களிலும் அரசியல் நிர்வாக ரீதியிலும் இது போன்று காணமுடிகிறது. ஆனால் இது முழுக்க மத்தியில் அரசியல் காரணங்களில் மாறுபடுகிறது என்பதை தேர்தல்களின் முடிவுகளின் மூலம் மக்களின் அரசியல் ரீதியிலான கோபங்களை பார்க்க முடிகிறது. ஆனாலும், சுதந்திர காலத்தில் பல வேறுபட்ட மொழி மற்றும் பண்பாடுகளைக் கொண்டிருந்தாலும் மக்கள் சுதந்திரம் என்ற ஒரு கோரிக்கையை முன்வைத்து ஒன்று திரண்டனர். அதற்கு அரசியலில் ‘சுதந்திரம்” என்ற சொல் மக்களிடத்தில் உணர்வு ரீதியிலான தேவையானதாக ஒரு குறியீட்டு மந்திரமாக பயன்படுத்தப்பட்டது என்பது அடிப்படையில் மிக எளிதில் விளங்கும்.

மேலும் படிக்க கீழே உள்ள சுட்டியை சுட்டவும்.

No comments:

Post a Comment